Sunday, May 6, 2018

மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு



திருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் தங்குவதற்கு கேரள அரசும், தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மே 06, 2018, 05:00 AM
திருவனந்தபுரம்,

மருத்துவ படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள மையங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்ச் சங்கத்தினர், கேரள அரசுடன் இணைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் அமைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்துக்கு சென்ற மாணவர்கள் தங்க வசதியாக தைக்காடு மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்க வசதியாக மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அங்கிருந்து மாணவ-மாணவிகள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேவையான வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவச ஆட்டோ சேவையும் நடத்தப்படுகிறது.

இதே போல் எர்ணாகுளத்திலும் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் தங்குவதற்கும், அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்லவும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் செல்வோரின் வசதிக்காக ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் எர்ணாகுளம் வரை விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் செல்ல தெற்கு ரெயில்வே சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் தமிழ்ச் சங்க தலைவர் நைனார் தலைமையில், செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் ஹாஜா, செந்திவேல், வீரணம் முருகன் மற்றும் இந்திய விண்வெளி மைய ஊழியர்களும், எர்ணாகுளத்தில் பாபு வெங்கட்ராமன் உள்பட பலரும் இணைந்து இந்த சேவையை செய்து வருவதாக தமிழ்ச் சங்கத்தினர் தெரிவித்தனர்.














மாநில செய்திகள்

தேர்வு மைய குளறுபடி: தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி



தேர்வு மைய குளறுபடியால் 5,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதி: சி.பி.எஸ்.இ. ஒத்துழைக்க வில்லை என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இந்த குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து இருக்கிறது.

மே 06, 2018, 05:45 AM
சென்னை,

மருத்துவ படிப்புக் கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 345 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 961 பேரும், அதற்கு அடுத்ததாக கேரளாவில் 226 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 792 பேரும், கர்நாடகத்தில் 187 தேர்வு மையங்களில் 96 ஆயிரத்து 377 பேரும், உத்தரபிரதேசத்தில் 171 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 306 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட பிரிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடையும்.

தேர்வு மையங்களில் காலை 7.30 மணி முதல் மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது.

தேர்வு மையத்திற்குள் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களிலும் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று நடைபெற்றன. தேர்வு மையத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதியில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த தகவல்கள் ஒட்டப்பட்டன. இதை தேர்வு எழுத வரும் தேர்வர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பார்த்துவிட்டு சென்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் 5,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற சில வெளிமாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது. மேலும் அரசியல் கட்சியினர், தமிழ்ச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோருடன் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர்.

கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மையங்களில் மட்டும் 5,300-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். கேரளா செல்லும் மாணவர்களின் வசதிக்காக நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து மட்டும் 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 82 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டில் அதை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் பேர் எழுதலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 30 சதவீதம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர். அதாவது இந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் எழுதுகிறார்கள். இதனால்தான் கணிசமான மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம் என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் 170 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அண்டை மாநிலங்களில் சில ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கு எந்த மன உளைச்சலும் இருக்காது. வெளிமாநிலங்களில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரத்தை சி.பி.எஸ்.இ. தெரிவிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தமிழகத்தில் எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இங்கே தேர்வு மையங்களை அமைத்து இருப்போம். இந்த நிலைக்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம். இருந்தாலும் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து உள்ளது.
‘நீட்’ தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ. தரப்பு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கூடுதலாக எந்தெந்த இடங்களில் தேர்வு மையங்கள் திறக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தமிழக அரசிடம் இருந்து எதுவும் கேட்கப்படவில்லை. அரசு முன்னதாகவே இவ்வளவு மையம் அமைக்கவேண்டும் என்று கேட்டு இருந்தால் நிச்சயமாக கூடுதல் மையங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். மேலும் நீட் தேர்வு மையம் தொடர்பாக நாங்கள் கேட்ட பல தகவல்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பதில்கள் வரவில்லை.

தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பத்தில் இதை அவர்கள் வரிசைப்படி குறிப்பிடுகிறார்கள்.

விதிமுறைகளின்படி கம்ப்யூட்டர் மூலமே தேர்வு மையங் கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஊழியர்களின் பங்களிப்போ, குறுக்கீடோ எதுவும் கிடையாது. தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு விட்டால், பின்னர் எந்த சூழ்நிலையிலும் அதை மாற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEET UG 2018 EXAM


Saturday, May 5, 2018

பாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை

2018-05-04@ 10:09:22



சான் பிரான்சிஸ்கோ: டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும்படி அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 330 மில்லியன் பயனாளர்களை கொண்ட டுவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் டுவிட்டரில் பணி புரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.

தொழில்நட்ப கோளாறுகளை சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பயனாளர்களும் உடனடியாக தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.
மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி

Published : 15 Sep 2015 12:01 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்





நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Keywords மனசு போல வாழ்க்கை தோல்வி

தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்
 
விகடன் 23 hrs ago




தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ.

இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். இதற்காக 170 தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட 25,206 பேருக்குக் கூடுதலாக தமிழ்நாட்டில் தேர்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 09.04.2018. ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. இதனால் எங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த முடியவில்லை. நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்கவில்லை. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கணினி வழியாகவே எல்லா மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே 8 முதல் 10 சதவிகித கூடுதல் இடங்களுடன் இந்த ஆண்டுக்கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். இதில் தேர்வு மையத்தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், சுற்றுச்சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லாவற்றையும் கணக்கீட்டுத்தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக வரிசை எண், தேர்வுத்தாள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு அனுப்பி விட்டோம்.

இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மாற்றி இருப்பதால் நிறைய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணாகுளத்துக்கு மாற்றி உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ் இ.

நீதிமன்றத்துக்குத் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களில் மையங்களை அமைத்துள்ளோம். இதில் சென்னையில் 49 மையங்களில் 33,842 மாணவர்கள், கோவையில் 32 மையங்களில் 15,960 மாணவர்கள், மதுரையில் 20 மையங்களில் 11,800 பேர், நாமக்கல்லில் 07 மையங்களில் 5,560 பேர், சேலத்தில் 26 மையங்களில் 17,461 பேர், திருச்சியில் 12 மையங்களில் 9,420 பேர், திருநெல்வேலியில் 10 மையத்தில் 4,383 பேர், வேலூரில் 14 மையத்தில் 9,054 பேர் என மொத்தமாக 170 மையங்களில் 1,07,480 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுத உள்ளனர் என்று சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.

கடைசி வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதுகின்றனர் என்ற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.

கோவை-சென்னை இண்டர்சிட்டி விரைவு ரயில் நாளை ரத்து: தெற்கு ரயில்வே

 
சென்னை: கோவை-சென்னை இண்டர்சிட்டி விரைவு ரயில்(12680) நாளை ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால் கோனை- சென்னை ரயில் ரத்து என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...