Friday, March 2, 2018

Cannot order fresh election to medical council, says court

02.03.2018


Chennai: The Madras high court has refused to entertain a writ petition seeking fresh elections to Tamil Nadu Medical Council (TNMC), but asked the authorities concerned to retain election records and ballot papers in safe custody till the health secretary takes a decision on the matter.

Justice K Ravichandrabaabu issued the direction on a writ petition filed by Dr P Balakrishnan, who said he would approach the health secretary under the Tamil Nadu Medical Council Act, questioning the validity of the election.

Alleging corrupt poll practices, he claimed that though a total of 83,253 voters were eligible to cast votes, only 25,253 votes were polled. Claiming that more than 58,000 doctors did not participated in the elections, the petitioner said there was no minimum quorum required as per the Act.

However, refusing to concur with the contentions of the petitioner, the judge said, “The present petition with the relief for fresh elections cannot be entertained. Since the petitioner stated that an application under the TN medical council Act would be filed before the health secretary within a period of one week, it is for him to do so.”
TN univs may not open constituent colleges anymore 

02.03.2018

Sambath.Kumar@timesgroup.com

Trichy: The state higher education department is likely to refrain from giving nod for university constituent colleges in future. Instead, new government colleges will be established, if needed, higher education secretary Sunil Paliwal told TOI here on Thursday.

“There is a conscious thinking in government that in future only government colleges would be opened and not constituent colleges. We have been getting varied views on this,” said the secretary adding that discussions were still on and a final decision would be taken soon.

The constituent colleges may be converted into government colleges. Paliwal said that the department had indeed received such requests but a decision was yet to be taken. The move comes in the backdrop of many staterun universities expressing concern over operational costs of running the constituent colleges negatively impacting their finances.

‘High no. of constituent colleges a burden for univs’

For instance, Bharathidasan University which runs 10 constituent colleges could not disburse salary to staff on time last month because of financial issues. Besides, it is also being pointed out that universities are meant to concentrate more on research activities than run colleges.

“Shouldn’t the universities be focusing on post-graduation, MPhil and PhD level research activities than on undergraduation courses,” asked the vice-chancellor of a state-run university who did not want to be named. Welcoming such a move from the government, the VC said that constituent colleges could be good test labs for UG courses for the university but of late their numbers had increased

over various reasons and become a burden for universities. While it was the duty of the government to start colleges it had reduced direct funding to them and started asking universities to take the burden. While 14 government arts and science colleges were started in the state from 2011-17 not less than 51 constituent colleges were opened since 2006.

Sources said that while the universities could generate their own funds through distance education and by increasing fees, the government was unable to raise the fees fearing criticism. Therefore, successive governments had directed the universities to start constituent colleges and meet their operational costs. However, the main beneficiaries of this policy were local ministers and politicians who took credit for starting a college in their region.
முழு அரசு மரியாதை அளித்தது ஏன்?

Published : 01 Mar 2018 08:12 IST

மும்பை



துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்க மளித்துள்ளது.

ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாயில் காலமானார். இந்த நிலையில் நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செயய்ப்பட்டது. இதுதொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும். தற்போது முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மறைந்த ஒருவருக்கு உள்ள புகழ் மற்றும் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ அவர் ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் உள்ளன. இந்த நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா என்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். அவ்வாறு முடிவெடுத்த பின்னர் மரணமடைந்த ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்படும். அந்த வகையில்தான் ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தோடு முடிகிறது ‘ஏர்செல் கதை’ : ட்ராய் முடிவு

Published : 01 Mar 2018 21:13 IST

சென்னை,



ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் மற்றும் டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாற டிராய் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும்போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், மக்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்கியது. இதனால், தொலைத்தொடர்பு சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனத்துக்கு 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன.

இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது. இந்த போட்டியை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து நாட்டின் யுனிநார் நிறுவனம், டாடா நிறுவனம, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை சேவைகளை நிறுத்தி மற்ற நிறுவனங்களுடன் இணைத்துவிட்டன.

ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களின் சலுகை விலையில் டேட்டாக்கள் , இலவச டாக்டைம், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி வரை டேட்டாக்கள் போன்ற சலுகைகளால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து படிப்படியாக விலகி வேறு நிறுவனங்களை நாடினர்.

அதேசமயம், ஏர்செல் நிறுவனத்தின் சேவையிலும், சிக்னல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையிலும் வாடிக்கையாளர்கள் எம்.என்.பி சேவை மூலம் வேறு நிறுவனங்களுக்கு மாறினார்கள்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அழைப்புகளும் செல்லவில்லை, யாருடைய அழைப்புகளையும் ஏற்கவும் முடியவில்லை.

