Friday, May 11, 2018

சிறுமி பலியான விவகாரம் மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


2018-05-11@ 01:15:37

சென்னை: சென்னை, கொடுங்கையூர் காவேரிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் கோபி (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லோகேஸ்வரி (28). இவர்களது மகள் தன்ஷிகா (5), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த வாரம் மே 5ம் ேததி லோகேஸ்வரி, தனது மகளுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டோம். உங்கள் குழந்தைக்கு மட்டும் இப்படி ஆனதற்கு என்ன காரணம் என தெரியவில்லை என அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த செய்தி கடந்த வாரம் மே 5ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து இது சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னையில் 17 மண்டலங்களில் நாளை குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

2018-05-11@ 00:25:16


சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் 17 மண்டல அலுவலகங்களில் நாளை நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே நாளை (12ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருட்கள் கிடைப்பது குறித்தும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் நுகர்வோருக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகா,அடுத்த முதல்வர்,யார்?,15ல் தெரியும்,ஆட்சி,தக்க வைப்பாரா,சித்தராமையா?
பெங்களூரு : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், நாளை நடக்கவுள்ளது. மாநிலம் முழுவதும், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், நேற்றுடன் முடிவடைந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது பா.ஜ.,வின் எடியூரப்பாவிடம், முதல்வர் நாற்காலியை பறிகொடுப்பாரா என்பது, வரும், 15ல் தெரிந்து விடும்.




கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை, மார்ச், 27ல், வெளியிடப்பட்டது.

ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள, 223 தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.


பா.ஜ., சார்பில், 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்., சார்பில், 221 பேரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேரும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உட்பட, மொத்தம், 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அனைத்து தொகுதிகளுக்கும், நாளை காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த மாவட்ட கருவூலங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று மாலை, அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அவை எடுத்துச் செல்லப்படும்.

மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றும், 600 சாவடிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில், ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காங்கிரசும், பா.ஜ.,வும், ஒரு மாதத்துக்கு மேலாக, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன.

பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார். தினமும் பொது கூட்டங்கள், பாதயாத்திரை, பேரணி, தெருமுனை பிரசாரங்கள் என, மாநிலம் முழுவதும், தேர்தல்பிரசாரம் களைகட்டியது.

அனல் பறந்த சூறாவளி பிரசாரம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனால், சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியேறினர். முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை, தேர்தலில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 15ல் எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது, அன்று தெரிந்து விடும்.
  • மே 28 (தி) அக்னி நட்சத்திரம் முடிவு
  • மே 28 (தி) வைகாசி விசாகம்
  • மே 29 (செ) காஞ்சி பெரியவர் பிறந்த தினம்
  • ஜூன் 15 (வெ) ரம்ஜான் பண்டிகை
  • ஜூன் 21 (வி) ஆனி உத்திரம்
  • ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
தேசிய செய்திகள்

நீட் அவலம்; தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார் - மாணவி வேதனை



தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார், கேள்வித்தாளால் மறைத்து எழுதினேன் என பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #NEET

மே 10, 2018, 06:40 PM

திருவனந்தபுரம்,


நீட் தேர்வின் போது மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் அவர்கள் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் நடந்துக்கொண்ட முறை தொடர்பாக சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் மாணவி நடத்தப்பட்ட விதம் தொடர்பான செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் கோப்பாவில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி, தேர்வின் போது உள்ளாடையை கழற்ற வற்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்து உள்ளார். போலீஸ் மாணவியின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளது.

சோதனையின்போது மேல் உள்ளாடைகளை கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள்ளாடையை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன். உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாகவும், தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள் என்றும் மாணவி புகாரில் கூறினார். மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் தன்னை மிகவும் மோசமான முறையில் பார்த்தார் எனவும் மாணவி தெரிவித்து உள்ளார்.

உள்ளாடையை கழற்றசெய்த பின்னர் தேர்வறைக்கு தேர்வு எழுத சென்றேன், அங்கு ஆண் கண்காணிப்பாளர் என்னை மிகவும் மோசமான முறையில் பார்த்துக்கொண்டு இருந்தார், என்னால் தேர்வின் மீது கவனம் செலுத்த முடியவில்லை எனவும் மாணவி குறிப்பிட்டு உள்ளார்.

