Saturday, January 13, 2018

சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து

Updated : ஜன 13, 2018 07:02 | Added : ஜன 13, 2018 06:02



சென்னை:பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை நர் முழுவம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மூட்டம் காணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் க இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குவரும் விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.


சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.

சென்னை - கொச்சுவேலிக்கு இன்று இரவு சிறப்பு ரயில்

Added : ஜன 12, 2018 18:48

சென்னை: சென்னை - கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

பொங்கல், மகரஜோதியையொட்டி நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை, எழும்பூர்- கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாளை மாலை 3.40 மணிக்கு ரயில் கொச்சுவேலி சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து போக்குவரத்து தொடங்கியது




சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து வெளியூருக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. போராட்டம் முடிந்து முழுமையாக பஸ்கள் இயங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

ஜனவரி 13, 2018, 04:31 AM

சேலம்,

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

மீதமுள்ள பஸ்களை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. 22 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையொட்டி, நேற்று அதிகாலை முதலே அரசு பஸ்கள் வழக்கம்போல இயங்க தொடங்கின. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற முக்கிய நகரங்களுக்கான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயங்க தொடங்கியதையொட்டி காலை முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து பஸ் நிலையம் வந்த பயணிகள் கூறுகையில்,‘‘போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சொந்த ஊருக்கு சென்று பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதோ? என்ற சந்தேகம் இருந்தது. ஒருவழியாக அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததால், பஸ்களும் வழக்கம்போல இயக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊருக்கு சென்று வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதில் நிம்மதியாக உள்ளோம்‘‘ என்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் மாநகரில் சேலம் ஜவகர் மில் திடல், சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

தற்காலிக பஸ் நிலையமான சேலம் போஸ் மைதானத்தில் இருந்து அரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, கடலூர், சிதம்பரம், தம்மம்பட்டி, துறையூர், பேளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஜவகர் மில் திடலில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி ஆகிய வழித்தடங்களுக்கான இயக்கப்பட்டன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, எடப்பாடி, ராசிபுரம், ஏற்காடு, நாமக்கல், மேட்டூர், மைசூரு, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பஸ்கள் எந்தெந்த வழித்தடத்தில் இருந்து செல்கிறது என்பதை அறியும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைந்துள்ள சேலம் போஸ் மைதானம், ஜவகர்மில் திடல் ஆகிய இடங்களுக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு டவுன் பஸ்கள் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்





பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13, 2018, 05:07 AM

வண்டலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ்நிலையம் உள்பட பல இடங்களில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும்.

இதற்காக தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு பந்தல், நாற்காலிகள், போடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏறி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். 
 
நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். தை பொங்கல் என்பது தமிழர்களின் தனி அடையாளம். வயலும் வயல் சார்ந்த வெளிகளுமான மருதம் நிலத்தை அதிகம் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறியபடி, ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்’’ என்று உழவுத்தொழிலை மேன்மைப்படுத்திய இனம் தமிழ் இனம். தமிழன் எப்போதும் நன்றியுடையவன். அதனால்தான் இயற்கைக்கும், உழவுத்தொழிலுக்கு ஆதாரமான மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டும் தமிழனின் நாகரிகம்தான் பொங்கல் திருநாள். வளமிக்க மாதம் தை மாதம். மழை மறைந்து, குளிர் குறைந்து, இதமான வெயில் படர்ந்து, நிலம் விளைந்து, அறுவடை முடிந்து, குடும்பங்களில் பொருளாதாரம் வந்து சேரும் மாதம் தை மாதம். கையில் காசு வரும் மாதம் தை மாதம். அதனால்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்கிறோம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் நிலைமை எப்போதும் மகிழ்ச்சியில் இல்லை. உழவன் கணக்கு பார்த்தால், உழக்கு மிஞ்சாது என்பது தமிழ்நாட்டு பழமொழி. விளைந்தால் விலை இல்லை. விலை இருந்தால் விளைச்சல் இல்லை. விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பதால்தான், பல கிராமத்து குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர். எல்லை கற்கள் மட்டும் இருந்த விளைநிலங்கள், இப்போது வீட்டுமனை கற்கள் நிறைந்து கட்டாந் தரையாகிவிட்டது. ‘‘கரும்பு நட்டேன் விற்கவில்லை. வாழை நட்டேன் விற்கவில்லை. நெல் நட்டேன் விற்கவில்லை. கல் நட்டேன் விற்றுவிட்டது’’ என்பது ‘‘விவசாயிகள் ஏன் விளைநிலங்களை விற்கிறார்கள்’’ என்பதுபற்றி எழுதப்பட்ட ஒரு சோகமான கவிதை. விவசாயிகளின் விளைநிலங்கள், ஏன் வீட்டுமனை நிலமாக ஆகிறது என்பதை அரசுகள் எண்ணிப்பார்த்து அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றன. நமது பிரதமர் நரேந்திரமோடி கூட 2022–ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டார். அரசாங்கங்கள் விரும்புகின்றன. ஆனால், அதற்குரிய திட்டங்களும் இல்லை. நிதியும் ஒதுக்கப்பட வில்லை. இந்தியா விவசாய நாடு. விவசாயத்தை பெருக்கினால்தான் நாடு செழிப்பை காணமுடியும். விவசாயத்துக்கான திட்டம் வகுக்கும்போது அதிகாரிகளால் மட்டும் திட்டங்கள் வகுக்கப்படாமல், சேற்றில் உழன்று கொண்டிருக்கும் விவசாய பெருமக்களையும் பிரதிநிதிகளாக சேர்த்துக்கொண்டு வகுக்கவேண்டும். விவசாயம் வளர ஒரு சுலபமான வழி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் கூறியதுபோல, விவசாய உற்பத்தி செலவோடு 50 சதவீத தொகையை சேர்த்து விலை நிர்ணயம் செய்தால்தான் விவசாயம் தழைக்கும். அந்த காலகட்டங்களில்தான் பொங்குகிற பொங்கலில் சர்க்கரை இனிக்கும். அடுத்துவரும் ஆண்டுகளிலாவது பொங்கலை விவசாயிகளுக்கு இனிப்பான பொங்கலாக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, January 11, 2018

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

Published : 09 Jan 2018 11:00 IST

தொகுப்பு: கனி

விரிவானது சென்னை மாவட்டம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகாவும் சென்னை மாவட்டத்தின் பெருநகரப்பகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 4 அன்று தொடங்கிவைத்தார். இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னை மாவட்டம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்ஙகள், 16 வட்டங்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, வட சென்னையில் 32 வருவாய் கிராமங்களும், மத்திய சென்னையில் 47 வருவாய் கிராமங்களும், தென்சென்னையில் 43 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்கள் ஜனவரி 4 இரவு வேலைநிறுத்தம் அறிவித்தனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து ஊழியர்கள் 2.5 சதவீத ஊதிய உயர்வைக் கேட்டனர். ஆனால், அரசு தரப்பு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், போக்குவரத்து தொழில்சங்கங்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றன.

30% மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 30 சதவீத மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 142-லிருந்து 177 - ஆக அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ஜனவரி 1 அன்று தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 526 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் 177 கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் மொத்தமிருக்கும் 77,509 இடங்களில் 12,399 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உத்திரபிரதேசத்தில் 169 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்தபோவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 1 அன்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். 2002-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கிவந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால், அமெரிக்கா தற்காலிகமாக 25.5 கோடி அமெரிக்க டாலர் நிதியை நிறுத்தியிருக்கிறது.


புதிய தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகர்

நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ (RAW) வின் முன்னாள் தலைவர் ராஜிந்தர் கன்னா தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகராக ஜனவரி 3 அன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு இவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 2014 டிசம்பரில் இருந்து இரண்டு ஆண்டுகள் ‘ரா’வின் தலைவராகச் செயலாற்றிய இவர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமைவகித்து இருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் கீழ் இவர் செயல்பட இருக்கிறார்.


