Wednesday, April 4, 2018

IIT-M No.1 in engg, Anna univ among top 5

TIMES NEWS NETWORK 04.04.2018

Chennai: In recent times, Anna University had been in the news for all the wrong reasons, with former vice chancellor M Rajaram being booked for graft. However, the Union human resources development ministry’s National Institutional Ranking Framework (NIRF) 2018 list released on Tuesday gave every reason for the university and its alumni to bask in glory.

The university has been awarded tenth rank in the overall category for the first time as a recognition of its academic achievements. In the university category, Anna University moved to fourth position from its last year’s sixth rank.

Indian Institute of Technology-Madras (IIT-M) has been ranked the best engineering college in the country for the third time in a row. The institute also retained its second position in the overall category.

Apart from these two, 11 other universities including Amrita, Bharathiar, VIT, Alagappa, Madras University, Agriculture University, SASTRA, Ramachandra, SRM, Sathyabama and Saveetha made it to the top 50.

Besides this, three city colleges made it to the top 10 under the colleges category. This included Loyola College, Madras Christian College and Presidency College which secured ranks of 2nd, 12th and 96th respectively in the 2017 list.

Speaking to TOI, Sunil Paliwal, state higher education secretary, said Tamil Nadu was way ahead of other states in the NIRF 2018 list. “The state government has been urging authorities to give importance to NIRF and NAAC accreditation in all the meetings of vice-chancellors and regional joint directors held in the last one year. That is why a greater number of government colleges participated this year and it is paying dividends now.” 




IIT-M: Will try to remain at top of heap

Commenting on IIT-M’s achievement, Bhaskar Ramamurthi, director of the institute, said the ranking is an affirmation of the consistent hard work of the faculty and students. “We will continue to forge ahead with the same energy to reach greater heights”, he added.

The 160-year-old University of Madras has improved its NIRF ranking in 2018 from 64 to 29 (overall) and from 41to 18 (for universities), which is ahuge leap.

Vice-chancellor P Duraisamy said this was mainly due to a 25% increase in the student enrolment and other parameters like research projects and expenditure on infrastructure and equipments. “The improvement in ranking is significant as the competition this time was intense. 4,000 institutes applied for NIRF,” he said.

“The healthy competition and the staff response has enabled SASTRA to stay among the top 10 private universities with relative displacement almost negligible when compared to 2017 rankings,” said S Vaidhyasubramaniam, dean, planning & development, Sastra University.
HC tells CTS to pay ₹420cr tax in two days, de-freezes bank a/c

Sureshkumar.K@timesgroup.com 04.04.2018

Chennai: The Madras high court has ordered Cognizant Technology Solutions, embroiled in a ₹2,800-crore tax dispute with the I-T department, to pay 15% of the tax demand in two days. To facilitate the payment, the court ordered de-freezing of the company’s bank account with JP Morgan, Mumbai.

“There shall be an order of interim stay of the income tax proceeding, subject to the condition that Cognizant pays 15% of the tax demanded, and furnishes a bank guarantee or security by way of fixed deposit for the remaining. For proper compliance, the attachment of bank account with J P Morgan Chase Bank, Mumbai, shall stand lifted. However, the attachment in respect of accounts with SBI, Deutsche, Corporation and HDFC Bank shall continue till the compliance of the order. Similarly, the attachment of bank deposits to the tune of ₹2,650 crore shall continue subject to the lien being created for the remaining amount,” the court said.

15% tax should be retained in a separate account

Justice T S Sivagnanam passed the interim direction on Tuesday, on a plea moved by Cognizant assailing the tax demand and the freezing of its 68 bank accounts. Remittance of 15% of the tax demanded shall be retained in a separate account and shall abide by the order to be passed in the plea, Justice Sivagnanam said and posted the plea to April 18 for further hearing.

The issue pertains to 2,800 crore tax demand made towards dividend distribution tax (DDT) for remitting 19,415 crore to its non-resident shareholders in the United States and Mauritius towards buyback of 94,00,543 of its equity shares in May 2016.

The I-T department claimed the principal reason for the buyback of shares was to defeat the buyback distribution tax (BBDT) that will be applicable even in case of reduction of shares which will be in force from June 1, 2016. “Therefore, Cognizant hurriedly repatriated its earnings to the tune of 20,000 crore (accumulated profits) from India to its investors situated abroad by way of a scheme approved by the high court,” additional solicitor-general G Rajagopalan said.

The order was obtained by misleading the high court saying the scheme did not attract any I-T liability fully aware that the repatriation was liable to DDT under Income Tax Act, the department said.

Appearing for Cognizant, senior counsel P S Raman contended that since the department had frozen all its bank accounts for the past eight days, the company with 1.7 lakh employees across the country, could not make a single rupee as payment to its vendors and service providers.

