Tuesday, February 6, 2018

கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து

Updated : பிப் 05, 2018 21:23 | Added : பிப் 05, 2018 20:41



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சைவ விருந்து பரிமாறி அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, பழமையான சவுந்திரநாயகி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதற்கு, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்ட போதே, பரம்பூர் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு, சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என, முடிவு செய்தனர்.அதன்படி, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோவிலுக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு, டேபிள், சேர் போடப்பட்டது. கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அனைவருக்கும் தலைவாழை இலையில், சைவ விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து, அன்னதான விழா ஏற்பாடு செய்த, முகமது பாரூக் கூறியதாவது:மத நல்லிணக்கம் என்பது, நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளம்.அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்துகிறோம். 5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, பெரும் மகிழ்வைத் தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
'வயதுக்கு வந்தோர் திருமணத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை'

Added : பிப் 06, 2018 01:22

புதுடில்லி: 'திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்தால், அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.ஆணவக் கொலையை தடுக்கக் கோரி, அரசு சாரா அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நேற்று கூறியதாவது: திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடிவு செய்தால், அதில் தலையிட எவருக்கும் அதிகாரமில்லை. கிராம பஞ்சாயத்துகள், கட்டப் பஞ்சாயத்துகள் இதில், சமுதாயத்தின் மனசாட்சி காவலர்களாக செயல்பட முடியாது. திருமண வயதை எட்டியவர்கள், திருமணம் செய்ய முடிவு செய்து விட்டால், அதில் பெற்றோர், குடும்பத்தார், சமுதாயம் உட்பட, எவரும் தலையிட முடியாது. திருமணம் செய்து கொள்ளும் அவர்களது உரிமையில், தனியாகவோ, கூட்டாகவோ யாரும் தலையிட முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.விசாரணை, 16க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஆன் லைன்' முறையில் மருத்துவ கவுன்சிலிங்?

Added : பிப் 06, 2018 00:51

'தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், 'ஆன் லைன்' வாயிலாக நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை, மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.இதில் பங்கேற்க, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். இதற்கான கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.இதற்காக, 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கணினி இயக்க தனியார் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவு செலவுக்கு, கணிசமான பணம் செலவிடப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் கவுன்சிலிங் நடப்பதால், நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கிற்கு வரும் பெற்றோர், மாணவர்களுக்கு, போதிய வசதிகள் செய்து கொடுப்பதும், சவாலாக உள்ளது. எனவே, 2018 - 19ம் கல்வி ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ கவுன்சிலிங்கை, ஆன்லைன் வாயிலாக நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங், ஆன் லைன் வாயிலாக நடைபெறுகிறது. அதே போல, மாநில மருத்துவ கவுன்சிலிங்கையும், இணையதளம் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையிடம், தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசிடமும் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், ஆன் லைன் வாயிலாக, மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Monday, February 5, 2018

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள சில கிராமங்களும் சிஎம்டிஏ உடன் இணைக்கப்பட்டுள்ளது. தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லையில் விரிவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1974-ம் ஆண்டு சிஎம்டிஏ செயல்பட தொடங்கிய போது சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகரத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் அரக்கோணம் தாலுக்காவும் இணைக்கப்படவுள்ளன.

இதனால் சென்னையின் எல்லை 8,878 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்ட வடிவம் பெற இருக்கிறது. சென்னை பெருநகர விவரிவாக்கத்தின் முறையான திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக பெருநகர விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.
Smart watch ban on ICSE, ISC examinees 

Kolkata, Press Trust of India Feb 5 2018, 18:35 IST 




The aim of the circular is to discourage students from resorting to unfair means during exams. Representative image.

Students appearing for the ICSE and ISC examinations will not be allowed to wear smart and digital watches to exam halls from this year.

The Council for Indian School Certificate Examinations (CISCE) has recently sent a circular to this effect to the principals of affiliated schools, Nabarun Dey, the general secretary of the Bengal chapter of the Association of Heads of ICSE Schools, told PTI.

"The circular, issued by CISCE chief executive and secretary Gerry Arathoon, said the respective institutions should ensure that candidates from their schools do not carry digital watches during examinations. They are only allowed to wear analogue watches," Dey said.

The move will ensure that candidates do not resort to unfair means while writing their exams, he said, adding that students will be apprised of the CISCE circular when they collect admit cards.

Welcoming the move, Sujoy Biswas, the principal of Ram Mohan Mission School, in the southern part of the city, said gadgets of any kind should not be allowed in the exam hall.

The ICSE exams for Class X are scheduled to begin on February 26 and end on March 28 whereas the ISC exams for Class XII have been slated between February 7 and April 2.

CITY HOSP PAYS FOR FALSE HIV POSITIVE REPORT


Firm directed to reimburse medical bill of elderly man 

DECCAN CHRONICLE. | J STALIN


Published Feb 4, 2018, 1:55 am IST

Petitioner didn’t show original break-up of bill: Insurance co. 



 

Chennai: A 72-year-old retired government employee, who has been waging a war against United India Insurance Co. Ltd. for over two years to get reimbursement of his medical bill to the tune of Rs 1.44 lakh spent for treatment of chest pain, got reprieve with the Madras high court directing the insurance company to reimburse the amount and imposed a cost of Rs 50,000 on the company.

Allowing a petition from the retired employee K.P. Ramalingam, Justice T. Raja said, “Although P. Sankaranarayanan, counsel for the United India Insurance company requested not to impose costs as this would certainly demoralise the name of the insurance company, this court is not inclined to accept such submission, in my considered opinion, it would amount to justification of the wrong done by the Insurance company, as such, the very purpose of the scheme would get defeated.”

Petitioner’s counsel K.R. Ravindran submitted that petitioner has been receiving a pension. The state government had issued a G.O dated June 26, 2014, introducing New Health Insurance Scheme for pensioners. The petitioner had also subscribed to the said scheme so as to get health insurance benefits. On December 5, 2014, due to chest pain, the petitioner was admitted into the Christian Medical College Hospital in Vellore, which was one of the approved hospitals under the said scheme. The petitioner was discharged on December 8, 2014, on payment of Rs 1, 43, 709. But, the insurance company has not settled the amount even after two years on, the only ground that the petitioner had not submitted the original break up bills. Therefore, the petitioner has filed the current petition, Ravindran added.

The judge said denial by the Insurance company to pay the reimbursement of the medical bill amount under the said scheme, that too, even after the receipt of the recommendation of the Joint Director of Medical and Rural Health Services, Vellore, as well as the recommendation of the Empowered Committee for reimbursement presided by the District collector, was wholly unjustifiable and bereft of any merit. “Therefore, the petition is allowed with costs of Rs 50,000 payable by the insurance company to the petitioner along with the reimbursement amount of Rs 1,43,709 within 4 weeks”, the judge added.

NEWS TODAY 14.02.2026