அவசரமான சூழலுக்கு கூட யாரிடமும் தகவல் தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஏர்செல் நிறுவனத்தின் 9 ஆயிரம் டவர்களில் 7 ஆயிரம் டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த சிக்னல் குறைபாட்டால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை காரணம் காட்டி எம்என்பி மூலம் வேறு நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களால் மாற முடியவில்லை.

இதனால்,நீண்ட காலமாக வைத்திருந்த செல்போன் எண்ணை மாற்றிவிட்டு புதிய எண்ணை வேறு நிறுவனத்தில் இருந்து பெறுவதா, அல்லது, பொறுமையாக இருந்து எம்என்பி மூலம் மாறுவதா என வாடிக்கையாளர்கள் குழம்பினர்.

மேலும், வங்கி பரிவர்த்தனை, வியாபார தொடர்புகளுக்கும் நீண்டகாலமாக ஏர்செல் எண்ணை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களும் பெரிய சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் நாளை மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்தார்.

இதற்கிடையே தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்தது.

ஏர்செல் நிறுவனத்துக்கு ஏறக்குறைய ரூ.15,500 கோடி கடன் இருப்பதால், அதை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தீர்ப்பாயத்தை அணுகியது.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வடமாநிலங்களான குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்(மேற்கு) ஆகிய பகுதிகளில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

ஆந்திரபிரதேசம், அசாம், பிஹார், டெல்லி, ஜம்மு காஷ்மீர், தமிழகம், கர்நாடகம், கேரளா, மும்பை, வடகிழக்கு மாநிலம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆிகய மாநிலங்களில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு செயல்போஸ்ட் பெய்ட், ப்ரீ பெய்ட் சேவை அளித்து வந்தது. இனிமேல், இந்த வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திவால் மனுத் தாக்கல் செய்துள்ளதால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை விரைவில் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் சேவையை மாற்றிக்கொள்ளும் படியும், அதற்கு ஏர்செல் நிறுவனம் உதவ வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அடுத்த சேவையை மாற்றித் தரவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் டிராய் அறிவித்துள்ளது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை மாற்ற எம்என்பி கோட் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்பினால் போதுமானது.

அந்த எண்ணுடன் உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் எண்ணின் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15க்குப் பிறகு இந்த சேவையை பெற இயலாது.

சென்னை வட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஐவிஆர் எண், 9841012345க்கு தொடர்பு கொள்ள வேண்டும். அதில் தங்களுக்கு தேவையான மொழியைத் தேர்வு செய்து, நிறுவனத்தின் பெயரையும் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களின் 10இலக்க எண்ணை டைப் செய்து அனுப்பினால், யுபிசி கோட் எண் கிடைக்கும். இதை வைத்து மற்ற நெட்வொர் சிம்கார்டு வாங்கிட முடியும்.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கை: அறிவிப்பு வெளியீடு

By DIN | Published on : 02nd March 2018 02:26 AM |

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 530-க்கும் அதிகமான பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
வருகிற 2018-19 கல்வியாண் டு முதல் இந்த கலந்தாய்வை ஆன்-லைனிலேயே அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்களும், பெற்றோரும் சென்னைக்கு வரத் தேவையில்லை என்ற நிலை உருவாக உள்ளது.

இதற்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கி, ஜூலை இறுதி வாரத்தில் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் இப்போது வெளியிட்டுள்ளது.

இவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாளாகும்.
கலந்தாய்வு எப்போது? : இதில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின்குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 22 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஏர்செல் திவால் அறிவிப்பு: பி.எஸ்.என்.எல். மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்
By DIN | Published on : 02nd March 2018 02:49 AM


ஏர்செல் நிறுவனத்தின் திவால் அறிவிப்பு காரணமாக, சென்னையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் வியாழக்கிழமை வாடிக்கையாளர்கள் திரளானோர் குவிந்தனர்.
ஏர்செல் திவாலாகிவிட்டது என்று அறிவிக்குமாறு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இந்த அறிவிப்பால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நிறுவனத்தின் சேவையில் இருந்து மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாற முடிவு செய்து, அதற்காக முயற்சியில் இறங்கினர்.

