Tuesday, January 30, 2018

சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

 Published on : 29th January 2018 03:53 PM 

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

• சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்

பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

• கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்....

சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

• கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.

• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.

• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

• கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.
ஓர் இரவு ரயில் பயணத்தில்...

By ஆர். வேல்முருகன் | Published on : 30th January 2018 03:58 AM |

சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல இரவு நேர வாராந்திர ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். வாராந்திர ரயில் என்பதாலும் தொடர்ந்து அலுவலக விடுமுறை நாட்கள் என்பதாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது சென்னை ரயில் நிலையத்தில். ஒரு வழியாக ரயிலில் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து படுக்கையிலும் படுத்தாகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்ததால் உடனடியாகத் தூங்க முயற்சி செய்தேன்.

எனக்கு எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பயணிகள். இரண்டு பெண்கள், அவர்களின் கணவன்மார்கள், பெண்களின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு. அதில் ஒரு பெண் வீட்டிலிருந்து புறப்படும்போது எதையோ மறந்துவிட்டு வந்துவிட்டாராம். இரு பெண்களும் தங்களுக்குள் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதை அப்பெண்களின் தந்தை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்தார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெரிந்தது.

"நீ எப்பவுமே இப்படித்தான். எதையாவது மறந்துவிட்டு வந்துவிடுவாய்' என்று பொருளை மறந்து வைத்துவிட்டு வந்த மகளை விடாது அர்ச்சித்துக் கொண்டே இருந்தார் தந்தை. மகளும் பதிலுக்கு வாக்குவாதம் செய்து கொண்டேயிருந்தார். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் டிக்கெட் எடுக்கவில்லை என்பது பேச்சில் தெரிய வந்தது. ரயில்வே பரிசோதகர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று குடிபோதையில் பேசிக்கொண்டே வந்தார்.

ரயில் புறப்படத் தொடங்கியதும் தந்தையின் குரல் ஓங்கியது. பெண்களும் மருமகன்களும் பலமுறை கூறியும் பெரியவர் தனது குரலைத் தாழ்த்தவேயில்லை. ரயில் புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்தான் அந்தப் பெரியவர் அடங்கித் தூங்கினார். அதுவரை அவருக்குப் போதையில் என்ன நடந்ததென்று தெரியுமா என்பதுகூடத் தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்க, ரயில் பரிசோதகர் வருவார் என்று எதிர்பார்த்து விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. இரவு 12 மணி சுமாருக்கு விளக்குகளை அணைக்கச் சொல்லிப் பலர் ஆட்சேபித்தபின் அவை அணைக்கப்பட்டன. இந்தப் பிரச்னை முடிந்து தூங்கலாம் என்று நினைப்பதற்குள், ரயில் பெட்டிக்குள் ஒரு பெண் மிகவும் உரக்க செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் உரத்த உரையாடலால் பலருடைய தூக்கம் பறிபோய்க் கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து பேசினால் ஒரு சிலரின் தூக்கம் மட்டுமே பறிபோகும். ஆனால் நடந்து கொண்டே பேசியதால் பலருடைய தூக்கம் பறிபோனது. அடுத்து வரும் ரயில் நிலையத்தில் புகார் செய்வோம் என்று மிரட்டியபின் அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி தொந்தரவு அடங்கியது.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாகத் தூங்குவதற்குள் சேலம் ரயில் நிலையம் வந்துவிட்டது. எதிரிலிருந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சேலத்தில் இறங்கினர். அதற்குள் அக்குடும்பத்தினர் போட்ட சத்தத்தில் மீண்டும் தூக்கம் கலைந்துவிட்டது. போதை இறங்காததால் அந்தப் பெரியவர் மீண்டும் பெண்களிடம் தகராறு செய்து கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவர்கள் இறங்கிச் செல்லும்போது அந்தப் பெண்கள் தங்கள் தந்தையைப் பார்த்து, உன்னையெல்லாம் ரயிலில் தள்ளித்தான் கொல்ல வேண்டும் என்று சொல்லி சபித்தது காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது சேலத்தில் ஏறிய பயணிகள் சிலர் காலியாக இருந்த படுக்கைகளில் படுத்துக் கொண்டனர். நல்ல குளிரில் அவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். மற்றவர்களோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களின் தொந்தரவு. அனைவரும் ஜன்னலை அடைக்கச் சொன்னபின் வேண்டா வெறுப்பாக ஜன்னல்கள் அடைக்கப்பட்டன. அதன்பின் ஈரோடு, திருப்பூர் வரை எந்தத் தொந்தரவும் இல்லை. திருப்பூரில் இருந்து கோவை வரை செல்வதற்கு சிக்னல் கிடைக்காததால் ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதம்.
தூக்கத்திலேயே அதிகாலைத் தூக்கம் ஆனந்தமானது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒருவர் செல்லிடப்பேசியில் மிகவும் உரக்க பாடல்களையும் சினிமாவையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தபின், போனால் போகிறது என்பதுபோல செல்லிடப்பேசி ஒலியைச் சிறிது குறைத்துக் கொண்டார்

