Monday, January 8, 2018

கொண்டாட்டம்: பெண்கள் மகிழ்ச்சியைக் காணும் பொங்கல்!

Published : 07 Jan 2018 10:51 IST


எஸ்.கோவிந்தராஜ்












பெரும்பகுதி நேரத்தைக் குடும்பத்துக்காகவும் அலுவலக/வீட்டு வேலைகளுக்கும் செலவிடும் பெண்கள், தங்களுக்காக நேரம் செலவிடும் வாய்ப்புகள் அரிதாகவே அமைகின்றன. மகளிர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் பெருநகரங்களில் மட்டும் பெண்கள் ஓரளவுக்குத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பெண்களுக்கான கொண்டாட்ட வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஆனால், ரோட்டில் உள்ள ஒரு பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது!

மகளிர் மட்டும்

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று காலை 10 மணியிலிருந்து களைகட்டுகிறது ஈரோடு வ.உ.சி.பூங்கா. அன்றைய நாளில் பெண்களுக்கு மட்டுமே பூங்காவுக்குள் அனுமதி. ஆண்களில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இந்தப் பெண்கள் திருவிழாவையொட்டி வ.உ.சி. பூங்கா மைதானம் வழியாகச் செல்லும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. வழக்கமாகத் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் ஆண்களுக்குக்கூட அன்று பூங்காவுக்குள் அனுமதியில்லை.

வயதானவர்கள் தங்களுக்குள் கதை பேச, நடுத்தர வயதினரும் சிறுமியரும் ஆசைதீர ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட விளையாட்டுகளில் திளைக்க, இளம் பெண்களோ அதிரவைக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமாடத் திருவிழா களைகட்டும். வீட்டிலிருந்து கொண்டுவந்த கரும்பு, தின்பண்டங்களை அனைவரும் பங்கிட்டுச் சுவைத்து, காணும் பொங்கலுக்குக் கூடுதல் இனிப்பைச் சேர்ப்பார்கள்.


மறக்கப்படாத மரபுகள்

மரபான வழக்கங்களையொட்டி வீட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து கரைப்பதோடு கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடுபவர்களும் உண்டு. சொந்தங்கள், நட்புகளை அடையாளம் கண்டு பசுமை நிறைந்த நினைவுகளைப் பேசும் களமாகவும் இந்தத் திருவிழா இருக்கிறது.

கபடி, கண்ணாமூச்சி, நொண்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி எனப் பெண்கள் தங்களுக்குள் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்றவர்களைக் கொண்டாடுவார்கள். இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்த பெண்கள், அவற்றுடன் ஆஜராகி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் ஆட்டமும் பாட்டுமாகச் சேர்ந்துகொள்ள அந்தப் பகுதியே கொண்டாட்டத்தில் திளைக்கும்.

உற்சாகத் திருநாள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழாவில் பங்கேற்றுவரும் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி செண்பகவள்ளி, “பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் வைக்கும்போது பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்வது வழக்கம். அதேபோல், முளைப்பாரியும் விடுவோம். வழிபாடு செய்த பிள்ளையாரையும் முளைப்பாரியையும் எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவுக்குச் செல்வோம். அங்கு வழிபட்ட பின் பிள்ளையாரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். கிராமங்களில் ‘பூப்பறிக்க வர்றீங்களா’ என்ற பெயரில் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி கும்மிப்பட்டு, கோலாட்டம் ஆடி, கொண்டுவந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். நகரப் பகுதியில் அதற்கென எங்களுக்குப் பூங்காவை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தக் காலத்திலும் பாட்டு, நடனம் என உற்சாகம் இருந்தது. காலத்துக்கு ஏற்ப இப்போது கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கிறது” என்றார்.