அதிலும், பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவையை பெற வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சென்னையில் உள்ள 42 பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் வியாழக்கிழமை காலை முதலே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஏர்செல் நிறுவனத்தில் இருந்து பெற்ற யுபிசி எண்ணுடன் வந்து, பி.எஸ்.என்.எல். சேவையைப் பெற்று சென்றனர். வியாழக்கிழமை அன்று மட்டும் மொத்தம் 4,000 பேர் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இணைந்தனர். கடந்த 22-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி மொத்தம் 12 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். புதிதாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அதிகளவில் இணைந்துள்ளனர். போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் கணிசமாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏர்செல் நிறுவனத்தின் இருந்து வந்து, சேவையை பெற்றுள்ளனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் கூறியது: சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். மையங்களுக்கு வியாழக்கிழமை அன்று 6 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு துரித சேவை அளிக்க கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். தொடர்ந்து, புதிய சேவையில் இணைய தேவையான உதவி அளிக்கப்படுகிறது என்றனர் அவர்கள்.
வாடிக்கையாளர்கள் தவிப்பு:

ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் சேவையை மாற்ற தொடங்கினர். ஆரம்பத்தில் 'போர்ட்' என்று டைப் செய்து, இடைவேளை விட்டு பயன்படுத்தும் ஏர்செல் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு '1900' என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து யுபிசி எண் கிடைக்கும். அதை வைத்து, சேவை மையத்தை அணுகி, பி.எஸ்.என்.எல். சேவையை பெற்று வந்தனர். அதன்பிறகு, ஐவிஆர்எஸ் முறையில் உள்ளூர் வாடிக்கையாளர்கள் 9841012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், வெளியூர் வாடிக்கையாளர்கள் 9842012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் யுபிசி எண் பெற்று பி.எஸ்.என்.எல். சேவையை பெற்றனர்.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஏர்செல்லின் யுபிசி எண் பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர். ஐ.வி.ஆர்.எஸ் முறையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, அவர்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிற்பகலுக்கு பின்பு, இந்தப் பிரச்னை சரியானது. அதன்பிறகு, ஐ.வி.ஆர்.எஸ். முறையில் யுபிசி எண்ணை பெற்று, தங்களுக்கு விருப்பமான தொலைத் தொடர்பு நிறுவன சேவையில் இணைந்தனர்.
வங்கி மோசடி: தீர்வு என்ன?

By எஸ். கோபாலகிருஷ்ணன் | Published on : 02nd March 2018 01:30 AM |

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நேர்ந்த ரூ.11,500/ கோடி மோசடி நாட்டையே உலுக்கிவிட்டது. யாரைப் பார்த்தாலும், விஜய் மல்லையா விவகாரம் முடிவதற்குள், இப்படி ஒரு மோசடியா? என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், அரசு முதல் சாதாரண குடிமகன் வரை, இந்த தொடர் மோசடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அவசர அவசியம் என்று கருதுவதில் வியப்பில்லை. அதேநேரம், 'வங்கிகளைத் தனியார் மயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பலரும் கூறுகின்றனர். அதாவது, இந்த பயங்கரமான நிதி மோசடிகளுக்கெல்லாம் வங்கிகள் அரசின் உடைமையாக இருப்பதுதான் காரணம் என்பது அவர்களது கூற்றாக உள்ளது. இது எந்த அளவு உண்மை?

1969-ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1970களிலோ, 1980களிலோ அல்லது 1990களிலோ இதுபோன்ற பெரும் நிதி மோசடிகள் வங்கிகளில் நிகழவில்லை என்பது நிதர்சனம். இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த பெரிய அளவிலான வங்கி மோசடி 1992-ஆம் அண்டு, ஷர்ஷத் மேத்தா என்னும் பங்குச் சந்தை தரகர் பாரத ஸ்டேட் வங்கியில் அரங்கேற்றியதுதான். தொகை ரூ.4,900 கோடி. பிறகு, அதேபோன்ற மற்றொரு மோசடி 2001-ஆம் ஆண்டு, கேதன் பாரேக் என்னும் பங்குத் தரகர் ரூ.1,200 கோடி வங்கி மோசடி செய்தார்.

