Thursday, February 8, 2018

Universities in Russia offer Indian students scholarships 

TIMES OF INDIA

Chennai: Russian universities on Wednesday said they would offer Indian students scholarships for PG programmes.

The programmes will be offered on the basis of an eligibility test to study master’s programme in one of the top Russian universities — National Research Nuclear University MEPhI.

The announcement was made by Mikhail Gorbatov, viceconsul of Consulate General of the Russian Federation in South India, during a conference on Wednesday.

The announcement was made in the light of ROSATOM (Russian State Atomic Energy Corporation) Festival of Science dedicated to the 30th anniversary of the Russian-Indian cooperation in the field of the peaceful uses of the atomic energy.

Students with bachelor’s degree in science, preferably with familiarity in atomic physics and thermal physics and minimum of 50% of marks are eligible to take up the Science Olympiad test. For details, visit www.russia.study. TNN
இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் "நீட்" தேர்வு அவசியம்: வருகிறது புது சட்டம்!

By DIN | Published on : 07th February 2018 01:48 PM


புதுதில்லி: இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்ககளும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் ஏழாயிரம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் செல்வது சீனா மற்றும் ரஷ்ய நாடுகளுக்குத்தான். தற்போதுள்ள விதிகளின் படி, இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பினால், இந்திய மருத்துவ ஆணையத்திடம் 'தகுதிச் சான்றிதழ்' பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருந்து படிப்பினை முடித்து திரும்புபவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய விரும்பினால் இந்திய மருத்துவ ஆணைம் நடத்தும் 'அனுமதி உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மொத்தம் தேர்வு எழுதுபவர்களில் 10 முதல் 15% பேரே தேர்ச்சி பெறுகின்றனர். இது அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் கலவி அறிவு குறித்தும், அங்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் பற்றியும் ஒருங்கே சந்தேகங்களைக் கிளப்புகிறது.

இவற்றில் ஒரு பகுதியினை மட்டுமாவது சரி செய்யும் பொருட்டு இந்த ஆண்டு முதல் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளது.

இதன் மூலம் 50% மதிப்பெண்கள் பெற்ற, சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

Added : பிப் 08, 2018 01:41

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.

பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
98 வயதில் எம்.ஏ., பட்டம் முதல்வர் நிதிஷ் பாராட்டு

Added : பிப் 08, 2018 00:03 



பாட்னா : பீஹாரில், 98 வயதில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த முதியவருக்கு, அவரது வீட்டுக்குச் சென்ற, முதல்வர் நிதிஷ் குமார், பட்டம் வழங்கி கவுரவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2017ல், பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த நிலை பல்கலையில், ராஜ்குமார் வைஸ்யா, 98, பொருளாதாரத்தில், முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

பாட்னா, என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, முதல்வர் நிதிஷ் குமார், தள்ளாத வயதில் முதுகலை பட்டம் பெற்ற, ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று, சால்வை அணிவித்து, முதுகலை பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தார்.

வீடு தேடி வந்து பட்டம் அளித்த, முதல்வர் நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவித்த ராஜ்குமார், ''வீட்டில் படிக்கும் சூழ்நிலை இருந்ததாலும், வாசிப்பதில் ஆர்வம் உள்ளதாலும், எம்.ஏ., பட்டம் பெற முடிந்தது.

''கல்வி கற்பதற்கு வயது தடையல்ல என்பதை, வருங்கால மாணவர்களுக்கு உணர்த்த, இந்த வயதில் படிக்க முடிவு செய்தேன்,'' என்றார்.
'நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:

● பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -
58 மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : பிப் 07, 2018 21:31




புதுடில்லி: நாட்டில் 58 மருத்துவ கல்லூரிகளை துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் ரூ.14,930 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகளை துவங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக 58 மருத்துவ கல்லூரிகளை துவங்கவும், 2ம் கட்டமாக 24 மருத்துவ கல்லூரிகளை துவங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 10,000 இடங்களும், முதுநிலை படிப்பில் 18,058 இடங்களும் உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

இவை தவிர, முக்கிய துறைமுக ஆணைய சட்டத்திருத்த மசோதா மற்றும் சிறிய அளவிலான எண்ணெய் வளங்களை ஓ.என்.ஜி.சி கண்டறிதல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Wednesday, February 7, 2018

HC says doctor’s touch not improper, acquits him 

TNN | Feb 6, 2018, 05:21 IST

TIMES OF INDIA

MUMBAI: Two years after a doctor was accused by a female patient of inappropriately touching her, the Bombay high court recently struck down sexual harassment charges against the medical practitioner. The woman, who was suffering from a nerve problem on her right and left hand, had alleged that the doctor had touched her on the hands and shoulders. 

"...we are of the opinion that whatever was done by the doctor was appropriate to the medical situation," said a division bench of acting chief justice Vijaya Kapse Tahilramani and Justice Makarand Karnik. "It cannot be said that the conduct of the doctor was something which in the given facts and circumstances no medical professional in his ordinary senses and prudence would have done... looking to the medical complaint with which the complainant lady approached the doctor, it was necessary for him to hold her hands and to touch her shoulders," said the bench. The court also pointed out that the complainant's young son as well as a woman compounder was present at the time of the medical examination.


The woman had visited the clinic, along with her son on April 29, 2016, and claimed that she had a problem with her nerves in the right and left hand. In her complaint, she said that the doctor made her sit on the examination table and told her to hold his fingers with both her hands, which she did. He then pressed her hands as well as shoulders. Subsequently, he told her that Vitamin D3 and D12 injections had to be given to her hip. She said that she did not feel that the doctor's touch was appropriate and therefore lodged the first information report at Navghar police station. The doctor was charged for offences under the Indian Penal Code including of outraging a woman's modesty (section 354), physical contact and advances involving unwelcome and explicit sexual overtures (section 354A). If convicted he faces a jail term of up to three years.

A report from the police hospital in Nagpada, sought by the prosecution, opined that check up done by the doctor which required him to touch her on the shoulders and hip as well as injections on the hip was appropriate for the woman's medical complaint. An expert Medical Committee consisting of three doctors of Sir J.J. Hospital also had a similar finding. "We are of the view that no offence is made out," the bench held. It cited a Supreme Court judgement which said that when allegations in the FIR are not supported by evidence, then such an FIR could be quashed.

NEWS TODAY 14.02.2026