Monday, May 14, 2018

ஏழுமலையான் தரிசனம் : 25 மணி நேரம் காத்திருப்பு

Added : மே 14, 2018 02:30

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் நேற்று, 25 மணி நேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையை தொடர்ந்து, ஆந்திராவில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து, ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 25 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் வருகைக்கு தக்கபடி, தேவஸ்தானம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான, பவன் கல்யாண், நேற்று முன்தினம் இரவு, பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, சாதாரண பக்தர்களை போல், வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக சென்று, 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்தார்.சுவாமி தரிசனம் செய்த பின், பவன் கல்யாண் கூறுகையில், ''மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையை அருள வேண்டும் என, வேண்டிக் கொண்டேன். கோவிலையும், அதன் சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்வது அனைவரின் கடமை. திருமலையில் அரசியல் பேச விரும்பவில்லை,'' என்றார்.
தெற்கு ரெயில்வே அறிவிப்பு: கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும்



கொல்லம் தாம்பரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 14, 2018, 04:00 AM

விருதுநகர்,

தற்போது கொல்லம்– தாம்பரம் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்தும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது.

இந்த ரெயிலை தினசரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லைவரை நீட்டிக்கப்படும். கொல்லத்திலிருந்து தூத்துக்குடி வரை பயணிகள் ரெயில் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரெயில்வே அதற்கான தேதி பற்றி குறிப்பிடவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந்தேதி முதல் நெல்லை–தாம்பரம் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என அறிவித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் தொழில்நுட்ப காரணங்களால் அதனை திடீரென ரத்து செய்வதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ரெயில்கள் எந்த தேதியிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பதுடன் அதற்கான கால அட்டவணையையும் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ளபடி இந்த ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வழக்கம்போல் இவற்றையும் ரத்து செய்துவிட கூடாது என வலியுற்த்தப்பட்டுள்ளது.
கோடை விழா- மலர் கண்காட்சி: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்



ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழா- மலர் கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மே 14, 2018, 04:15 AM ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை காலத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 43-வது கோடைவிழா-மலர் கண்காட்சி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த கோடை விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட பல வகையான வண்ண, வண்ண பூக்களுடன் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு மலர்களால் விமானம், தலைமை செயலகம், கிரிக்கெட் வீரர், டிராக்டர், நடன மங்கை மற்றும் கார்ட்டூன் உருவங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காய்கறிகளால் மயில், பிள்ளையார், மீன், தெர்மாகோலில் அன்னபூரணி, பாதுகாவலர், பேரீட்சம்பழத்தில் டிராகன், வெண்ணையால் முயல், குரங்கு, நாய் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது. அண்ணா பூங்காவை நேற்று முன்தினமும் ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் 2-வது நாளான நேற்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்காவிற்குள் சென்று அங்கு வண்ண பூக்களையும், அதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உருவங்களையும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக வண்ண பூக்கள் அருகேயும், உருவங்கள் முன்பும் குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிகமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி வாகன ஓட்டிகள் பலர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் பலர் ஏற்காடு படகு முகாமிற்கு சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் படகில் ஜாலியாக சவாரி செய்தனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர மான் பூங்கா, பக்கோடா பாயின்ட், சேர்வராயன்ஸ் மலைக்கோவில், தலைச்சோலை, கிளியூர் வீழ்ச்சி, ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடீஸ் பாயிண்ட் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வாகன ஓட்டிகளை அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.8½ லட்சம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திற்கு டிக்கெட் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.15-ம், பெரியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன. மான் பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது.
கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்



கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

மே 14, 2018, 03:30 AM

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத, 7–ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் தங்கள் கலைத்திறனை நிரூபிக்கும் வகையில் குடைவரை மண்டபங்களையும், குடைவரை கோவில்களையும் எழுப்பினார்கள்.

அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் உலகளவில் பல்லவர்களின் கலைத்திறனை கொண்டு சென்றுள்ளன. சைவ, வைணவ மதத்தை பின்பற்றி பல்லவர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு குடைவரை கோவில்களும், சிற்பங்களும் மகாபாரத, ராமாயண கதைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகியவை உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் உள்ள கோவிலாகும். இந்த 2 இடங்களையும் கண்டுகளிக்க மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு பயணிக்கு ரூ.30, வெளிநாட்டு பயணிக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கிறது.

அதேபோல் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், வெண்ணெய் உருண்டை கல் போன்றவற்றை கண்டுகளிக்க கட்டணம் கிடையாது.

ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், அர்ச்சுணன் தபசு பாறை சிற்பத்தின் மலைக்குன்றின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் செல்பி எடுத்து மகிழ்வதை நாம் கண் கூடாக காணலாம்.

மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தின் உச்சியின் மீது ஏறி பார்த்தால் மாமல்லபுரம் நகரின் அழகையும், கடற்கரையும் கண்டுகளிக்கலாம்.

இந்த கலங்கரை விளக்கத்தின் அருகில் சிற்ப நுணுக்கங்களுடன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலங்ரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை ரசிக்க தூண்டும்.

மாமல்லபுரம் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இந்த 2 கலங்கரை விளக்கமும் இயற்கை எழில் கொஞ்சும், பசுமை காட்சிகளை சுற்றுலா பயணிகளுக்கு படம் பிடித்து காட்டுகின்றன.

பழைய கலங்கரை விளக்கம் மீது ஏற கட்டணம் கிடையாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறையின் கீழ் இயங்கும் புதிய கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நகரின் அழமை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்கு உலகப்புகழ் பெற்ற கடற்கரை கோவிலுடன் ஒட்டி கடற்கரை பகுதி அமைந்துள்ளதால் இக்கடற்கரை பகுதியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்வதில் தவறுவது கிடையாது. குடும்பத்துடன் வருபவர்கள் அஙகு குளித்தும் மகிழ்கின்றனர்.

மாமல்லபுரத்திற்கு கோடை விடுமுறைக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

மேலும் கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம் பகுதியில் சரியான குடிநீர் வசதி இல்லாமலும், சுற்றிப்பார்த்த பிறகு நிழலில் அமர்ந்து இளைப்பாற நிழற்குடை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
அழகு தரும் கொய்யா இலைகள்




கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

மே 13, 2018, 04:36 PM

* சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

* இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

* கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பளிச்சிட வைக்கும்.

* கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் நீங்கும். சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கவும் கொய்யா இலை உதவும்.

* அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

* பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
மாவட்ட செய்திகள்

சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்



சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.

மே 14, 2018, 05:00 AM

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட்களுக்கு முன் புதிததாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தங்களிடம் மதுக்கடை அமைக்க அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமானவர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந்ததும் கடைக்குள் புகுந்தனர்.

மதுபான கடைக்குள் கற்களையும் வீசி எறிந்தனர். பின்னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். உணவு பொருட்களையும் தூக்கி எறிந்தனர். இதைக் கண்டதும் மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். பாரில் இருந்த ஊழியர்களும், மது அருந்த வந்தவர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
தேசிய செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: வெளிநாட்டு பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் சலுகை




வெளிநாட்டு பயணிகள் இனி 1 ஆண்டுக்கு முன்பாகவே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

மே 14, 2018, 04:30 AM

புதுடெல்லி,


இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...