Sunday, April 8, 2018

Guv denies interference in VC selection

TIMES NEWS NETWORK

 08.04.2018

Tamil Nadu governor Banwarilal Purohit’s office on Saturday refuted charges of favouritism in the selection of M K Surappa as Anna University vicechancellor.

Seeking to put the entire procedure followed in the selection in the public domain, Raj Bhavan issued a release. It said there was “no extraneous interference” in the selection of Karnataka-born Surappa as head of the varsity. The release said the process was fair and transparent. “The welfare of the Anna University and engineering colleges affiliated to the university, faculty and the students was kept in mind when making the selection… Since the choice of the VC was done entirely in accordance with the statute, it is requested that politics be kept out and unnecessary mud-slinging avoided,” it said.


The statement comes against the backdrop of political parties charging that varsities in the state were being saffronised by the governor. Actorturned-politician Kamal Haasan had tweeted that when TN sought Cauvery water from Karnataka, what it got was a VC from that state. The controversy over a Kannadiga heading the Anna University has cropped up amid raging protests across the state over the Cauvery water dispute.

Fisheries minister D Jayakumar, on Friday, denied the role of the state in the appointment. The selection was purely based on the need to have an academician, who understands the need of the technical varsity, to head it, the release said. “The selection was done from the list submitted by the search committee, which consisted of illustrious personalities.”

A search committee of three members — nominees of the university syndicate, state government and that of the governor — was constituted last November. The panel shortlisted H Devaraj, S Ponnusamy and M K Surappa and held interviews on April 5. All three shortlisted candidates were from backward classes, the release said.

Surappa is a metallurgical engineer and holds a doctorate, and enjoys administrative experience in IIT, Ropar, as its director for six years. Ponnusamy is a doctorate in mathematics and head of the Chennai unit of Indian Statistical Institute, while Devaraj, a doctorate in bio-chemistry, has been the vicechairman of the University Grants Commission. “The academic, teaching, research and administrative attainments of the three candidates were examined in detail by the chancellor from March 31 to April 5. Soon after the completion of the interview, the final result was declared and release was issued on the same day to ensure transparency and non-interference in the process of selection,” the statement said.



ALLEGATIONS OF ‘SAFFRONISATION’
Will not interfere with engg colleges, but they can’t violate rules: Surappa

Siddharth.Prabhakar@timesgroup.com  08.04.2018

For almost two years, Anna University that has more than 560 engineering colleges under it, was without a vice-chancellor. Finally, when governor Banwarilal Purohit appointed former IITRopar director M K Surappa to the post, several TN politicians took offence to an ‘outsider’ being brought in. The metallurgist with three decades of teaching experience, however, doesn’t seem to be affected by such noises as he tells TOI about his priorities as the VC of a university with problems as big as its prospects. Excerpts:

What are your plans for Anna university?

Anna University is a globally respected university. There is a changing scenario in higher education and learning pedagogies. Keeping this in mind we will see how to train young graduates to be more confident and productive. We will also ensure there is not a routine pattern in research. We have to ensure students are trained well with hands-on experience. They should be able to relate to what they study in class.

Anna University is in muddy waters. Your predecessor is under investigation for taking bribes and fixing recruitment of professors.

You are right. There is lot of baggage and pessimism. Thirteen years ago, I was given charge of the Karnataka State Council for Research which the government was about to close. In five years I made it number one. I have to embrace a new culture and start life afresh.

Quality of students is on the decline and even engineering as a discipline is on the wane. How do you plan to tackle this?

The governor was also concerned about this. Some colleges are good, some are bad. I’ve been in higher education for a long time and I am in touch with all top engineering professors. We will work out a plan. Most colleges are private so I don’t want to interfere. But as an affiliating university I’ll ensure that regulations are followed and not violated.

As an outsider how do you plan to tackle the language barrier?

I’ve worked in Punjab and Kerala for considerable time without knowing the local language. I’ll try to develop a working knowledge of Tamil.

Your appointment has kicked up a political storm in Tamil Nadu …

Politicians who create such controversies are not in sync with the aspirations of future generations. People have to be educated about such politicians. This is exactly why we as a country have not been able to perform to our best potential. We have not been able to put a system in place or tackle heavy corruption.



