Sunday, April 22, 2018

மனதுக்கு இல்லை வயது: பொஸஸிவ் மனப்பான்மை

Published : 26 Apr 2014 10:29 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

அந்தப் பெண் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘‘என் மகன் நான் சொல்வதைக் கேட்கவே மாட்டேன் என்கிறான். இப்பவே இப்படி என்றால் நாளை கல்யாணம் ஆனதும் என்னை மதிக்கவே மாட்டானே?’’ என்றார். ‘‘உங்களைப் பார்த்தால் கல்யாண வயதில் மகன் இருப்பதுபோலத் தெரியவில்லையே’’ என்றேன். அவர் சொன்னார்.. ‘‘என் மகனுக்கு ஏழு வயசுதான் ஆகுது’’.

இளம் வயதிலேயே இப்படி என்றால் வயதான பெற்றோரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வயதானால் ஏற்படும் அதிர்ச்சிகளில் முதன்மையானது அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் உதவியை எதிர்பார்க்காமலேயே தாங்களே பல விஷயங்களை முடிவு செய்யத் தொடங்குவதுதான். பலரும் நமது பிள்ளைகளை நமது உடமைகளில் ஒன்றாகக் கருதுகிறோம். கார், செல்போன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற உடமைகளை எல்லோரிடமும் காட்டிப் பெருமிதம் அடைவதுபோல, நம் பிள்ளைகளையும் எல்லோரும் வியக்கும் வண்ணம் காட்டிப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

இந்தப் பொஸஸிவ் (Possessive) மனப்பான்மையே பின்னால் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆன பிறகு பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. நம் உடமை ஒன்றை வேறு யாரோ எடுத்துக்கொண்டதாகக் கருதுவதே இதற்கு மூலகாரணம்.

அது மட்டுமின்றி, பிள்ளைகளை நம் உடல் உறுப்புகளில் ஒன்றுபோலவே கருதுகிறோம். உடல் உறுப்புகள் நாம் நினைத்தபடி செயல்படும். தூக்கவேண்டும் என்றால் நம் கை தூக்கும்.. ஓட வேண்டும் என்று நினைத்தால் கால்கள் ஓடத் தொடங்கும். பிள்ளைகளும் அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அப்படி செயல்படுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நம்முடைய ஒரு பகுதி அல்ல. அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு.

இன்னும் சிலரால் தங்களது பிள்ளைகளால் சுயமாக தங்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையே நம்ப முடியாது. அவர்களுக்கான உணவு, உடை முதல் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதுவரை எல்லா முடிவுகளையும் பெற்றோரே எடுப்பார்கள். தங்களது குழந்தைகள் எந்த ரிஸ்க் எடுப்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். இதுபோல அதிகமாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவர்கள் சுயமாக முடிவெடுக்கவே பயப்படத் தொடங்குவார்கள்.

‘‘குழந்தைகள் நம் சொத்துக்கள் அல்ல. நம் மூலமாக உலகுக்கு வந்தவர்கள். அவ்வளவுதான்’’ - இது கலீல் கிப்ரானின் வாக்கு. நான் செய்த தவறுகளை என் மகன், மகள் செய்யக் கூடாது என்று எண்ணிப் பாதுகாத்தால் நீங்கள் பெற்ற அனுபவ அறிவு அவனுக்கு, அவளுக்குக் கிடைக்காமல் போய்விடும். கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய் செலவில் செய்த ஏவுகணையாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் குறிப்பிட்ட பாகங் களைக் கழற்றிவிட்டால்தான் வானில் பறக்க முடியும்.
மனதுக்கு இல்லை வயது!- 19:04:14

Published : 19 Apr 2014 11:15 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

வயதான அம்மாள் ஒருவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைத் துடைத்து, சுத்தப்படுத்தி, உணவூட்டி மிகவும் அன்புடன் கவனித்து வந்தனர். ஒருநாள் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘ஏனம்மா கவலைப்படுகிறீர்கள். இது எங்கள் கடமைதான்’’ என்றனர் மகனும் மருமகளும். அதற்கு அந்த அம்மையார் சொன்னார், ‘‘நான் அதற்குக் கவலைப்படவில்லை. நீயும் உன் மனைவியும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்கள் வயதான காலத்தில் உன் மகனும் மருமகளும் உன்னை இப்படிப் பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கவலைப்பட்டு அழுகிறேன்’’ என்றாராம்.

