Thursday, January 11, 2018

Kerala: Ex-banker loses Rs 1 lakh in OTP fraud 

DECCAN CHRONICLE.

Published Jan 11, 2018, 1:23 am IST

Soon he found that Rs 99,000 had been withdrawn from his account.



The person received another call after half an hour saying that the Aadhaar-linking process had been completed and that he could verify the same by the code sent to him.

Kochi: Online bank fraudsters devised a new method of cheating gullible persons under the guise of helping to link Aadhaar with their bank accounts.

Another modus operandi is to make a call and ask for the code, similar to the one-time password (OTP) used in online transactions, that has been sent as an SMS in the mobile number of the person and then use the same to withdraw the money from the account.

In the first incident, a retired bank employee lost nearly Rs 1 lakh from his account after a caller claiming to be from the Reserve Bank of India offered to link his Aadhaar and bank account numbers. The person received another call after half an hour saying that the Aadhaar-linking process had been completed and that he could verify the same by the code sent to him.

The complainant, who doesn’t want to be quoted, gave the ‘code’ when the ‘bank official’ said the same was needed for sending the document in this regard to his account. Soon he found that Rs 99,000 had been withdrawn from his account. A case was lodged with the Alappuzha cyber cell.

Mr Mohan Manga-ttusseril, a native of Chittoor in Ernakulam, has lodged a complaint with DGP Loknath Behera seeking a probe into the fake calls received by him and his brother claiming to be a bank employee alerting them about the expiry of the credit card and issuance of a new card.

According to Mr V.K. Adarsh, a bank employee and commentator on cyber matters, “Such codes are actually OTPs by which fraudsters can make online purchases. In certain cases, the data regarding the victims’ debit cards like card number and CVV number are leaked while making purchases. When a credit or debit card is swiped through a skimmer, the device captures and stores all the details stored in the card's magnetic strip. Thieves use the stolen data to make fraudulent charges either online or with a counterfeit credit card.”

“Cases are being reported of the victims who haven’t shared the OTPs”, Mr Adarsh said. “Spy mobile software will get automatically downloaded along with ads when we use certain applications. The racket could take all details from mails and message boxes of the mobiles, including the OTPs and card details,” he said.

The only solution is tight vigil and caution by the people, he said. “People shouldn’t share anything about their financial transactions while responding to calls, especially internet calls. Instead, toll-free number of banks should be used to clear doubts. Technically speaking, the linking Aadhar with mobile numbers is one of the solutions,” he said.

According to Mr Mohan, his brother received a call from a person introducing him as an executive from the SBI saying that his card would expire soon and that the bank would issue a new card. The call was made to confirm the card details and mobile number. For the same, he wanted to know a code that the bank had sent to his mobile number. As all the information/details matched with the card and what the caller briefed, his brother divulged the code. But he soon alerted the bank and blocked the account.

In a similar incident, Mr Mohan received a call from a woman claiming to be from the SBI saying that a new card with his photo embedded had been dispatched through the courier and that she wanted to know the consignment number sent as an SMS. “As I am cautious about such frauds I declined to give the number and the lady threatened to block my card before ending the call.”

Mr Mohan submitted the details of the phone number from which he and his brother received the calls and the screenshots of the SMS messages.
Tamil Nadu MLAs to get salary hike from Rs 55,000 to Rs 1.05 lakh 

DECCAN CHRONICLE.

Published Jan 11, 2018, 1:15 am IST

The bill also brought the DMK and independent MLA TTV Dhinakaran who also joined ranks with the principal Opposition party in opposing the Bill.


Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami

Chennai: A major controversy broke out on Wednesday after Chief Minister Edappadi K Palaniswami tabled a bill in the Assembly that paves way for almost doubling the salary of MLAs, evoking Opposition from DMK, which questioned the “timing” citing the ongoing strike by transport employees.

Activists and political analysts were unanimous in saying that the “timing of tabling the Bill” was “quite bad” since it has been introduced in the midst of a strike by transport employees. The bill also brought the DMK and independent MLA TTV Dhinakaran who also joined ranks with the principal Opposition party in opposing the Bill.

The Tamil Nadu Payment of Salaries (Amendment) Act, 1951 proposes to increase the salary from Rs 55,000 to 1.05 lakh a month costing an additional Rs 25.32 crore per year to the exchequer. Once passed, the bill will come into effect retrospectively from July 2017.

