Monday, April 2, 2018

Website to pay ₹14K for failure to publish ad

TIMES NEWS NETWORK   02.04.2018

Chennai: District Consumer Redressal Forum, Chennai (south) has ordered popular classifieds website Sulekha.com to pay a compensation of ₹14,000 to a customer for not publishing an advertisement despite collecting the tariff amount for it.

Complainants Vasumathi and Dineshkumar had approached the forum seeking action under section 12 of the Consumer Protection Act after the classifieds website failed to advertise their firm Mobile Beauty Parlour.

The branch manager of Sulekha.com had reportedly assured that an advertisement under a special category ‘Mobile Beauty Parlour’ would be placed in the yellow pages within a week, after which they paid ₹4,412 to the website for it.

According to their petition, they requested the website to publish their advertisement and provided the content for the same as: ‘Pampering yourself has never been so easy. We are just a call away. Enjoy a relaxing day at your home and rejuvenate your body, mind and soul. We at Mobile Beauty Parlour offer wide variety of services from hair massage to royal pedicure.’ The complainants’ contention was that despite the promise, the website failed to create a new category and did not publish the ad within a week, as agreed upon. The complaints said that this caused them mental agony and issued a notice to them in September 2012. Since there was no response, they moved the forum seeking a compensation.

The bench comprising president M Mony, members K Amala and Dr T Paul Rajasekaran said that the forum is of the view that Sulekha.com committed negligence and ordered it to refund ₹4,412 with an interest sum calculated at 9% per annum along with a compensation of ₹10,000 for causing mental agony to its customers.

மாணவர் மனம் நலமா? 14: தனிமை எனும் கொடுமையை அகற்ற…

Published : 27 Mar 2018 13:39 IST
 
டாக்டர் டி.வி. அசோகன்

THE HINDU TAMIL



சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறேன். நான் தங்கியிருக்கும் விடுதியில் வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஆனாலும் தனிமை என்னை வாட்டுகிறது. என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. இதனால், படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியவில்லை.


- ராம் குமார், சென்னை.

எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசத் தெரியாதவர்கள், அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இல்லாதவர்கள் மட்டும்தான் தனிமையில் வாடுவார்கள் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது.

ஆனால், புறக் காரணங்களான நட்பு குழாம் அல்லது ஒருவரின் தொடர்பாற்றலோடு தொடர்புடையது அல்ல தனிமை. அது தனிமனித மனம் சார்ந்தது. “மனதின் உணர்வுகள்தாம் தனிமையைத் தீர்மானிக்கின்றன” என்கிறார் மனநல நிபுணர் லீராய் ஜென்கின்ஸ்.

ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான நண்பர்களை வைத்துக்கொண்டு, வகுப்பில் எல்லா மாணவர்களோடு பேசிக்கொண்டு இருப்பவர்கள், மனதளவில் திருப்தி இல்லாமல் தனிமைப்பட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

மறுபுறம் ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே உடையவர்கள்கூடத் தனிமையை உணராமல் திருப்தியாக இருக்க வாய்ப்புள்ளது. மன அமைதிக்காக மற்றவர்களுடைய தொடர்பிலிருந்து விலகியிருப்பவர்களும் உண்டு. அத்தகைய தனிமை விரும்பிகள் தனிமையில் வாட வாய்ப்பில்லை. இப்படித் தனிமை என்ற கருத்தைச் சுற்றிலும் பல அம்சங்கள் இருக்கின்றன.

அதேநேரம் தனிமைக்கும் வருத்தத்துக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் இருக்கின்றன. வெறுமை, பயம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தனிநபரின் மனநிலையைத் தனிமை சீர்குலைத்துவிடுவதுண்டு. தனிமையால் பாதிக்கப்படுகிறவர்கள் மிகுந்த மனவருத்தத்துக்கு எளிதில் ஆளாகிறார்கள்.

தனிமை ஏழு நிலைகளில் ஏற்படுகிறது:


1. புதிய சூழல்

“நான் இந்த இடத்துக்குப் புதியவன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. இனி என்ன செய்யப்போகிறேன்” என்ற தொடர் எண்ணங்களால் தனிமை ஏற்படலாம்.


2. அந்நியமாதல்

ஆரம்ப காலத்தில் ஒரு புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகாத தன்மை ஏற்படுவது எல்லோருக்கும் இயல்பானதே. சூழ்நிலைக்கேற்ப, நம்மை மாற்றிக்கொள்ளாதபோது, அந்தச் சூழ்நிலை நமக்கு அந்நியமாகிவிடுகிறது. இதனாலேயே பலர் தனிமையாக உணர்கிறார்கள்.