செண்பகவள்ளி

ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்கும் மோகனப்பிரியா, தோழிகளுடன் ஒன்றுசேர்ந்து விட்டால் உற்சாகமாகப் பொழுது கழியும் என்கிறார். “என் அம்மா அவருடைய தோழிகளைக் கூட்டத்தில் கண்டுபிடித்து மணிக் கணிக்கில் பேசுவாங்க. அனைத்து வயதுப் பெண்களும் ஒன்றுகூடி, குதூகலமாய் இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவா இருக்கும். இந்த ஆண்டு காணும் பொங்கலுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் உற்சாகத்துடன்.
நலம்தரும் நான்கெழுத்து 16: ஆரோக்கியத்தைச் சம்பாதிக்கலாமா?

Published : 06 Jan 2018 11:06 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்


‘உலகிலேயே மிக முக்கியமான செல்வம் எது? ஆரோக்கியம்தான் உலகிலேயே மிக முக்கியமான செல்வம்’

– மகாபாரதத்தில் தர்மர்

திருக்குறள் முனுசாமியின் நகைச்சுவைச் சிந்தனை ஒன்று உண்டு. கல்வி என்பது எப்படி நாமே தேடிக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இப்படிச் சொல்வார்: “அவனுக்கென்னப்பா! அவங்கப்பா கோடீஸ்வரர். சாகும்போது ரெண்டு பங்களாவை அவனுக்குத் தந்திட்டுப் போயிட்டார் எனச் சொல்வோம். ஆனால், அவனுக்கென்னப்பா அவங்கப்பா எம்.ஏ., எம்.பில். சாகும்போது ரெண்டு பட்டத்தையும் மகன் பேரில் எழுதி வச்சிட்டுப் போய்ட்டார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், செல்வத்தை யாரும் தானமாகப் பெறலாம், திருடலாம். ஆனால், கல்வி அப்படியல்ல”.

ஆனால், இக்காலத்தில் பட்டங்களைக்கூட விலை கொடுத்து வாங்க முடிகிறது. ஆனால், கட்டாயம் நாமே சம்பாதித்துத்தான் ஆக வேண்டிய சமாச்சாரம், ஆரோக்கியம்.

உடலை நினைவுபடுத்தும் நோய்

நம்மில் பெரும்பாலோர் பணம், பொருட்கள் போன்ற செல்வங்களைத் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் உடலை அலட்சியம் செய்கிறோம். 48 மாதத் தவணையில் வாங்கிய ஒரு மொபெட்டை வாரம் ஒரு முறை கழுவுகிறோம். ஒரு சைனா மாடல் செல்போனைக்கூட உறையெல்லாம் போட்டு பத்திரமாகக் கவனிக்கிறோம். ஆனால், அதி அற்புத இயந்திரமான இந்த உடலைப் பற்றிய நினைவு, நோய் வந்த பின்னரே நமக்கு நினைவுக்கு வருகிறது.

இத்தொடரின் முதல் வாரத்திலேயே சொன்னதுபோல் உள்ளத்தின் ஆரோக்கியத்துக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட உடல்நலனை கவனிக்காமல் விடுவதே பல்வேறு சமநிலைச் சீர்குலைவுகளுக்குக் காரணமாக அமைகிறது.

சீக்கிரம் தொடங்குவதே சீரானது

உடலைப் பற்றி அக்கறை காட்டுவது என்பது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பென்ஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வாக்கிங் போகும்போது கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாகத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பது என்பது வெறும் நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. நமது வாழ்க்கையைத் தரமாக வாழ்வதற்கான முக்கியக் கருவி அது.

வாழ்வது சாகாமல் இருப்பதா?

80 வயது பாட்டி ஒருவர், இருபது வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருந்தாராம். அவரது மகன்தான் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாராம். ஒருநாள் அந்தப் பாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததாம். என்னவென்று மகன் கேட்டபோது “உன் காலத்துக்குப் பின் உன்னுடைய மகனும் என்னை இப்படிப் பார்த்துக்கொள்வானா என யோசித்தேன்” என்று அந்தப் பாட்டி சொன்னாராம்.

