Tuesday, January 23, 2018

Engineer-groom goes missing from marriage hall hours before wedding

TIMES NEWS NETWORK

Chennai: Hours before his wedding, a 25-year-old computer engineer went missing from a marriage hall in Tiruvallur, plunging the bride’s family into gloom.

P Saran Kumar of Egmore left the hall on Monday morning, informing his family members that he would return shortly. When his family members tried to contact him, his mobile phone remained switched off. Only on Sunday evening, the engineer had participated in the reception held at the same marriage hall and posed for photographs with the bride. The bride’s family was in a state of shock and lodged a police complaint at the allwomen police station against Saran Kumar and his family members for cheating.

As the mobile phone remained switched off, police have sought the help of cybercrime wing of the Thiruvallur policetotracehiswhereabouts. His call log too are being scrutinised. Police were seen asking Saran Kumar’s father Prabhakar and hisfamily members if hehad expressed any discomfort in marrying the women. Police scanned the reception video clippings, and and Saran Kumar cool, receiving guests.

The marriage was fixed a few months ago after the two families came in touch through a matrimonial website. The engagement was held in November and they decided to conduct the reception and marriage on January 21 and 22 respectively.

Relatives of the bride and the groom searched in all possible places to locate the missing Saran Kumar till late on Monday evening, but in vain. The vacated the marriage hall after the auspicious time lapsed, and then lodged the police complaint.
HC refuses urgent hearing of petition on bus fare hike

TIMES NEWS NETWORK

Chennai: While protests continued across Tamil Nadu demanding rollback of the hike in bus fares, an advocate has approached the Madras high court seeking its interference in the issue.

When a division bench of Justices R Subbiah and T Ravindran commenced proceedings around 10.30am, advocate George William made a mention about the fare hike and sought the court to hear the plea on an urgent basis.

William said the hike was unjustified, arbitrary and made without following procedures. He wanted the court to interfere immediately by passing an interim order restraining the government from collecting the revised fares which are adversely affecting people.

But refusing an urgent hearing, the bench asked the lawyer to file a proper petition which would be taken up in due course.

Another PIL was filed in the court by V Munikrishnan, of Tiruvannamalai, alleging that the government had been spending public money on politics and had shifted the burden to the people, claiming transport corporations face a crisis.

“The fare hike is like adding fuel to fire when people are already put to great suffering by GST and demonetisation,” the petition said. 


After six years, the Tamil Nadu government increased bus fares on January 19. Minimum fare on Metropolitan Transport Corporation buses in Chennai has been increased from ₹3 to ₹5 and the maximum from ₹14 to ₹23. In case of non-metros, the hike was in the range of ₹3 to ₹19. 


UP AGAINST IT: There have been protests across the state pushing for a rollback of the hike in bus fares
விடைபெற்றது 41-ஆவது சென்னை புத்தகக் காட்சி -2018 13 லட்சம் பார்வையாளர்கள்: பபாசி

By DIN | Published on : 23rd January 2018 05:06 AM |

சென்னை, அமைந்தகரையில், பச்சையப்பா கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 13 நாள்கள் நடைபெற்ற 41-ஆவது சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
இந்த புத்தகக் காட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) அமைப்பாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்ற இந்த புத்தகக் காட்சியில் 710 அரங்குகளில் 5 லட்சம் தலைப்புகளில் சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
   திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் பள்ளிச் சிறார்களுக்கு திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் 150 குழந்தைகளும், ஓவியப் போட்டியில் 250 குழந்தைகளும், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 350 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000, ஆறுதல் பரிசாக 32 குழந்தைகளுக்கு ரூ. 500 மதிப்பிலும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து பபாசி தலைவர் வயிரவன் கூறியதாவது:

கடந்த ஜன.10- ஆம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக 5 லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டனர். இம்முறை புத்தகக் காட்சியில் சுமார் ரூ. 15 கோடி மதிப்பில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்றார் வயிரவன்.


தனிமைக்கு என்னதான் தீர்வு?