மாணவின் சகோதரி மீடியாக்களிடம் பேசுகையில், “கண்காணிப்பாளர் பல்வேறு முறை என்னுடைய சகோதரியின் முன்னால் வந்து நின்று உள்ளார். அவர் என்னுடைய சகோதரின் முகத்தை பார்க்கவில்லை, மாறாக அவருடைய மார்பையே பார்த்து உள்ளார். என்னுடைய சகோதரி கேள்வித்தாளை கொண்டு மறைத்து தேர்வை எழுதி உள்ளார். என்னுடைய சகோதரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். கண்காணிப்பாளர் அடிக்கடி பக்கத்தில் வந்து நின்றதால் அவளால் முறையாக தேர்வை எழுத முடியவில்லை,” என கூறிஉள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கி முன்னெடுத்து வருகிறது, அதே பள்ளியில் தேர்வு எழுத வந்த பிற மாணவிகளிடம் பேசுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை பெற முயற்சிக்கிறோம் எனவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு புகாரும் வரவில்லை என பிராந்திய சிபிஎஸ்இ அதிகாரி தருண் குமார் கூறிஉள்ளார்.
கடந்த வருடம் கண்ணூரில் இதுபோன்று மாணவி ஒருவர் உள்ளாடையை கழட்ட செய்ததாக புகார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

இப்படியும் வாழ்கிறார்கள்: பேத்திகளுக்காக தள்ளாத வயதிலும் சுமை தூக்கும் தொழிலாளி




தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார் உலகநாதன்.

மே 11, 2018, 05:00 AM

வயதானவர்களின் ஆலோசனை எப்போதும் நல்லதுக்காக தான் இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் வயதான பெற்றோர்கள் இருந்தால் அது பாரமாகவே இருப்பதாக சிலர் கருதும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வயதான காலத்தில் ஒரு ஓரமாக இருக்கமாட்டிங்களா? ஏன் தொண தொணனு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க... உங்க வேலைய பாருங்க... என்ற சத்தம் பலருடைய வீட்டில் கேட்கும்.

இப்படிப்பட்ட சொற்களுக்கு சொந்தக்காரர்களான வயதானவர்கள், தங்களுடைய இளமை பருவத்தில் குடும்பத்துக்காக ஓடி தேய்ந்து, தளர்ந்து போன நேரத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டு மனம் நொந்து போகிறார்கள்.

ஆனாலும் சிலர் தங்களுடைய வயதான பெற்றோரை கடவுளாக பார்க்கும் குடும்பங்களும் உண்டு. இன்றளவும் வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் குடும்பங்களும் உண்டு.

அதேபோல், இளமை பருவத்தில் உழைக்கத்தொடங்கியவர்களில் பலர், வயதான காலத்திலும் இன்று வரை ஓயாமல் உழைத்து குடும்பத்தை தூக்கி நிறுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன் (வயது 65) என்பவர் தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார்.

ரெயில் நிலையங்களில் ‘அம்மா, அய்யா, சார், மேடம்..... லக்கேஜ் தூக்கணுமா?’ என்ற வார்த்தையை சுமந்தபடி, உடைமைகளை தூக்கி சுமப்பதற்காக குரல் கொடுக்கும் ‘போர்ட்டர்’களை(சுமை தூக்கும் தொழிலாளிகள்) ரெயில் பயணத்தின் போது நாம் பார்த்து இருப்போம்.

அந்த தொழிலை தான் உலகநாதன், 1979-ம் ஆண்டில் இருந்து கடந்த 39 ஆண்டுகளாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செய்து வருகிறார்.

இளமை பருவத்தில் ஓடிய வேகம் தற்போது இல்லை என்றாலும், மனம் தளராமல் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்காக உத்வேகத்துடன் ஒவ்வொரு நாளும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் சுமைகளை ஓடோடி தூக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.

இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது:-

பேத்திகள்

என்னுடைய மனைவி பெயர் புஷ்பா. எனக்கு 3 பெண் குழந்தைகள். என்னுடைய உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து 3 பேருக்கும் திருமணம் நடத்திவைத்தேன். இதில் முதல் மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு பக்கம் அதிர்ஷ்டம் என்று சொன்னாலும், மற்றொரு புறம் துரதிருஷ்டவசமாக என்னுடைய மகள் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்.

மகள் இறந்ததும், அவளுடைய கணவரும் குழந்தைகளை பற்றி கண்டுகொள்ளவில்லை. குழந்தைகளின் அழுகை சத்தம் என் மகள் இறப்பை விட அதிக வேதனையை தந்தது. நானும், என்னுடைய மனைவி புஷ்பாவும் எங்களின் பேத்திகளை எடுத்து வளர்க்க முடிவு செய்தோம்.

1979-ம் ஆண்டில் இருந்து நான் சென்னை சென்டிரலில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறேன். இளமை காலத்தில் நன்றாக ஓடி ஓடி உழைத்தேன். பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்ததும், ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்த நேரத்தில், மீண்டும் உழைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

மனவலிமை

முதலில் என்னுடைய மகள்களுக்காக உழைத்த நான், இப்போது என்னுடைய பேத்திகளுக்காக தள்ளாடும் காலத்திலும் உழைத்து வருகிறேன். இந்த தொழிலில் உடல் வலிமை மிகவும் அவசியம். பயணிகளின் உடைமைகளை பத்திரமாக கீழே விழாமல் கொண்டு வந்து சேர்த்தால் தான் பணம் தருவார்கள்.