3. புரிந்துகொண்டவர் இல்லாத நிலை

“என்னைப் புரிந்துகொண்ட நண்பர்கள், யாரும் இங்கில்லை. பெற்றோரும் உடன் இல்லை. இங்கிருப்பவர்கள் எல்லாம், பெயருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்” என்று நினைப்பதுகூடத் தனிமையை ஏற்படுத்திவிடும்.


4. கடந்த கால நினைவுகள்

சிலர் தங்களின் சொந்த ஊர், வீடு ஆகியவற்றை நினைத்து ஏங்குவார்கள். அந்தச் சூழல் மாயமாகிப்போனது சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.


5. நண்பர்களின் போக்கில் மாறுதல்கள்

சிலர் எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்கப் பழகியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நண்பர்களைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகப் பிரிய நேரிடும்போது தனிமை தங்களைப் பிடித்தாட்டுவதாக நினைத்து வருந்துவார்கள்.


6. சூழ்நிலை மாறும்போது

மாறுபட்ட சூழ்நிலைகளில், நண்பர்களைச் சந்தேகிக்க நேரிடும்போது, வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் தனிமை உணரப்படுகிறது.

உடம்பில் வலி ஏற்படும்போது, மனித மூளையில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகிறதோ, அத்தனையும் தனிமையை உணரும்போதும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில் இருந்தவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளைக் கொடுத்தபோது பலன் இருந்ததாகவும் தெரியவருகிறது.

தனிமைப்படுத்துவதில், கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கிறது. சமூக வலைத்தளங்களில் மிகுந்த நேரத்தைச் செலவழிப்பதால், நிஜ உலகத் தொடர்பில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

1980-களில் அமெரிக்காவில் 20 சதவீதத்தினர் தனிமையை அவ்வப்போது உணர்ந்ததாகத் தெரிவித்திருந்தனர். 2010-க்குப் பிறகு, 40 சதவீதத்தினர், தனிமையுற்றதாகச் சொல்லியதைப் பார்க்கும்போது, சில உண்மைகள் தெரியவருகின்றன. சமூக ஊடகங்களில் கூடுமானவரை குறைந்த நேரத்தைச் செலவிடுவது, தனிமை, வருத்தம் ஆகிய மனநிலைகளைத் தவிர்க்க உதவும்.


தனிமையால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள்

1. அமைதியாக உறங்க முடியாமல் தூக்கமின்மை ஏற்படுவதால் பகல் பொழுதில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

2. குழப்பமான மனநிலை குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றுக்குள் அமிழ்த்திவிடுவதுண்டு.

3. பொது இடங்களில் இயல்பாக நடந்துகொள்ள முடியாமல் தடுமாறுவது.

4. காரணம் இல்லாமல் ஆத்திரம், வன்முறை உணர்வுகள், களவாடும் மனப்போக்கு உண்டாகலாம்.

5. நாள்பட்ட தனிமையில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, கொழுப்புச்சத்து மிகுந்திருத்தல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

தனிமையைப் போக்குவது எப்படி?

1. புதியவர்களிடம் பேசுங்கள்

ரயில் பயணங்களில்,பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களோடு பேசுங்கள். அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

2. பிடித்தவர்களோடு அடிக்கடி உரையாடுங்கள்

மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய மூளைத் திசுக்களில், ‘எண்டார்ஃபின்’ என்ற ரசாயனப் பொருள் மிகுந்து, ‘வென்ட்ரல் டெக்மெண்டல் பகுதி’ துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விடுதி அறையில் உங்களுடன் தங்கியிருப்பவர்களோடு தினமும்உரையாடுங்கள்.

3. புத்திசாலித்தனமாகச் சமூக ஊடகங்களைக் கையாளுதல்

முதலாவதாக, நீங்கள் பதிவேற்றும் தகவல்களுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ கிடைக்கிறது என்பதைக் கணக்கிடுவதைக் கைவிடுங்கள். ஆன்லைனிலும் அர்த்தமுள்ள நட்பு வட்டங்களை உருவாக்குங்கள். நல்ல செய்திகளைப் பதிவேற்றுங்கள். சிரித்த முகத்துடன் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை உங்களுடைய ‘புரொஃபைல் படமாக’ வைத்துக்கொள்ளுங்கள்.

4. பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது

பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதுபுதியவர்களை நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.

5. படைப்பாற்றலை மேம்படுத்துங்கள்

மேடைப் பேச்சாற்றல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கதை-கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும்போது உங்களுடைய ஆளுமைத் திறனும் மேம்பட்டு உங்களுக்குத் தனிமை எண்ணம்ஏற்படுவதைத் தவிர்க்கும்.