முதுமை என்பதை தானும் மற்றவரும் சுமக்கும் ஒரு பெருஞ்சுமையாக சிலர் நினைக்கின்றனர். உண்மையில் முதுமை என்பது தனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி.. ஒரு சுமையல்ல. அது பல ஆண்டுகள் உழைத்த பிறகு நமக்குப் பிடித்த விஷயங்களை, நமக்குப் பிடித்த நேரத்தில் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு வசந்தகாலம்.

முதுமை என்றால் பழசாவது என்றும் பொருள் அல்ல. முதுமை என்றால் முதிர்ச்சி அடைதல் என்று பொருள். 1900-ம் ஆண்டு மனிதனின் சராசரி வயது 35தான். இப்போது அது கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம். இது 2050-ம் ஆண்டு 50 சதவீதமாக உயரும் என்பது முதியோருக்கான மகிழ்ச்சியான செய்தி.

நினைத்துப் பாருங்கள்.. ஒரு நாட்டின் 50 சதவீத மக்கள் தங்களைச் சுமையாகவும், எஞ்சியுள்ள வாழ்நாளைக் கசப்பானதாகவும் நினைத்தால் என்ன ஆவது?

புகழ்பெற்ற வயலின் மேதை யெஹுதி மெனுஹினை (Yehudi Menuhin) ஒருமுறை கேட்டார்கள், ‘‘ஒரு பரபரப்பான வயலின் கச்சேரிக்குப் பின் என்ன செய்து ரிலாக்ஸ் செய்வீர்கள்?’’ என்று. அதற்கு அவர் சொன்னார், ‘‘சூடா ஒரு கப் டீ சாப்பிடுவேன். அப்புறம் எனக்கே எனக்காக வயலின் வாசிக்கத் தொடங்குவேன்’’ என்று.

முதுமைக் காலமும் அப்படியே. உங்களுக்கே உங்களுக்கான இசையை இசைக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு ஊரிலும் பூங்காக்கள் அல்லது அமைதியான பொது இடங்கள் உண்டு.

அங்கு சென்று பாருங்கள். உங்களைப் போலவே முதியோர் ஆங்காங்கே பேச யாருமற்று தனியாக இருப்பார்கள். அவர்களுடன் சென்று உரையாடுங்கள். ஒரு குழுவை ஒருங்கிணையுங்கள். இத்தனை காலம் நீங்கள் கற்ற கல்வியை, அனுபவத்தை, கலையை, திறமைகளை அங்கு வரும் இளைய தலைமுறையினருக்கு கற்பியுங்கள்.

நூறு பேர் வராவிட்டாலும் ஐந்து பேர் வந்தால் போதும். யோகா தெரிந்தால் யோகா வகுப்புகள் எடுக்கலாம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியா? குடும்ப அட்டை பெறுதல், ஓட்டு போடும் முறை, வருமானச் சான்று, இடச் சான்று பெறுதல் ஆகியவற்றில் உள்ள நேர்மையான நடைமுறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். அப்புறம் பாருங்கள்.. உலகமே புதியதாகிவிடும்!
மனதுக்கு இல்லை வயது | ஏப்ரல் 23, 2014

Published : 23 Apr 2014 09:07 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

தி  இந்து  தமிழ்

ஜெராக்ஸ் கடைக்கு ஒரு பெரியவர் சென்றார். கடைக்காரரிடம் சென்று ‘‘தம்பி! ஜெராக்ஸோ கிராக்ஸோ சொல்றாங்களே அது ஒண்ணு எடுக்கணும்’’ என்றார். ‘‘தாராளமா எடுக்கலாம் பெரியவரே! குடுங்க!’’ என்றார் கடைக்காரர். உடனே பெரியவர், ‘‘இந்த மிஷின்ல தமிழ்லயும் ஜெராக்ஸ் எடுக்க முடியுமா? இல்லை, இங்கிலீஷ் மட்டும்தானா?’’ என்றார்.