“We have even deducted 800 crore as TDS for 19,415 crore paid for the buyback and remitted it to the department,” Raman said.
தேசிய மருத்துவ மசோதா: திருப்தி தராத திருத்தங்கள்

Published : 03 Apr 2018 08:46 IST
 
‘தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி)’ மசோதாவை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 12 பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வும், தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்காக எழுத வேண்டிய ‘எக்ஸிட்’ தேர்வும் ஒன்றே என்று புதிய திருத்தம் கூறுகிறது. 1956-க்குப் பிறகு மருத்துவக் கல்வியைச் சீர்திருத்தக் கொண்டுவரும் இந்த மசோதா மீது மேலும் விரிவான விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு திருத்தங்கள் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேதம், யோகாசனம், யுனானி, சித்தா உள்ளிட்ட முறைகளில் மருத்துவம் படித்தவர்களும் இணைப்புத் தேர்வு (‘பிரிட்ஜ் கோர்ஸ்’) எழுதிய பிறகு ஆங்கில வழி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம் என்ற முந்தைய பரிந்துரை கைவிடப்பட்டிருப்பது நல்ல அம்சம். எனினும், சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறிய சில யோசனைகளை மத்திய அமைச்சரவை அறவே நிராகரித்துள்ளது. ‘இந்திய மருத்துவ கவுன்சில்’ என்ற அமைப்புக்குப் பதிலாக ‘தேசிய மருத்துவ கவுன்சில்’ என்ற அமைப்பு அதே வேலையைச் செய்யப் போகிறது. இதன்மீது அரசின் கட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும். அதன் உறுப்பினர்களை மத்திய அமைச்சரவைத் தலைமையிலான தேர்வுக் குழு நியமிக்கப்போகிறது. தேசிய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் உயர் அமைப்பாக மத்திய அரசுதான் இருக்கப் போகிறது. இந்த கவுன்சில் சுதந்திரமான தனி அமைப்பாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கடைசிவரை போராடியது பலனளிக்கவில்லை.

மாநிலங்கள் சார்பில் பகுதி நேர உறுப்பினர்களாக இதில் நியமிக்கப்படுவோரின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஆறாக உயர்த்தியுள்ளது அமைச்சரவை. நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்த எண்ணிக்கை 10. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 40% இடங்கள் மத்திய அரசின் கட்டண நிர்ணயத்துக்கு உட்பட்டது என்பது இப்போது 50% ஆக உயர்த்தப்படுகிறது. இதன் நேரடி விளைவு என்னவென்றால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாகத்துக்குரிய இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் அவற்றின் கட்டணம் கடுமையாக உயரப்போகிறது.

அடுத்த கட்டம் புதிய சட்டத்துக்கேற்ற விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்குவது. இதுவும் சவாலான வேலைதான். நாடு முழுவதற்கும் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஒரே தேர்வு என்பதை நடத்துவது எளிதானதல்ல. மாணவர்கள் எந்த அளவுக்கு மருத்துவம்குறித்து படித்திருக்கிறார்கள், செய்முறையைத் தேர்ச்சியாகச் செய்கிறார்கள் என்பதைச் சோதிப்பது கடினம். நாடு முழுவதும் மருத்துவக் கல்வியின் தரம் ஒரே மாதிரி இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆயுஷ் இணைப்புத் தேர்வு இனி கட்டாயம் இல்லை என்றாலும், அதை அமல்படுத்தும் சுதந்திரம் மாநில அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் தரமான மருத்துவர்கள் வருவதை மத்திய அரசு எப்படி உறுதி செய்யப்போகிறது என்று தெரியவில்லை!
காற்றில் கரையாத நினைவுகள்: கைக்கும் வாய்க்கும்!

Published : 03 Apr 2018 08:58 IST

வெ.இறையன்பு






இன்று நமக்குக் கிடைத்த அனைத்தும் முயன்று பெற்றவை என்பது எத்தனை சிறுவர்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் கையில் காசு இருந்தாலும் கடையில் அரிசி கிடைக்காது. பிறகு, காசு இருந்தால் உணவு தானியம் கிடைக்கும். இப்போது பலருக்கு இரண்டும் கிடைக்கும் நிலைமை.

அந்தக் காலத்தில் நடுத்தரக் குடும்பங்களில் பெரும்பாலும் காலை உணவு பழையசோறு. இரவில் ஊற்றிய நீரை பெரியவர்கள் நீராகாரமாகப் பருகுவார்கள். குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் பாலை இருப்பு வைக்க வசதியில்லை. காலை 8 மணி வரை காப்பிக்கும், தேநீருக்கும் பால் உண்டு. அதற்குப் பிறகு கடுங்காப்பிதான். பழையசோற்றுக்கு தொட்டுக்கொள்ள பெரும்பாலும் ஊறுகாய். அவ்வப்போது கொசுறாக கொஞ்சம் வெல்லம் கிடைக்கும். முக்கிய உறவினர் திடீரென முளைத்தால் ஆபத்பாந்தவனாக உப்புமா கிளறப்படும். தொட்டுக்கொள்ள நாட்டுச் சர்க்கரை. அதிக நாள் உபயோகிக்காத ரவையில் வண்டு கள் படையெடுக்கும். வாரம் ஒரு நாளோ இரண்டு நாளோதான் இட்லி, தோசை இருக்கும். மாவாட்டுவது மகத்தான சாதனை. ஒருவர் அரைக்க, மற்றொருவர் மாவைத் தள்ள, அது திரைக்கதைகள் அலசப்படும் நேரம். இரண்டாவது நாள் மிஞ்சிய மாவை கோதுமை கலந்து ஒப்பேற்றுவார்கள். அல்லது வெங்காயம் வரமிளகாய் போட்டு புளிக்காத தோசை சுட்டுத் தருவார்கள்.