When Palaniswami introduced the Bill in the Assembly, DMK member Sakkarapani opposed the timing and connected it with the transport strike.
Speaking to reporters outside the Assembly,

Opposition Leader M K Stalin said the government should have avoided tabling the Bill during the session as it has admitted on the floor of the House that it has no money to pay the striking transport employees.

“What is the need to hike the salary now? People will laugh at this hike when transport workers are on strike for a salary hike. Our MLA Sakkarapani opposed the Bill at the introduction stage itself and the DMK will oppose the Bill,” he said.

AIADMK rebel and independent MLA Dhinakaran also spoke on similar lines saying he would oppose the Bill once it comes for passage.

“Salary hike for the MLAs is needless when the government has no money to pay transport workers. I would oppose the amendment tabled in the assembly,” he said.

“Tamil Nadu MLAs' pay is much lower than that of MLAs in many other states. So hiking their pay is fine. Issue is the timing. When transport workers are demanding their arrears, some from 2013, why introduce this pay hike bill? Could it not have waited 1 month for Budget session of Assembly?” political commentator Sumanth C. Raman wrote on his Twitter page.

Wednesday, January 10, 2018

Anthem not must but stand if played 

R. Balaji Jan 10, 2018 00:00 IST

Share to FacebookShare to TwitterShare to LinkedInShare to WhatsAppShare to EmailShare to More62



New Delhi: The Supreme Court on Tuesday ruled that cinemas need not compulsorily play the national anthem but if they did, everyone in the audience except the physically challenged must stand up.

The apex court modified its own order issued in 2016 after the Centre, in keeping with its altered stand that was articulated on Monday, said the earlier directives on the national anthem had been abused and they could be misused in "thousands" of inconceivable ways.

The bench of Chief Justice Dipak Misra and Justices A.M. Khanwilkar and D.Y. Chandrachud modified the interim order of November 30, 2016, that had made it mandatory for movie halls to play the anthem.

"Playing of national anthem prior to screening of a cinema is not mandatory," the bench said. "However, people in the audience are bound to rise from their seats whenever a cinema hall plays the national anthem."

It clarified that the directive for people to stand up "would not be mandatory in the case of disabled persons".

The modification came after a 90-minute hearing during which attorney-general K.K. Venugopal urged the court to make it optional for cinemas to play the anthem.

Venugopal, representing the Centre, said the directives had been abused by people to file cases against others, including Infosys co-founder N.R. Narayana Murthy and Congress leader Shashi Tharoor. "Your lordships cannot conceive of the thousands of ways it can be misused," he told the court.

Vigilante squads had roughed up some people for not standing up.

On Monday, the government had said it had formed an inter-ministerial group to suggest within six months possible guidelines on when and where the anthem should be played or sung.

The bench said: "It is submitted by learned attorney-general K.K. Venugopal that playing of national anthem may not be made mandatory till the inter-ministerial committee comes up with its recommendations and a decision is taken by the government. Needless to emphasise, the discretion rests with the central government and they shall take a decision uninfluenced by the interim order."

The court said its modified order would be in place till the government decided on the recommendations of the inter-ministerial group.

மீண்டும் புழக்கத்தில் ஒரு ரூபாய் நோட்டுக்கள்!

 
புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூ.500, ரூ.1000 பணமதிப்பழிப்பிற்கு பிறகு, புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 என புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய வடிவமைப்பையே புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் ஒத்திருந்தாலும், பச்சை வண்ணத்தில் இருக்கின்றன.

பொதுவாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை இந்திய அரசே நேரடியாக வெளியிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் அப்போதைய மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சான ஆண்டும் (2017) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் ஒரு பார்வை!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.
மோடி அரசு  சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மோடி அரசினால் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் இது வரை 1 கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் இங்குச் செல்வ மகள் திட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை பார்ப்போம்.

கணக்கைத் திறத்தல்ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

தகுதிஇத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். ஒருவேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

காலம்கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு முறை பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

வட்டி விகிதம்

சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2018 ஜனவரி 1 முதல் 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்.

முதலீட்டு அளவுகள்

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

கணக்கைத் தொடராத போது என்ன ஆகும்?
குறைந்தபட்ச தொகையான 1,000 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்
கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.

