Saturday, May 5, 2018

விருந்தோடு முடிந்த நிர்மலா தேவி விவகாரம்! 

எஸ்.மகேஷ்



அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்துக்குக் கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் விருந்து அளித்துள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு, ஆரம்பத்தில் அனல் பறந்தது. பல்வேறு தகவல்கள் வெளியாகின. சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணைக் குழுவினரும் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் மூன்று பேரிடமும் சந்தானம் விசாரணை நடத்தியுள்ளார். விரைவில் ஆளுநருக்கு விரிவான அறிக்கையை சந்தானம் சமர்ப்பிக்க உள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் என போலீஸார் பிஸியாக இருக்கின்றனர்.




 இந்தச் சூழ்நிலையில் நிர்மலா தேவி, வேலைப்பார்த்த கல்லூரி மூடப்படுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. அது வதந்தி என்றாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 3ம் தேதி கல்லூரி நிர்வாகம் தரப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசிய செயலாளர் ராமசாமி, கல்லூரி குறித்து பல்வேறு தகவல்கள் வதந்தியாகப் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளத்தில் இந்தத் தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் எங்களுடன் பேரம் பேசிய பத்திரிகையாளர்கள் மீதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். அவர்கள் எங்களுடன் பேசிய ஆதாரத்தை போலீஸில் வழங்கியுள்ளோம். எனவே, எங்களின் கல்வி சேவையைத் தொடர வழிவிடுங்கள் என்று கூறினார். பிரஸ் மீட் முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்துள்ளது. தற்போது, கல்லூரியில் தேர்வு நடப்பதால் நிர்மலா தேவி விவகாரத்தை யாரும் பேசுவதில்லையாம்.

எர்ணாகுளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை: நீட் தேர்வுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் தவிப்பு!

பி.ஆண்டனிராஜ்  VIKATAN 


நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் சென்றுள்ள நிலையில் அங்கு கோடை மழை கொட்டித் தீர்த்தது. அதனால், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாகச் சென்றவர்கள் தங்குமிடத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.



எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனை மாற்ற சி.பி.எஸ்.சி மறுத்துவிட்ட நிலையில், தற்போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்குச் சென்று தங்கியிருக்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சில மாணவர்கள் இன்று பகலில் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சுமார் 8 மணிநேரப் பயணத்துக்குப் பின்னர், கேரளாவின் எர்ணாகுளம் நகரில் இறங்கிய நிலையில், அங்கு சுமார் ஒரு மணி நேரமாகக் கொட்டித் தீர்க்கும் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்கிற இடமும் தெரியாமல், புரியாத மொழி பேசும் மாநிலத்தில் தவித்து வருகிறார்கள்.

பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சேவை மையங்களை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அந்த மையத்தில் இருப்பவர்கள் தங்குமிட வசதி உள்ளிட்டவற்றை தெரிவித்த போதிலும், மழையின் காரணமாக அந்த இடத்துக்குச் செல்ல முடியாமல் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவியருடன் பெற்றோரும் உடன் சென்றுள்ள நிலையில் அந்தந்த இடங்களிலேயே அவர்கள் காத்திருக்கிறார்கள்.



அத்துடன், ஞாயிற்றுக் கிழமை காலையில் 7.30 முதல் 8.30 மணிக்குள் ‘ஏ சிலாட்’ மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பி சிலாட்’ மாணவர்கள் 8.30 முதல் 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்றுவிட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பட்டுள்ளது. அதனால் நாளை மழை பெய்து விடக் கூடாதே என்கிற கவலையும் கூடுதலாக தமிழக மாணவர்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.