நினைவின் தேன் மிட்டாய்

ரொட்டி என்பது காய்ச்சலின்போது உண்ணும் உணவு. ஜாமாவது, வெண்ணெயாவது. பாலில் தொட்டு சாப்பிடும் வழக்கம். இனிப்பு என்பது அபூர்வம். பண்டிகைக்கு மட்டுமே பலகாரம். அதுவும் நாட்டுப் பலகாரம். சில நேரங்களில் செய்யப்படும் மைசூர்பாவை உடைக்க சுத்தியல் தேவைப்படும். இனிப்பு உளுந்துவடை, அப்பம், அதிரசம் இவையே முக்கியப் பலகாரங்கள். விருந்தினர் வந்தால் உண்டு பஜ்ஜி, போண்டா.

சின்ன வயதில் இனிப்பென்றால் அலைவோம். கடைகளில் கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் இவையே அதிகம். பொருட்காட்சிகளில் பஞ்சு மிட்டாய் கிடைக்கும். எப்போதாவது வீட்டுப்பக்கம் கடிகார மிட்டாய் விற்க ஒருவர் வருவார். அதைக் கைகளில் கட்ட கடித்துக் கடித்துச் சாப்பிடுவோம். ஒரே ஒரு ஐஸ்கிரீம் கடை சேலம் பேருந்து நிலையத்தில். நகருக்குச் சென்றால் அவசியம் போவோம்.

அமாவாசையில் படையல் நடக்கும். காலையில் விரதம் இருந்தவர்கள் இரவு சிற்றுண்டி மட்டுமே அருந்த வேண்டும் என்ற எழுதப்படாத விதி. பருவத்துக்கேற்ற காய்கறி. மார்கழித் தையில் மொச்சை அதிகம். பரிமாறியதும் முதலில் பொரியலைச் சாப்பிடுவோம். எது கிடைத்தாலும் சாப்பிடும் உள்ளம். ஓடியாடி விளையாடியதால் பசியைத் தணித்தால் போதுமென்பதே நோக்கம். சப்பாத்திக்கு சட்டினியைக்கூடத் தொட்டுக்கொள்வோம். இட்லிக் குப் பல வீடுகளில் மிளகாய்ப்பொடியே கிடைக்கும். ஒரு பொரியல், சாம்பார், ரசம் - இதுவே மதிய உணவு. பணியாரம் என்பது ஆண்டுக்கொரு முறை. அவ்வப்போது ஆப்பம், அடை. அடுத்த நாள் பூரி என்றால் முதல் நாள் இரவே பூரிப்பு ஏற்படும்.

முட்டை அதிசயம்

மாலையில் வகுப்பில் இருந்து வந்தால் பொரிவிளங்காய் உருண்டை விளையாடச் செல்லும் முன் உண்ணக் கிடைக்கும். பெரும்பாலும் இயற்கை சார்ந்த தின்பண்டங்கள். சுண்டல், நிலக்கடலை போன்றவை அதிகம். கடலைப்பொரியைக்கூட ரசித்துச் சாப்பிடுவோம்.

சந்தையில் வாங்கிய பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி, குச்சிக்கிழங்கு ஆகியவை வேகவைத்ததும் வீட்டையே நறுமணமாக்கும். அன்று மக்காச்சோளம் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. தோகையை உரித்துக் கடித்துத் தின்பதில் மகிழ்ச்சி. இன்று அமெரிக்க மக்காச்சோளம் உரிக்கப்பட்டு குப்பிகளில் கிடைக்கிறது. சீத்தாப்பழத்தை சாப்பிடும்போது அதிகக் கொட்டையை யார் உமிழ்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும்.

அசைவ உணவு வீடுகளில் மாமிசம் என்பது வாரம் ஒரு முறை. நாட்டுக் கோழிகூட அபூர்வம். கோழியடித்தால் ஊருக்கே தெரியும். சில முரட்டுக் கோழிகளைப் பிடிக்க ஊரே திரளும். முட்டை என்பது அதிசயப் பொருள். சில கடைகளில் மட்டும் இரும்புக் கூண்டுகளில் இருப்பு வைக்கப்படும். பாயாசம் என் பது அபூர்வம். பாயாசத்தில் இருக் கும் ஜவ்வரிசியை கைகளில் பிடிக்க முயன்று முயன்று தோற்போம்.

