Wednesday, January 10, 2018

ஊதிய உயர்வுப்படி ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையில் எவ்வளவு கிடைக்கும்?

ஊதிய உயர்வுப்படி அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எவ்வளவு கையில் கிடைக்கும் என்ற விவரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு 10-ஆண்டுக்கு ஒரு முறையும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. எனினும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தையே போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் மாற்றியமைத்து வழங்கப்படுகிறது.


அதன்படி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 2016-இல் மாற்றியமைக்கப்படும் இந்த ஊதியம் (1.055-இல் 2.44 மடங்கு) என்ற அளவில் 257.42 சதவீதமும், 2.5742 மடங்கும் உயர்த்தப்படுகிறது. அதாவது 01.01.2016-இல் பணி நிரந்தரம் பெற்ற அரசு ஓட்டுநரின் ஊதியம் 01.10.2017 அன்று ரூ.33,930 ஆகவும், போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஊதியம் ரூ.34,077 ஆகவும் இருக்கும். 


இது 01.01.2006-இல் அரசு ஊழியர்களுக்கு 100 சதவீதமும், ஒரு மடங்காகவும் ஊதியம் இருந்தது. 01.01.2016-இல் ஊதியத்துடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படியுடன் 125 சதவீதமும், 1.25 மடங்குடன், ஊதிய உயர்வு 32 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 0.32 மடங்காக அதிகரித்து வழங்கப்பட்டது. இது மொத்தக் கூட்டுத் தொகையில் 257 சதவீதமும், 2.57 மடங்கும் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க: குடியரசுத் தலைவருக்கு மனு அளித்த முதிய 
தம்பதி


 

மும்பை: இனி நாங்கள் வாழ்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று குடியரசு தலைவருக்கு ஒரு முதிய தம்பதி மனு அளித்துள்ள விவகாரம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது.

தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வருபவர்கள் நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவியான ஐராவதி (வயது 78). லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு லவாடே தம்பதியினர் 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. ஆனால் எங்களுக்கு சில கடுமையான வியாதி வரும் வரை உயிருடன் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியானது அல்ல என்று நினைக்கிறோம்.

எங்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. எங்களது சகோதர சகோதரிகளும் இறந்து விட்டனர்.

நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ எந்தவித பயனும் இன்றி இருக்கிறோம். எங்களது விருப்பத்திற்கு எதிராக நாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்பது நாட்டின் பற்றாக்குறையாக உள்ள வளத்தினை வீணடிக்கும் செயல் ஆகும்.

எங்களது மரணத்திற்கு பின்னர் எங்களது உடல்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பே முன்வந்து விட்டோம். எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான செல்வத்தினையும் மாநில கருவூலத்திற்கு அளிக்க முன்வந்துள்ளோம்.

இவ்வாறு லவாடே தம்பதியினர் தெரிவித்துள்ளார்கள்.


Dailyhunt

சிஏ முடித்தவரா நீங்கள்? உங்களை வேலைக்கு அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பதவி: Asst.Manager / Dy.Manager / Manager (Finance & Accounts) 

காலியிடம்: 1 

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 80,000

வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக இருக்க வேண்டும். Institute of Chartered Accountant of India or Cost Accountant, Institute of Cost Accountant of India ஆகிவற்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, நேர்முகத் தேர்வு, விண்ணப்பித்தவர்களின் பன்முகத் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20-01-2018 

மேலும் விவரங்களுக்கு: http://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Advertisement-No-CMRL-HR-12-2017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Dailyhunt
ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை: தகவல்கள் கசியாமல் இருக்க நடவடிக்கை

Published : 10 Jan 2018 18:34 IST

 

ஆதார் விவரங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண் விழித்திரை, கைரேகைகள், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் இந்த விவரங்கள் வெளியாவதாக கூறி சர்ச்சை எழுந்து வருகிறது. 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக கூறி அதுபற்றிய தகவல்களை, பத்திரிக்கையாளர் ஒருவர் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டார்

இதனால், ஆதார் தொடர்பான பதிவு செய்த தங்கள் விவரங்கள் பாதுக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக மெய்நிகர் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமானதாக இருக்கும். தேவை ஏற்படின், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இதுபோன்ற தற்காலிக அடையாள அட்டையை பெற முடியும்.

இதுமட்டுமின்றி பல்வேறு ஏஜென்சிகளுக்கும், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் தருவதற்கு பதிலாக குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் அளிக்கவும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆதார் இல்லையென்றால் அந்த நபரே இல்லையென்றாகி விடுமா?: அரசுக்கு உச்ச நீதிமன்றம் காரசாரக் கேள்வி

Published : 10 Jan 2018 18:39 IST

புதுடெல்லி



புதுடெல்லி: ரைன் பசேரா வீடற்றோர் இரவுக்காப்பகத்தில் உறங்குபவர்கள். கடந்த சில தினங்களில் நகரின் கடும் குளிருக்கு சுமார் 44 பேர் பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம். | பிடிஐ.