1991-92ல் அறிமுகமான தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சித்தாந்தங்கள் செயல்படுத்தப்பட்ட நேரத்தில் 'புதிய தலைமுறைத் தனியார் வங்கிகள்' தொடங்கப்பட்டன. அந்த சமயம் நிறுவப்பட்ட 'குளோபல் டிரஸ்ட் வங்கி' என்னும் தனியார் வங்கி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, பல்வேறு மோசடிகளினால் திவால் ஆனது.ஆக, வங்கி மோசடிகளுக்கும் வங்கிகள் நாட்டுடமையாக இருப்பதற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

மாறாக, வங்கி மோசடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த ஆட்சி நடந்தாலும் சரி, பொதுவாக அரசியல் செல்வாக்கு, சில வங்கித் தலைவர்கள் உள்ளிட்ட மேல்நிலை அதிகாரிகளின் வளைந்து கொடுக்கும் போக்கு, பேராசை, அதிகாரிகளுக்கு கண்காணிப்புத் திறமை இன்மை, கடன் வழங்கும் கலையில் தேர்ச்சி இன்மை ஆகியவையே மோசடிக்கான காரணங்கள். இவை தவிர, நிர்வாக இயலின் பால பாடங்களைக் கூட கடைப்பிடிக்கத் தவறியதும் தற்போதைய அவலநிலைக்கு காரணம்.

உதாரணமாக, வங்கி அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இடமாற்றம் செய்வார்கள். இதன் மூலிலம் அவர்களுக்குப் பணிப் பயிற்சியும் அனுபவ ஆற்றலும் அதிகரிக்கும். அதேநேரம், சில அதிகாரிகளுக்கு முறைகேடுகளில் ஈடுபடும் மனப்பான்மை இருக்குமேயானால், இடமாற்றங்கள் ஒரு தடுப்பணையாக அமையும். இதை 'ஜாப் ரொடேஷன்' என்பார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பந்தப்பட்ட நபர் 6 ஆண்டுகளாக ஒரே பணியில், ஒரே இடத்தில் இருந்துள்ளார்.
அதேபோல், ஒரு அலுவலர் வருடக்கணக்கில் ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் இருந்தால், அவரது நடவடிக்கை கண்காணிக்கப்பட வேண்டும். அவர் எதையோ மறைக்கிறார், அவர் ஈடுபட்டுள்ள முறைகேடுகளை, வேறு ஒருவர் தன் பணியை மேற்கொண்டால், கண்டுபிடித்துவிடுவார் என்ற அச்சத்தினால் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருபவர்களும் உண்டு.
ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று, வங்கிகளின் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பணிகளைக் கண்காணிப்பதாகும். இந்தப் பணியை மேற்கொள்வதில் ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தவறிவிடுகிறது. போதிய மனிதவளம் -ஊழியர்கள்- இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. ரிசர்வ் வங்கியின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை என்பதை ஒரு காரணமாக ஏற்க முடியாது.

அதுமட்டும் அல்ல. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி இடம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், அதாவது 7 மாதங்களுக்கு மேல், நிரப்பப்படாமல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
தொழில்நுட்ப மேம்பாடு எவ்வளவுக்கெவ்வளவு உதவியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துகளையும் உருவாக்க வல்லது. அத்தகைய ஆபத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை முறியடிப்பதற்கு ஏற்ப அலுவலர்களுக்குப் பயிற்சியும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வில்லனாக அமைந்தது SWIFT இயந்திரம் தான். Society for Worldwide Inter-Bank Financial Telecommunication என்பதன் சுருக்கம்தான் SWIFT . இது சர்வதேச அளவிலான வங்கிகளுக்கு இடையேயான நிதி தொடர்பான தகவல் பரிமாற்ற சாதனம். ரகசிய 'பாஸ்வேர்டு' லிமூலம்தான் இதனை இயக்க முடியும். வங்கி அலுவலகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சிலரிடமே 'பாஸ்வேர்டு' ஒப்படைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு வைத்திருந்த நபரே கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரே பணியில் ஒரே இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், சிபிஎஸ் என்கிற நடைமுறை. ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் இடையேயான தகவல்கள் எல்லாக் கிளைகளிலும் கிடைக்கும் விதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு வங்கியின் ஒரு கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வேறு எந்த கிளையில் வேண்டுமானாலும் தனக்கு தேவையான சேவையை பெற முடியும். இந்த நடைமுறையைத்தான் சிபிஎஸ் (Core Banking Solution)என்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் சம்பந்தப்பட்ட SWIFT சாதனமும் சிபிஎஸ்ஸும் இணைக்கப்படவில்லை. இதனால் தான் மோசடிகள் பல ஆண்டுகள் வெளிவராமல் இருந்துள்ளன.
மேலும் வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள கேஒய்சி (அதாவது 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற சர்வதேச நியதிகள் அடிப்படையில் வாடிக்கையாளர் பற்றிய பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் லிமூலம் பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வரும்பட்சத்தில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல் வங்கி அலுவலர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்கு கேஒய்இ (அதாவது 'உங்கள் ஊழியர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற உலக அளவிலான நடைமுறையை இயன்ற அளவு (ஊழியர்களுக்குத் தேவையில்லா இன்னல்கள் தராத அளவு) பின்பற்றுவது குறித்துப் பரிசீலனை செய்யலாம்.

