Saturday, April 7, 2018


TN parties flay Anna Univ VC appointment

tnn | Apr 7, 2018, 03:56 IST



Chennai: Opposition parties on Friday criticised the appointment of former IIT-Ropar director M K Surappa as vice-chancellor of Anna University. The parties said governor Banwarilal Purohit appointing a vice-chancellor, hailing from Karnataka, came at a time when the Cauvery protests were raging in Tamil Nadu.

DMK working president M K Stalin took to social media to make his displeasure on the appointment evident. “A vice-chancellor from Karnataka was not advisable during the ongoing tensions over the Cauvery dispute. We ask the governor to not belittle the scholars and academicians from Tamil Nadu by bringing in people from other states for various positions. There should also be no attempt made to saffronise the educational premises in Tamil Nadu,” Stalin tweeted.

Party leaders said though they wanted water from Karnataka, they got a VC from the state instead. But BJP defended the appointment saying Surappa was chosen based on his experience and knowledge.

Actor and MNM leader Kamal Haasan tweeted his strong disapproval. “We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead. The gulf between people and the government cannot be more obvious. Are they taunting us so we react adversely? I wonder what their game plan is,” he tweeted.

PMK founder S Ramadoss said his party would mobilise the varsity’s students to organise a protest against Surappa’s appointment. “There were good educationists in Tamil Nadu but importing a person from another state was not acceptable. No Tamilian has been appointed as VC for Central University of Tamil Nadu, Tiruvarur, Pondicherry University and The Indian Maritime University for a long time,” said Ramadoss.

Despite the long search, governor Purohit could not find a suitable candidate within Tamil Nadu, said CPI state secretary R Mutharasan. Twice search committees were appointed to find a suitable person for the VC’s post, but both the committees failed. The governor appointed another committee under retired Supreme Court judge V S Sripurkar and it selected Surappa, he recalled. “The NDA government at the Centre appointed a person close to it as governor and the governor has chosen a person close to him as VC,” said Mutharasan.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தொடர் போராட்டம்; மற்றவர்கள் கேலி செய்வதை எனக்கான எனர்ஜியாகவே எடுத்துக்கொள்கிறேன்: டிராபிக் ராமசாமி சிறப்புப் பேட்டி

Published : 06 Apr 2018 19:24 IST

நந்தினி வெள்ளைச்சாமி



காவிரிக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் டிராஃபிக் ராமசாமி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. சாலை மறியல், ரயில் மறியல், கடையடைப்பு, வேலைநிறுத்தம் என எல்லா வடிவங்களிலும் போராட்டக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்படியிருக்கும்போது, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பந்தல் அமைத்து அமைதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் சமூக ஆர்வலரும், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவருமான டிராபிக் ராமசாமி.

தன்னுடைய ஜீப் வாகனம் மீதேறி டிராபிக் ராமசாமியும், அவருடைய மாணவி ஃபாத்திமா பாபுவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஜீப் வாகனத்தில் அமர்ந்துதான் போராடுவேன் என்று விடாப்பிடியாக இருந்தவர் நேர்காணலுக்காக இறங்கி வந்தார்.

தன் உண்ணாவிரதப் போராட்டம், திமுகவின் போராட்டம், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசின் அணுகுமுறைகள், கமல், ரஜினி அரசியல் வருகை என பல்வேறு கேள்விகளை டிராபிக் ராமசாமியிடம் முன்வைத்தோம். எதற்கும் அசராமல் அவர் கொடுத்த பதில்கள் இதோ:

காவிரிக்காக பல விவசாய அமைப்புகள், மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்களுடன் இணைந்து போராடாமல் தனியாக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்?

மக்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும். காவிரி விவகாரத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அதனால்தான் மக்களைக் காப்பாற்ற நானே போராட்டத்தில் இறங்கியுள்ளேன். பல அமைப்புகள் சுய கவுரவம் பார்ப்பதால் என்னைத் தேடி வர மறுக்கின்றனர். 'மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்பதை நிரூபித்துவிட்டேன். ஏழு கோடி மக்களும் என்னுடன்தான் உள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக மக்களை ஏமாற்றும் நாடகத்தை தமிழக ஆட்சியாளர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், ஆட்சி செய்பவர்கள் அனைவரும் நடிகர் கும்பலில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுதான் தமிழகத்தின் நிலைமை.

உச்ச நீதிமன்ற கெடு முடிவதற்கான நாள் வரை அமைதிகாத்து வந்த தமிழக அரசு அதன்பிறகுதான் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பதை கேலிக்கூத்து என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். மத்திய அரசு முதலில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதன்பின்னரே தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் எப்படி இருக்க வேண்டும், யார், யாரெல்லாம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் மத்திய அரசுக்கு என்ன விளக்கம் வேண்டும்? 2016-ம் ஆண்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இப்போதும் அமைக்கவில்லை.