ஆதார் அடையாளம் இல்லையென்றால் அரசைப் பொருத்தவரை அந்த நபரே இல்லை. அப்படித்தானே? என்று ஆதார் தொடர்பற்ற இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.

வீடற்றோர், கடும் குளிரில் சாலை நடைமேடைகளிலும், தெருக்களிலும் படுத்துறங்குவோருக்கு ஆதார் இல்லையெனில் அரசைப் பொருத்தவரை அவர்கள் இல்லவே இல்லை என்றாகி விடுமா என்று வீடற்றோருக்கான இரவு தங்கும் விடுதி தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவர், இரவு தங்குமிடங்களில் ‘ஆதார் அல்லது ஏதாவது அடையாள அட்டை காண்பித்தால் அனுமதிக்கலாம்’ என்று கூறினார்.

இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “வீடற்ற மனிதர்கள் எப்படி ஆதார் பெற முடியும்? அவர் ஆதார் பெறவில்லையெனில் அரசின் கண்களில் அப்படிப்பட்ட நபர் ஒருவர் இல்லை அப்படித்தானே?” என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

இதற்கு வழக்கறிஞர், “வாக்காளர் அட்டை உள்ளிட்ட பிற அடையாள அட்டைகள் உள்ளனவே” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த கோர்ட், “வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமெனில் முகவரி நிரூபணம் தேவை, வீடற்றோருக்கு ஏது முகவரி” என்று மீண்டும் நீதிபதிகள் மடக்கினர்.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “90 கோடி மக்கள் ஆதார் வைத்துள்ளனர், இவர்கள் அரசு கூறியதன் படி வங்கிக்கணக்குகளில் இணைக்க வேண்டும், நலத்திட்டங்களைப் பெற வேண்டும்” என்றார்.
Deans appointed for medical colleges 

Special Correspondent 
 
CHENNAI, January 09, 2018 00:00 IST

Institutions in Vellore, Thoothukudi, Sivaganga, Kanniyakumari and Tirunelveli also get new deans

A number of medical college deans have been transferred as per a recent government order.

R. Narayana Babu, Dean, Madras Medical College, has been transferred and posted as Dean, Government Medical College, Omandurar, Block B, in place of R. Jayanthi, as per the order. Dr. Jayanthi has been transferred and posted as Dean, Madras Medical College.

M. Lalitha, Dean, Government Vellore Medical College, has been transferred and posted as Dean, Government Thoothukudi Medical College replacing R. Shanthakumar, who has retired.

R. Shanthimalar, Dean, Government Sivaganga Medical College, will replace Dr. Lalitha.

K. Vanitha, professor of paediatrics, Madras Medical College, has been promoted and posted as Dean, Government Sivaganaga Medical College.

S.M. Kannan, Dean, Government Kanniyakumari Medical College, has been transferred and posted as the Dean of Government Tirunelveli Medical College in place of K. Sithy Athiya Munavarah, who has retired.

R. Selvaraj, professor of orthopaedics, Madras Medical College, will replace Dr. Kannan.
Lyricist says sorry for pun on Andal

DECCAN CHRONICLE. | S THIRUNAVUKARASU

Published Jan 10, 2018, 1:38 am IST

Vairamuthu had said Andal had lived and died as a ‘daasi’ in Srirangam temple, said Rama Gopalan and demanded his apology.


Tamil poet Vairamuthu

Chennai: Award-winning Tamil poet Vairamuthu has denied he uttered anything derogatory about the legendary Andal in his article and pointed out that he had only eulogised the creator of the immortal divine composition Thiruppavai. He however expressed regret if his writing had hurt anyone.

Hindu Munnani founder-organiser Rama Gopalan in a hard-hitting statement early Tuesday slammed Vairamuthu alleging that he had spoken ill about Andal at a function in Rajapalayam, hosted by Tamil newspaper Dinamani in connection with the holy month of Margazhi.

Vairamuthu had said Andal had lived and died as a ‘daasi’ in Srirangam temple, said Rama Gopalan and demanded his apology.

Other Hindu leaders, including some in the BJP, followed suit and sought Vairamuthu’s apology.

Responding, Vairamuthu said he had not spoken anything ill about Andal and had only written an article in Dinamani titled, ‘Tamizhai Aandal’ (punning on the word Aandal, which means a woman who ruled), in which he had praised the divine composer’s immortal contribution to Tamil.

He had stated therein that Andal had been described as a ‘daasi’ in a research article published in the Indiana University (US) journal, while insisting that the Hindu believers would never accept that. “Even so, if anyone is hurt, I express regret”, tweeted Vairamuthu.

NEWS TODAY 10.06.2026