எட்டு முதன்மைத் துறைகளில் 6.8% வளர்ச்சி

இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, உரம், இயற்கை எரிவாயு, சிமெண்ட், சுத்திகரிப்புத் தொழில், கச்சா எண்ணெய், மின்சாரம் ஆகிய எட்டு முதன்மைத் தொழில்துறைகள் 2017 நவம்பர்வரை 6.8 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ தரவுகளை ஜனவரி 1 அன்று வர்த்தக, தொழில் துறை வெளியிட்டிருக்கிறது. இதில் சிமெண்ட் 17.3 சதவீதமும், இரும்பு 16.6 சதவீதமும் சுத்திகரிப்புத் தயாரிப்புகள் 8.2 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத் தொழில் துறை உற்பத்தியில் இந்த எட்டுத் துறைகளின் உற்பத்தியின் அளவு 41 சதவீதம் என்பதால் இந்த வளர்ச்சி தொழில்துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வெளியுறவுத் துறை செயலர்

சீனாவுக்கான முன்னாள் தூதர் விஜய் கேஷவ் கோகலே, நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜனவரி 1 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது பொருளாதார உறவுகளுக்கான செயலரான இவர், ஜனவரி 28 அன்று வெளியுறவுத் துறை செயலராகப் பதவியேற்கஇருக்கிறார். தற்போதைய வெளியுறவுத் துறை செயலர் எஸ். ஜெய்ஷங்கரின் பதவிக் காலம் முடிவடைவதால், மத்தியப் பணியாளர் அமைச்சகம் இவரைப் புதிய செயலராக அறிவித்து இருக்கிறது. டோக்லம் பிரச்சினையின்போது பெய்ஜிங்கில் நடைபெற்ற வெளியுறவுப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார் .


அணுசக்தித் தளங்கள் பட்டியல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அணுசக்தித் தளங்களின் பட்டியல் பகிர்வு நடைமுறை ஜனவரி 1 அன்று நடைபெற்றது. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தத்தின்படி, 1991-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நடைமுறையை இரண்டு நாடுகளும் பின்பற்றிவருகின்றன. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தம் 1988-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளும் அணுசக்தி வசதிகளைப் பயன்படுத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ பரஸ்பரம் சேதங்களை ஏற்படுத்தமுடியாது.
வரலாறு தந்த வார்த்தை 17: பாஸ்போர்ட்டில் இரண்டு வகை

Published : 09 Jan 2018 11:10 IST


ந. வினோத் குமார்




புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 125 பேர் பின்னால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று சென்னைக் காவல்துறை அறிவித்திருப்பதுதான் கடந்த வாரம் பலரை ‘தள்ளாட’ வைத்த செய்தி.

‘ஏம்பா, குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ‘ஃபைன்’ போடுங்க. அதை விட்டுட்டு, பாஸ்போர்ட்டுல எல்லாமா கை வைக்கிறது?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் மட்டுமே ‘குடி’மகன்கள் வண்டியைப் பிறர் மீது மோதி, அவர்கள் ‘மேலே’ செல்வதற்கு ‘பாஸ்போர்ட்’ கொடுக்காமல் இருப்பார்கள் என்று காவல்துறை நினைத்திருக்கலாம்.

இப்படிக் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் பிறந்திருக்கிறது என்பதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடிகிறதா?

‘One for the road’ - இதுதான் அந்தச் சொற்றொடர். ‘விடை பெறுவதற்கு முன்னால் ஒரு பெக்’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இன்றைக்கு இருப்பதுபோல, 18-ம் நூற்றாண்டில் நெடுஞ்சாலைகள் கிடையாது. அதனால் மோட்டல்களும் இல்லை. என்றாலும், எப்போதும் பயணிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

அன்றைய இங்கிலாந்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிகள் புறப்பட்டால், வழியில் தேவைப்படும் உணவு உள்ளிட்ட இதர விஷயங்களை மூட்டை கட்டி எடுத்துக்கொள்வார்களாம். அந்த மூட்டையை ‘ஒன் ஃபார் தி ரோட்’ என்று சொல்வது வழக்கம். இப்படித்தான் அந்தச் சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது. பிற்காலத்தில், நண்பர்களுடனான பார்ட்டியை முடித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து பிரிய மனம் வராமல், ‘கடைசியா ஒரு ரவுண்டு!’ என்று கெஞ்சி, ஒரு வாய் சாப்பிட்டுப் போவதற்கு மேற்கண்ட சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

பார்ட்டியிலிருந்து விடைபெறும்போது இந்தச் சொற்றொடரைச் சிலர் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஆனால், ‘ஊற்றிக்கொள்வது’ அதிகமாகிவிட்டால், நாம் ஒரேயடியாக ‘மேலே செல்வதற்கான பாஸ்போர்ட்’ உடனடியாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, மறந்துவிட வேண்டாம்.

NEWS TODAY 10.06.2026