By ஆசிரியர் | Published on : 23rd January 2018 01:30 AM |

உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருப்பது 'தனிமை' என்கிற நோயாகத்தான் இருக்கும். விரல் நுனியில் உலகம் என்று நாம் ஒரு புறம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், கடல்களையும் கண்டங்களையும் கடந்து உலகம் சுருங்கிவிட்டது என்று வியந்து கொண்டாலும் இன்னொரு புறம் உண்மையான உறவுகள் மறைந்து, போலித்தனமான சமூக வலைதள சிநேகங்களிலும், சொந்தங்களிலும் உறவாடிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இணைய தளத்தின் நண்பர்களைப் பெற முடிகிறது. தூர தேசத்தில் இருக்கும் சொந்தங்களுடன் அன்றாடம் உறவாடி மகிழ முடிகிறது. கணக்கிலடங்காத மனிதர்களுடன் செய்திப் பகிர்தலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று வருகின்றன. ஆனால், எத்தனை பேருடன் நிஜமான தொடர்புகள், நேரிடையான உரையாடல்கள், நெருக்கமான உறவுகள் இருக்கிறது என்று பார்த்தால், வேதனை அளிப்பதாக இருக்கிறது.

   ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்பத்திலேயே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும், கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதும், சிரித்து மகிழ்வதும் குறைந்து, எங்கெங்கேயோ இருக்கும் முகம் தெரியாத மனிதர்களுடன் இணையத்தின் மூலம் உறவாடிக் கொண்டிருக்கும் அவலம் நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் பெயரளவில் மனிதர்களை இணைத்திருக்கிறதே தவிர, உலகளாவிய அளவில் மனிதர்களை தனிமைப்படுத்தி இருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை.

வயிற்றுப் பிழைப்புக்காக, வேலை நிமித்தம் காரணமாக இடம் பெயர்தல் பெரிய அளவில் நடந்திருப்பதால் கூட்டுக்குடும்ப முறை என்பது அசுர வேகத்தில் சிதைந்து வருகிறது. நேரிடை உறவுகளைத் தவிர ஒன்றுபட்ட உறவுகளுடன் எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத சமுதாயம் வளர்ந்து வருகிறது. ரத்த உறவுகள் அகன்று அந்நியர்கள் நட்புறவாகிவிட்டிருக்கும் சமுதாய முறை
உலகெங்கிலும் உருவாகி இருக்கிறது.

கூட்டுக் குடும்ப முறை தகர்ந்து, சிறு குடும்ப முறை உருவாகி இருப்பதால், மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருப்பது முதியோரும் குழந்தைகளும்தான். வயதான காலத்தில் தங்களைப் பேணவும், பாதுகாக்கவும், குழந்தைகள் இல்லாமல் தனியாக வாழும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல அவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்துக்கும் நரம்பு தொடர்புடைய நோய்களுக்கும் ஆளாகும் அவலம் அதிகரிக்கிறது.

அதேபோல குழந்தைகளும் நண்பர்களுடன் உறவாடுவதை விட்டுவிட்டு, செல்லிடப்பேசியிலும் இணையத்திலும் நண்பர்களை உருவாக்கி, அவர்களுடன் உறவாடி மகிழும் நிலைமை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உலகம் இணைகிறது என்று மகிழ்ந்தாலும், இன்னொருபுறம் மனித மனம் தீவுகளாக மாறுகின்ற அவலம், அதனால் உளவியல் ரீதியாக அவர்கள் மனதில் ஏற்படுகின்ற தனிமை, மன அழுத்தம், சமூக ரீதியாகத் தனிமைப்படல், உளவியல் ரீதியாக சமூக விரோத மனோநிலைக்குத் தள்ளப்படல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேர்கிறது.
பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, தனிமை பிரச்னைக்கென்று ஓர் அமைச்சரை நியமித்திருப்பதைப் பாராட்ட வேண்டும். 'டிரேசி கிரெளச்' என்பவரை 'தனிமை' பிரச்னைக்கான அமைச்சராக நியமித்து, சமுதாயத்தில் காணப்படும் தனிமையை அகற்ற வழிமுறைகள் தேட அவரை பணித்திருக்கிறார் தெரசா மே.பிரிட்டனின் 6.56 கோடி மக்கள் தொகையில் ஏறத்தாழ 90 லட்சம் பேர் தனிமையில் வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஓர் ஆய்வின்படி முதியோர், மாற்றுத் திறனாளிகள், 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர், அகதிகள் ஆகியோர் மிக அதிகமாகத் தனிமை மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஆதரவில்லாத குழந்தைகள், குழந்தைகளின் ஆதரவில்லாத பெற்றோர் என்று தனிமையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினரை பேட்டி கண்டு பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம் ஓர் அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. அந்த அறிக்கை, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தனிமை பிரச்னைக்கான அமைச்சகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
தனிமை என்பது இந்தியாவிலும்கூட வேதனை தரும் உண்மை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு தயாரித்திருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 4.5 % பேர் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மாதிரி ஆய்வுத்துறை 2004-இல் எடுத்த கணக்கின்படி 12.3 லட்சம் ஆண்களும், 36.8 லட்சம் பெண்களும் இந்தியாவில் தனிமையில் வாழ்வதாகவும், அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் நிச்சயமாகப் பலமடங்கு அதிகரித்திருக்கும்.