வாழ்வது என்பது சாகாமல் இருப்பது அல்ல. தொற்றுநோய்கள் குறைந்துள்ள இக்கால கட்டத்தில் நமக்கு ஏற்படக்கூடிய முக்கால்வாசி நோய்கள் வருமுன் காக்கக் கூடியவையே. மகாத்மா காந்திகூட, ஆயுள் முழுக்க அகிம்சையைப் போன்றே ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமானால் அதுவும் தொந்தரவுதான். எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
படிப்போம் பகிர்வோம்: உணவு... மனநலம்... மரணம்..!

Published : 06 Jan 2018 11:06 IST

வினோத், ச.ச.சிவசங்கர்
























2017-ம் ஆண்டு மருத்துவத் துறை சார்ந்து தமிழில் வெளியான சில முக்கியமான புத்தகங்கள்...

மருத்துவ மாயங்கள் - டாக்டர் கு.கணேசன்

மருத்துவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு. கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு.

காவ்யா பதிப்பகம், 16, 2வது குறுக்குத் தெரு,

டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24


இனி இல்லை மரணபயம் - சந்தியா நடராஜன்

மரணம், வாழ்க்கையின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்க மறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது. இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல்.

சந்தியா பதிப்பகம், புது எண்: 77, 53-வது வீதி,

9வது அவென்யு, அசோக் நகர், சென்னை –83, 044-24896979

விலை - ரூ.100/-


புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு - இன்னசென்ட் | தமிழில்: மு.ந.புகழேந்தி

இன்னசென்ட் என்று அழைக்கப்படும் இன்னசென்ட் வரீத் தெக்கேதலே மலையாளத் திரைப்பட நடிகர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இவர், அதிலிருந்து மீண்டு வந்த கதையை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். ‘மனிதர்களைச் சிரிக்க வைத்துப் பிழைத்துக்கொண்டுள்ள எனக்கும், கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?’ என்று கேள்வி எழுப்புபவரின் வெற்றிக் கதை இது.

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை -18

விலை - ரூ.50/-


உணவோடு உரையாடு - அ.உமர் பாருக்

உணவு பசியாற்றுவதற்கு மட்டுமின்றி அதை மருந்தாகவும் பயன்படுத்தலாம். நாம் சாப்பிடும் உணவு, நம் உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே மருந்தாகவும் மாறும் தன்மை கொண்டது. நாம் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்நூல் உரையாடுகிறது.

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி, 04259 226 012

விலை - ரூ.50/-


மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம் - டாக்டர் பி.பி.கண்ணன்

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு போன்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் கள அனுபவத்தின் மூலம் விளக்கமாக இந்த நூலில் மருத்துவர் விளக்கியிருக்கிறார். குழந்தைகள் மனநலத் துறையில், தமிழில் நல்ல புத்தகங்கள் வராமல் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் அமைந்துள்ளது.

புத்தொளி நல மையம், 64/1, கெங்கு ரெட்டி தெரு,

எழும்பூர், சென்னை - 8


‘தி இந்து’ வெளியீடு மருத்துவ வெளியீடுகள்


ஏன் தெரியுமா?


டாக்டர் கு. கணேசன்

சாதாரணத் தலைவலி முதல் மாரடைப்புவரை, நமக்கு உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், பிரச்சினைகள், அவை ஏன் ஏற்படுகின்றன, அவற்றுக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி மருத்துவர் கணேசன் எழுதியிருக்கும் பிரபல நூல் இது.


பதின் பருவம் புதிர் பருவமா?


டாக்டர் ஆ.காட்சன்

பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து மனநல மருத்துவர் காட்சன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு.


பரிசோதனை ரகசியங்கள்


டாக்டர் கு. கணேசன்

எக்ஸ்-ரே எடுப்பது முதல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள்வரை, அவை ஏன் முக்கியம், எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பரிசோதனைகள் என்பதைப் பற்றி சாமானியர்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் எழுதப்பட்ட நூல்.
Allow famous doctors to teach, MPs tell MCI 

Kalyan Ray, New Delhi, DH News Service, Jan 7 2018, 22:36 IST



With medical colleges facing a huge faculty shortage, lawmakers have asked the Medical Council of India (MCI) and the Health Ministry to allow "renowned doctors" to teach in the medical colleges.