தமிழக அரசு தொடுத்திருக்கும் மனு மீது வரும் 9-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. அப்போது நல்ல முடிவை உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என நம்புகிறேன்.

மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பாஜக, காவிரி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

மத்திய அரசு செயல்படவும் இல்லை. தமிழக அரசை செயல்படவும் விடவில்லை. இந்த அரசுக்கு வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என நம்புகிறேன். பாஜக 50 முதல் 60 சீட்டுகள் வென்றாலே அதிகம். இல்லையென்றால் தேர்தலில் ஏதேனும் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக முயற்சிக்கும்.

காவிரி விவகாரத்தில் நேற்று (வியாழக்கிழமை) திமுக முன்னெடுத்த போராட்டம் குறித்து?

திமுக காலத்தின் கட்டாயத்தால் போராட்டம் நடத்தத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் போராட்டம் வெற்றிதான். பலரும் மனப்பூர்வமாக பங்கேற்றிருக்கின்றனர். ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. போராட்டம் என்பது நான் நடத்துவதுபோன்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

மக்கள் தன்னெழுச்சியாக திரளாகப் போராடிக் கோண்டிருக்கையில் நீங்கள் தனியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதால் ஏதேனும் மாற்றம் வரும் என நம்புகிறீர்களா?

நான் முன்னெடுக்கும் போராட்டம் காந்தி வழியிலான அமைதிப் புரட்சி. 7 கோடி தமிழக மக்கள் என்னுடன் தான் உள்ளனர். இத்தகைய போராட்டங்களால் நான் பல வெற்றிகளை கண்டிருக்கிறேன்.

உங்களுடைய போராட்டத்தை சிலர் கேலி செய்கின்றார்களே? விமர்சிக்கிறார்களே? பப்ளிசிட்டிக்காக போராடுவதாகச் சொல்கிறவர்களுக்கு என்ன சொல்லப் போறீங்க?

இதில் என்ன பப்ளிசிட்டி உள்ளது. நான் ‘ஒன் மேன் ஆர்மி’. என்னுடைய பல போராட்டங்களில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். மீன்பாடி வாகனத்தை ஒழித்திருக்கிறேன். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுகிறேன். இதெல்லாம் என்னுடைய சாதனைதான். மக்கள் மட்டுமல்லாமல் விஏஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளே என் பக்கம்தான் உள்ளனர். மற்றவர்கள் என்னைக் கேலி செய்வதை எனக்கான எனர்ஜியாகவே எடுத்துக் கொள்கிறேன்.

உங்கள் மீது பல தாக்குதல் நடைபெற்றிருக்கின்றன. அதையும் மீறி எப்படி போராடுகின்றீர்கள்?

கடவுள் தான் என்னைப் போராடத் தூண்டுகிறார்.

கோரிக்கை நிறைவேறும் வரை அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றீர்களா?

தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வேன்.

9-ம் தேதி நீங்கள் நினைத்த தீர்ப்பு வரவில்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் என்னவாக இருக்கும்?

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் போன்று தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் தொடர் போராட்டம் என்னுடைய தலைமையில் நடக்கும்.

முதல்வர், துணை முதல்வர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முதல்வரும் துணை முதல்வரும் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். நடிப்பவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள். தமிழக அரசின் ஆட்சியாளர்கள் தங்களையே ஏமாற்றிக் கொண்டுள்ளனர். அதிமுகவினர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்ற பாஜகவுடன் கைகோத்துள்ளனர். மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இல்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக பிரச்சினைகளை அணுகும் விதம், முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

திமுக தலைவர் கருணாநிதியைவிட நிர்வாகத் திறமை கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

திமுக, அதிமுக என எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்கிறீர்கள். எல்லாருடைய கட்-அவுட், பேனர்களையும் கிழிக்கின்றீர்கள். எந்தக் கட்சியை நீங்கள் மாற்றாக முன்வைப்பீர்கள்?

கட் அவுட் கலாச்சாரத்திலிருந்து விலகி பாமக தற்போது ஓரளவுக்கு மாற்றத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸ் சில விஷயங்களில் நல்ல வழியில் திரும்பிக் கொண்டிருக்கிறார். திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கட் அவுட் கலாச்சாரத்தை விட வேண்டும்.

உங்கள் மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் அடுத்தகட்டப் பயணம் என்ன?