FRESH IDEAS: M K Surappa believes in embracing a new culture
ஆம் சல்மான் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்: கைதும் ஜாமீனும், இந்திய மனநிலையும்

Published : 07 Apr 2018 17:34 IST

இந்து குணசேகர்




மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இரண்டு நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 செப்டம்பர், அக்டோபரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சல்மான் அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக உள்ளூர் கிராம மக்கள் புகார் அளித்தனர்.


ஜோத்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் வியாழக்கிழமை நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று கூறி அவருக்கும், 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. நடிகர் சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார். ஜோத்பூர் சிறை சாலையின் வெளியே அவரது ரசிகர்கள் சல்மானை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் நிகழும் முக்கிய பிரச்சனைகளை தவிர்த்து சல்மானின் தண்டனையை பிராதான செய்தியாக இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டன.

சல்மான் தனது முதல் நாளை ஜெயலில் எப்படி கழித்தார். உறங்கினாரா என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் சல்மானின் ரசிகர்கள் இன்னும் பல அபத்தமான செயல்களை அரங்கேற்றினர்.

சல்மானுக்கு ஆதரவாக பதிவிடாத பாலிவுட் நடிகர்களின் மீது வசை சொற்களை கொட்டினர். இதன் மூலம் தொடர்ந்து 60 மணி நேரந்துக்கு மேலாக ட்விட்டரில் இந்திய அளவில் சல்மான் கான் டிரெண்ட் ஆகிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் சிறுமி ஒருவர் சல்மான்கானை விடுதலை செய்யக் கோரி அழும் வீடியோ ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது. சல்மானை விடுதலை செய்யவில்லை என்றால் நான் உணவு உண்ண மாட்டேன். பள்ளிக் கூடத்துக்கு போக மாட்டேன் என்று அந்தச் சிறுமி போராட்டத்தில் குதித்தார். இதில் கூடுதலாக நம்மை வருந்த வைக்கும் செய்தி வெறும் ஐந்து வயதுக்குள்ளிருக்கும் அச்சிறுமியின் போராட்டத்துக்கு அவரது பெற்றோர்கள் துணையாக இருந்தனர்.

அந்த சிறுமியின் உடல் மொழிகளை நன்கு கவனித்தால் அவரது பெற்றோர்கள்தான் அவரின் போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று நம்மால் ஊகிக்க முடியும்.

இதனைத் தொடர்கள் சிறுவர், சிறுமிகள் பலர் அழுது கொண்டும், சோகமான உணர்வுடனும் சல்மான் கானுக்கு ஆதரவாக பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரிசையாக வெளியிடப்பட்டன. அவரது ரசிகர்களின் ஆதரவுகளுடன் அவை பரவலாக வைரலானது.

சல்மானை விடுதலை செய்யாவிட்டால் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று சமூக வலைதளங்களில் மிரட்டலும் விடுத்தனர்.

குழந்தைகள் மீது எத்தகைய வன்முறையைச் செலுத்துகிறோம் என்று அறியாமல் ஊடக வெளிச்சத்துக்காக அவர்களை பயன்படுத்திக் கொண்ட பெற்றோர்கள் சல்மான் செய்த குற்றத்தை கூறியிருப்பார்களா? நீதிமன்றதால் குற்றவாளி என்று தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தை தங்கள் குழந்தைகளின் கையில் கொடுத்து வீதியில் போராட இறக்கிவிட்டிருக்கும் இவர்கள் எந்த அறத்தை அவர்களுக்கு கற்பிக்க போகிறார்கள்? இல்லவே இல்லை... அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டதே. ஆம் சல்மான் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நாம் விரும்பும் திரை நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் இந்தியர்களின் மனநோய் இன்னும் அகலவில்லை என்று சல்மான் கானின் ரசிகர்கள் மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.
இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்: துபாய் லாட்டரியில் ரூ.21 கோடி பரிசு; நண்பர்கள் 4 பேருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கிறார்