ரயில்களில் குடிபோதையில் பயணம் செய்பவர்களால் எத்தனை பேருக்குப் பிரச்னை ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரியாததல்ல. அவ்வாறு குடிபோதையில் வருவோரை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்காமல் ரயில்வே போலீஸார் தடுக்க வேண்டும். பயணிகளுக்குத் தொந்தரவு தருவோரை, யாராக இருந்தாலும், உடனடியாக தயவு தாட்சண்யமில்லாமல் வெளியேற்ற வேண்டும். குடிபோதையில் இருப்போருக்கு மெட்ரோ ரயில் கதவு திறக்காமல் இருப்பதுபோல, நீண்ட தூரம் செல்லும் ரயிலிலும் அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

பாடல்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்கள் அடுத்தவருக்குத் தொந்தரவாக அமையக் கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குத்தானே காதில் அணியும் ஹெட்போன்கள் உள்ளன. இரவு நேரப் பயணத்தில் படுக்கை வசதி இருப்பதே இயன்றவரை நிம்மதியாகத் தூங்கத்தான்.

ஆனால், இரவு நேர ரயில் பயணம் என்பது பல சமயங்களில் குடிமகன்களின் கொண்டாட்டப் பயணங்களாவதும் வழக்கமாக உள்ளது. பிற பயணிகளின் நிம்மதியைக் கெடுக்கும் குடிமகன்கள் உள்ளிட்டோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அடுத்தவருக்குத் துன்பம் இழைக்காமல் நல்லதைச் செய்வோம் என உறுதியேற்போம்.

Prisoner Has Right To Conjugal Visits, Says Madras HC; Allows Leave To Lifer For Fertility Treatment [Read Order] | Live Law

Prisoner Has Right To Conjugal Visits, Says Madras HC; Allows Leave To Lifer For Fertility Treatment [Read Order] | Live Law: Recognising that “Conjugal visits of the spouse of the prisoners is also the right of the prisoner”, the Madras High Court has allowed a 40-year-old lifer detained at Palayamkottai Central prison to proceed on a leave for two weeks for assisting his wife in infertility treatment. Quoting from a 1978 Supreme Court judgement which said …

Can't Deny Gold Medal To Student Scoring Highest Mark For The Reason That He Could Not Attend Exam In The First Chance: Delhi HC [Read Judgment] | Live Law

Can't Deny Gold Medal To Student Scoring Highest Mark For The Reason That He Could Not Attend Exam In The First Chance: Delhi HC [Read Judgment] | Live Law: The Delhi High Court on Tuesday held that the sitting for an examination by a student in the successive academic year, by reason of his inability to write the examination as per the schedule of the curriculum on account of circumstances beyond his control, shall still qualify as the student’s ‘first attempt’. The High Court …





முத்தான 'மூன்று' நிலா! நாளை வானில் ஒரு அதிசயம்

Added : ஜன 29, 2018 23:23



சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம். நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்

நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.

ரத்த நிலா

சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.

நீலநிற நிலா

மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.எங்கு தெரியும்இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு

நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.
 தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!
பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.



கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த

திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

வருகைப்பதிவு எப்படி?
புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.- நமது நிருபர் -
மானிய விலை டூ - வீலருக்கு ஆர்வம் : எல்.எல்.ஆர்., எடுக்கும் பெண்கள்

Added : ஜன 29, 2018 20:45




புதுக்கோட்டை: தமிழக அரசின், மானிய விலை டூ - வீலரை வாங்க, எல்.எல்.ஆர்., எடுக்க, புதுக்கோட்டை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தினமும் பெண்கள் குவிந்து வருகின்றனர்.

அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, 'பணிபுரியும் பெண்களுக்கு, மானிய விலையில் டூ -வீலர் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள், வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

டிரைவிங் லைசென்ஸ் அல்லது, எல்.எல்.ஆர்., கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மானிய விலை டூ - வீலரை வாங்க விரும்பும் பெண்கள், எல்.எல்.ஆர்., எடுக்க, மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு, தினமும் ஓரிரு பெண்களே வந்த நிலையில், சில தினங்களாக, 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் கூறியதாவது: 'மானிய விலையில் டூ - வீலர் வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு, தமிழக அரசு அறிவித்த போதே, டிரைவிங் லைசென்ஸ் அவசியம் எனத் தெரிவித்திருந்தால், முன்கூட்டியே லைசென்ஸ் வாங்கி இருப்போம்.

தற்போது தான், எல்.எல்.ஆர்., அவசியம் என தெரிகிறது. பெண்கள் அனைவருக்கும் டூ - வீலர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், லைசென்ஸ் பெற, விண்ணப்பித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 14.06.2026