வருமான வரி விலக்கு உண்டா?

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

முதிர்வு இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை இடமாற்றுதல்

கணக்கை வெறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல்

முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம்.

திருமணத்தின் ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்திற்கு மூன்று மாதத்திற்குப் பிறகு மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இதற்கு 18 வயது அடைந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பித்தல் வேண்டும்.

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல்

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம். ஆனால் இப்போது குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும்.

சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 18 வயது நிரம்பி திருமணம் செய்தற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தின் கீழ் கணக்கை மூடிவிட்டு முதிர்வு தொகையினை பெற முடியும்.

மூடல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள்

கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

செல்வ மகள் திட்டம் எதனால் முக்கியம்

முதலீடு செய்து சேமிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொன்று நிறையப் பல திட்டங்கள் இருந்தாலும் செல்வ மகள் திட்டம் திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்பதே இதன் மிகப்பெரிய சாதகமாகும்

Source : goodreturns.in
''என் கல்யாணம் நின்னுருமோன்னு பயமா இருக்கு!'' - கலங்கும் அரசுப் பேருந்து கண்டக்டர் #BusStrikeChaos

போ க்குவரத்து ஊழியர்களின் நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாகிக்கொண்டிருக்கிறது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆறு நாள்களைக் கடந்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கமோ, ஆட்டோ ஓட்டுநர்களில் ஆரம்பித்து ஊர்காவல் படைவீர்கள்வரை கண்ணில் சிக்குபவர்களையெல்லாம் அரசுப்பேருந்துகளின் தற்காலிக ஓட்டுநர்களாக்கி மக்களின் உயிரோடும் போக்குவரத்து ஊழியர்களின் வாழ்க்கையோடும் பரமபதம் விளையாடிக்கொண்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் அடைந்துள்ள துயரமும் அடையப்போகும் துயரமும் கட்டுக்கடங்காதது. அதில் சில கண்ணீர் துளிகள்...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டக்களத்தில் ஆவேசமும் ஆக்ரோஷமும்கூடிய முகங்களுக்கு மத்தியில் சோகம் படிந்த முகத்தோடு தனியாகத் தெரிந்தார் ஓர் கண்டக்டர். அவர் மனதளவில் துவண்டுபோயிருக்கிறார் என்பதை அவர் பேச்சில் உணர்ந்துகொள்ள முடிகிறது. என் பேரு ஊரெல்லாம் போட்டுறாதீங்க சார்.

அப்புறம், இதை மனசுல வச்சுகிட்டு பின்னால ஏதாச்சும் பிரச்னை பண்ணுவாங்க. கஷ்டப்பட்டு இப்பதான் கன்ஃபார்ம் ஆகியிருக்கேன். இதுவரைக்கும் இருக்க பிரச்னையையே எங்களால ஹேண்டில் பண்ண முடியல. என்று பயந்தபடியே பேச ஆரம்பித்தார், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு ட்ரான்ஸ்போர்ட்ல வேலை கிடைச்சது.

சும்மா இல்ல... யார் யார் கைகாலையெல்லாம் பிடிச்சி கடனவுடன வாங்கி ரெண்டு லட்சம் ரொக்கமா கொடுத்துதான் இந்த வேலைக்கு வந்தேன். இங்கே வேலை பார்க்கிற ஒவ்வொருத்தரும் என்னையப் போல லட்சங்களை கொடுத்து வேலைக்கு வந்தவங்கதான். எங்ககிட்டயிருந்து லட்சலட்சமா வாங்கி வயித்துல போட்டுகிட்டவங்கதான் இப்போ, எங்களுக்குச் சட்டப்படி சேர வேண்டிய பணத்தையும் எங்களுக்கான ஊதிய உயர்வையும் கொடுக்காம வந்துபாருங்கடா'னு சொல்றாங்க.

இப்போ நடக்கிறதையெல்லாம் பார்த்து எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு. இதுமாதிரி பிரச்னையெல்லாம் இருக்காதுங்கிறதுக்காதான் எல்லோரும் அரசாங்க வேலைக்கு வர்றதே.. ஆனால், அரசாங்கம் பிரைவேட்-ஐ விட பெரிய ஏமாத்துக்காரங்களா இருக்கிறது எந்தவகையில நியாயம்' எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் சிதைக்கப்பட்ட ஆவேசம் அவருக்குள் பொங்குகிறது.