மக்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ள, சமூக பிரச்சினைகளை கையிலெடுத்து போராடுகின்ற 100 சமூக ஆர்வலர்கள், நல்லவர்களை தேர்ந்தெடுத்துள்ளேன். அவர்களை எனது கட்சி சார்பாக அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைப்பேன்.

நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்கள். என்ன நினைக்கிறீர்கள் அதைப்பற்றி?

கமல், ரஜினி எல்லாரும் அவர்களுடைய சினிமாத் துறையை சீர்படுத்தட்டும். அதன்பிறகு மக்கள் பிரச்சினைகளை கையிலெடுக்கட்டும். கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்பவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு பதவி தேவையில்லை.

உங்களைப் பற்றி திரைப்படம் எடுக்கிறார்களே...

என்னைப் போன்ற சாதாரண மணிதனை 2-3 கோடி பணம்போட்டு திறமையான இயக்குநர் ஒருவர் மற்றொரு இயக்குநரை வைத்து படம் எடுப்பதுதான் சாதனை. என்னுடைய கதாபாத்திரத்தை எடுக்கத் துணிவதே சரித்திரம். வில்லங்கம் ராமசாமின்னுதான் என்னை சொல்வார்கள். அந்த வில்லங்கத்தையே படமாக எடுக்க துணிந்ததற்கு இயக்குநருக்கு தலை வணங்குகிறேன்.
தி.நகரில் கைப்பையை பறிக்க முயன்ற வழிப்பறி இளைஞர் கைது: சாமர்த்தியமாக இழுத்து வீசிய இளம்பெண்ணுக்கு பாராட்டு

Published : 06 Apr 2018 15:25 IST



கைப்பையை பறித்து கைதான ராஜ்கிரண் படம்: சிறப்பு ஏற்பாடு

தி.நகரில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணிடம் கைப்பையைப் பறிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் இளைஞரை சாமர்த்தியமாக இழுத்து கீழே வீசினார் இளம்பெண். காயத்துடன் கீழே விழுந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் இளமுருகன் (48), இவரது மகள் விஜய்பாரதி (25). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் மனோஜ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் நடந்து வந்துள்ளனர்.


பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்த இருவரைம் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வட்டமடித்தபடி கவனித்து வந்துள்ளனர். விஜய்பாரதி கைப்பையை தோளில் மாட்டியபடி நடேசன் பார்க் அருகில் நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். அப்போது பல்சர் வாகனத்தில் வந்தவர்கள் திடீரென அவரது கைப்பையைப் பறித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய்பாரதி சமயோசிதமாக செயல்பட்டு சட்டென்று கைப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பையைப் பிடித்து இழுத்த இளைஞரை சட்டென்று இழுத்து கீழே தள்ளினார். இதில் மற்ற இருவர் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்க, கைப்பையை பிடுங்கிய இளைஞர் தரதரவென்று இழுத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிள் பிடியை விடப் பார்க்கும் சமயத்தில் அக்கம் பக்கத்தவர் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இருவரும் ஓடிவிட்டனர். சிக்கிய நபரை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர் பெயர் ராஜ்கிரண் (23) என்றும், தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலை குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

போலீஸார் தப்பி ஓடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் பெண்கள் கீழே விழுந்து காயமடைவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இளம்பெண் விஜய்பாரதி உறுதியாக நின்று வழிப்பறி கொள்ளையனை இழுத்து கீழே தள்ளி உள்ளதை பொதுமக்கள் பாராட்டினர்.
பெற்ற தாயின் உடலை 2 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்திருந்த பயங்கரம்; கணவரும் உடந்தை: போலீஸுக்கே புரியாத புதிர்

Published : 05 Apr 2018 19:08 IST



படம். | ட்விட்டர் ஏ.என்.ஐ.

கொல்கத்தாவில் இறந்த 84 வயது மூதாட்டியின் உடலை மகனும், கணவனும் சேர்ந்து குளிர்ப்பதனப் பெட்டியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பதில் போலீஸாரும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துப்பு கிடைத்ததன் அடிப்படையில் பெஹாலாவில் உள்ள வீட்டுக்கு போலீஸார் ரெய்டு மேற்கொள்ள அங்கு ஃப்ரிட்ஜில் மூதாட்டியின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக 46 வயது மகன் ஷுபபிரதா மஜூம்தார் வயதான தந்தை கோபால் மஜூம்தார் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, ஆனாலும் தந்தையும் மகனும் இறந்த உடலை ஏன் இப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதன் காரணத்தை அறிய போலீஸார் போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கும் புரியாத புதிராக இது இருந்து வருகிறது.