இன்னொருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்திருக்கிறேன்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்ப வேண்டும். அதைச் சென்னை முகவரிக்கு அனுப்பவா? அல்லது நெல்லை முகவரிக்கா?’’ என்று அப்பாவியாகக் கேட்டார். இதுபோல, தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் வயதானவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன.

இன்று தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியில் இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் வயதானவர்கள் பலரும் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆர்வமின்றியும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களைக் கண்டு பயத்துடனும் இருக்கின்றனர். தொழில்நுட்ப அச்சம் (Technophobia) என்று அழைக்கப்படும் இந்தப் பயம் வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் ‘என்ன இருந்தாலும் அந்த காலம்போல் வருமா?’ ‘இதெல்லாம் என்ன வளர்ச்சி?’ என்றெல்லாம் கூறி புதுத் தொழில்நுட்பங்களை எதிர்ப்பார்கள்.

இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஆர்வமின்மை. ‘இதையெல்லாம் இனிமேல் எதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற மனப்பான்மையே இதற்குக் காரணம். ஐந்து வயதுப் பொடியன் ஐ-பேடில் புகுந்து விளையாடுவதற்குக் காரணம் குழந்தைகளிடம் இருக்கும் ஆர்வம்தான். வயதானாலும் அந்தக் குழந்தைத்தனத்தை தொலைக்காமல் இருப்பவர்களே புது விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரண்டாவது காரணம் இந்தத் தொழில்நுட்பங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றன. வயதானால் மூளை கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொடுக்கும். ஆனால் பையனோ, பேரனோ நல்ல மூடில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் பழகிவிடலாம். ‘இது கூடத் தெரியாதா?’ என்று கேலி செய்து விடுவார்களோ என்று எண்ண வேண்டாம். எல்லோரும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.

அதேபோல, இவற்றைத் தவறாக உபயோகித்து ஏதேனும் சேதப்படுத்தி விடுவோமோ, தகவல்களை அழித்துவிடுவோமோ என்றெல்லாம் பயந்து பயன்படுத்தாமல் விட்டு விடுவார்கள். நீங்களாக ஐ-பேடை மாடியிலிருந்து தூக்கி எறியாதவரை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவையெல்லாம் மிகையான பயங்களே.

ஆனால் எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சிட்னியில் இருக்கும் பேத்திக்குச் சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து ‘வத்தக் குழம்பு செய்வது எப்படி?’ என்று ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடம் எடுக்கும் பாட்டிகளும், வெப் கேமரா மூலம் பேத்திகளுக்குக் கதை சொல்லும் தாத்தாக்களும் இருக்கின்றனர். அவர்களே காலத்தை வென்றவர்கள்.

Airtel has highest 4G download speeds in India: Report
19 Apr 2018 | By Bhavika Bhuwalka


According to a report by London-based wireless coverage mapping agency OpenSignal, Bharti Airtel has the maximum 3G and 4G download speeds in India. 


The telecom company bagged the top spot in all three speed categories: 4G, 3G, and overall.

