Wednesday, January 31, 2018

சித்தா படிப்புக்கும் 'நீட்'

Added : ஜன 31, 2018 02:49 |



  சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.இந்நிலையில் சித்தா, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல், அறிவித்தது.

ஆனால் தமிழக அரசு, இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவசிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது; சிறந்த டாக்டர்களை உருவாக்கும் வகையில் இதில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. இளநிலை படிப்பையும், நீட் தேர்வுஅடிப்படையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

எனவே நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் தான், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனி நீட் நுழைவு தேர்வு கிடையாது. பொதுவான நீட் தேர்வே இதற்கும் பொருந்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்



  வானில் 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. #lunareclipse

ஜனவரி 31, 2018, 05:30 AM

சென்னை,

வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) தொலைநோக்கி கருவிகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று (புதன்கிழமை) மாலை வானில் அபூர்வ சந்திரகிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திரகிரகணம் என்கின்றனர். இதனை பார்வையிடுவதற்காக, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 தொலைநோக்கிகள்

இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வானில் அபூர்வ நிகழ்வாக வரும் சந்திரகிரகணத்தை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சந்திரகிரகணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதனை வெறும் கண்ணாலும் பார்க்கலாம்.

இதற்கு முன்பு 1866-ம் ஆண்டு ஏற்பட்டதற்கு பிறகு தற்போது 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திரகிரகணம் ஏற்படுகிறது. ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரகிரகணத்தை அபூர்வ நிகழ்வாக கருதுகிறோம்.

இந்த நிகழ்வு மாலை 5.48 மணிக்கு தொடங்கினாலும் சந்திரன் உதிப்பது மாலை 6.04 மணி என்பதால் அதற்கு பிறகு தான் முழுமையாக தெரியும். இரவு 8.20 மணி வரை வானில் தோன்றுகிறது. இது போன்ற அபூர்வ சந்திரகிரகணம் அடுத்து 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, January 30, 2018

நாளை பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?


எஸ்.கதிரேசன்


நாளை பூரண சந்திர கிரகணம்...! எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்!

சந்திர கிரகணம்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி (நாளை) சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.

இந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் என்னசெய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஜோதிட வல்லுநர்களிடமும், சிவாசார்யரிடமும் கேட்டோம்.



'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணன் ஜோதிடப் பேராசிரியர்:

சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. பொதுவாக, தினந்தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஆனால் கிரகண காலத்தில் 'சமுத்திர ஸ்நானம்' செய்வது மிகவும் விசேஷம்.

நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும். இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.



இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:

அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும். இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது . சந்திர கிரகணம், பூசம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்வது நல்லது.

பொதுவாகவே சந்திரன் உடலோடும் மனதோடும் சம்பந்தப்படுகிற கிரகம். சந்திரன் ஜாதகத்தில் பலவீனமானால் மனதையும் வருத்தி உடலையும் வருத்துவார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகியோரின் காரகத்துவங்களுக்கு ஏற்ப உண்டாகும் உடல் உபாதைகளின்போது, சந்திரனும் பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதுடன், நோயின் கடுமையைத் தாங்கும் சக்தியையும் மனரீதியாகக் குறைத்துவிடுகிறார்.



நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.

பரிகாரங்கள்:

கிரகண நேரத்தில் சந்திர காயத்ரி, அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விட்டு, கிரகணம் விட்டவுடன் கீழே காணும் பரிகாரங்களைச் செய்யலாம்.

வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, அதில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது சிறப்பு. அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபாடு செய்வதும் நல்லது. அபிராமி அந்தாதி , மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது கூடுதல் சிறப்பு.

புண்ணிய நதிகளில் நீராடுவது, நோயின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்; மன உறுதியையும் தரும்.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.



'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி:

வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இந்தக் கிரகணம் கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிவடையும். பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும்போது, சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் சந்திரன் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும்.

கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

குமார சிவாசார்யார் (கோயில் குருக்கள்)

சந்திர கிரகணம் ஏற்படுவதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது.

ஜாதகக் கட்டத்தில் ராசியைக் குறிப்பது சந்திரனே. ராசியை வைத்துத்தான் பலன் சொல்லுவார்கள். சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

 இரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. ஆலயங்களில் கிரகண பரிகாரம் செய்வார்கள். பூசம் நட்சத்திரம் முதல் ஆயில்யம் முதல் பாதம் வரை உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரிதானாம்.. ஆய்வு முடிவுகளே உறுதி செய்தன

By ENS | Published on : 29th January 2018 03:48 PM

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என்பதை வெறும் பழமொழியில் மட்டுமல்லாமல், வழக்கத்திலும் கொண்டிருந்த நமது தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரியே என்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை சார்பில் வௌயிடப்பட்டிருக்கும் நீரிழிவு ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் 30 வயதை தாண்டியவர்களாக இருந்தால் உங்கள் தாத்தாவும் பாட்டியும், பல் தேய்க்க வேப்ப மரக் குச்சிகளைப் பயன்படுத்தியது நிச்சயம் தெரிய வந்திருக்கும்.