வெளி மாநிலங்களில் நீட் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா?


neet_answer

சென்னை: தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே, நீட் தேர்வால், மருத்துவம் படிக்கும் கனவோடு இருந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு முன்தினம் படிக்க முடியாமல், வெளி மாநிலத்துக்கு பயணம் செய்து, அங்கு மொழி தெரியாமல், தங்கும் வழி தெரியாமல் அலைய நேரிடுமே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தனர். பண வசதி இல்லாத ஏழை மாணவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது போயினர்.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால் வெறும் அலைச்சல், பணச் செலவு, மன உளைச்சல் என பல சிக்கல்கள் எழுந்தாலும், அதோடு பிரச்னை முடியவில்லை என்கிறது மேலதிகத் தகவல்கள்.
அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்தி மற்றும் உருது ஆகிய உள்ளூர் மொழிகளைத் தவிர மற்ற மொழிகளில் வினாத்தாள்கள் அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படும்.
இதில் சிக்கல் என்னவென்றால், தமிழ் வினாத்தான் தமிழத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும்தான் வழங்கப்படும். எனவே, வெளி மாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா? என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை. 
எனவே, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வை எதிர்கொள்ள கடந்த ஒரு மாத காலத்தில் சிபிஎஸ்இ பாடத்தைப் படித்து தேர்வுக்கு தயாராகி வருவதே மிகப்பெரிய சவால்.
இதில், தெரியாத இடம், புரியாத மொழி என பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி, தேர்விலும் தமிழ் மொழியில் வினாத்தாளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவ சேர்க்கையையும் கொண்டிருக்கும் தமிழகத்தில் பிறந்த மாணவ, மாணவிகள், மருத்துவ மாணவ சேர்க்கைக்கு அடிப்படையான நீட் தேர்வைக் கூட வெளி மாநிலத்தில் சென்று எழுத வேண்டிய கட்டாயமும், பல தடைகளை சந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இது தமிழர்கள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகவே பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி, தமிழக மாணவர்களின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துக் சொல்ல தமிழக அரசு சார்பில் எந்த மூத்த வழக்குரைஞரும் நியமிக்கப்படாமலேயே, தமிழக அரசு கண் மூடி மௌனியாய் இருந்துவிட்டது.
அதனால்தான் சிபிஎஸ்இயின் வாதத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
மத்திய அரசின் அடக்குமுறைகளை கண்டும் காணாமலும் இருக்கும் மாநில அரசின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஏராளமான சமூக அமைப்புகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும், வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்தனர். அதனால் வெளி மாநிலம் செல்லும் மாணவர்களில் சிலராவது எளிதாக தேர்வு மையங்களை கண்டடைய வழி ஏற்பட்டது.

முதுமையைப் போற்றுவோம்!