6. பகிர்ந்தால் பாரம் குறையும்

அர்த்தமுள்ள உறவுகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள். நம்மைப் புரிந்துகொண்டவர்களிடம், நம் தனிமையை வெளிப்படுத்தும்போது, அதற்குரிய தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

7. மனநல மருத்துவரை அணுகுதல் பிரச்சினைகள் எல்லை மீறும்போது மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். சூழ்நிலையால் உண்டாகும் தனிமையை நம் எண்ணத்தால் வெல்லலாம்.

‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
வீடு தேடி உதவித்தொகை: அசத்திய கரூர் கலெக்டர்

Updated : ஏப் 02, 2018 01:49 | Added : ஏப் 02, 2018 01:27



கரூர் : வீடு தேடிச் சென்று, ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கிய கரூர் கலெக்டர், அவர் வீட்டில் அமர்ந்து உணவருந்தினார்.

கரூர் அடுத்த, சின்னம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள், 80. இவர் வறுமையில் இருப்பதையறிந்த, கலெக்டர் அன்பழகன், அவரது வீட்டிற்கு நேரில் சென்று, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.

கலெக்டர் அன்பழகன் கூறிதாவது: கடந்த, 28ம் தேதி, மூக்கனாங்குறிச்சியில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. அப்போது, முகாமிற்கு வர முடியாமல், அரசு உதவிக்கு காத்திருப்போர் இருக்கலாம் என தோன்றியது. அங்குள்ள, வி.ஏ.ஓ.,விடம், 'பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் யாரும் இருக்கின்றனரா' என கேட்டேன்.

அப்போது, சின்னமாநாயக்கன்பட்டியில், 80 வயது மூதாட்டி ராக்கம்மாள், ஆதரவின்றி கஷ்டப்படுவது தெரிந்தது. அவரது குடிசைக்கு நேரில் சென்ற போது, மூதாட்டியின் நிலை புரிந்தது. என் வீட்டில் இருந்து, எடுத்து சென்ற உணவை அவருக்கு பரிமாறி, நானும் அவருடன் அமர்ந்து சாப்பிட்டேன்.

தன் வீட்டிற்கு வந்திருப்பது, கலெக்டர் என்பதைக் கூட அறியாத அவரது நிலை கண்டு, மனதில் வலி ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக, முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி,காவிரி மேலாண்மை வாரியம்,உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் குதிப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.




'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய பா.ஜ., கூட்டணி அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியினர் போராட்டம் ஒரு புறம் இருக்க,

தமிழ்நாடு அனைத்துவணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முழு கடையடைப்பு போராட்டமும் நாளை நடத்தப்பட உள்ளது.

'தி.மு.க., வரும் 5ம் தேதி நடத்தும் முழு அடைப்பு அன்றே வணிகர் சங்கமும் கடையடைப்பு நடத்த வேண்டும்' என்ற தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை வணிகர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் நாளை 21 லட்சம் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடைக்கப்படும்.

அதேபோல தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்களும் நாளைய கடையடைப்பில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரிய ஓட்டல்கள் மூடியிருக்கும். மேலும் தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் சார்பில் சாலை மறியல், ரயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட உள்ளது.

இப்படி பல்வேறு தரப்பினரும் நாளை நடத்தும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பால் முகவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகள் தனி ஆவர்த்தனம்:

* 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என சங்கத் தலைவர், நாசர் அறிவித்துள்ளார்
* 'ஏப்., 4ல் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்
* 'ஏப்., 4ல் கையெழுத்து இயக்கமும், ஏப்., 6ல் திருச்சியில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும்' என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்
* பா.ம.க., சார்பில் 11ம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது
* ஏப்., 6ல் தே.மு.தி.க., போராட்டம் நடத்துகிறது
* தி.மு.க., கூட்டணி கட்சிகள் 5ம் தேதி 'பந்த்' நடத்துகின்றன.

இப்படி தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் தனி ஆவர்த்தனம் செய்வதால் காவிரி பிரச்னையில் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு உருவாகவில்லை. இது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

''தமிழக விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவளிக்க வேண்டும்''

-விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

- நமது நிருபர் -
ரயில் சேவை எண் முடக்கம்

Added : ஏப் 02, 2018 01:00

ஐ.ஆர்.சி.டி.சி., வாடிக்கையாளர் சேவை எண் முடங்கியுள்ளதால், ரயில் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.இந்தியன் ரயில்வே மற்றும் உணவு சுற்றுலா கழகம் மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரத்து செய்வதில் பயணியரிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வுகாண, 011 - 3934 0000, 011 - 2334 0000 ஆகிய எண்களில், பயணியர் தங்கள் புகார்களை தெரிவிப்பதுடன், சிறப்பு ரயில் விபரம், டிக்கெட் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்களுக்கு, இதில் தீர்வுகாண முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வழங்கப்படும் இச்சேவை, நேற்று முன்தினம் முதல் முடங்கியுள்ளதால் பயணியர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக. வாடிக்கையாளர் சேவை வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