Airtel clocked in an average download speed of 6 Mbps, with rival Reliance Jio coming a close second at 5.1 Mbps.
ஒரு போர்டு... ஆயிரத்தெட்டு தகவல்கள்! இளைஞர்களுக்கு வழிகாட்டும் கிராமத்து பெட்டிக்கடைக்காரர்
 
விகடன் 17 hrs ago

 


பணம் ஒன்றே பிரதானம் என்றாகிவிட்ட இந்த லௌகீக வாழ்வில், மனிதநேயம், உதவி மனப்பான்மை என்பவை மிகவும் அருகிவிட்டன. `அடுத்தவர்கள் என்ன கதியானால் என்ன' என்றுதான் பலரும், சுயநலத்தோடு துரிதமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், உதவி மனப்பான்மை கொண்ட மனிதர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகை மனிதர்தான் கரூர் மாவட்டம், கடவூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.

கடவூரில் சிறு அளவில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். கிராமத்து அளவில் இருக்கும் சிறு கடைகளிலேயே கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பர தட்டிகளும் மளிகைப் பொருள்களின் விலைப்பட்டியல் மட்டுமே இடம் பெயரும். ஆனால், இவரது மளிகைக் கடையில் உள்ள சுவற்றில் கறும்பலகை அமைத்து, தினமும் அப்துல்கலாம் உள்ளிட்ட உயர்ந்த மனிதர்கள் இளைஞர்களுக்கு வழங்கி சென்ற நல்ல கருத்துகள் ஒன்றை எழுதிப் போடுகிறார். அனைத்து தினசரிகளையும் வாங்கிப்போட்டு, அந்த ஊர் இளைஞர்களைப் படிக்கச் சொல்கிறார். அதோடு, கடைக்கு முன்பு போர்டு ஒன்றை மாட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அந்த ஊர் இளைஞர்கள் பார்வையில் படும்படி செய்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்கள். அதோடு, அரசு வேலைக்கு தயாராக க நினைக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களுக்குத் தகுந்த புத்தகங்களை வாங்கவும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆகும் செலவையும் தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலை குறித்த போதிய விழிப்பு உணர்வைப் பெற்றிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினால், "நான் அதிகம் படிக்கலை. `படிக்கிறதைவிட, குடும்பத்துக்கு சோறு போடுற இந்தக் கடை தொழிலை கவனின்னு எங்கப்பா என்னை இந்தக் கடையிலேயே பழக்கிட்டார். நல்லா படிச்சு, பெரிய அரசு அதிகாரியா ஆவனும்ன்னு நினைச்சேன். முடியலை. எங்க கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். அதனால், அவர்கள் வீட்டு இளைஞர்களாச்சும் என்னைப்போல் இல்லாமல் படித்து, அரசு வேலைகளுக்குப் போகணும்னு நினைச்சேன். அதனால், என்னால முடிஞ்ச சின்ன ஒத்தாசையை பண்ணிகிட்டு இருக்கேன். அடுத்து, முடிஞ்சா எங்க கிராமத்துலேயே இலவசமா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பை தொடங்கலாம்னு இருக்கேன்" என்றார்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்
 
  தினகரன் 13 hrs ago

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக சென்னையில் இருந்து பலர் தென்மாவட்டங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு, பரனூர், மகேந்திரசிட்டி உள்பட 3 கீ. மீ. தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
என் ‘இனிய’ மக்களுக்கு..!

Published : 14 Apr 2018 10:37 IST

மருத்துவர் கு. சிவராமன்



இனிப்பு, கொஞ்ச நாளாகவே அநேகம் பேருக்கு கசக்க ஆரம்பித்துவிட்டது. நம் ஊரில் மட்டுமல்ல, உலகெங்கும்! ‘இனிது இனிது காதல் இனிது’ என பாலகுமாரன் இன்னொரு முறை எழுத மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘கசப்பு கசப்பு காதல் கசப்பு’ என்று எழுதினால்தான், பலருக்கும் சுவைக்கக்கூடும்.