மூதாட்டி பினா மஜூம்தார் 2015 ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாநந்தா மருத்துவமனையில் இறந்து போனார், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு கடுமையாகக் குறைய இறந்து போயுள்ளார். குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்து சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது சரியாக ஒருவருக்கும் விளங்கவில்லை. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களின் படி அக்கம்பக்கத்தினர் பினா மஜூம்தாருக்கு என்னவானது என்று கூறும்போது, பிணக்கிடங்கில் இருப்பதாகவும், “அமைதிச் சொர்க்கத்தில்’ அவர் இருப்பதாகவும் மகன் கூறிவந்திருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் கைப்பற்றிய பினா மஜூம்தார் உடல் கிழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அது எதற்காக என்பது பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே தெரியும் என்கின்றனர் போலீசார். மேலும் வீட்டில் புரியாத வகையில், வடிவங்களில் சில கண்டெய்னர்களும் காணப்பட்டுள்ளன. இவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மகன் தோல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பாளர், இவர் தாயின் உடலிலிருந்து குடல்களை அப்புறப்படுத்தி பிறகு உடலை பதனப்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது குறித்த முதற்கட்ட விசாரணையில், தாய் பினா மஜும்தார் இந்திய உணவுக்கார்ப்பரேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவருக்கு மாத பென்ஷனே ரூ.50,000 என்று கூறப்படுகிறது, தாய் இறந்த பிறகும் அவரது டெபிட் கார்டு மூலம் பென்ஷன் தொகையை மகன் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தாய் உயிருடன் இருப்பதாக சான்றிதழ் அளித்திருப்பதும் புரியாத புதிராக இருந்து வருகிறது.

தந்தையும் மகனும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இதனால் இறந்தவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த வழக்கை எப்படிக்கொண்டு செல்வது என்பதில் கொல்கத்தா போலீஸாருக்கு பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி; ஓட்டிய சிறுவனும் உயிரிழப்பு: 18 வயதுக்கு குறைவானவருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்குப் பதிவு

Published : 05 Apr 2018 22:01 IST

சென்னை




விபத்தில் உயிரிழந்த ரோஹித், விபத்துக்குள்ளான மோட்டார் பைக் படம்: சிறப்பு ஏற்பாடு

திருமங்கலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன், இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஓட்டிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதித்த தாயார்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதிக் குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேசன்(45). இவரது மனைவி மீனா (40). இவர்களுக்கு ரோஹித்(16) என்ற மகன் உள்ளார். அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவருக்கு பெற்றோர் பல்சர் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கித் தந்துள்ளனர். அந்த பல்சர் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை தன்னுடன் பள்ளியில் பயிலும் மாணவியையும் ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுள்ளார்.

அம்பத்தூர் எஸ்டேட் அருகே மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்றபோது சாலையைக் கடந்த பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு (30) பாபு என்பவர் மீது மோத அவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ரோஹித், அவரது தோழி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இருசக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. பாபு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரோஹித்தும் அவரது தோழியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு 11.45 மணி அளவில் ரோஹித்தும் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது பள்ளித்தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

16 வயதே ஆன ரோஹித் மீதும், சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்தற்காக அவரது தாயார் மீனா மீதும்( அவர் பெயரில் வாகனம் வாங்கப்பட்டுள்ளது) திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது பிரிவு 279, 304 (A),338,337 IPC & alter at 279,304 (A) 2counts, 337 Ipc. Sec 4 r/w 181 MV Act, sec 5 r/w 180 MV Act. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் முதல்முறையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவரை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் ஏற்கெனவே இது போன்ற வழக்கில் 3 மாதம் வரை பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டில்லிவாசிகளை திணறடித்த புழுதிப்புயல்

Updated : ஏப் 07, 2018 05:15 | Added : ஏப் 07, 2018 05:09 |




புதுடில்லி: தநைகர் டில்லியில் நேற்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. டில்லியின் அக்பர்சாலை, ராஜேந்திர பிசாரத் மார்க், ஆர்.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருள் சூழ்ந்து வேகமான காற்றுடன் புழுதி புயல் வீசியது.இதனால் வாகன ஓட்டிகள் திணறினர..புழுதிப்புயல் நீண்ட நேரம் நீடித்ததால், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மானாமதுரையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

Added : ஏப் 07, 2018 01:02

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எனமின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வந்தது. தற்போது மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மானாமதுரை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட சிறு பழுதின் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது, தற்போது அதனை சரிசெய்து வருகிறோம், என்றார்.

NEWS TODAY 14.02.2026