Published : 07 Apr 2018 16:25 IST

பிடிஐதுபாய்




துபாயில் டிரைவராக பணியாற்றிவரும் இந்தியருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.21 கோடி(1.2கோடி திர்ஹாம்) பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் வர்கீஸ். இவர் அபுதாபி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அபுதாபி விமான நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்தது. அதில் ஜான் வர்கீஸ் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி டிக்கெட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குலுக்கல் நடந்தது. அந்த குலுக்கலில் ஜான் வர்கீஸ் வாங்கி இருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.21.20 கோடி(1.20 கோடிதிர்ஹாம்) பரிசு கிடைத்திருந்தது.

இது குறித்து ஜான் வர்கீஸ் தொலைபேசி வாயிலாக ‘கலீஜ் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்து இருக்கிறது என்றவுடன் என்னால் நம்பமுடியவில்லை. என்னை ஏப்ரல் முட்டாள் ஆக்குகிறார்கள் என்று நினைத்து அந்த தொலைபேசி அழைப்பையும் பெரிதாக எடுக்கவில்லை. அது போலியான அழைப்பாக இருக்கும் என்று இருந்தேன். ஆனால், எனது நண்பர்கள் லாட்டரி அலுவலகத்துக்கு அழைத்து உறுதி செய் என்றனர். உறுதி செய்தபின்தான் எனக்கு பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.

எனது குடும்பத்தாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தேன். எனக்கு கிடைத்த இந்த பரிசுப் பணத்தை எனது நண்பர்கள் 4 பேருக்கு சரிசமமாக பிரித்துத் தர விரும்புகிறேன். இன்னும் நான் சாதாரண பட்டன் செல்போன் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன், அதை மாற்றி முதலில் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும்.

எனக்கு இரு குழந்தைகள், ஒரு மனைவி என சிறிய குடும்பம் இருக்கிறது. என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இந்த பணத்தை முதலீடு செய்வேன். அவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இருக்க முடியாது என நினைக்கிறேன். நான் கடந்த காலங்களில் ஏராளமான துன்பங்களையும், பணமில்லாமல் சிரமப்பட்டு இருக்கிறேன். அதை ஒருபோதும் மறக்காமல், தேவைப்படுவோர்க்கு உதவுவேன்

இவ்வாறு வர்கீஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இதேபோன்று ரூ.22 கோடி லாட்டரி மூலம் பரிசு கிடைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அபுதாபியில் நடத்தப்பட்டலாட்டரி டிக்கெட்டி குலுக்கலில் இதுவரை 10 பேர் 10 லட்சம் திர்ஹாமுக்கு அதிகமாக வென்றுள்ளனர். அதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு

Added : ஏப் 08, 2018 02:13

சென்னை:மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இரட்டை இருப்பிட சான்றிதழ் அடிப்படையில், வேறு மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனரா என்பதை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, மத்திய அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில், 2017 - 18ம் ஆண்டில், இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்ந்திருப்பதால், சேர்க்கையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுக்களில், 'கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழ் பெற்று, இங்குள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். 

'அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இங்குள்ள அரசு கல்லுாரி களில் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது' என, கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை, நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார். வெளிமாநிலங்களில் இருந்து விண்ணப்பித்த, 300 மாணவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப் பட்டன; விண்ணப்பங்களை, அதிகாரிகள் முன்னிலையில், வழக்கறிஞர்கள் சரிபார்த்தனர். 

இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, மருத்துவப் படிப்பில், பலர் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி, கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிங்காரவேலன், வழக்கறிஞர், கே.சக்திவேல், மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர், பாப்பையா ஆஜராகினர்.

இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, 2017ல், 1,200க்கும் மேற்பட்டோர், மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இரட்டை இருப்பிட சான்றிதழ் அடிப்படையில், வேறு மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனரா என்பதை சரிபார்த்து, அறிக்கை அளிக்கும்படி, மத்திய அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.







