Wednesday, January 17, 2018

TN students high on mobile use, low on math; 40% can’t find state on India map 

ASER Study Says 24.6% High School Kids Able To Subtract, 95.3% Access Phones

Vinayashree Jadageesh & Arockiaraj Johnbosco TNN

A mere 24.6% of high school students aged 14-18 years are able to carry out subtraction, while only 47% can solve division problems and 28.4% are able to recognise numbers (10-99), as per the findings of the Annual Status of Education Report (ASER) released on Tuesday based on a survey in rural Madurai.

In contrast, students dabbling with the digital world was significantly higher with 95.3% frequently using mobile phones, and 63% spending time on computers. Only 27% said they had never had access to computers.

This year’s study picked one district in each state for an indicative survey sample. In Tamil Nadu, it was conducted among 1,044 youths in 925 households in 60 villages of Madurai. The age category was expanded from 3-15 years to 14-18 years for the first time.

Reading levels too were found to be poor, with more than 25% unable to read a sentence in English and about 17% not able to read a Class II text in Tamil. “For this level of students, these figures are very disappointing. Many of them are unable to even do basic arithmetic,” said Oliver B of Pratham, the NGO which carried out field work for the survey.

Worse, only 68.9% were able to name the country’s capital, while 79% could name their own state. In fact, more than 6% were unable to recognise the map of the country, while 58.8% only identified their own state on a national map.

Madura College (self-finance courses) principal Dr K M Rajasekaran said the findings were not surprising. “Mobile phones have become a nuisance among students and 90 % of them use them not in a constructive manner. For instance, an android mobile can be used to browse for information, read newspapers and look out for study material, but few do that. They use it for social networking chats, meme creation and watching movies and songs,” said Rajasekaran, who is based in Madurai city.

Some academicians felt there was little interest in textbooks and lessons, as mobile phone penetration increased. It is perhaps time for teachers too to find ways to engage them in classrooms using technology, said Ramachandran, who was part of the ASER survey team.

Others felt technology could have adverse effects. Fr A Susaimanickam, head master, St Claret Higher Second ary School, Karumathur, Madurai, said dependence on technology had affected memory power, with very few students barely able to remember tables of mathematics or able to do mental mathematics.




அரசியலில் நடிகர்கள்!

By என். முருகன் | Published on : 17th January 2018 01:21 AM |

 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபின் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், மற்ற சில நாடுகளிலும் தமிழக அரசியல் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன. நமது மாநில இளைஞர்கள், ரஜினி மன்றத்தின் உறுப்பினர்களான அவரது ரசிகர்கள் மற்றும் பல கிராமப்புற மக்கள் இதை எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், ஜெயலலிதா போன்ற நடிகர்கள் அரசியலில் நுழைந்து வெற்றிபெற்றுப் பதவியில் இருந்ததுடன் ஒப்பிடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், உலகின் 18 நாடுகளில் மொத்தம் 228 நடிகர்கள், நடிகைகள் அரசியலில் நுழைந்து எம்.பி. பதவிகளிலும், பிரதமர், அதிபர் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆர்ஜென்டீனா-1, வங்கதேசம்-1, பிரேசில்-1, கனடா-7, ஜெர்மனி-1, இந்தியா-48, இத்தாலி-3, இஸ்ரேல்-1, மெக்ஸிகோ-2, நெதர்லாந்து-1, பாகிஸ்தான்-1, போலந்து-4, பிலிப்பின்ஸ்-33, ரஷியா-1, இலங்கை-13, தாய்லாந்து-8, பிரிட்டன்-7, அமெரிக்கா-22 என்று கலைத் துறையினர் அரசியலில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில்தான் மிக அதிக அளவில் சினிமா நடிகர்கள் நேரடி அரசியலில் இறங்கியது தெரியவருகிறது. இது வரையில் 48 பேரும், ரஜினி-49-ஆவது, கமல் இறங்கினால் 50 பேர் சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைந்து பிரபலமடைவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்த ராபர்ட் தாம்ப்சன் எனும் பேராசிரியர், 24 மணி நேர தொலைக்காட்சிகளில் தோன்றி பார்வையாளர்களைக் கவரும் வகையில் பேசி வரும் ஓர் அரசியல்வாதியும், சினிமா, நாடகங்களில் தோன்றி மக்களைக் கவரும் நடிகரும் ஒரே மாதிரியானவர்களே” எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் சைரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்தப் பேராசிரியர் மேலும் கூறுவது கவனிக்கத்தக்கது.