அவரை எல்லாம் கேலி செய்த, அடுத்த தலைமுறையினர், ஸ்டைலாக டூத் பிரெஷ்ஷை கையில் எடுத்தனர். அதன்பிறகு தான் விதவிதமான பற்பசைகளும், விதவிதமான டூத் பிரெஷ்களும் நமது பற்களை அலங்கரித்தன.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கைக் கூறுவது என்னவென்றால், பற்களை பாக்டீரியாக்கள் இல்லாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேப்பங்குச்சிகளே சிறந்த முறை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இரண்டாம் பிரிவு நீரிழிவு நோய் பாதித்தவர்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் வேப்பங்குச்சிகள் பயனளிக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

டைப் 2 நீரிழிவு பாதித்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், வேப்பங்குச்சியின் நுனியை தினமும் காலை 10 நிமிடம் மெல்லுமாறு கூறப்பட்டது. அதற்கு முன்பு அவர்களது எச்சிலில் இருந்த பாக்டீரியாக்களின் அளவு, வேப்பங்குச்சியை மென்ற பிறகு பல மடங்குக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், நம் மூதாதையர்கள் பின்பற்றிய பல நல்ல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வெறும் விளம்பரத்தைப் பார்த்து வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாகியிருக்கும் நமக்கு பல் இருந்தால் என்ன சொத்தையானால்தான் என்ன? என்றே நினைக்கத் தோன்றுகிறது.
சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

 Published on : 29th January 2018 03:53 PM 

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

• சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்

பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

• கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்....

சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

• கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.

• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.

• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

• கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.
ஓர் இரவு ரயில் பயணத்தில்...

By ஆர். வேல்முருகன் | Published on : 30th January 2018 03:58 AM |

சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல இரவு நேர வாராந்திர ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். வாராந்திர ரயில் என்பதாலும் தொடர்ந்து அலுவலக விடுமுறை நாட்கள் என்பதாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது சென்னை ரயில் நிலையத்தில். ஒரு வழியாக ரயிலில் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து படுக்கையிலும் படுத்தாகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்ததால் உடனடியாகத் தூங்க முயற்சி செய்தேன்.

எனக்கு எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பயணிகள். இரண்டு பெண்கள், அவர்களின் கணவன்மார்கள், பெண்களின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு. அதில் ஒரு பெண் வீட்டிலிருந்து புறப்படும்போது எதையோ மறந்துவிட்டு வந்துவிட்டாராம். இரு பெண்களும் தங்களுக்குள் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதை அப்பெண்களின் தந்தை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்தார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெரிந்தது.

"நீ எப்பவுமே இப்படித்தான். எதையாவது மறந்துவிட்டு வந்துவிடுவாய்' என்று பொருளை மறந்து வைத்துவிட்டு வந்த மகளை விடாது அர்ச்சித்துக் கொண்டே இருந்தார் தந்தை. மகளும் பதிலுக்கு வாக்குவாதம் செய்து கொண்டேயிருந்தார். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் டிக்கெட் எடுக்கவில்லை என்பது பேச்சில் தெரிய வந்தது. ரயில்வே பரிசோதகர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று குடிபோதையில் பேசிக்கொண்டே வந்தார்.