சற்று நிதானித்தவர், "காசு கொடுத்து உன்ன யாருடா இந்த வேலைக்கு வரச்சொன்னதுன்னு நினைப்பீங்க.

நான், டிகிரி படிச்சிருக்கேன் சார். நான் படிச்சப் படிப்புக்கு எங்கேயும் வேலை கிடைக்கலை. வீட்ல ரொம்ப கஷ்டம். சோத்துக்கு வழி இல்ல.

வாழுறதுக்கு என்ன பண்றதுன்னே தெரியாமல் பைத்தியம்பிடிச்ச மாதிரி அலைஞ்சிகிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு ப்ரைவேட் பஸ்ல க்ளீனர் வேலை கிடைச்சது. படிச்சிருக்கேன்னு கெளரவம் பாத்தா பொழைக்க முடியாதுனு புரிஞ்சு, அந்த வேலைக்குப் போனேன். ஆறு மாசம் படாதபாடு.

அதையெல்லாம், சொல்லி மாளாது அதுக்குப் பிறகு, அந்த பஸ்லயே கண்டக்டரானேன். பெருசா இல்லைன்னாலும் அதுல ஓரளவுக்கு வருமானம் வந்துச்சி. ஆனால், எல்லா நாள்களும் டியூட்டி இருக்காது. அடுத்தடுத்து சின்னப்பசங்க புதுசுப்புதுசா வேலைக்கு வந்துகிட்டே இருந்தாங்க.

எப்ப வேணும்னாலும் உன்னைய வேலையை விட்டு நிறுத்திருவோம்ங்கிற பயத்துலயே வச்சிருந்தாங்க. அந்த நேரத்துலதான் கவர்மென்ட் வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்துச்சி. என் நிலைமையில நீங்க இருந்த என்னா பண்ணுவீங்க. அடிச்சிப்புடிச்சு பணத்தை கொடுத்து உள்ளே வந்துட்டேன்.

பணம் கொடுக்கலைன்னா ஒரு பயலுக்கும் வேலை கிடைக்காதுங்கிறையும் இந்த இடத்துல நீங்க மனசுல வச்சிக்கணும். வந்தபிறகு அவ்வளவு சின்சியரா உழைக்க ஆரம்பிச்சேன் கவர்மென்ட் பஸ் கண்டக்டர்னு ஒரு கெத்து மனசுக்குள்ள இருந்துச்சி. ஆனால், போகப்போகதான் இந்த கவர்மென்ட் போக்குவரத்து ஊழியர்களை எந்த லெவல்ல நடத்துனு தெரிஞ்சது. நடக்கும் போராட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் புலம்புறதைக் டிவிலயும், பேப்பர்லயும் வர்றதைக் கேட்டு என் வாழ்க்கையில் புயல் வீசிகிட்டு இருக்கு என்று நிறுத்தியவர்.

எனக்கு போன மாசம்தான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணி பொண்ணுப் பார்த்துருக்காங்க.

மாப்பிள்ளை கவர்மென்ட் வேலையில இருக்கிறார்னதும் அவுங்க வீட்ல எல்லாரும் உடனே சம்மதிச்சிட்டாங்க. அந்தப் பொண்ணும் ஓ.கே சொல்லிருச்சு. இந்த மாசம் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தாங்க. இப்போ ஒரு வாரமா நடக்குற போராட்டத்தையும் அதுல போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இங்க உள்ள பிரச்னைகளை டி.வில உடைச்சிப் பேச ஆரம்பிச்சதும் பொண்ணு வீட்ல ரொம்ப பயந்துட்டாங்க.