ஆம்! இனிப்பைக் கண்டு பயப்படவும் வெறுக்கவும் கூடிய சூழல் எல்லாப் பக்கமும் வலுவாக வளர்ந்து வருகிறது. மூளைக்குள் இத்தனை நாள் மணியடித்து, எண்டார்பின்களைத் தெளித்துப் பரவசமூட்டிய இனிப்பு, இப்போது அபாய மணியாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டும் சற்று சங்கோஜத்துடன் நகர்த்தி ஒதுக்கிய இனிப்புகள், இன்று குழந்தை முதல் அத்தனை வயோதிகரும் சற்றுக் கலவரத்துடன் ஒதுக்கும் வஸ்துகளாகி வருகின்றன.

காபிக்கு சர்க்கரை போடலாமா?

இன்றைக்கு உலகில் மிக அதிகமாக இனிப்பை (வெள்ளைச் சர்க்கரையை) இறக்குமதி செய்யும் நாடு, இந்தியா. கூடவே இன்று உலகில் மிக அதிக அளவில் சர்க்கரை வியாதிக்காரர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடும், இந்தியாதான். உலகில் மிக அதிக அளவில் நீரிழிவு மருந்து, மருத்துவமனை வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதும் இங்கேதான்.

முன்பெல்லாம் பசியெடுக்கையில் முந்திரிப் பருப்பை வறுத்துச் சாப்பிடும் பணக்கார மிட்டாமிராசுகளுக்கு வரும் வியாதியாக சர்க்கரை வியாதியை நவீன மருத்துவம் சொல்லியிருந்தது. பாரம்பரிய மருத்துவ முறைகள் எல்லாம், ‘கோதையர் கலவி போதை, கொழுத்த மீனிறைச்சி போதை, ஓதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண்போருக்கு வந்து சேரும் வியாதி’ என்று எச்சரித்திருந்தன. இவை எல்லாவற்றையும் கடந்து வயது, சாதி, இன, பண, புவியியல் பாரபட்சமும் இல்லாத ஒரே விஷயமாய் சர்க்கரை இந்த நாட்டில் உருவெடுத்து வருகிறது.



‘காபி, டீக்கு சர்க்கரை போடலாமா?’ எனும் கேள்வி ‘ஆதார் கார்டை இணைச்சிட்டீங்களா?’ என்கிற மாதிரி தவிர்க்க முடியாததாகி வருகிறது. சுயம்வர வேட்டையில் பி.சி.ஓ.டி. (சினைப்பை நீர்க்கட்டி) இல்லாத பொண்ணும், ஐ.ஜி.டி. (ஆரம்பக்கட்ட சர்க்கரை நிலை) இல்லாத பையனும் கிடைப்பது அநேகமாக இனி சாத்தியமில்லை என்கின்றன தொடர்ச்சியாக வெளிவரும் நோய்த்தொற்று அறிவியல் ஆய்வு முடிவுகள்.

எதற்கெடுத்தாலும் சர்க்கரையா..?

இத்தனைக்கும் கணையம்தான் பிரச்சினை. அதன் பீட்டா செல்களில் நடந்த புழுக்கமும் கலக்கமும் குழப்பமும்தான் அத்தனைக்கும் காரணம் என்றார்கள் முதலில். வைரஸோ, நோய் எதிர்ப்பாற்றலில் நடந்த பிழையாலோ கணையம் கசங்கிப் போனது என்றும் சொன்னார்கள். இல்லை, பிரச்சினை அதையும் தாண்டியது… ஹார்மோன் சிக்கல்… இல்லை, இல்லை, புரதப் பிரச்சினை… அதெல்லாம் இல்லப்பா… மரபணுதான் சிக்கல்… அதெல்லாம் கிடையாது, ரத்ததில் பேசோபிலில் உள்ள பிளாஸ்டிசைசர் துணுக்குகள் என வரிசை வரிசையாய்ப் பல காரணங்கள் சர்க்கரை நோய்க்கான காரணமாக ஆராயப்பட்டு வருகின்றன.