சினிமா நடிகர்கள் தங்கள் அரசியலைத் துவங்கும்போதே இவர்களுக்கு எதிரான அரசியல்வாதிகளை விடவும் சிறப்பான வகையில் அரசியல் களத்தில் உதிக்கும் நிலைமையில் இருப்பார்கள் எனக் கூறுகிறார் இவர். நிறைய பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து அரசியலில் வளர்ந்து நிற்கும் பல தலைவர்களையும் மக்கள் மன்றத்தில் எளிதாக இந்த நடிகர்கள் ஓரந்தள்ளிவிடுவார்களாம்.

இது போன்ற புதிய அரசியல்வாதிகளான நடிகர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது, வாக்காளர்களின் புத்திசாலித்தனமில்லாத நடத்தை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்பீட்டளவில், தேர்தலில் போட்டியிடும் பழைய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகளாகவும், நிர்வாகத் திறமையற்றவர்களாகவும் இருப்பதாக வாக்காளர்கள் கருதுவது முக்கியமான காரணங்களாகின்றன எனக் கூறுகிறார் பேராசிரியர் தாம்ப்சன்.
அரவிந்த் ராஜகோபால், அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் பேராசிரியராக இருப்பவர். புகழ்பெற்ற ஜெர்மானிய சமூகவியல் ஆராய்ச்சியாளர் மேக்ஸ் வீபர். இவர்கள் இருவரும் சேர்ந்து கூறியது கவனிக்கத்தக்கது: 'நவீன சமூக வளர்ச்சியில் நிர்வாகமும் ஆட்சி முறையும் மக்களின் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் மிக அதிக அளவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் கால கட்டத்தில், மிக அதிக அளவில் மக்களைக் கவர்ந்த தலைவர்கள் பொது வாழ்வில் உருவாகி அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது' என இவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற தத்துவங்கள் ஒருபுறம் இருக்க, அரசியலில் புகுந்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நடிகர்களில் உலகமே போற்றும் வகையில் பணிசெய்த அமெரிக்க அதிபரும், மிக அதிக அளவில் ஊழல் செய்து மணிலாவின் சிறையில் வாடிய பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரான ஜோசப் எஸ்ட்ராடாவும் நம்மால் கவனிக்கத்தக்கவர்கள்.

பிலிப்பின்ஸின் எஸ்ட்ராடா ஒரு நடுத்தர தாய், தந்தையருக்கு 1937-ஆம் ஆண்டில் பிறந்த 10 குழந்தைகளுள் ஒருவர். அவரது இயற்பெயர் ஜோசப் எஜர்சிட்டோ. பள்ளி மாணவனாக இருந்தபோது ஒரு சக மாணவனுடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின் வேறு பள்ளிகளில் சேர்ந்து படித்து, தனது கல்லூரிப் படிப்பை மேபுவா பொறியியல் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கேயும் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