ஏழைகளின் உணவு பெரும்பாலும் களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு. காலையில் நீரில் கரைத்து குடிப்பார்கள். மாலையில் உழைத்து முடித்ததும் நீராடிய பிறகு சுடச்சுட சோறும், குழம்பும் அருந்துவார்கள். இன்று சாலை போடுகிறவர்கள் உணவகத்தில் தருவித்த பொட்டலத்தைப் பிரித்து சிற்றுண்டி உண்கிறார்கள். பல மாவட்டங்களில் இன்று அறுவடைக் கூலியாக நெல்லை ஏற்பதில்லை. ‘‘எதற்காக நாங்கள் சோறு சாப்பிட வேண்டும்? புரோட்டா குருமாவை ருசித்துச் சாப்பிடுவோம்’’ என பணமாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

அம்மாவின் கை ருசி

அன்று உணவில் எளிமை இருந்தாலும் அனைவரும் தரையில் அமர்ந்து உண்பதில் அத்தனை ருசி. சிலநாள் மதிய சோறு அதிகம் மீந்துவிடும். குழந்தைகள் அதைச் சாப்பிட சோம்பல் முறிப்பார்கள். உடனே அம்மா அனைவரையும் வட்ட வடிவில் உட்கார வைத்து, சோற்றை பெரிய சட்டியில் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி உருட்டி கைகளில் வைப்பார். அத்தனை சோறும் ஐந்தே நிமிடத்தில் காலியாகிவிடும். இன்னும் வேண்டுமென கைகள் நீ..ளு...ம்.

அன்று ரேஷன் அரிசியை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுத்த நடுத்தரக் குடும்பங்கள் உண்டு. அரிசி வாங்கினால் அதில் கல்லையும், மண்ணையும் அகற்றுவது பெரிய பயிற்சியாகவே இருந்தது. அதனால் அன்று எதையும் வீணடிக்க மாட்டார்கள். பழைய சோறு அதிகம் மிஞ்சினால் வடகமாகும். இரவுச் சோறு புளிச்சாறு கலந்து அடுத்த நாள் வெங்காயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து புளிசாதமாக்கப்படும். வாழைப்பழத்தைக்கூட குழந்தைகள் விரும்பும். அன்று பழையதை வாங்கிக்கொள்ளும் யாசகர்களும் இருந்தனர்.

வட இந்திய உணவுகள் அப்போது அதிகம் இல்லை. சூப் என்பது எங்காவது கிடைக்கும். நாண், தந்தூரி எல்லாம் அரிதான பதார்த்தங்கள். வட இந்தியா சென்றபோதுதான் பன்னீர் பட்டர் மசாலாவைச் சுவைத்தேன். இன்று பல இளைஞர்கள் உணவகங்களில் விரும்பிச் சாப்பிடுவது அவற்றையே. பாரம்பரிய இனிப்புகளான லட்டு, ஜிலேபி போன்றவை இன்று பிடித்தமானவை அல்ல. ஐஸ்க்ரீம், பேஸ்ட்ரி போன்றவையே அவர்கள் விரும்பும் இனிப்பு. அடிக்கடி அவர்கள் கைகளில் பீட்ஸா, பர்கர். இடியாப்பத்தைத் தொடாதவர்கள் நூடுல்ஸை நொறுக்குகிறார்கள். காரணம், இட்லி தோசை நித்தமும் வீட்டிலேயே தயாராகிவிடுகின்றன. உபயம் மின்சார உபகரணங்கள். கறிக்கோழி வரத்தால் அடிக் கடி அசைவ உணவு. பெட்டிக் கடையிலும் முட்டை கிடைக்கும்.

நாக்கு நீ... ள... ம்

சன்ன ரக அரிசியில் இன்று சுவையில்லை. அபரிமிதமாக விளையும் காய்கறியில் ருசியும் இல்லை. நெய்யில் மணமே இல்லை. பாலில் சுவையில்லை. அளவு மட்டுமே அபரிமிதம். தொப்பையும், தொந்தியும் அதிகம். நீரிழிவு அதிகரிப்பு. கொழுப்பு கூடுதல். இதனால் கண் கெட்ட பிறகு உணவுக் கட்டுப்பாடு. இப்போது எளியவர்கள் சிறுதானியத்தைத் தொடுவதில்லை. பணக்காரர்கள் களியும், கம்மஞ்சோறும் சாப்பிடுகிறார்கள். நகர்களெங்கும் சிறுதானிய உணவகங்கள். ஆனால் அங்கும் ருசிக்கே பிரதானம். இன்னும் நமக்கு நாக்கே முக்கியம்.