என்ன காரணம் எனத் தெரியாமல், ‘மாதவிடாயைக் காணோம் என்றால் சர்க்கரையைப் பார்’; ‘காய்ச்சல் குறையலையா? சர்க்கரையைப் பார்!’; மெலிந்து விட்டாயா? குண்டாகி விட்டாயா? குழந்தை இல்லையா? பணக்காரக் கவலைகளா? பணம் இல்லை என்ற கவலையா? தூக்கம் வரவில்லையா? தூக்கமா வருதா? எல்லாவற்றுக்கும் சர்க்கரையைப் பார்… சர்க்கரையைப் பார்!’ என்ற அறைகூவல் மட்டும் இப்போது மருத்துவ உலகில் ஓங்கி ஒலிக்கிறது.

இனிப்பு பாதி… கசப்பு மீதி…

கூடவே ‘ஐயோ இன்சுலினா போட்டுக்கறீங்க..? இவ்ளோ மாத்திரையா?’ என சிலரது நக்கல்கள் ஒரு பக்கம். ‘நீங்க படிச்சவங்க தானா? இப்படி கசாயம் பட்டை, கொட்டைன்னு…. அப்புறம் கிட்னி போயிருச்சுன்னு இங்கு வந்தீங்க... அவ்ளோதான்’ என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கோட் சூட் போட்ட குதர்க்கங்கள் இன்னொரு பக்கம். ‘டேய்! சுகர்னே ஒண்ணு கிடையாதுடா. எல்லாம் பொய். எல்லா மாத்திரையையும் ஊசியையும் எடுத்துத் தூரப் போடு. நான் சொல்றபடி அகாசுகா பட்டையை அர்த்த ராத்திரில எடுத்துவந்து...’ என நீளும் ‘வாட்ஸ் அப்’ வாந்தி என இனிப்பர்களின் வாழ்வு மிக மிகக் கசப்பாகி வருகிறது. இதற்கிடையில் ‘எதனாச்சும் ஒரு உண்மையான வழியைக் காட்டுங்க!’ எனும் பாதிக்கப்பட்டோரின் கூக்குரலுக்குப் பின்னே கோடானு கோடி வர்த்தகம் இனிப்பாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் காய்ப்பு உவர்ப்பு இல்லாமல் ஒரு சுற்று அறிவதுதான், இனிப்பு உருவாக்கும் அத்தனை கசப்பிலிருந்தும் காத்துக்கொள்வற்கான முதல்படி. ‘ஸ்டெம் செல்லை கணையத்தில் படியவிடலாம். மாசம் ஒரு ஊசி போதும். மாத்திரை சாப்பிட்டா அத்தனை சர்க்கரையையும் சிறுநீரில் தள்ளிவிடலாம். மூலிகை கஷாயத்தின் நுண்தாவர மருத்துவக் கூறுகள் மூலம் ரத்த சர்க்கரையை செல்களுக்குள் தள்ளிவிடலாம். வர்மம், அக்குபிரஷர் மூலம் நிணநீர் ஓட்டத்தைத் துரிதப்படுத்தி, ரத்தத்தில் தேங்கி நிற்கும் சர்க்கரையை செல்லுக்குள் தள்ளி, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்’ என்றெல்லாம் ஆங்காங்கே ஆக்கப்பூர்வ ஆய்வுகள் உலகெங்கும் வந்துகொண்டே இருப்பது, இனிப்பான செய்திதான். ஆனால் என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும்? இனிப்பின் பக்கம் ஒரு சின்ன நடை போய் வரலாமா?

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மருத்துவர் கு. சிவராமன், சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர். சித்த மருத்துவம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருகிறார். சித்த மருத்துவம் தவிர,

நாம் இழந்து வரும் மரபுகள், பாரம்பரிய

உணவு ஆகியவற்றை மீட்பது தொடர்பாகவும் செயலாற்றி வருகிறார்.

NEWS TODAY 30.06.2026