தனது 17-ஆவது வயதில் முதன்முதலாக ஒரு திரைப் படத்தில் நடித்தார். இவரது தந்தைக்கு இவர் சினிமா நடிகராகியது பிடிக்கவில்லை. ஒரு பொறியாளராக ஆகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தந்தைக்குப் பிடிக்காத சினிமா துறை என்பதால் அவரது பெயரான எஜர்சிட்டோவை ஒதுக்கிவிட்டு தனது முதல் படத்தில் தனக்கு இடப்பட்ட பெயரான எஸ்ட்ராடா என்று மாற்றிக் கொண்ட இவர் ஜோசப் எஸ்ட்ராடா என அழைக்கப்பட்டார்.
130 திரைப்படங்களில் நடித்து பிரபலமான எஸ்ட்ராடா, அரசியலில் புகுந்து 1967-ஆம் ஆண்டில், தனது 30-ஆவது வயதில் சேன்ஜுயான் நகர மேயரானார். பின் பல அரசியல் மாற்றங்கள் பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்டு, ஜனநாயகம் முழுவீச்சில் 1986-இல் உருவானது. 1987-ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்ட்ராடா. இது நம் நாட்டின் எம்.பி. பதவிக்கு ஈடானது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 1992-ஆம் ஆண்டு துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 1998-இல் நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரானார் இந்த நடிகர்.
இவரது ஆட்சியின் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள். இவருடன் சேர்த்து, இவரது குடும்பத்தினர், அடிவருடிகள், இவருடன் தொடர்புடைய பெண்கள் குறித்தும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இரவில் மதுவருந்தி பல கூட்டாளிகளுடன் சேர்ந்து அரசின் திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும், அவை அதிபருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் பெரும் பணத்தைப் பெற்றுத்தந்தன என்றும் தெளிவானது. 1999-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் நாட்டின் பங்குச்சந்தையில் நடந்த ஊழலில் எஸ்ட்ராடாவின் பங்களிப்பு என்ன என்பதைத் தகுந்த சாட்சியங்களுடன் பேசிவந்த பொதுநலவாதி சால்வடார் டேசர் கொலை செய்யப்பட்டதில் அதிபருக்குப் பங்களிப்பு இருந்தது அம்பலமானது.

1987-ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராக இருந்தபோது இவரது சொத்து மதிப்பு, பிலிப்பின்ஸின் 23 லட்சம் பெசோ (ரூ.29 லட்சத்து 21 ஆயிரம்). 1999-ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 3 கோடியே 58 லட்சம் பெசோ (ரூ.4 கோடியே, 54 லட்சத்து 66,000) ஆக உயர்ந்து நின்றது. இவருக்கு 60 வியாபார நிறுவனங்களில் பங்குகள் இருந்தன எனவும் அவற்றில் இவருக்கான பண முதலீடு 80 கோடி பெசோக்கள் (ரூபாய் 101 கோடியே 6 லட்சம்) என்பதையும், அதை எல்லாம் தனது சொத்துப் பட்டியலில் அரசுக்கு அவர் தெரிவிக்கவில்லை எனவும் பத்திரிகையாளர்களின் புலன் விசாரணை மையம் என்ற பொதுநல அமைப்பு வெளியிட்டது. 20 வீடுகள் இவருக்கு இருந்தன.

இந்த விவரங்கள் எல்லாவற்றையும் இவரோடு இருந்த சிலரே வெளியிட்டதைத் தொடர்ந்து இவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எல்லா உண்மைகளும் பொதுவெளியில் வெளிவந்ததைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு கடுமையாகிப் பெரிய போராட்டமாக மாறியது. இதனால், 2001-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தனது அதிபர் பதவியை எஸ்ட்ராடா ராஜிநாமா செய்தார்.
இவர் கைது செய்யப்பட்டு, அடுத்த 6 ஆண்டுகள் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொண்டார். இவர் குற்றவாளி என 2007-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்து, தன் கீழ்ப்பணியாற்றிய துணை ஜனாதிபதியாக இருந்த குளோரியா அரோயோ எனும் பெண்ணை அதிபராகப் பிரகடனம் செய்து பதவியில் அமர்த்தியிருந்தார்.
அந்தப் பெண் அதிபர் 2007-ஆம் ஆண்டில் எஸ்ட்ராடாவை குற்றச் செயல்களிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த நாட்டின் சட்டப்படி இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை!