கூட்டுக்குடும்ப முறை சிதைந்துவிட்ட நிலையிலும்கூட, ஒருவருக்கொருவர் நேரிடையாக உறவாடுவதும், ரத்த உறவுகளுடனும், நண்பர்களுடனுமான உறவை செல்லிடப்பேசியுடன் சுருக்கிக் கொள்ளாமல் நேரில் சந்திப்பதும், கூடிப்பேசுவதும் அதிகரிப்பதன் மூலம்தான் தனிமை பாதிப்பை மாற்ற முடியும். முதியோரின் தனிமையையும், மன அழுத்தத்தையும் எப்படிப் போக்குவது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் இன்றைய வாழ்க்கை முறையும் தகவல் தொழில் நுட்பமும் ஏற்படுத்தி இருக்கும் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தீவிரமாக சிந்தித்து முடிவு கண்டாக வேண்டும்.

மன அழுத்தம், தனிமைப்படுதல் உள்ளிட்டவை மனநிலை பாதிப்பு அல்ல என்பதை உணர்ந்து, அதற்கான ஆலோசனைத் தீர்வுகளை நாடும் போக்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை அரசுதான் முன்னெடுத்துச் செல்ல முடியும்!
மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி இறக்கம் : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Added : ஜன 23, 2018 00:47

மதுரை: தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவித்ததால், வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை முடித்து வைத்தது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து 2017 ஏப்.,25 சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். தனிநீதிபதி, ''எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்தஅரசாணையை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,''என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல்நீதிபதிகள்,'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம். ரேவதிக்கு பதவிஉயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்துசெய்கிறோம்.

எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆறு வாரங்களில்தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.
ரேவதி, ''நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் எட்வின் ஜோ பதவியில் தொடர்கிறார். அவரை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடவேண்டும்,'' என மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ ஜன., 4 முதல் விடுப்பில் சென்றார். வேறு ஒருவரை அப்பணியிடத்தில் நியமனம் செய்யும்வரை, சென்னை ஓமந்துாரார் எஸ்டேட் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ள நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குனர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவார்.
உயர்நீதிமன்றக்கிளை உத்தரவுப்படி மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவரை டீனாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதை பதிவு செய்தநீதிபதி,''இவ்வழக்கில் மேலும் எவ்வித உத்தரவும் தேவையில்லை,'' எனக்கூறி முடித்து வைத்தார்.
நாளை முதல் 5 நாட்களுக்கு 'பிக் பஜார்' மலிவு திட்டம்

Added : ஜன 23, 2018 03:04

சென்னை: 'பிக் பஜார்' அங்காடியின், 'ஐந்து நாட்களுக்கு மிகவும் மலிவு' திட்டத்தில், நாளை முதல், குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிரபல, பிக் பஜார் அங்காடியின் சார்பில், ஐந்து நாட்கள் மிகவும் மலிவு திட்டம், நாளை துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை இந்த திட்டத்தில், அனைத்து வகை பொருட்களையும் மலிவு விலையில் வாங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு பொருட்கள், பல்வேறு வகையான துணி வகைகள், காலணிகள், பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களுக்கும், தள்ளுபடி மற்றும் 'கேஷ் பேக்' வழியே பணம், திரும்ப பெறும் சலுகை உண்டு என, பிக் பஜார் நிறுவனம் அறிவித்துள்ளது.

எமதர்மராஜன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : ஜன 23, 2018 02:44




தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனி கோவில் உள்ளது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள், சில மாதங்களாக, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடந்தன.
கடந்த, 19ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலை நான்காம் கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனையைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவிலின் மூலஸ்தானத்தில், 6 அடி நீள எருமை வாகனத்தில், 7.25 அடி உயர எமதர்மராஜன் சிலையும், கோவில் வளாகத்தில், ஒன்பது பரிவார தெய்வங்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...