அந்தவகையில் என்னுடை உடல் வலிமை இப்போது கொஞ்சம் தளர்ந்துவிட்டது. இருந்தாலும் மனவலிமையுடன் இந்த தொழிலை என்னுடைய பேத்திகளுக்காக செய்கிறேன். முடிந்தவரை உழைத்து அவர்களை கரைசேர்க்க முயற்சிக்கிறேன். எனக்கு அன்றாடம் சொற்ப அளவிலான வருமானம் தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதன் மூலம் என்னுடைய குடும்பத்தை நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி

உலகநாதன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், அங்குள்ள கடைக்காரர்கள் என அனைவருக்கும் நன்கு பழக்கமானவர். பேட்டி எடுத்து கொண்டு இருக்கும்போதே, சில ஊழியர்கள் அவரிடம் விளையாட்டாக பேசி மகிழ்ந்ததை பார்க்கும்போது அது நன்றாக தெரிந்தது. ‘சாமி இதனால எனக்கு எதுவும் பிரச்சினை வராதுல?’ என்று அப்பாவித்தனமாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்.

உழைக்கும் நோக்கில் உலகநாதன் ஓடினாலும், ரெயில் வராத நேரங்களில் சென்டிரலுக்கு வரும் சில பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதை காட் உதவி செய்து, மனிதநேயத்திலும் வெற்றி பெறுகிறார்.

இறுதியில் நான் அடுத்த ரெயில் வருவதற்குள் ‘டீ’ சாப்பிட்டுவிட்டு வருகிறேன் தம்பி... என்று கூறி அங்கிருந்து விறு விறுவென்று உலகநாதன் நடந்து சென்றார்.
தலையங்கம்

ரஜினிகாந்தின் முதல் வாக்குறுதி




ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மே 11 2018, 03:00

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள். பலகட்டங்களில் அவர் சூசகமாக சொல்லிக்கொண்டிருந்தாலும், கடந்த டிசம்பர் 31–ந்தேதி ரசிகர்களை சந்திக்கும்போது உறுதிபட சொல்லிவிட்டார். ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம்’’ என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அவரது 164–வது படமான ‘காலா’ ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அவர் நிச்சயமாக தன் கட்சியின் பெயர், போகும்பாதையை அறிவித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்த நிகழ்ச்சியில், ‘நீங்கள் கட்சியின் பெயரையெல்லாம் அறிவிப்பீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்களே’ என்று ‘தினத்தந்தி’ செய்தியாளர் கேட்டபோது, ‘அரசியல் பிரவேசம், கட்சிப்பெயரை அறிவிப்பதற்கான மேடை இது அல்லவே, இது ஆடியோ வெளியிடுவதற்கான மேடை’ என்று பதில் அளித்தார். ஆனால் அவரது 30 நிமிட பேச்சின்போது, வெளிப்படையாக எதையும் சொல்லாவிட்டாலும், வழக்கம்போல சூசகமாக பல கருத்துகளை தெரிவித்துவிட்டார். அடிக்கடி வெளிவரும் ‘காலா’ படத்தில் உள்ள அவரது வசனமான, ‘‘வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன்... தில் இருந்தா மொத்தமா வாங்கல...’’ என்பதை இந்த மேடையிலும் சொன்னார். இதன் பொருளை அரசியல் நோக்கர்கள், அவர் தனியாகத்தான் தேர்தலில் நிற்கப்போகிறார். ஏற்கனவே டிசம்பர் 31–ந்தேதி பேசும்போதுகூட, 234 தொகுதிகளிலும் நிற்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார் என்று விளக்கம் கூறுகிறார்கள்.

பேச்சின் இறுதியில், ‘‘நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையின் ஒரே கனவு, தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால், அதன்பிறகு மறுநாளே நான் கண்மூடினாலும் எனக்கு கவலையில்லை’’ என்று தனது அரசியலின் முதல் வாக்குறுதியை அறிவித்துவிட்டார். நதிநீர் இணைப்பு என்பது ரஜினிகாந்த் உள்ளத்தில் வெகுகாலமாகவே அசைவாடிக்கொண்டிருக்கும் ஒரு அழுத்தமான உணர்வு ஆகும். 13–10–2002 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுகோரி, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், கங்கை–காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அப்படி கங்கை நதியை இணைக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்கவேண்டும். எவ்வளவு பணம் என்று கவலைப்படாதீர்கள், நாளைக்கே அறிவித்தால்கூட, நாளையே ரூ.1 கோடி தருகிறேன், எனது பாக்கெட்டிலிருந்து தருகிறேன். பணம் வேண்டும் என்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியது இன்னும் பசுமையாக எல்லோருக்கும் நினைவில் இருக்கலாம். ஆக, அவரது முதல் இலக்கு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். நதிநீர் இணைப்பு என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவு. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கண்ட கனவு. இப்போது ரஜினிகாந்த் அறிவித்த முதல் வாக்குறுதி. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படவேண்டும் என்றால், தென் மாநிலங்களோடு நல்லிணக்கம் வேண்டும். அதை உருவாக்க அனைவரும் பாடுபடவேண்டும்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...