நடிகராக இருந்து மக்களின் பேராதரவுடன் அதிபராக உருவாகி வலம் வந்த எஸ்ட்ராடாவிற்கு சோய் என்ற மனைவி மற்றும் லார்னி, கோமஸ், ஓசோரியோ, மெலெண்ட்ரஸ், மேரி ரோவேனா எனும் பிற துணைவியரும் உண்டு. தனது மனைவியுடன் ஒரு குழந்தையும், பிற துணைவியருடன் 4 குழந்தைகளும் இவருக்கு உண்டு. இந்நடைமுறைகள் அந்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

அடுத்து, நடிகராக இருந்து, அரசியலில் புகுந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக 1967-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ரொனால்ட் ரீகன். 1981-ஆம் ஆண்டு, தனது 70-ஆவது வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய நிலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தீவிர ஆலோசனைகளைப் பெற்று, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையான டிமாண்ட் எகானமி எனப்படும் விநியோகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையைக் கையிலெடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட்டார் ரீகன். இதை உலகெங்கிலும் ரீகனாமிக்ஸ் என பாராட்டினார்கள்.

தனி வாழ்க்கையிலும் மிகச்சிறந்த ஒழுக்கமான மனிதராக இருந்தார் ரீகன். நான்ஸி டேவிஸ் என்ற நடிகையை 1952-ஆம் ஆண்டு மணந்தார் ரீகன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த திருமணத்துக்கு முன்னர் ஜேன் வையேன் எனும் நடிகையை 1940-ஆம் ஆண்டு திருமணம் செய்து, 9 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்தார்.

மிகவும் சிறந்த அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த ரீகன், தனது 93 வயதில் நிமோனியா மற்றும் அல்ஷைமர்ஸ் நோயால் உயிரிழந்தார். இவர் அதிபரான பிறகு நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'நான் மக்களுக்கு மிகவும் அவசியமான பல வளர்ச்சித் திட்டங்களையும், அமெரிக்காவிற்கு பல சிறந்த பொருளாதாரத் திட்டங்களையும் உருவாக்க விரும்புகிறேன். நடிப்பு உலகில் இருந்த எனக்கு இவை பற்றிய நிபுணத்துவம் கிடையாது.

ஆனால், எனது நிர்வாக கட்டமைப்பில், மிகவும் சிறந்த திறமையான அதிகாரிகள் உண்டு. அவர்களால் நல்ல திட்டங்கள் உருவாக்கப்படும். அதை நிறைவேற்றத் தேவையான யோசனைகளை அவர்கள் எனக்கு வழங்குவார்கள். அதனால் வெற்றி நிச்சயம்' என அறிவித்தார். இதைக் கேட்ட எல்லோருமே இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

எனவே, இது போன்ற நல்ல மற்றும் கெட்ட தலைவர்களின் உதாரணங்களைக் கையிலெடுத்து புரிந்துகொண்டு நம் நாட்டிலுள்ள நடிக, நடிகையர் அரசியலுக்கு வரும்போது வெற்றியடைய வேண்டும்.

'தனி மனித குறைபாடுகளும், கெட்ட குணாதிசயங்களும் உடையவர்களால் பொது நன்மை செய்ய முடியாது' என மேதறிஞர் இங்கர்சால் கூறுவார்.
'நமது நிர்வாகத் திறமை என்பது, கல்வியால் பெரிய பட்டங்களைப் பெறுவது அல்ல. நல்ல மனிதர்கள், திறமையானவர்கள், பொது நலத்தில் அக்கறை கொண்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளும் திறமையே' என ராபர்ட் கிளைவ் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் இதை நிரூபித்தார். அழியாப் புகழடைந்தார்.
மருத்துவக் கல்வி இடங்கள் போதிய அளவில் இல்லை: குடியரசுத் தலைவர் கவலை