Shortage of faculty in most of the Indian medical colleges is a well recognisedfact even though there is no centralised database because individual states are responsible to keep a tab on the vacant posts in the colleges and fill them up.

But what may be an indicator, a première centre like the All India Institute of Medical Sciences, Delhi had vacancy in 232 posts as on April 14, 2016, out of which 66 positions were for professors, 10 for additional professors, 23 for associate professors and 131 for assistant professors.

"Renowned medical specialists with academic background in cities can be given the status of visiting faculty to teach UG/PG students as students generally love to have famous doctors of city teaching them the art of medical practice. It will also increase the pool of medical faculty," the Committee on Estimates stated in its report tabled in the Parliament.

The MCI had received such a proposal, but it is yet to take a decision. Also no decision has been taken to increase the teaching age of the faculty up to 75 years.

At present, there are 479 medical colleges that offer 57,138 MBBS seats and 25,850 post graduate positions every year. Out of these 479 medical colleges, 227 are in government colleges and the remaining 252 are privately owned.

In the last few years, the norms for PG medical faculty were changed allowing professors to take more students. Now one professor can take two PG students and one Associate Professor can taken one PG student. The MCI has also agreed that each Assistant Professor can also take one PG student.

The MCI has also recommended that in five disciplines – medical oncology, surgical oncology, psychiatry, forensic medicine andradio therapy – one professor can take up to three students instead of two.

The health ministry is in talks with the MCI to extend the opportunity in other post graduate disciplines in order to quickly fill up the shortage of specialists.

The MCI has been to look at the existing norms to find out if new medical colleges can be permitted with existing busy hospitals with adequate well trained teaching faculty so that PG courses right away without waiting for starting graduate courses first.

"Out of box solutions in line with international practices are required to tide over the shortage of faculty," the Committee on Estimates, chaired by BJP veteran Murli Manohar Joshi, said in its report.
Tamil Nadu man arrested in US for groping woman on flight 

DECCAN CHRONICLE.

Published Jan 6, 2018, 4:25 am IST

He had been charged with aggravated sexual abuse and held without bail after the flight landed.

Chennai: A 34-year-old man from Tamil Nadu has been arrested in the United States of America after a woman co-passenger on a flight complained of being sexually assaulted by him while asleep. Prabhu Ramamoorthy, according to his Facebook profile hails from Vellakoil in Thanjavur district and did his engineering at a private college in Chennai. He has been working in USA as a project manager with a private firm for the past two and half years.

He allegedly groped a 22-year-old woman who was seated next to him on a Spirit Airlines flight from Las Vegas to Detroit, which landed on January 3, according to the Washington Post.

Prabhu’s wife was also travelling with him. He had been charged with aggravated sexual abuse and held without bail after the flight landed.

According to various US media reports, the victim claimed that she woke up to find her pants and shirt unbuttoned and his hands inside her pants, while his wife was seated next to him.

US media quoted federal prosecutor Amanda Jawad as saying that Prabhu was seated between his wife and the victim and continued assaulting her until she woke up and went to report the incident to flight attendants.

In a written statement, Ramamoorthy claimed that he had taken a pill and fallen asleep. He rubbished the victim’s claims, saying he had learned from his wife that the woman was ‘sleeping on his knees.’

According to a report, judge Steven Whalen said, “It seems that she’s either colluding with the defendant to cover up his actions or she’s completely oblivious to what he did.” Jawad argued, “What makes this offence, particularly egregious and the defendant even more of a danger to the community is the fact that it took place on an aeroplane. He was brazen enough to do this basically in public, next to his wife where anyone could have seen him,” calling the incident a “very unusual case.”