இன்றைய சூழலில் அலுவலர்களுக்குத் தேவை, திறமை மட்டும் அல்ல, ÷நேர்மையும் கூட. இதை உறுதிப்படுத்தும் வகையில், கேஒய்இ நடைமுறை பயன்படக் கூடும். இதை எப்படி அலுவலர்களுக்கு சிரமம் இல்லாமல் செயல்படுத்தலாம் என்பதற்கு ஆய்வு மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
மேற்கூறிய நிகழ்வில் தணிக்கை முறை படுமோசமாகத் தவறி உள்ளது. வங்கிகளில் தற்போது மூலின்று அடுக்கு தணிக்கை முறை உள்ளது. வங்கியைச் சேர்ந்த தணிக்கையாளர்கள் (இன்டர்னல் ஆடிட்டர்கள்), வங்கி சாராத வெளித் தணிக்கையாளர்கள் (எக்ஸ்டர்னல் ஆடிட்டர்கள்) மற்றும் ரிசர்வ் வங்கியால் சட்டப்படி நியமிக்கப்படும் தணிக்கையாளர்கள் (ஸ்டாச்சூட்டரி ஆடிட்டர்கள்) ஆகியவர்கள் ஆண்டு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் என வங்கி செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்வார்கள். இதுவும் பஞ்சாப் நேஷனல் விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது.

தற்போது நடந்துள்ள பெரும் பண மோசடிகளுக்கு, மேற்கூறியவை போன்ற பல்வேறு காரணங்கள் இருந்துள்ளன என்பது தெளிவு. இந்தக் கடும் குறைகளைக் களைவதே நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் பணியாக இருத்தல் வேண்டும்.

மாறாக, வங்கிகளைத் தனியார்மயமாக்குதல்தான் தீர்வு என்றும், அதற்கான தருணம் வந்துவிட்டது என்றும் தனியார் தரப்பிலும் அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. விருப்பு, வெறுப்பின்றி யோசித்தால் அது கடிகாரத்தின் முள்ளைப் பின்னோக்கி நகர்த்துவதாகத்தான் அமையும் என்பது புலப்படும். அதனால் வங்கிகளின் பணியில் திறன் மேம்பாடும், தொழில்நுட்ப முன்னேற்றமும் வசப்படுமா என்பது கேள்விக்குறியே.
அரசுடைமை வங்கிகளில் விவசாயக் கடன் மற்றும் சிறுதொழில் கடனுக்கு ஒட்டுமொத்தக் கடன் அளிப்பில் 40 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதுவும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தனியார் வங்கிகளில் சாத்தியமா? அரசுடைமை வங்கிகளில் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குக்கிராமங்களிலும் கிளைகள் திறக்கப்படுகின்றன. தனியார் வங்கிகளில் அதுபோன்று கிராமக் கிளைகள் திறக்கப்படுமா? பிரதமரின் ஜன்தன் திட்டத்துக்கு ஏதுவாக தனியார் வங்கிக் கிளைகள் கிராமங்களில் செயல்படுமா?

கடந்த 11 ஆண்டுகளில், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் மற்றும் அருண் ஜேட்லி ஆகிய மூலின்று நிதிஅமைச்சர்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு மூலிலதனத் தேவையான ரூ.2.6 லட்சம் கோடியை செலுத்தியிருக்கிறார்கள். இது பட்ஜெட் மூலிலம் செலுத்தப்பட்ட தொகை என்பதால், வரிகள் வடிவத்தில் இறுதியாக இந்தச் சுமை மக்கள் தலையில்தான் விழும் என்பதையும் மறக்க முடியாது. எனவே, வங்கிகளில் ÷நேரும் மோசடிகளை எப்பாடுபட்டாவது ஒழிக்க வேண்டியதுதான் உடனடித் தேவை.

அதற்கேற்ப, பொதுமக்களுக்கோ, பொதுத்துறை வங்கிகளுக்கோ, வங்கி வாடிக்கையாளர்களுக்கோ, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வங்கிகளில் நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதே அவசியமும் அவசரமும் ஆகும்.

NEWS TODAY 15.09.2026