By DIN | Published on : 17th January 2018 01:15 AM |- |


தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பதக்கம் வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் போதிய அளவில் இல்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் மக்கள் தொகைக்கும், மருத்துவர்களின் எண்ணிக்கைக்கும் நடுவே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், கடந்த ஆண்டில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி நிறைவு செய்த மருத்துவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 67,000 இடங்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 31,000 இடங்களும் உள்ளன. அதேவேளையில் நாட்டின் மக்கள்தொகை 130 கோடியாக உள்ளது.
மக்கள்தொகையின் அடிப்படையில் பார்த்தால் மருத்துவக் கல்லூரி இடங்கள் போதுமானதாக இல்லை. மருத்துவப் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதும் இல்லை. இதன் விளைவாக அவர்களில் பலர் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலச் செல்கின்றனர். இத்தகைய சூழல் நீடிப்பதை நியாயப்படுத்த இயலாது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். மருத்துவ சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டிய தேவை எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பது மற்றொரு முக்கிய பிரச்னையாக உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததே அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் மருத்துவர்களிடம் அளவுக்கு அதிகமான பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு சில உதவிகள் தேவைப்படுவதையும் என்னால் உணர முடிகிறது. அதாவது, கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்கி, பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளது.

பொதுவாகவே ஏழை, பணக்காரர்களைப் பார்த்து நோய்கள் தாக்குவதில்லை. ஆனால், இறுதியில் அவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் மட்டுமே. மருத்துவ சேவைகளால் இந்த சமூகம் பயன்பெற வேண்டுமே தவிர, சமூகத்தின் வாயிலாக மருத்துவத் துறை லாபமடையக் கூடாது என்றார் ராம்நாத் கோவிந்த்.
 பெண்கள் மட்டுமே ஆடிப்பாடி கொண்டாடிய காணும் பொங்கல்

ஈரோடு: ஈரோட்டில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கலில், இளைஞிகள் முதல், வயதான பெண்கள் வரை, ஆடிப்பாடி, பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கல், ஈரோட்டில் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு மட்டுமின்றி சுற்றியுள்ள பள்ளிபாளையம், பவானி, விஜயமங்கலம், பெருந்துறை பகுதிகளில் இருந்தும், காணும் பொங்கல் தினமான நேற்று, விழா நடக்கும், வ.உ.சி., பூங்காவுக்கு படையெடுக்கத் தொடங்கினர். பலர், வீடுகளில் இருந்து உணவு பண்டங்களை எடுத்து வந்தனர்.

உறவினர்கள் மற்றும் தோழியருடன் பகிர்ந்துண்டனர். இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி, விளையாடினர். கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும், இசைக்கு ஏற்றவாறு நடனமாடி மகிழ்ந்தனர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த, காணும் பொங்கல் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர்.

இதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, தை அமாவாசை நாளில், காணும் பொங்கல் வந்ததால், கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
 நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்
Added : ஜன 17, 2018

சிவகங்கை: தை முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் 'செவ்வாய் பொங்கல்' நடந்தது. இதற்காக, இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார் பெயர்களை 'சீட்டில்' எழுதி பானையில் குலுக்கி ஒரு குடும்பத்தினரை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு சிவசுப்ரமணியன் குடும்பத்தார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன் முதல் நபராக பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து 910 நகரத்தார்கள் மற்றும் மற்ற சமூகத்தினரும் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். வெண்
பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணுடைய நாயகி அம்மனுக்கு கிடா வெட்டி, அபிஷேகம் செய்தனர். ரஷ்யா, பிரான்ஸ் நாட்டினர் பங்கேற்றனர்.

வரன் தேடும் படலம்: நாட்டரசன்கோட்டை பகுதி நகரத்தார்கள் தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். பொங்கல் விழாவில் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால், வரன் தேடும் படலமும் நடந்தது.

பாகனேரி செவ்வாய் பொங்கல்: பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் நகரத்தார் செவ்வாய் பொங்கல் வைத்தனர். நேற்று மாலை 4:31 மணிக்கு 510 நகரத்தார்களும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். அனைவரது பொங்கல் பானைக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாதவன் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது.சுற்றுலா, பேரூராட்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் வெளிநாட்டினரை அழைத்து வருவது, பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற சிறப்பு ஏற்பாடு இருக்கும். இந்த ஆண்டு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நகரத்தார்களே வெளிநாட்டினரை அழைத்து வந்தனர்.
ஏப்., 14 முதல் ரஜினி சுற்றுப்பயணம் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு

மக்கள் மன்றத்தில், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததும், தமிழ் புத்தாண்டு முதல், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், மதுரையில் ரசிகர்கள் மாநாட்டை நடத்தி, கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அறிவிக்கிறார். இது தொடர்பாக, அரசியல் அறிஞர்கள், ஆன்மிக குருக்களிடம், ரஜினி ஆலோசனை நடத்தி வரும் தகவல் வௌியாகி உள்ளது.



