Saturday, April 7, 2018


வகுப்பறையில் உருண்ட போதை ஆசிரியர்: பெற்றோர் புகார்

Added : ஏப் 07, 2018 01:24




திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மேலப்பூவந்தி அரசு உயர்நிலைப் பள்ளி, 220 மாணவர்கள், 13 ஆசிரியர்களுடன் செயல்படுகிறது.

தலைமை ஆசிரியர் பணியிடம் ஒரு ஆண்டாக காலியாக உள்ளது. ஆசிரியர் சிவகுருநாதன் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார். நேற்று, விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த், போதையில் பள்ளிக்கு வந்ததுடன், வகுப்பறையில் படுத்து உருண்டார். பெற்றோர் புகாரின் படி, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'மாஜி' துணைவேந்தரிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Added : ஏப் 07, 2018 04:20

சென்னை:லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், ராஜாராமின் வங்கி லாக்கரில் இருந்து, 4 கிலோ தங்கத்தை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜாராம். இவர், 2013 - 16ல், சென்னை, அண்ணா பல்கலையின், துணை வேந்தராக பணியாற்றினார்.அப்போது, தகுதி இல்லாத, 54 பேருக்கு, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி வழங்க பரிந்துரைத்து உள்ளார்.அதற்காக, ஒவ்வொரு வரிடமும், 40 லட்சம்ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், தேனி மற்றும் சென்னையில் உள்ள, ராஜாராமுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.ராஜாராமிடம் பணம் கொடுத்து, பணியில் சேர்ந்த, ஜெயஸ்ரீ, ஹெலன் கலாவதி, பாலமுருகன், மந்தாகனி உள்ளிட்டோர் வீடுகளிலும், அண்ணா பல்கலையில், ராஜாராம் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் தேனி வங்கிகளில் உள்ள லாக்கர்களில், ராஜாராம் வைத்திருந்த, இரண்டு கிலோ தங்கக் கட்டிகள், 2 கிலோ நகைகள் என, நான்கு கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.ராஜாராம் மனைவி பெயரில், 22 பஸ்கள் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக, ராஜாராம் வாங்கி குவித்துள்ள சொத்து விபர பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
தனிப்படுத்தவா?வைரமுத்து கேள்வி!

Added : ஏப் 07, 2018 02:07

சென்னை:'மத்திய அரசின் நடவடிக்கை, தமிழகத்தை தனிமைப்படுத்தவா; தனிப்படுத்தவா...' என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த, சூரப்பா, நியமனம் செய்யப்பட்டதற்கு, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:நாட்டின் பிரதமர் பதவிக்கு தான், தமிழருக்கு வாய்ப்பில்லை. துணை வேந்தர் பதவிக்குமா, தமிழருக்கு தகுதியில்லை; இதுபோன்ற செயல்கள் எல்லாம், தமிழகத்தை தனிமைப்படுத்தவா; தனிப்படுத்தவா...இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
துணைவேந்தர் நியமனம் கமல் கண்டனம்

Added : ஏப் 07, 2018 02:06


சென்னை:'காவிரியில் இருந்து தண்ணீர் கேட்டால், துணைவேந்தரை அனுப்புகின்றனர்' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல், தன், 'டுவிட்டர்' பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை துணை வேந்தராக, கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சூரப்பா நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த நியமனத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான, கமல்ஹாசன், டுவிட்டரில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவிலிருந்து, காவிரி தண்ணீரை கேட்டால், துணைவேந்தரை அனுப்பி வைக்கின்றனர். தமிழக மக்களின் மனநிலையை, மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா; உணரத் தேவையில்லை என, கருதி விட்டனரா என்று, தெரியவில்லை.
எதை எதிர்பார்த்து, தமிழகத்தை சீண்டுகிறார்கள் என்றும் தெரியவில்லை,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மெரினா கடற்கரை மற்றும் 4 நகர பஸ்நிலையங்களில் ‘வை-பை’ வசதி



சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்களில் ‘வை-பை’ வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

ஏப்ரல் 07, 2018, 05:15 AM
சென்னை,

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை-பை மண்டலம்’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் அம்மா ‘வை-பை’ மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ‘வை-பை’ மண்டலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அம்மா ‘வை-பை’ மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ‘வை-பை’ வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்




பாலிவுட் நட்சத்திரம் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். #salmanbailorjail #BlackBuckPoachingCase

ஏப்ரல் 07, 2018, 06:50 AM

ஜோத்பூர்,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.அவருடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர். அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் உள்பட 5 பேர் மீதும் ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அரிய வகை மான்களை வேட்டையாடிய இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளியான சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இதற்கிடையே, சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதியை ராஜஸ்தான் திடீரென இடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது.

Thursday, April 5, 2018

SC Dismisses All Petitions Relating To CBSE Examination Paper Leak And Retest | Live Law

SC Dismisses All Petitions Relating To CBSE Examination Paper Leak And Retest | Live Law: The Supreme Court bench of Justice S. A. Bobde and Justice L. Nageswara Rao on Wednesday dismissed a string of writ petitions filed in the wake of the recent event of the leakage of the Economics and Mathematics question papers for the class 12 and 10 CBSE examinations respectively. It was in the light of a notification …

NEWS TODAY 14.02.2026