அந்தப் பொண்ணும் பயந்துருச்சி. என்னத்த சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கிறதுனு தெரியல. கல்யாணம் நடக்குமான்னும் தெரியல என்றபடி அவர் முடிக்கும்போது, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோஷம் வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது.
Dailyhunt
சூடிக்கொடுத்த சுடர்கொடி, கோதிலாக் கோதை நாச்சியார், ஆண்டாள் கொண்டாடிய மார்கழி 
நோன்பு! #Margazhi

வை ணவச் சோலையில் அன்றலர்ந்த மலராக, திருத்துழாயின் அருகாமையில் தேவியின் அம்சமாகத் தோன்றியவள் ஆண்டாள். முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரே ஆண்டாளின் பிறப்பிடமாகும். ஆடிமாதத்துப் பூரம் நட்சத்திரத்திலே அவதரித்ததால் திருஆடிப்பூரம் நன்னாளாயிற்று. இந்த நாளை, 'இன்றே திருவாடிப்பூரம்; எமக்காகவன்றோ ஆண்டாள் இங்கு அவதரித்தாள்' என்று வைணவ ஆச்சார்யரான ஶ்ரீமணவாள மாமுனிகள் பொன்னான நாளாகக் கொண்டாடியிருக்கிறார். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் என்ற பெருமை, பக்தையான ஆண்டாளுக்கு என்றுமே உண்டு.

தேவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒருநாளுக்குச் சமமானது. தை முதல் ஆனி மாதம் வரையிலுள்ள ஆறுமாதங்கள் உத்தராயனம், அதாவது தேவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடிமாதம் முதல் மார்கழி வரையிலுள்ள ஆறுமாதங்கள் தட்சிணாயனம், அதாவது தேவர்களுக்கு இரவாகவும் கணக்கிடப்படுகிறது. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறுமணி வரை, 'பிரம்ம முகூர்த்தம்'. எனவே தேவர்களுக்கு மார்கழிமாதம் முழுவதும் பிரம்மமுகூர்த்தம். ஆகையால்தான் மார்கழி மாதம் மாதங்களில் தலைசிறந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் பொருந்திய மார்கழியில், நாட்டுக்கும், வீட்டுக்கும், தன்னைப்போன்ற அனைத்துப் பெண்களுக்கும் நன்மை ஏற்படும் விதமாக ஆண்டாள் கடைப்பிடித்த நோன்பே, மார்கழி நோன்பாக இன்றளவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு போற்றுதலுக்கு உரியதாயிற்று.

நோன்பினை நோற்கும் மகளிர், சில விதிமுறைகளைக் கடைபிடித்து ஒழுகினர் என்பதை, ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலையாம் திருப்பாவையின் வாயிலாக அறியமுடிகிறது. பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாக கீழ்வானம் வெளுப்பதும், பறவைகள் ஒலிப்பதும், கோழி கூவுவதும், முனிவர்களும் தேவர்களும் துயிலெழுந்து எம்பெருமானின் பெயரை முழங்குவதாகவும் விடியல் பொழுதின் அடையாளங்களாகக் குறிப்பிடும் ஆண்டாள், அதற்கெல்லாம் முன்பாகவே எழுந்து விரத நியமத்தை முடிக்கவேண்டி, ஆயர்பாடிப் பெண்களைத் துயிலெழுப்புகிறாள்.

மலருக்குள் ஒருங்கே மணமும், தேனும், அழகும் இருப்பது போல கோதையின் மனதுக்குள் கண்ணன் மீது பக்தியும், அன்பும், ஞானமும், வைராக்கியமும், பரிவும் ஒருங்கே அமையப்பெற்ற, ஞானப்பைங்கொடியாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தன் தந்தை விஷ்ணுசித்தரை விட புலமையிலும், பக்தியிலும் விஞ்சி நிற்கிறாள்.



பூமிப்பிராட்டியின் வடிவமான ஆண்டாளை சீராட்டி, பாராட்டி. கண்ணும், கருத்துமாய் வளர்க்கும் ஒப்பற்ற பெரும்பேறு பெற்றவர் விஷ்ணுசித்தர். அனுதினமும் அரங்கனுக்காக புத்தம்புதிய, நறுமணம் கமழும் பல வகையான மலர்களைக் கொய்து, அழகிய பெரிய மாலைகளாகத் தொடுத்து எம்பெருமனுக்குச் சாத்துவதை கைங்கர்யமாகச் செய்துகொண்டிருப்பவர். அவ்வாறு மலர் மாலைகளைத் தொடுக்கும்போது தன் அன்பு மகள் கோதையிடம், அரங்கனின் திருவிளையாடல்களை கதைகளாக அவளது நெஞ்சில் பதியும் வண்ணம் கூறிக்கொண்டே தொடுப்பது விஷ்ணுசித்தரின் வழக்கம் ஆகும்.

