Wednesday, January 31, 2018

TN med varsity to organise campaign to counsel students on drunk driving

TIMES NEWS NETWORK

Chennai: Two months after a couple of medical students from a government college died in a road accident in a case of drunk driving, the state medical university is set to start a campaign that will encourage medicos to abstain from alcohol, at least before they hit the road.

The Tamil Nadu Dr MGR Medical University has written to the deans and vice-principals of 23 state-run medical colleges and all the private colleges affiliated to the varsity asking them to initiate programmes that will help doctors lead a healthy, stress-free lifestyle, including counselling against drunk driving.

“Our informal surveys show that many medical students begin drinking on campus by the end of the first year or at the beginning of the second year. Having mentors will also help them destress because these mentors can guide and counsel students. It will also help them become better doctors,” said university registrar Dr T Balasubramanian.

Last week, the university had asked colleges to have one mentor for a batch of 20 students each. Officials say these mentors will also be teaching students ethical work practices. “We must tell our doctors and medical students to be role models,” said Madras Medical College dean Dr Jayanthi.

In the next two months, at least three core committees appointed by the university vice chancellor Dr S Geethalakshmi will discuss the required amendments in the medical curriculum that will include financial economics and laws relating to the medical profession besides changes in teaching methods. The discussions will have to be accepted and passed by the standing academicboard before any changes are made.

“Whilesome ethical lessons can be included in the syllabus, many will have tocome through observation from seniors. The mentorship programme in each college aims to provide this,” said Dr Balasubramanian.

STAY SOBER, STAY SAFE

  Woman doctor found dead, dad alleges foul play

TIMES NEWS NETWORK

Chennai: A 26-year-old doctor was found dead at her house on Monday.

The incident came to light when her husband, also a doctor, returned home and found his wife hanging. Police questioned the man after the deceased woman’s father suspected foul play in the death.

Police said Shalini and Vishnu, both from Andhra Pradesh, got married two months ago and recently moved to the city in search of jobs.

“On Monday, Vishnu had gone to meet a few friends and returned in the evening and found his wife hanging,” said a police officer.

Vishnu then informed his in-laws who rushed to the city.

Shalini’s father Sasidhar Reddy filed a complaint with police suspecting foul play in her death. Reddy told police that he had already goven Vishnu and his family a large part of the dowry they had demanded and that he had promised to give the remaining ₹5 lakh next week. A case has been registered.
ஓட்டுநர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குவியும் பெண்கள்!
 
விகடன் 

 

ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசு மானியத்தில் இருசக்கர வாகனம் பெறுவதற்காக, ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமான பெண்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.

தமிழக அரசு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அரசின் இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் இருசக்கர வாகனம் பெறுவதற்காகப் பெண்கள் பலரும் ஆர்வத்துடன், அதற்கான உரிமம் பெற ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். தினசரி 300-க்கும் மேற்பட்டோர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மகளிர் கூட்டம், கூட்டமாகக் காணப்படுகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் எம்.விஸ்வநாதன் கூறுகையில், ''அரசு வழங்கும் இரு சக்கர வாகனத்தை மானியத்தில் பெறுவதற்கு மிகவும் முக்கியமான தகுதிகளில் ஒன்று, அதை ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பதாகும். கடந்த 4 நாள்களாக தினசரி 350-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் வாகனத்தை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் வழங்கப்படும். அதன் பின்னரே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்'' என்றார்.
அரசு பணிக்கு பணம் கொடுத்து வருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? -உயர் நீதிமன்றம் கேள்வி
 
விகடன் 

 

'அரசு பணிக்கானத் தேர்வில் பணம் கொடுத்து வருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை, ''அரசு நடத்திய தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக தலைமை செயலர் உட்பட முக்கிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர்விட்டுள்ளது.

ஊடகம் ஒன்றில் TNPSC, TRB, TET, SLET, NET உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் செய்யப்படும் முறைகேடுகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. ''பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணி பெற முயல்பவர்களின் தேர்வு எழுதும் கோடிங் சீட்டுகள் தனியாக குறியிடப்பட்டு தேர்வு முடிந்த 2 நாட்களில் அதற்கான தரகர்கள் மூலம் சரியான விடைகள் குறிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தத்திற்கு செல்வது குறித்து விளக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பியுள்ளார். இது போல தவறான வழியில் தேர்வானவர்கள் 19 பேர் அல்ல 270 முதல் 280 பேர் என்பது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் தவறான முறையில் மதிப்பெண்களை பெற்றதோடு, தகுதியுடைய நபர்களின் இடங்களையும் பறித்துள்ளனர். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று இதை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் எவ்வாறு நேர்மையாக பணியாற்றுவார்கள்? இது கவனிக்கப்பட வேண்டிய விசயம், நடைபெற்ற எல்லாத் தேர்வுகளிலும் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்குமோ, தொடர்ந்து இது போன்ற தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
ஒரு கையால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து..! பதறிய பயணிகள்
 