He ordered Ramamoorthy to be held pending trial following the prosecutor’s argument that Ramamoorthy was a flight risk and a potential danger to others around him.

Ramamoorthy’s lawyer Richard O’Neill offered to turn in Ramamoorthy’s passport and said, “There have been no allegations from anywhere that his behaviour has ever been inappropriate prior to this incident.”

26K Telangana govt staff demand old pension plan at CM home constituency 

DECCAN CHRONICLE.

Published Jan 8, 2018, 2:43 am IST

Staff says contributory pension scheme, introduced in 2004, does not provide benefits.



State government employees take part in the Ayutha Dharma Deeksha in Chief Minister K. Chandrasekhar Rao’s home constituency, Gajwel, demanding abolition of the contributory pension scheme (CPS).

Hyderabad: Over 26,000 state government employees took part in Ayutha Dharma Deeksha in Chief Minister K Chandrasekhar Rao’s home constituency, Gajwel, demanding abolition of the contributory pension scheme (CPS).

They vowed to intensify their agitation till the government restores the old pension scheme. They warned the government that they would go to any extent to achieve their goal.

Addressing the rally, TS CPS Employees Association president G. Sthitaprajna said the success of the protest rally proved that employees will no longer tolerate the continuance of CPS.

“The permission to conduct the meeting was cancelled by the police department at the last minute. We approached the High Court and secured permission. Though we expected 10,000 employees to take part in the rally, over 26,000, including teachers, turned up voluntarily. This shows how vexed employees and their families are with the CPS,” Mr Sthitaprajna said.

He said the association will select 100 employees from each of the 31 districts, who will create awareness on the ill-effects of CPS.

“We will soon build a strong movement against CPS with 1.26 lakh employees to bring pressure on the Centre and state governments to abolish CPS. We are ready to boycott duties, go on strike, lose our salary. But we will not go back till CPS is abolished,” Mr Sthitaprajna declared.

He alleged that the government was discriminating against CPS employees by not paying them the same salary and pension as OPS staff, when both were performing the same duties.

“Some employees’ unions are trying to scuttle our agitation by bringing the issue of new Pay Revision Commission (PRC) to the forefront. They are spreading rumours that if we fight against the government, it will not constitute new PRC. We will fight for both new PRC and OPS,” Mr Sthitaprajna said.

He said CPS employees and their families are deprived of social and financial security as they are not getting pension after retirement nor is any assistance given to their families in case the employee dies.

15 நிமிடங்களில் ‘விசுக்’கென முடிவுக்கு வந்த பொய்க்கல்யாணம், லட்சங்களைப் பறிகொடுத்த ‘ஏமாந்த சோனகிரி’ மாப்பிள்ளை!

By RKV | Published on : 06th January 2018 12:44 PM |


முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் இப்படியான ஏமாற்றுத்திருமணங்களை அடிக்கடி காட்சிப்படுத்துவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் திட்டமிட்டு ஏமாற்றித் திருமண நாடகம் நடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. அதற்கொரு உதாரணமே ராஜஸ்தானில் நடைபெற்ற இந்தச் சம்பவம்.



ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன்சிக்குக்கு நெடுநாட்களாகப் பொருத்தமான வரன் அமையவில்லை. அவரது சகோதரராலும் அவருக்குரிய பொருத்தமான மணமகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை. இதனால் தனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே... கவலையில் இருந்தார் சஜ்ஜன்சிக். அதை அறிந்து கொண்ட ஏமாற்றுக் கும்பல் ஒன்று சஜ்ஜன்சிக்கை ஏமாற்றத் திட்டம் தீட்டியது. அதன்படி அனிதா என்ற பெண் மூலமாக உஜ்ஜயினியைச் சார்ந்த காஜல் என்ற வரனை சஜ்ஜன்சிக்குக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திருமணப் பரிந்துரை உதவிக்காக அனிதாவுக்கு 50,000 ரூபாயும், அவளுடன் இருந்த முகேஷுக்கு 2 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டு அதைத் திருமணத்திற்கு முன்பு அவர்களுக்கு அளிப்பதற்கு சஜ்ஜன்சிக் ஒப்புக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.