By ச. முத்துக்குமார்  |   Published on : 04th May 2018 01:39 AM  | 
மனிதர்கள் தவிர்க்க நினைப்பதும், தள்ளிப்போட முடியாத விஷயமாகவும் உள்ளது முதுமை. குழந்தையாக பிறந்து முதுமையில் இறப்பது இயற்கையின் நியதியாக உள்ளபோதிலும், முதுமைப் பருவம் என்பது எளிதில் கடந்து செல்லக் கூடியதல்ல. மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய பருவத்தில் இருக்கும் முதியவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை காது கொடுத்துக் கூட கேட்காத சூழலில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். 
முதியவர்களின் அனுபவம் நமக்குப் பல்வேறு விஷயங்களில் கை கொடுத்தபோதிலும் அவர்களுக்கு கை கொடுத்து உதவி செய்யவும் நம்மில் பலர் தயாராக இல்லை. அவ்வாறான முதிய பருவத்தில் அவர்கள் என்னவிதமான வேதனைகள், மனத் துன்பங்களை இன்றைய சமூகத்தில் பெறுகின்றனர் என்பதை ஓர் ஆய்வின் முடிவு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடலூரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் சென்னை, புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, புவனேசுவரம், குவாஹாட்டி, ஹைதராபாத், லக்னௌ, ஷில்லாங் உள்ளிட்ட 19 நகரங்களில் 4,615 முதியோர்களை சந்தித்துப் பேட்டி கண்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 53% பேர் தங்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், 61 சதவீதத்தினர் தங்களின் பொறுமையான செயல்பாட்டால் சமூகம் தங்களை புறக்கணிப்பதாகவும், 52 சதவீதத்தினர் தங்களிடம் மக்கள் அதிக கடுமையாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். வாகனங்களை பொதுமக்கள் அலட்சியமாக பயன்படுத்துவதால் தங்களுக்கு சாலை விபத்துகள் தங்களுக்கு நேர்வதாக 38சதவீதத்தினரும், இதன் காரணமாகவே 42 சதவீதத்தினர் தங்களது வீட்டைவிட்டே வெளியே வர தயங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைக் கொண்டு ஆராய்ந்தால், நவீன சமூகத்தை முதியோர் மிரட்சியுடனே அணுகுகிறார்களா அல்லது முதியவர்களை அலட்சியத்துடன் இளைய தலைமுறை அணுகுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள் தற்போது தங்களது கால் தடத்தை சாலையில் பதிக்கவே அச்சப்படும் சூழல் உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்வில் அனைத்துக்கும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் நிலையில், தங்களின் உடல் இயலாமையால் மெதுவாக நடந்து செல்லும் ஒருவரைக் காணும் போது ஒருவிதமான கோபம் ஏற்படுவது இயற்கையானதுதான். 
ஆனால், ஓடிக்கொண்டே இருக்கும் நாமும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? இந்தக் கேள்வியை மனதில் கொண்டு, முதியவர்களை நோக்கினால் அங்கே நமது முதிய உருவத்தை காணலாம். அவர்கள் மீது கருணை மழையைப் பொழிய வேண்டியதில்லை. ஆனால், நாமும் இதே தள்ளாமையை கண்டிப்பாக அடைவோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களின் வலியும், வேதனையும் புரியும்.
முதியோர் என்போர் ஒன்றுக்கும் முடியாதவர்கள் அல்ல. இந்த சமுதாயத்துக்கு தங்களது உடல் உழைப்பை வழங்கிவிட்டு, இப்போது தங்களது அனுபவத்தையும், அறிவையும் வழங்கத் தயாராக நமக்காக காத்திருப்பவர்களே முதியவர்கள். தங்களது அனுபவத்தை வளரும் தலைமுறையினர் பகிர்ந்து கொண்டு, அதன் மூலமாக அவர்கள் முன்னேற்றமடைய வேண்டுமென்ற எண்ணத்துடனே தங்களது அனுபவங்களை பிறருக்கு பகிர்கிறார்கள். 
முதுநெல்லியும், முதியவர்களின் பேச்சும் கசக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, அவர்களது பேச்சை இன்று காது கொடுத்து கேட்காததால், நெல்லிக்காயை சுவைத்த பின்னர் கிடைக்கும் இனிப்பை புறக்கணிக்கிறோம் என்றே கொள்ள வேண்டும்.
வாழ்வின் கடைசிப் பருவத்தில் இருக்கும் முதியவர்களுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளையும் யாரும் காட்டுவதில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்களில் முதியவர்கள் எளிதில் சென்று வரும் வகையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது. பேருந்தில் முதியவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டைக் கூட அவர்களால் பெற முடியாத நிலையே உள்ளது. 
முதியவர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் எவ்வளவு பெரிய பிரச்னையையும் சர்வ சாதாரணமாக கையாண்டு, அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு, அதனையே சாதனையாக மாற்றுவதை நமது வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பார்த்து உணர்ந்திருப்போம். அவர்கள் அந்தக் குடும்பத்தின் அறிவு பொக்கிஷமாக இருந்து தங்களது அனுபவங்கள் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கின்றனர். 
தற்போது இளைய வயதினரை அதிகமாகக் கொண்ட நாடாக விளங்கிவரும் இந்தியா, முதியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அதை தங்களது செயல் திட்டத்தில் இணைத்து பணியாற்றினால் வியத்தகு வெற்றிகளைப் பெறலாம். 
பொது வெளியில் அவர்களது இயலாமையை விமர்சிக்கும் வகையிலான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். உதவியை நாட விரும்பாத அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் இளைய தலைமுறையினருக்கு உள்ளது.
சமுதாயத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதியவர்களை ஒதுக்கிவிட்டு எந்த சாதனையையும் யாராலும் நிகழ்த்த முடியாது.