நடிகர் ரஜினி துவக்கியுள்ள, மக்கள் மன்றத்திற்கு, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில லட்சம் பேர் தான் சேர்ந்துள்ளனர்; இன்னும், ஒரு கோடியை தாண்டவில்லை. ஏப்., 14ல், தமிழ் புத்தாண்டு தினத்தன்று, ரஜினி நடித்த, '2.0' திரைப்படம் வௌியிடப்படுகிறது. அப்படம் வௌிவந்த பின், பொது மக்களின் நாடித் துடிப்பை அறியவும், அவர்களின் ஆதரவை பெறவும், மாநில சுற்றுப் பயணம் செல்ல, ரஜினி முடிவு செய்துள்ளார்.

ரஜினியின் சுற்றுப் பயணத்தில், அவருக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, மதுரையில், தன் ரசிகர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். அதில், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தையும், ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், ரஜினி
ஆலோசனை நடத்தி வருகிறார்.இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
மாவட்ட வாரியாக

தற்போது, ரஜினி ரசிகர் மன்றங்கள், வருவாய் மாவட்ட அடிப்படையில், செயல்பட்டு வருகின்றன. அவற்றை,அமைப்பு ரீதியாக, மாவட்டங்களாக பிரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக, 60 மாவட்டங்கள் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்த்த பின், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையில், பிற கட்சிகளின், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், ரஜினியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ரஜினி, கட்சி துவக்கிய பின், மாற்று கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், திரளான தொண்டர்களுடன் வௌியேறி, இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் கொள்கை, மக்களுக்கு தரக்கூடிய வாக்குறுதிகள், செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி, அரசியல் அறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகளிடம், ரஜினி கருத்து கேட்டு வருகிறார். அதற்கு முன், பனிக்காலம் முடிந்ததும், இமயமலை சென்று, தன் ஆன்மிக குருநாதர்களை சந்தித்து, ஆசி பெறுகிறார். பின்,தமிழகம் திரும்பியதும், கட்சி பணிகளில், தீவிரமாக ஈடுபட, ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரகசிய சந்திப்பு!

பல்வேறு தரப்பினரையும், தனிப்பட்ட முறையில் சந்தித்து வரும் நடிகர் ரஜினி,

தொழில் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன், ரகசியமாக ஆலோசித்து வருகிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சி தொடங்குவது தொடர்பாக, பலரும் ஆலோசனை தெரிவிக்கின்றனர். எந்த ஒரு கருத்தையும் நிராகரிக்காமல், ரஜினி உள்வாங்கிக் கொள்கிறார். மாவட்ட அளவில், தொழில் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, சென்னைக்கு அழைத்து பேசி வருகிறார்.

தொழில் துறை சந்தித்து வரும் பிரச்னைகள், அரசு தரப்பில் எதிர்பார்க்கும் உதவிகள் பற்றி கேட்கிறார். மேலும், 'அரசு தரப்பை எளிதில் அணுக முடிகிறதா; கோரிக்கைக்கு செவி சாய்க்கின்றனரா; அரசியல் களத்தில் இறங்கும்போது, ஒத்துழைப்பு கொடுப்பீர்களா' என்றும் கேட்கிறார்.வர்கள் நேரடியாக பதிலளிக்கின்றனரா, தயங்குகின்றனரா அல்லது ஒதுங்க நினைக்கின்றனரா என்பன போன்ற விஷயங்களை கவனித்து வருகிறார். வெற்றியை நோக்கியே பயணம் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்து, கவனமாக அடியெடுத்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர்

Updated : ஜன 17, 2018  
சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்.,21ல் தனது கட்சி பெயரை அறிவிக்கும் கமல், அன்றே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEWS TODAY 11.06.2026