உணவு நடந்து வந்த பயணம் நெடியது. இன்று பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் நீண்ட இடைவெளி. எல்லா வீடுகளிலும் இரண்டுவிதச் சிற்றுண்டிகள். எதையும் நன்றியுடன் சாப்பிடுவதும், விழிப்புணர்வுடன் நினைத்துக்கொள்வதும் இன்னும் சில இல்லங்களில் தொடரவே செய்கின்றன.

- நினைவுகள் படரும்...

நலம் தரும் நான்கெழுத்து 28: அது என்ன ‘நல்ல மன அழுத்தம்’?

Published : 31 Mar 2018 11:36 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்
HINDU  TAMIL



‘பிரச்சினைகள் பிரச்சினைகளில் இல்லை. பிரச்சினைகளை நாம் பார்க்கும் விதத்தில்தான் அவை பிரச்சினைகளாகின்றன ’

– ஸ்டீஃபன் கோவே

ராமசாமி, கிருஷ்ணசாமி இருவருக்குமே பதவி உயர்வு கிடைத்தது. ஒரே பதவிதான். ராமசாமிக்கோ ஒரே பதற்றம். புதுப் பதவி; பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமே; பொறுப்பு அதிகரிக்குமே; அடிக்கடி பயணம் செய்ய வேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட்டார். கிருஷ்ணசாமிக்கோ ரொம்ப மகிழ்ச்சி; பழைய போரடிக்கும் வேலைக்கு குட்பை; நமக்கு மரியாதை கூடும்; வருமானம் கூடும்; பல இடங்களை அலுவலகச் செலவில் சுற்றிப் பார்க்கலாம் என்றெல்லாம் ஒரே குஷி!

ஒரே விஷயத்தை இருவரும் பார்க்கும் விதம்தாம் அதைப் பிரச்சினையா இல்லையா என முடிவு செய்கிறது. ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்னும் பழமொழியையே ‘நாய்ச்சிலை ஒன்றை நாயெனப் பார்த்தால் அது நாய்; அதுவே வெறும் கல்லென்று பார்த்தால் கல்தான்’ என்பதைத்தான் சொல்கிறது என்பார்கள்.

முற்றுப்புள்ளி இல்லா பந்தயம்

ஆங்கிலத்தில் மட்டுமல்ல; உலக மொழிகள் எல்லாவற்றிலுமே இன்று யாருக்கும் பிடிக்காத வார்த்தை ‘ஸ்டிரெஸ்’ எனப்படும் மன அழுத்தம். அதிலும் பொருள்மயமாக ஆகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தைகூட எனக்கு மிகவும் டென்ஷனாக இருக்கிறது எனக் கூறும் நிலையில்தான் இருக்கிறது.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ என்ற படத்தில் கதாநாயகன் காரணமே இல்லாமல் சும்மா ஓடுவான். பலரும் அவன் ஏதோ நோக்கத்துக்காக ஓடுகிறான் எனத் தவறாக நினைத்துக்கொண்டு அவனுடனேயே ஓடுவார்கள். அதுபோல் பலரும் எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லாமே ஒரு பெரும் பந்தயமாகிவிட்டது. எனவே, வென்றாக வேண்டிய அழுத்தம் அதிகரிக்கிறது.

பார்வையை மாற்றுவோம்

மன அழுத்தம் ஏன் வருகிறது? இதுதான் இலக்கு என நினைத்திருப்பதை அடைய நம்மால் இயலாதபோது அல்லது இயலாது என நாம் நினைக்கும்போது வருகிறது. ஒரு ஓவரில் இருபது ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையோ மறுநாள் தேர்வுக்குள் ஐம்பது பக்கங்கள் படிக்க வேண்டும் என்ற நிலையோ நமக்கு அழுத்தத்தைத் தருகின்றன.

மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியான பல கோளாறுகளுக்கும் மன அழுத்தமே காரணமாக அமைகிறது. ஆகவேதான் மேலை நாடுகளில் மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகள், சிகிச்சைகள் போன்றவை கோடிக்கணக்கான டாலர்கள் சந்தை மதிப்புடையவையாக இருக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான முதல் வழி நாம் பார்க்கும் முறையை மாற்றிக்கொள்வதே. அதீதமான எதிர்பார்ப்புகளையும் யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத குறிக்கோள்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஸ்டிரெஸ்ஸே வேண்டாமா?

மாறாக, எல்லோரும் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ‘பீப்’ ஒலிகொண்டு மறைக்க வேண்டிய கெட்ட வார்த்தை அல்ல. மன அழுத்தம் என்பது தேவையான ஒன்றே. பிரச்சினைகள் வரும்போதுதான் புதுப்புது வாய்ப்புக்கள் வருகின்றன. தேர்வுகளே இல்லாவிட்டால் பலரும் பாடப் புத்தகங்களையே தொட மாட்டார்கள்.

நாம் பல துறைகளில் வெற்றி பெற்ற முதல் தலைமுறையினர் அளவுக்கு அடுத்த தலைமுறையினர் சிறந்து விளங்காமல் போவதைப் பல இடங்களில் பார்க்கிறோம். அதற்குக் காரணம் வென்றே ஆக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இல்லாமல் போவதே.

மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது. ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள்.

அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.

அலுவலகங்களில் ‘டார்கெட்' எனப்படும் இலக்குகளை வைத்து ஆராய்ந்ததில், இலக்குகளே வைக்காமல் ஜாலியாக வேலை பார்ப்பதைவிட மிதமான இலக்குகளை வைத்துக்கொண்டு கொஞ்சம் அழுத்தத்துடன் வேலை பார்க்கும்போது உற்பத்தித் திறன் கூடுகிறது எனக் கண்டறிந்துள்ளனர். அதேநேரம் மிகையான அதீத இலக்கும் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது எனவும் அதே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினேஷ் கார்த்திக் எத்தனையோ ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டுவந்தது அல்லவா? இதுவே ஐந்து ஓவர்களில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருந்திருந்தால், அதை அடைவதில் என்ன பெருமை இருக்கிறது? கானமுயலைக் கொன்ற அம்பைவிட, யானை பிழைத்த வேல் ஏந்துவதுதானே இனிது எனக் குறள் கூறுகிறது. பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையை வேண்டுவதைவிடப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனை வேண்டுவதே புத்திசாலித்தனம். யதார்த்தமும்கூட.

பிரச்சினைகளும் மன அழுத்தமும் ஓர் அளவுக்கு நமக்குத் தேவையானவையே. அவை அதீதமாகப் போகாத சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
கட்டணத்தை உயர்த்தாமலேயே வசூலை குவிக்கும் ரயில்வே - விமானங்களுடன் கடும் போட்டி

Published : 03 Apr 2018 17:43 IST

புதுடெல்லி



பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், விமான நிறுவனங்களின் போட்டியையும் கடந்து, ரயில்வே கடந்த நிதியாண்டில் கூடுதலான வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:


‘‘கடந்த 2017- 2018 நிதியாண்டில் ரயில்வே துறை, பயணிகள் டிக்கெட் கட்டணத்தின் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2016 -17 நிதியாண்டை ஒப்பிட்டால், 2,551 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத போதிலும், ரயில்வே கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இதுபோலவே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2016 - 2017 நிதியாண்டில் ரயில்களில் ஒட்டுமொத்தமாக 821.9 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017 -2018 நிதியாண்டில் 826.7 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் சீசன் அல்லாத காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை பெருமளவு குறைப்பதால், ராஜதானி, துராந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் பெரும் போட்டியை சந்தித்து வருகின்றன. இந்த ரயில்களின் பயணக் கட்டணத்தை விடவும், விமானங்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. எனினும் மற்ற காலங்களில் ரயில்வே விமான நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது.

இதுபோலவே ரயில்களில் சரக்கு கையளும் திறனும் அதிகரித்துள்ளது. 2017 - 2018 நிதியாண்டில் ரயில்வே, 2.16 கோடி டன்கள் அளவிற்கு நிலக்கரியும், 1 கோடி டன்கள் அளவிற்கு சிமெண்ட்டும், 47 லட்சம் டன்கள் அளவிற்கு இரும்பு உள்ள சரக்குகளை கையாண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 116.2 கோடி டன்கள் அளவிற்கு பல பொருட்களை ரயில்வே கையாண்டுள்ளது. இதன் மூலம் கணிசமான அளவு லாபம் ஈட்டியுள்ளது’’

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொஞ்சம் மரியாதை கொடுங்க சார்; தவறாக பயன்படுத்தப்படும் போலீஸாரின் அதிகாரமும் அத்துமீறலும்: ஒரு பார்வை


Published : 03 Apr 2018 19:27 IST

மு.அப்துல் முத்தலீஃப்

  சென்னை   THE HINDU TAMIL

 


தி.நகர் சம்பவம்

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்றவற்றில் அதிகாரத்தை பயன்படுத்தும்போது போலீஸாரால் தவறாகப் பிரயோகிக்கப்படும் அதிகாரம் சாதாரண மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அலசவே இந்தக் கட்டுரை.

காவல்துறை பல்வேறு இக்கட்டான பணிகளுக்கு நடுவே செயல்படும் அமைப்பு. அனைத்து பிரச்சினைகளுமே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அன்றாடப் பணிகளை காவலர்கள் சந்திக்கிறார்கள். காவல்துறையில் கடைகோடி காவலர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலேயே மறுக்கப்படுவதும் வெளிப்படையான ஒன்று.

மிகுந்த மன அழுத்தத்தில் நாங்கள் பணி ஆற்றுகிறோம் எங்களுக்கான விடுமுறைகள் கூட இல்லை, குடும்பத்தாருடன் நேரம் செலவிடக்கூட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் காவலர் தரப்பில் வைக்கப்படும் வாதம்.