- நமது நிருபர் -
மருத்துவர்கள், மாணவர்கள் இன்று 2 மணி நேரம் வேலை நிறுத்தம்




தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள், மாணவர்கள் இன்று 2 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். #NMCBill #Doctors

ஏப்ரல் 02, 2018, 06:32 AM

புதுடெல்லி,

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் திங்கள்கிழமை பகல் 12 மணி முதல் 2 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்துள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் உள்ளது.

டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) முன்பு பயிற்சி மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுதவிர மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, ஏழை எளிய மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் சேவையை மாநில அரசிடம் இருந்து முழுமையாக தங்கள் வசம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் குறைகூறியுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு     02.04.2018



தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கிறது.

ஏப்ரல் 02 2018, 12:10 AM அரசாங்கமே அனைத்து சாலைவசதிகளையும் செய்யமுடியாத நிலையில், தனியாரே சாலைகளை அமைத்து, செயல்படுத்தி, பின்பு திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டப்படி பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்துக்கு அவர்களே சாலைகளை வடிவமைத்து, கட்டமைத்து, நிர்ணயித்து பராமரிக்கும் பொறுப்புகளை வைத்துக்கொள்வார்கள். ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைத்து, அந்தவழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்களுக்கு எல்லாம் சுங்கக்கட்டணம் வசூலித்து, வருவாயின் ஒருபகுதியை தங்களுக்கும், ஒருபகுதியை அரசாங்கத்துக்கும் கொடுத்து வருகிறார்கள்.

இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 42 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு அதாவது பரனூர்-விழுப்புரம், சென்னசமுத்திரம்-காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சீபுரம் மண்டலம், சூரப்பேட்டை-திருவள்ளூர், பட்டறை பெரும்புதூர்-திருவள்ளூர், திருத்தணி-திருவள்ளூர், வானகரம்-திருவள்ளூர், கணியூர்-கோயம்புத்தூர், ஆத்தூர்-சேலம், சாலைபுதூர்-தூத்துக்குடி, பள்ளிக்கொண்டா-வேலூர், வாணியம்பாடி-வேலூர், எட்டுவட்டம்-திருநெல்வேலி, கப்பலூர்-திருநெல்வேலி, நாங்குநேரி-திருநெல்வேலி, புதுக்கோட்டை-திருச்சி-மதுரை பிரதானசாலையில் உள்ள சிட்டம்பட்டி, பூதக்குடி-மதுரை, வெம்பாலக்குடி-சிவகங்கை, லட்சுமணப்பட்டி-சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு 10 சதவீத கட்டணமும், மற்ற கனரக வாகனங்களுக்கு 4 முதல் 6 சதவீத கட்டண உயர்வும் நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு சாலைமேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் சென்னை-புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் அக்கரை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் நேற்று அமலுக்கு வந்தது.

இந்தக்கட்டண உயர்வு மூலம் பல அத்தியாவசிய பண்டங்களை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்களுக்கும் கட்டண உயர்வு விதிக்கப்படுவதால் அந்த பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது. ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும். ஆனால், பலருடைய குறை என்னவென்றால், இத்தகைய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை, தரம் உயர்த்தப்படுவதும் இல்லை. நெடுஞ்சாலைகளின் விதிப்படி சுங்கச்சாவடிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்சு வசதி, உணவுவசதி, சற்று தங்கும்வசதி, மருத்துவ வசதி போன்ற பல வசதிகள் போதுமான அளவில் இல்லை. ஆகவே, சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதற்கு அனுமதி அளிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இதுபோன்ற அனைத்து வசதிகளையும் அளித்து, ஆங்காங்கு இடையில் பழுது ஏற்படும் வாகனங்களுக்கு ரிப்பேர் செய்வதற்கான வசதிகளையும் அளிக்கவேண்டும்.

அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்னென்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டுமோ, அவற்றையெல்லாம் செயல்படுத்தவேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் வேண்டுகோள் ஆகும். கட்டண உயர்வுக்கேற்றாற்போல சுங்கச்சாவடி வழியாக செல்பவர்களுக்கு கூடுதல் வசதிகளும் வழங்கப்படவேண்டும். குஜராத் மாநிலத்தில் கார்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதுபோல, தமிழ்நாட்டிலும் விலக்கு அளிக்கலாம் என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்கலாம்.

NEWS TODAY 14.02.2026