ரயில் புறப்படத் தொடங்கியதும் தந்தையின் குரல் ஓங்கியது. பெண்களும் மருமகன்களும் பலமுறை கூறியும் பெரியவர் தனது குரலைத் தாழ்த்தவேயில்லை. ரயில் புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்தான் அந்தப் பெரியவர் அடங்கித் தூங்கினார். அதுவரை அவருக்குப் போதையில் என்ன நடந்ததென்று தெரியுமா என்பதுகூடத் தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்க, ரயில் பரிசோதகர் வருவார் என்று எதிர்பார்த்து விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. இரவு 12 மணி சுமாருக்கு விளக்குகளை அணைக்கச் சொல்லிப் பலர் ஆட்சேபித்தபின் அவை அணைக்கப்பட்டன. இந்தப் பிரச்னை முடிந்து தூங்கலாம் என்று நினைப்பதற்குள், ரயில் பெட்டிக்குள் ஒரு பெண் மிகவும் உரக்க செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் உரத்த உரையாடலால் பலருடைய தூக்கம் பறிபோய்க் கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து பேசினால் ஒரு சிலரின் தூக்கம் மட்டுமே பறிபோகும். ஆனால் நடந்து கொண்டே பேசியதால் பலருடைய தூக்கம் பறிபோனது. அடுத்து வரும் ரயில் நிலையத்தில் புகார் செய்வோம் என்று மிரட்டியபின் அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி தொந்தரவு அடங்கியது.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாகத் தூங்குவதற்குள் சேலம் ரயில் நிலையம் வந்துவிட்டது. எதிரிலிருந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சேலத்தில் இறங்கினர். அதற்குள் அக்குடும்பத்தினர் போட்ட சத்தத்தில் மீண்டும் தூக்கம் கலைந்துவிட்டது. போதை இறங்காததால் அந்தப் பெரியவர் மீண்டும் பெண்களிடம் தகராறு செய்து கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவர்கள் இறங்கிச் செல்லும்போது அந்தப் பெண்கள் தங்கள் தந்தையைப் பார்த்து, உன்னையெல்லாம் ரயிலில் தள்ளித்தான் கொல்ல வேண்டும் என்று சொல்லி சபித்தது காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது சேலத்தில் ஏறிய பயணிகள் சிலர் காலியாக இருந்த படுக்கைகளில் படுத்துக் கொண்டனர். நல்ல குளிரில் அவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். மற்றவர்களோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களின் தொந்தரவு. அனைவரும் ஜன்னலை அடைக்கச் சொன்னபின் வேண்டா வெறுப்பாக ஜன்னல்கள் அடைக்கப்பட்டன. அதன்பின் ஈரோடு, திருப்பூர் வரை எந்தத் தொந்தரவும் இல்லை. திருப்பூரில் இருந்து கோவை வரை செல்வதற்கு சிக்னல் கிடைக்காததால் ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதம்.
தூக்கத்திலேயே அதிகாலைத் தூக்கம் ஆனந்தமானது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒருவர் செல்லிடப்பேசியில் மிகவும் உரக்க பாடல்களையும் சினிமாவையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தபின், போனால் போகிறது என்பதுபோல செல்லிடப்பேசி ஒலியைச் சிறிது குறைத்துக் கொண்டார்

ரயில்களில் குடிபோதையில் பயணம் செய்பவர்களால் எத்தனை பேருக்குப் பிரச்னை ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரியாததல்ல. அவ்வாறு குடிபோதையில் வருவோரை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்காமல் ரயில்வே போலீஸார் தடுக்க வேண்டும். பயணிகளுக்குத் தொந்தரவு தருவோரை, யாராக இருந்தாலும், உடனடியாக தயவு தாட்சண்யமில்லாமல் வெளியேற்ற வேண்டும். குடிபோதையில் இருப்போருக்கு மெட்ரோ ரயில் கதவு திறக்காமல் இருப்பதுபோல, நீண்ட தூரம் செல்லும் ரயிலிலும் அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

பாடல்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்கள் அடுத்தவருக்குத் தொந்தரவாக அமையக் கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குத்தானே காதில் அணியும் ஹெட்போன்கள் உள்ளன. இரவு நேரப் பயணத்தில் படுக்கை வசதி இருப்பதே இயன்றவரை நிம்மதியாகத் தூங்கத்தான்.

ஆனால், இரவு நேர ரயில் பயணம் என்பது பல சமயங்களில் குடிமகன்களின் கொண்டாட்டப் பயணங்களாவதும் வழக்கமாக உள்ளது. பிற பயணிகளின் நிம்மதியைக் கெடுக்கும் குடிமகன்கள் உள்ளிட்டோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அடுத்தவருக்குத் துன்பம் இழைக்காமல் நல்லதைச் செய்வோம் என உறுதியேற்போம்.

Prisoner Has Right To Conjugal Visits, Says Madras HC; Allows Leave To Lifer For Fertility Treatment [Read Order] | Live Law

Prisoner Has Right To Conjugal Visits, Says Madras HC; Allows Leave To Lifer For Fertility Treatment [Read Order] | Live Law: Recognising that “Conjugal visits of the spouse of the prisoners is also the right of the prisoner”, the Madras High Court has allowed a 40-year-old lifer detained at Palayamkottai Central prison to proceed on a leave for two weeks for assisting his wife in infertility treatment. Quoting from a 1978 Supreme Court judgement which said …

NEWS TODAY 14.02.2026