மன அழுத்தத்துடன் பணியாற்றும் காவலர்கள் அதை சாதாரண மக்களிடம் காண்பிக்கும் சம்பவங்கள் அதிகமாக சமீபகாலமாக அதிகரித்து வருவது நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக தரமணியில் மணிகண்டன் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதும், பின்னர் அவர் மன உளைச்சலால் தீக்குளித்து மரணமடைந்ததையும் கூறலாம்.

அடுத்து திருச்சியில் சாதாரண போக்குவரத்து விதிமீறலுக்காக பல கிலோ மீட்டர் துரத்திச்செல்லப்பட்ட உஷா, ராஜா தம்பதிகள் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த உஷா மரணமடைந்த சம்பவத்திலும், இன்று தி.நகரில் போக்குவரத்து போலீஸாரால் பிரகாஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதும், பின்னர் போலீஸாரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் நடந்தது.

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீஸாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் பொதுமக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்கு போலீஸார் தரப்பில் வைக்கப்படும் வாதம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ஓய்வில்லை, மன உளைச்சல் என்கின்றனர்.

இங்கு கேள்வியே உங்களுக்கு மட்டுமல்ல 120 கோடி மக்களும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலால் தான் வாழ்கின்றனர். உங்கள் மன உளைச்சலுக்கு வடிகால் அப்பாவி பொதுமக்கள் அல்லவே என்பதே வாதம். இப்படிக் கேட்டால் அடுத்து போலீஸ் தரப்பிலிருந்து இனி குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்காதீர்கள், குடித்துவிட்டு வந்தால் மரியாதையாக பேசி அனுப்பி வையுங்கள், குற்றவாளிகளை பிடித்தால் அவர்களுக்கு சகல மரியாதை கொடுங்கள் என்று நக்கல் கலந்த பதிவுகள் போலீஸாரிடையே வைக்கப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் கேட்பதும், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டிப்பதும் அவர்கள் குற்றவாளிகளிடம் கடுமை காட்டுகிறார்கள் என்பதற்காகவோ, செயின் பறிப்பு குற்றவாளிகளை ஏன் மடக்கிப் பிடிக்கிறீர்கள், கை உடைக்கிறீர்கள் என்பதற்கோ அல்ல. அப்பாவிகளை ஏன் தரக்குறைவாகப் பேசுகிறீர்கள், குடும்பத்தார் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள், அப்பாவி பொதுமக்களை ஏன் தாக்கி அவர்கள் மரணம், காயம்பட காரணமாக இருக்கிறீர்கள் என்ற கேள்விதான் வைக்கப்படுகிறது.

இதன் இன்னொரு அர்த்தம், அனைத்து போலீஸாரும் அப்படி நடக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல, ஆனால் இப்படியும் நடக்கும் போலீஸார் கண்டிக்கப்பட அல்லது தண்டிக்கப்பட வேண்டும், காவல்துறை பணி சமுதாயப் பணியாகவும் மாற வேண்டும் என்பதே இதன் அர்த்தம். சாதாரண பொதுமக்களும் குற்றவாளிகளும் ஒன்றல்ல. அவர்களுக்கு தன்மானம் உண்டு, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும்போது கோபப்பட யாருக்கும் நியாயம் உண்டு.

அந்தக் கோபம் தரமணி மணிகண்டன் தீக்குளிப்பில் போய் முடிந்தது, போரூரில் தாக்கப்பட்ட இளைஞர்கள் மவுனமாக வீட்டுக்குப் போவதில் போய் முடிந்தது. பிரகாஷ் என்ற இளைஞர் போலீஸாருடன் மோதுவதில் போய் முடிந்தது. போலீஸார் பணியில் அதிகம் விமர்சிக்கப்படுவது போக்குவரத்து போலீஸார் பணியே.

காரணம் போக்குவரத்து போலீஸார் சாதாரண பொதுமக்களிடம் அதிகம் மோதக்கூடிய சூழ்நிலை உள்ள பணி. போக்குவரத்து சட்டங்கள், விதிமீறல்களில் சாதாரண பொதுமக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அது குற்றச் சம்பவம் அல்ல. குற்றம் வேறு விதிமீறல் வேறு. அதற்காகத்தான் குற்றவியல் சட்டம், போக்குவரத்து சட்டம் என்று இரண்டாகப் பிரித்து வைத்துள்ளனர்.

விதிமீறல்கள் மட்டுமே போக்குவரத்து போலீஸாரிடம் வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களை குற்றவாளிகள் போல் நடத்துவதே இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். விதிமீறல்கள் குற்றங்கள் அல்ல, வாகன ஓட்டிகள் குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதே உண்மை.

ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற போலீஸாரின் அத்துமீறலை மட்டுமே பெரிதுபடுத்துகிறது. அவர்களின் நல்ல செயல்களை படம் பிடித்துக் காட்டுவதில்லை என்று சிலர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் கொஞ்சம் நெருக்கமாக அணுகிப் பார்த்தால் அது வழக்கமான, பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிந்துவிடும். இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தான் போலீஸாரின் மனிதநேய செயல்களைத் தயக்கமில்லாமல் பாராட்டுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மனநிலை சரியில்லாதவருக்கு லுங்கி கொடுத்த காவலர், இளைஞர்களை அடித்ததற்காக அவர்கள் வீட்டுக்கே சென்று வருத்தம் தெரிவித்த அதிகாரிகள், பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் தேர்வறைக்கு வராத மாணவனை 10 நிமிடங்களுக்குள் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து எதிர்காலத்தை மாற்றியமைத்த காவலர் பல நல்ல விஷயங்களை மனம் உவந்து பாராட்டி செய்தியாக, வீடியோவாக வெளியிடுவதே இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும்தான்.

உயர் அதிகாரிகளுக்கு எடுபிடியாக இருக்கும் காவலர்களின் நிலையை தோலுரித்துக் காட்டுவதும், ஆர்டர்லி முறை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் ஊடகங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு குறை சொல்லும்போது மட்டும் இந்த மீடியாவே இப்படித்தான் என கரித்துகொட்டுவது ஆரோக்கியமானதாக இருக்காது.


சென்னையில் தி.நகர் சம்பவத்தில் இளைஞர் பிரகாஷ் சட்டையைப் பிடித்தார், வாக்கி டாக்கியை பிடுங்கினார் என்றெல்லாம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸார் அதற்கு முன்னர் தரக்குறைவாக பேசியதும், பிரகாஷின் தாயாரைத் தள்ளிவிட்டதும் மோதல் ஆரம்பிக்க காரணமாக அமைந்தது என்பது வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

காவல்துறை- பொதுமக்கள் இணக்கம் எங்கிருக்க வேண்டும். குற்றவாளிகள், குற்றமிழைப்பவர்கள் தவிர மற்ற அனைத்து பகுதி மக்களிடமும், அனைத்து இடங்களிலும் போலீஸார் பொதுமக்கள் இணக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போலீஸாருக்கு பல்வேறு பணிச்சுமை உள்ளது, ஆனால் அதை அப்பாவிகள் எங்கள் மீது காட்டாதீர்கள் கொஞ்சம் மரியாதை கொடுங்கள் சார் என்பதே பொதுமக்களின் வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

இதுகுறித்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் சுதாகரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

போக்குவரத்து காவலர்கள் இளைஞரை தாக்கியதாக விவகாரத்தில் உங்கள் கருத்து?

சட்டம் ஒழுங்கு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீங்கள் அவர்களிடமே கேளுங்களேன்.

ஒரு சின்ன கிளாரிபிகேஷன். பொதுவாகவே மோட்டார் வைக்கிள் சட்டம் அபராதம் எச்சரிக்கையோடு போக வேண்டிய ஒன்று, போக்குவரத்து போலீஸார் இந்த விவகாரத்தில் அந்த இளைஞர் அத்துமீறியிருந்தால் கூட சட்டம் ஒழுங்கு போலீஸாரை அழைத்து ஒப்படைத்திருக்கலாம் அல்லவா? அதையும் தாண்டி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதே?

தெரியவில்லை, இது விசாரணையில் உள்ளது. அது தனிப் பிரிவு, அவர்கள் போக்குவரத்து அதிகாரிகள் அல்ல.ஆகையால் விசாரணை முடிந்ததும் வரும் அறிக்கையை வைத்து நடவடிக்கை வரும்.

முறையற்ற வாக்குவாதங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல் வருகிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை உண்டா?

இல்லை, விசாரணை அறிக்கை வரட்டும். அதன் பின்னர் முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது.

தி.நகரில் போக்குவரத்து காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நாம் பல முறை கூறியிருக்கிறோம். போக்குவரத்து விதிமீறல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது. இதில் பழிவாங்கும் விதமாக போகக் கூடாது. நம்பரை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டு கோர்ட்டில் கேஸ் போட்டு சம்மனை வாங்கி அபராதத்தை வாங்கிக் கட்டலாம், அல்லது சம்பந்தப்பட்ட நபரையே அபராதம் கட்டச் சொல்லலாம்.

இது குறித்து நாங்கள் பல வகுப்புகள் எடுத்திருக்கிறோம், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். அதில் வராத அதிகாரிகள் யாராவது அப்படி நடந்திருக்கலாம். அல்லது வந்தும் புரியாத நபர்களின் நடத்தையாகவே இதைப் பார்க்கிறேன்.

இது போன்று போலீஸுக்கு ஒருவர் கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?

அது போன்று ஒருவர் கீழ்ப்படியாமல் தகராறு செய்கிறார் என்றால் அதுபற்றி கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸாரை வரவழைத்து இவர் தகராறு செய்கிறார், பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று புகாரளித்துப் பிடித்துக் கொடுக்கலாம்

இது போன்று சந்தர்ப்பங்களில் இளைஞரை, அவரது உறவினர்களைத் தாக்குவது சரியா?

தாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரமே கிடையாது, அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...