கை நிறைய சம்பளம் பெற சி.ஏ., படிப்பு

Added : ஏப் 08, 2018 01:14

சென்னை:''எதிர்காலத்தில், அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற, சி.ஏ., உள்ளிட்ட, 'ஆடிட்டிங்' படிப்புகளை படிக்கலாம்,'' என, ஆடிட்டர் சேகர் தெரிவித்தார்.

'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:பிளஸ் 2 முடித்த பின், மாணவர்களிடமும், பெற்றோரிடமும், எந்த படிப்பில் சேர்ந்தால், கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற, எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற, எந்த படிப்பை படித்தாலும், கடுமையாக உழைக்க வேண்டும். அதிலும், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., படிப்புகளை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டும்.

சி.ஏ., உள்ளிட்ட ஆடிட்டிங் படிப்புகளை, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பு நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கு, தனியாக கல்லுாரிகளோ, பல்கலைகளோ கிடையாது. ஆனால், அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. அரசின் பயிற்சி மையம் என்றால், ஐந்து ஆண்டுக்கும், 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தனியார் மையம் என்றால், 2.5 லட்சம் வரை செலவாகும்.இவ்வாறு சேகர் பேசினார்.

Saturday, April 7, 2018


கொதிக்கும் தமிழகம்... விருது கோலாகலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு..!'

MUTHUKRISHNAN S
  vikatan


``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததோடு ஆளும் கட்சியின் கடமை முடிந்துவிட்டதா'' என்று கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.



காவிரி நீருக்கான போராட்டம், தமிழகத்தில் நாளுக்குநாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தைக் கையில் எடுத்துவருகின்றன. கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல், பந்த் என்று தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். ஏப்ரல் 5-ம் தேதி இன்று நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார்கள். அவர்களைப்போலவே, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேலும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று போராட்டக் களம் வேகமெடுத்துள்ளது.

இதையெல்லாம் பார்த்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து, விளக்கம் சொல்ல டெல்லி சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை திரும்பிய அவரை, கவர்னர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து விளக்கமளித்தனர். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் நிலவும் போராட்டம் குறித்து கவர்னர் கேட்டார். விளக்கம் சொன்னோம். கோடைக்காலம் பற்றியும் தண்ணீர்ப் பிரச்னை பற்றியும் கேட்டார். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்தோம். நாங்கள் கூறிய விளக்கங்களைப் பொறுமையுடன் கேட்டறிந்த கவர்னர், `திருப்தி' என்று பதில் சொன்னார். அதாவது, அவருக்கு திருப்தி ஏற்படும் அளவுக்கு பதில் அளித்தோம். மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை. தமிழக நிலவரத்தைத்தான் எடுத்துரைத்தோம்'' என்றார்.



முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த, தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற டி.எஸ்.பி பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல் துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது நடந்த கலைநிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை உள்பட ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்துக்கொண்டிருக்கும் நிலையில், 2016 - 17- ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை இன்று கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மொத்தம் 64 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருதுடன் தலா ரூ.25,000 ஆயிரம் வழங்கப்பட்டது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் இன்றைய போராட்டம் குறித்தும், ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் ஆர்வலர்களிடம் பேசினோம். ``ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று வரலாற்றில் படித்துள்ளோம். அந்தக் கதைதான் இங்கு, இப்போது நடக்கிறது. காவிரிக்காக, கடந்த 3-ம் தேதி அ.தி.மு.க சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததோடு ஆளும் கட்சியின் கடமை முடிந்துவிட்டது என்று அரசாங்க வேலைகளில் எடப்பாடி பழனிசாமி பிஸியாகிவிட்டார். காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறார் என்பது பற்றிப் பேச்சு இல்லை. அதற்குள் போலீஸாரின் கலைநிகழ்ச்சிகள், கவர்னரைச் சந்தித்து சட்டம் - ஒழுங்கு குறித்து விளக்கமளித்தல், விருது விழாக்கள் என்று அவருடைய பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதுபோன்றுதான் அரசின் செயல்பாடுகள் உள்ளன என்று சொல்லத் தோன்றுகிறது'' என்றனர் மிகத் தெளிவாக.

NEWS TODAY 21.12.2025