அக்கதைகளை கேட்கக் கேட்க, கோதையின் மனதில் அரங்கனின் நினைவு பசுமரத்தாணிபோல பதிய ஆரம்பித்தது. அவள் வளர வளர, ஓங்கி உலகளந்த உத்தமனின் மீது கொண்ட அன்பு என்னும் விதை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விருட்சமாக வளரத்தொடங்கியது. அரங்கனின் மேல்கொண்ட அன்பானது ஆண்டாளை முழுமையாக ஆக்கிரமித்தது. சாதாரண மானிடர் போல உடலால், உணர்ச்சியால் இல்லாது, ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றால் நன்கு முதிர்ந்து வளர்ந்து வந்தது.

அரங்கனுக்குத் தொடுத்த மாலைகளை, தான் சூடி, அகமகிழ்ந்து, அதரத்தில் புன்னகை தவழ, அழகுப் பார்த்தாள். இறைவனுக்காக தொடுக்கப்பட்ட பூமாலைகளைச் சூடி மகிழ்ந்தவள், பின்னாளில் இறைவனுக்காகப் பல பாமாலைகளை உள்ளன்போடு, அருளியவள். 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' என்னும் இரண்டும் தேனினும் இனிய சுவை மிக்கப் பாமாலைகளாகத் திகழ்கின்றன.
பலப் பல திருப்பெயர்களால் பரந்தாமனைப் போற்றிப் பாடும் ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். எப்போதும் கொஞ்சும் விழிகளை உடைய, நீலநிறக் கண்ணனின் நினைவாகவே இருந்ததால், ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாகவும், அவளின் தோழிமார்கள் கோபியர்களாகவும், வடபெருங்கோயிலுடையான் திருக்கோயிலே நந்தகோபாலனுடைய திருமாளிகையாகவும் விளங்கியது. ஆலிலைப்பள்ளியானாகிய எம்பெருமானே கண்ணனாக காட்சி நல்குவதாகத் தோன்றியது. இத்தகைய காரணங்களால் திருப்பாவையைப் பாடி தன் உறுதியான விருப்பத்தை, வைராக்கியமாக்கி நிறைவேற்றிக் கொண்டாள். இப்படித்தான் திருப்பாவை பிறந்தது என்று சில வைணவப் பெரியோர்களும், உரையாசிரியர்களும் கூறுகின்றனர்.


'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்...'

என்று தன் உடல், பொருள், ஆவி யாவும் பகவானுக்குச் சமர்பிக்கப்பட வேண்டிய அவியுணவே என்பதாக, தனது நாச்சியார் திருமொழியில், தெளிவாக மனஉறுதியுடன் தெரிவிக்கிறாள். தனது உள்ளம் என்றுமே திருவரங்கனின் திருமலர்கரங்களைக் கைப்பிடிக்க, கனாக்கண்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து ஏங்குகிறாள். எனவேதான் அனைத்திலும் சிறந்த மாதமான மார்கழியில், முழுநிலவு தினத்தன்று நோன்பினைத் தொடங்கி, இறைவனைப் பாடி இறையருளைப் பெற்றதாக ஆண்டாள் வாழ்வின் வழியாகவும், வாக்கின் மூலமாகவும் அறிய முடிகிறது. ஆண்டவனையே ஆள நினைத்து, ஆண்டதால் 'ஆண்டாள்' என்றும், இவள் சூடிக்கொடுத்த மாலைகளையே அரங்கன் விரும்பி அணிவதால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும், இறைவனைக் குறித்து நாச்சியார் திருமொழி இயற்றியதால் 'கோதிலாக் கோதை நாச்சியார்' என்றெல்லாம் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவள் பக்தி நெறி ஒழுகிய ஆண்டாள்.



'திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே'

என்று கோதை நாச்சியாராகிய ஆண்டாளை வாழ்த்தி வணங்குகிறது வைணவ உலகம். நாமெல்லாம் உய்யும்படி நல்வழி காட்டிய கோதை நாச்சியாரின் திருவடிகளைப் போற்றுவோம்.

Dailyhunt

NEWS TODAY 10.06.2026