SC nod to counselling rule changes for PG medical
05.05.2018

NEW DELHI, DHNS: The Supreme Court has approved the changes in the counselling rules introduced by the Medical Council of India this year to check the “blocking” of seats by doctors aspiring to pursue postgraduate courses.
“Devious methods were adopted by certain candidates to block the seats in the all-India quota and resign thereafter from those seats later, which resulted in the reversion of the all-India quota seats to the state quota,” a bench of justices S A Bobde and L Nageswara Rao said.
Notably, admission to postgraduate courses is undertaken on the basis of National Eligibility-cum-Entrance 
Test.
50% of the seats are earmarked for all India quota and the remaining 50% for the state quota. A group of postgraduate courses aspirants, led by Rachit Sinha, contended the changes brought in by the MCI on April 9 stated that even if a candidate is allotted a seat in the first round of counselling in the all-India quota but did not report, he/she would be entitled to participate in the second round. 
A candidate who had reported but resigned was also made eligible to participate in the second round.
The petitioner claimed it would increase competition as candidates who were not eligible to participate in the second round of counselling earlier were permitted to compete for admissions in the second round.
The top court, however, rejected their contention, saying, “the MCI made changes to arrest the blocking of seats by certain candidates which was detrimental to the interest of meritorious candidates in the all-India quota”.
It also noted that the medical counselling committee identified about a thousand candidates who were indulging in such illegal practice and proposed to take action against them after a thorough inquiry. The court said there is no infringement of any legal right of the petitioners.
Reduction of the chances of admission does not entail the violation of any right, it said.
The top court also took exception to the fact that some states and deemed/central institutions completed the second round of counselling without waiting for the reversion of the unfilled seats in the second round of counselling of the all-India quota.
It directed that such states and deemed/central institutions shall conduct the second round of counselling again after reversion of the unfilled seats in the second round of counselling of the all-India quota.
The court said the concerned authority will report the unfilled seats in the second round of the all-India counselling to the respective states by May 5.
The second round of counselling for the state quota shall be conducted and completed by May 10. The mop-up round for the state quota, scheduled to be completed by May 8, is extended to May 15, the court ordered.

STATISTICS NEET 2018


WhatsApp - பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; அட்மின்கள் செம்ம குஷி.!  05.05.2018


பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும்விண்டோஸ் பயனர்கள் என அனைவர்க்கும் - பொதுவான முறையில், எளிமையான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது.

  அதிலும், கடந்த ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில், பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன்மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்'ஆகியவைகளை கூறலாம். அதற்கு அடுத்தபடியாக, வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியது.

இதன் நன்மை என்ன.? இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.? இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் அட்மின்களுக்கான சக்தியை (கட்டுப்பாட்டை) அதிகரிக்கும் ஒரு அம்சத்தை அதன் அனைத்து தளங்களிலும் உருட்டியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப், அதன் அனைத்து ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு குறிப்பிட்டுள்ள அம்சத்தை இணைத்துள்ளது, அது என்ன அம்சம்.? இதன் நன்மை என்ன.? க்ரூப் அட்மின்கள் இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.?

மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள்.!

"ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாகுமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜைகட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.

வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.!

புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்,ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

முன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என்கிற நிலைப்பாடு இருந்தது.

ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.!

அதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனிஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

 வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

இதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக்கொள்கைகளை மேம்படுத்தல்.!

வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்தஅம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லாபயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

சுவாரசியம் என்னவெனில்.!

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும்என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட்செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...