பேசியபடி காஜலுக்கும், சஜ்ஜனுக்கும் டிசம்பர் 30 அன்று திருமணம் நடந்தேறியது. உஜ்ஜைனிக்குத் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியுடன் சென்ற சஜ்ஜன், காஜலைத் திருமணம் செய்து கொண்டார். முன்னரே ஒப்புக்கொண்டபடி பேசியதொகையும் அனிதா மற்றும் முகேஷ் கைகளுக்கு மாறியது. தொகை கை மாறியதோ, இல்லையோ அவ்வளவு தான் அடுத்த நொடியே அனிதாவும், முகேஷும் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டார்கள்.

சஜ்ஜன், தன் புத்தம்புது மனைவி காஜலுடன் தனது ஊருக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கினார். மணப்பெண்ணும், மணமகனும் காரில் ஏறிச் சென்று கொண்டிருக்கையில், திடீரென சஜ்ஜனுடைய புது மனைவி செல்லும் வழியில் காவல்துறை ஆட்களைக் கண்டதும், தன்னை இவர்கள் கடத்திச் செல்வதாகக் கூறி கத்த ஆரம்பித்து விட்டார். வாகனத்தை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், விசாரிக்கையில் தான் தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண்மணியின் பெயர் காஜல் அல்ல என்றும், அவளுக்கு ஆதார கார்டின் படி வேறொரு நிஜப்பெயரும் இருப்பது. அதுமட்டுமல்ல, அவளுக்கு முன்பே திருமணமாகி தற்போது இரு குழந்தைகளும் வேறு இருக்கிறார்கள். என்பது.

தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் அந்தப் பெண் ரூ 10,000 பெற்றுக் கொண்டு இப்படி ஒரு பொம்மைக் கல்யாண நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்பது பின்னர் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் தெரிவித்தபடி, அவளுக்கு இந்தத் திருமணத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வேண்டிய வேலை இருந்திருக்கிறது. ஆனால், அவளுக்கு வேண்டுமானால் இது நாடகக் கல்யாணமாக இருக்கலாம், ஆனால் சஜ்ஜனுக்கு நிஜத்திருமணம் ஆயிற்றே, எனவே அவர், தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல கார் ஏறியதும் காஜல் அதிர்ந்து போனார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் இந்தத் திருமணத்தால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ! என்ற அச்சத்தில் காவலர்களைக் கண்டதும் பாதுகாப்புக் கேட்டு கதற ஆரம்பித்து விட்டார்.

இப்போது பாருங்கள் சஜ்ஜனுக்குத் தான் பணத்துக்குப் பணமும் போச்சு, நடந்த கல்யாணமும் பொய்க்கல்யாணம் என்றாகி விட்டது. வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் நெடுநாட்களாகத் திருமணமாகாமல், திருமண ஏக்கத்தில் இருக்கும் வசதி படைத்த ஆண்களை திட்டமிட்டு ஏமாற்றி இப்படி நாடகத்திருமணங்கள் நடத்தி வைத்துப் பணம் பறிக்கும் திட்டத்தோடு சில கும்பல்கள் களமிறங்கி இருக்கின்றனவாம்.குற்றவாளிகளை இன்னமும் பிடிபடவில்லை, காவல்துறையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆகவே, திருமண ஏக்கத்தில் இருக்கும் இளைஞர்களே, மணமகளைத் தேடுவதில் மட்டுமல்ல, திருமணம் செய்து கொள்வதிலும் உஷாராக இருங்கள். அறியாத நபர்களை நம்பி வகையாக மாட்டிக் கொண்டு பணத்தோடு சேர்த்து நிம்மதியையும் பறிகொடுத்து ஏமாந்து போகாதீர்கள்.

NEWS TODAY 10.06.2026