விகடன்
 


சேலத்திலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தை, பேருந்து ஒட்டுநர் ஒரு கையால் மட்டுமே ஒட்டிவந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தப் பேருந்து ஒட்டுநரின் வலது கையில் பெரிய அளவில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அதனால், அவர் ஒரு கையிலேயே பேருந்தை இயக்கியுள்ளார். அதனால், அச்சமடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்திலிருந்த பயணி ஒருவர், நமது போட்டோகிராபரைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, அந்தப் பேருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தபோது, நமது போட்டோகிராபர் அந்த ஒட்டுநரை படம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தகவல் ஏதும் கொடுக்க மறுத்துவிட்டார். அந்தப் பேருந்து ஓட்டுநர் காயம் காரணமாக ஒரு மாதம்வரை ஓய்வில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அவர் பணிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இருப்பினும், நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்தைக் காயமடைந்த ஓட்டுநரை பணி செய்ய பணித்தது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கையிருப்பு ரூ.1,520... இந்தியாவில் இப்படியும் ஒரு முதல்வர்!
  விகடன் 
 


சொத்து மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சொத்து மதிப்பு குறைந்துகொண்டுபோகும் அரசியல்வாதி ஒருவரும் இந்தியாவில் உள்ளார் என்கிற ஆச்சர்யத் தகவல் நேற்று கிடைத்துள்ளது. அந்த அரசியல்வாதியின் பெயர் மாணிக் சர்க்கார். திரிபுரா மாநில முதல்வராக 5 முறை இருந்துள்ளார். தற்போது, 6 வது முறையாக மாணிக் சர்க்கார், தான்பூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தபோதுதான், சொத்து மதிப்பு குறைந்தது என்ற அபூர்வத் தகவலும் வெளிவந்தது.

1998-ம் ஆண்டு முதல் திரிபுரா முதலமைச்சராக உள்ள மாணிக் சர்க்காருக்கு 2013-ம் ஆண்டு வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்துள்ளது. இந்தத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட அஃப்டவிட்டில் வங்கிக் கணப்பில் ரூ.2,410 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அகர்தாலாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மாணிக் சர்க்காருக்கு கணக்கு உள்ளது. கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருக்கிறார். மாணிக் சர்க்காருக்கு என்று சொந்தமாக மொபைல்போன்கூட இல்லையென்றே அவரின் அஃப்டவிட் சொல்கிறது.

மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி பட்டாச்சர்ஜி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் 20,140 கையில் இருப்பாகவும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.12 லட்சம் சேமிப்பாக வைத்துள்ளார். 20 கிராம் தங்க நகை சொந்தமாக உள்ளது. அகர்தலாவில் அரசு வழங்கியுள்ள சிறிய வீட்டில் கணவனும் மனைவியும் வசிக்கின்றனர். முதல்வரின் மனைவியாக இருந்தாலும் பஞ்சாலி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணம் செய்கிறார். மாணிக் சர்க்காருக்கு சகோதரர்களுடன் சேர்ந்து சிறிய நிலம் பரம்பரை சொத்தாக உள்ளது.

முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை மாணிக் சர்க்கார் கட்சிக்கு வழங்கிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி பதிலுக்கு ரூ.10,000 வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்துகிறது!

By DIN | Published on : 30th January 2018 10:53 AM




கொல்கத்தா: பிஎஸ்என்எல் ஞாயிற்றுக்கிழமைகளில் அளித்து வந்த இலவச அழைப்புகள் சலுகையை வரும் பிப்ரவரி 1 முதல் முடிவுக்கு கொண்டுவருகிறது.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (பிஎஸ்என்எல்) கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை ஆலோசித்து வருவதாக கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர் பொது மேலாளர் எஸ்.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் தற்போது 6 லட்சம் நிலையான லேண்ட்லைன் இணைப்புகளுடன் சுமார் 12 மில்லியன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 14.02.2026