Tuesday, April 3, 2018

அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

Added : ஏப் 02, 2018 22:42

சென்னை: இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை படிப்பு நிபந்தனையை எதிர்த்து அரசு டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஏப் 02, 2018 22:56


சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, பணி காலத்தில் எடுத்த பேறுகால விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு சேர்க்கப்படாததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரணையை, இன்றைக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் நித்யலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, ஏழு டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனு:நாங்கள், அரசு டாக்டர்களாக பணியாற்றி வருகிறோம். முதுநிலை படிப்பில் சேர ஆர்வமாக உள்ளோம். மார்ச், ௧௫ல், சுகாதார துறை வெளியிட்ட விளக்க குறிப்பேட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி பற்றி கூறப்பட்டுள்ளது.

அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். 'ஈட்டிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை, பணி காலமாக கருதப்படாது' என, கூறப்பட்டுள்ளது.அதனால், இரண்டு ஆண்டுகளில், பேறுகால விடுப்பு எடுத்த பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்டவிரோதமானது. பேறுகால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஈட்டிய விடுப்பு, பணி காலமாக கருதப்படாது என, கூறப்படுவது சரியல்ல.முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளித்திருந்தால், இந்த விடுப்பை எடுத்திருக்க மாட்டோம்.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பு, மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் ஆஜரானார். விசாரணையை, இன்றைக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

Monday, April 2, 2018

ஆழ்ந்த தூக்கத்துக்கு ஒரு டஜன் யோசனைகள்! #SleepHygiene 

ஜி.லட்சுமணன்

 VIKATAN  

பகல் முழுக்க உழைத்துக் களைத்துப் போவது உடம்பு மட்டுமல்ல... மனமும்தான்! இரண்டையும் ரிலாக்ஸ் செய்வது உறக்கம். நிம்மதியான, போதுமான தூக்கம் இல்லையா? அடுத்த தினம் ஒரு நல்ல தினமாக யாருக்குமே விடியாது! கோபம், எரிச்சல், தேவையற்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்; உற்சாகம் நம்மைவிட்டுக் கழன்று ஓடியிருக்கும். "தொடர்ச்சியான தூக்கமின்மை மனஅழுத்தம் தொடங்கி இதய நோய்கள் வரை பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரத்தில், ``நிம்மதியாக தூக்கம் பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்து" என்று அடித்தும் சொல்கிறார்கள்.




``இரவில் சரியான தூக்கம் இல்லாததற்குச் சில பழக்க வழக்கங்களும், உண்ணும் உணவுகளும்கூட காரணமாக இருக்கலாம். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து, சில முறையான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் நல்ல, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் நிச்சயம் உண்டு" என்கிற தூக்கவியல் நிபுணர் ராமகிருஷ்ணன், அதற்கான சில `ஸ்லீப் ஹைஜீன்’ (Sleep hygiene) வழிமுறைகளையும் விவரிக்கிறார்...

* குறிப்பிட்ட நேரத்துக்கு உறங்குவது குட்... வெரிகுட்!

சிலர் கண்ட நேரத்தில் படுத்து, கண்ட நேரத்தில் எழுந்திரிப்பார்கள். தினமுமே `இந்த நேரத்தில் படுக்கைக்குப் போய்விட வேண்டும்’ என்று ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, சரியாக பெட்டில் ஆஜராகிவிடுவது குட் ஹேபிட். ஓரிரு நாள்களில் சரியான நேரத்துக்குத் தூக்கம் வந்துவிடும். பிறகென்ன... அலாரமே வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பும் தானாகவே வந்துவிடும். மூளை, செரடோனின் (Serotonin), மெலடோனின் (Melatonin) ஆகிய ஹார்மோன்களின் அளவைச் சரிசெய்து, இயல்பான உறக்கத்துக்கு உத்தரவாதம் தந்துவிடும்.

* இரவு இனிக்க உணவில் கவனம்!

தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். தயிர், முட்டை, இறைச்சி, எண்ணெயில் பொரித்த சிப்ஸ், ஃபாஸ்ட் ஃபுட், காரமான உணவுகளுக்கு கறாராக `நோ’ சொல்லிவிடுவது பெஸ்ட்.

* ரூமையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்!

நாம் உறங்கும் அறை, தூங்குவதற்கென ஏற்ற சூழலோடு இருக்கவேண்டியது அவசியம். காற்றோட்டமான அறையாக இருப்பது மிக முக்கியம். படுக்கை அறை ஜன்னல்கள் வழியே பளீரென வெளிச்சம் வந்தால், அங்கு கறுப்பு நிறத் திரைச்சீலைகளைத் தொங்கவிடலாம். வெளிச்சமில்லாத, இருண்ட அறை தடையில்லா தூக்கத்துக்கு உதவும். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப அறையின் வெப்பநிலையை வைத்துக்கொள்ளலாம். (ஜிலீர் குளிர் சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்கு மிதமான குளிர்... இப்படி).



* `இசை’ என்கிற வரம்!

மன அமைதிதான் தூக்கத்துக்கான உண்மையான டானிக். அது கிடைக்க, உறவினர்கள், நண்பர்களுடன் குட்டி அரட்டை அடிக்கலாம். இசையும் தூக்க மருந்தே! மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பதும் உறக்கம் வர உதவும்.

* யோகா உதவும்!

தூக்கத்துக்குத் தயாராக, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். தியானம், மனதில் உள்ள குழப்பங்களை, அழுத்தங்களை நீக்கி, உடலை ரிலாக்ஸ் ஆக்கும்; ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.

* டீ,காபி வேண்டாமே!

தூங்கச் செல்வதுக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் டீ, காபி, மது போன்றவற்றை அருந்தக் கூடாது. காபியில் உள்ள கஃபைன் புத்துணர்ச்சி கொடுப்பது இருக்கட்டும், தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆக, கஃபைன் நிறைந்த காபி, டீயை மாலை 5 மணிக்கு மேல் பருகாதீர்கள்.



* ஒரு டம்ளர் பால் உதவும்!

இரவில் பசும்பால் குடிப்பது ஆரோக்கியம். இதிலுள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan) நியூரோடிரான்ஸ்மிட்டரின் அளவைச் சீராக்கி, தூக்கத்தை வரவழைக்கும். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம். ஃப்ரூட் சாலட்டும் நல்ல தூக்கம் தரும்.

* படுக்கும் நிலையில் (Posture) கவனம்!

மல்லாந்தோ, ஒரு பக்கமாகவோ படுக்க வேண்டும். குப்புறப் படுக்கக் கூடாது. படுக்கையும் தலையணையும் நமக்கு ஏற்றபடி, வசதியானதாக இருக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது. நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது.

* வாசிப்பைக் கொஞ்சம் தள்ளிவைக்கலாம்!

இரவில் சுய முன்னேற்றப் புத்தகங்கள், ஆழமான கருக்களைக் கொண்ட நாவல்கள் போன்ற நம் சிந்தனையை, ஆர்வத்தைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்கக் கூடாது. இவை மூளையைச் சுறுசுறுப்பாக்கி, தூக்கத்தைக் கெடுத்துவிடும். இவற்றுக்குப் பதிலாக போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இரவில் திகிலூட்டும் த்ரில்லர், ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளும் தூக்கத்தைக் கெடுக்கும்.



* மொபைலுக்கு `நோ!’

படுக்கையறையைத் தூங்குவதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்து ஆபிஸ் வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது. இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப் புத்தகத்தை (e book) படிப்பதையும் தவிர்க்கலாம்.

* மதியத் தூக்கம் வேண்டாம்!

மதியத்திலும் மாலை நேரத்திலும் தூங்குவது கூடாது. இது, இரவுத் தூக்கத்தை பாதிக்கும். நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றி யோசிக்கவே யோசிக்காதீர்கள்!

* வாக்கிங் நல்லது!

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. மாலை நேரத்தில் ஒரு குட்டி வாக் போவது உறக்கத்துக்கு `வெல்கம்’ சொல்லும்.

வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'

வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம். 2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.

வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்த
பெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.

இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Derailment of coach detains Pandian Express 

Special Correspondent 

 
MADURAI, April 02, 2018 00:00 IST

Passengers complain about “inordinate” delay

Derailment of a spare coach that was being shunted from the mechanical shed at Madurai railway junction yard delayed the departure of Pandian Superfast Express to Chennai by three hours on Sunday night.

The train that was scheduled to leave at 8.35 p.m. was rescheduled to leave at 11.35 p.m.

According to railway source, during a routine check, the officials found that one the coaches was unfit for journey.

Hence, a spare coach was moved from the mechanical shed to replace the unfit coach. While it was being shunted from one track to another, it derailed in the railway yard around 2.30 p.m.

Rerailment could not be done till 9 p.m.

With the derailed coach hindering the movement of the rake of Pandian Superfast Express, the train could not be shunted to the platform on time for its scheduled departure.

Many Chennai-bound passengers were seen arguing with the railway officials over what they claimed was an “inordinate” delay.

The officials pacified the passengers by explaining the situation.
A tribute to Sri Jayendra Saraswathi 

Staff Reporter 

 
CHENNAI, April 02, 2018 00:00 IST


Governor Banwarilal Purohit, columnist S. Gurumurthy and chairman of Bharatiya Vidya Bhavan, Chennai Kendra, N. Ravi, at the function on Sunday.B. Jothi Ramalingam

Kanchi seer Sri Jayendra Saraswathi will be remembered as a great soul who brought happiness and spirituality to crores of people, Governor Banwarilal Purohit said here on Sunday.

After releasing the Bharatiya Vidya Bhavan’s journal ‘Shradhanjali’ issue, which is a tribute to Sri Jayendra Saraswathi, he said, “He treated everyone with kindness and had various programmes to help those who were suffering.”

Mr. Purohit recalled that the seer had built hospitals to help the poor access good and free healthcare.

Affordable education

“Seeing that children were moving away from traditional values, he started schools that provided affordable education for them,” Mr. Purohit added.

N. Ravi, chairman of Bharatiya Vidya Bhavan, Chennai Kendra, said the seer had always been a friend and a supporter of the institution.

“He inaugurated the Chennai Kendra office building in 1992. He has been known for the transformative effect he had on the ancient institution that is the Kanchi Mutt. He also got the Mutt to reach out to people through educational and social service institutions,” he said.

Columnist S. Gurumurthy said he had been a devotee of the Kanchi Mutt ever since his birth. Aravind Sitaraman, chairman of What is India Publishers, spoke on the occasion.
Corruption by V-Cs will affect future’ 

Special Correspondent 

 
CHENNAI, April 02, 2018 00:00 IST


Educationist suggests a panel

Corruption by a Vice-Chancellor or faculty members in a university can affect generations of students. There is an urgent need not just to target corrupt V-Cs but also to identify teachers who paid money to get posts in universities, said M. Anandakrishnan, former V-C of Anna University.

He advocated constituting a high-power committee, comprising eminent educationists and legal experts, to offer recommendations on ways to prevent corruption in higher education.

Speaking on the sidelines of a seminar on corruption in higher education, Mr. Anandakrishnan told reporters that V-Cs indulged in corruption in the blind faith that there would be no repercussions as they had political protection.

“They also believe that their act would not have an impact on society. But if society boycotts such corrupt officials, the message would get through,” he said.

Cultural decline

Rajya Sabha member and CPI (M) leader T.K. Rangarajan said there was a cultural decline and teaching had been compromised.

“It is not possible to eliminate corruption when it is introduced into the system from childhood. If you don’t correct the education system, you cannot change politics for it is these students who become politicians,” he said.

Former president of the All India Federation of University and College Teachers Organisation A. James William felt the recent thrust of the Union Ministry of Human Resource on autonomy to universities would end up making the latter introduce courses through self-financing mode.

Universities in the Grade III category would become ‘untouchables,’ he said.

Ranking universities based on their NAAC score was not the correct way to evaluate the quality of education, Mr. William added.

A high-power committee must be set up to offer recommendations on ways to prevent corruption in higher education

M. Anandakrishnan,Former V-C of Anna University

NEWS TODAY 14.02.2026