Wednesday, July 4, 2018

ராக யாத்திரை 11: நீ சின்ன நி! நான் பெரிய நி!!

Published : 29 Jun 2018 10:30 IST
Updated : 29 Jun 2018 10:56 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



‘என் தம்பி’ படத்தில்

சென்ற வாரம் சற்றுக் கடினமான கேள்விதான். மத்தியமாவதியின் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் என்ன ராகம் எனக் கேட்டிருந்தேன். வழக்கமாக நூற்றுக்கணக்கான வாசகர்கள் பதில் அளித்துத் திணற அடிப்பார்கள். இந்த வாரம் சிலரே பதிலளித்தனர் அவர்களில் ஈரோடு ஞானப்பிரகாசம் மற்றும் யக்ஞ நாராயணன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அந்த ராகம் ‘பிருந்தாவன சாரங்கா’.

ஸ ரி2 ம1 ப நி2 ஸ் , ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இதன் ஆரோகண அவரோகணங்கள். சிலர் அவரோகணத்தில் ஒரு சின்ன ‘க’வும் சேர்ப்பார்கள். சிலர் அதுதான் ஒரிஜினல் ‘பிருந்தாவன சாரங்கா’, க இல்லாமல் வருவது ‘ப்ருந்தாவனி’ என்பார்கள்.

ராக முத்திரை

மிகவும் இனிமையான ராகம் இது. முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை. எம். எஸ். பாடிக் கேட்டால் அந்த அரங்க மா நகரின் சொர்க்க வாசல் கதவுகளே நமக்குத் திறக்கும். ராகத்தின் பெயரையே கீர்த்தனையில் சொல்வதற்கு ராக முத்திரை என்று பெயர். அதில் தீட்சிதர் வல்லவர். இந்தக் கீர்த்தனையிலும் ராகத்தின் பெயரை அவ்வாறு பிருந்தாவனத்தின் மான்களுக்கெல்லாம் தலைவனே (சாரங்கா – மான்) எனப் பொருள் படும்படி அமைத்திருப்பார். மான் போல் குதிக்கும் இந்த ராகத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.

திரை இசையில் மிகவும் பிரபலமானது இந்த ராகம். கொஞ்சம் இந்துஸ்தானி ஜாடையும் இதில் வரும். ஷெனாயில் வாசிக்க ஏற்றதாக இருப்பதால் பல திரைப்படப் பின்னணி இசையில் வரும். இந்த ராகத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் வரும் ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே’ என்ற பாடல் மிகவும் இனிமையானது.

எண்ணிக்கையில் குறைவாகப் பாடினாலும் தரத்தில் நிறைவாகப் பாடிய எஸ். வரலட்சுமியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் ராகமேதை ராமநாதன் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு ஆலாபனை பின்னர் இடையிடையே ஷெனாய் ஒலி என இந்த ராகத்தின் ஜாடையை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

கோவர்த்தன ஆவர்த்தனம்

லேசான இந்துஸ்தானி ஜாடையில் மென்மையாகப் பாட வேண்டும் என்றால் பி.பி.ஸ்ரீநிவாஸ் இல்லாமலா? ‘இதயத்தில் நீ’ (1963) என்ற படத்தில் ஒரு பிரமாதமான பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் மூலம் பிபிஎஸ் இந்த ராகத்தை ஜாடை காட்டி அற்புதமாகப் பாடியிருக்கும் அந்தப் பாடல் ‘பூ வரையும் பூங்கொடியே’. வாலியின் ஆரம்ப காலப் பாடல்களுள் ஒன்று.

‘என் தம்பி’ (1968) என்ற சிவாஜியின் படம். எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தது. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் ‘முத்து நகையே உன்னை நானறிவேன்’, டி.எம்.எஸ். பாடியது. இடையிடையே ஆஹா, ஓஹோ எனப் பாடலில் வருவது போன்றே நாமும் பாடலைக் கேட்டால் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவோம்.

கோவர்த்தனம் என்ற இசையமைப்பாளர். ‘பட்டினத்தில் பூதம்’ போன்ற சில படங்களுக்கே இசையமைத்தவர். அவரது சிறுவயதிலேயே நாகஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கும்போது உடனுக்குடன் ஸ்வரங்களைச் சொல்லி அவரிடம் பாராட்டுப் பெற்றாராம். அவர் இசையமைத்த படம் ‘பூவும் பொட்டும்’ (1968). அதில் ஒரு அருமையான பாடலை பிருந்தாவன சாரங்காவில் அமைத்திருப்பார். ஷெனாயைப் போன்றே நாகஸ்வரத்திலும் இனிமையான ஒரு ஆலாபனையுடன் இப்பாடல் தொடங்கும். பி.சுசீலாவின் தேன்குரலில் வரும் ஹம்மிங்களுடன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்பது. உண்மையிலேயே பரமண்டலத்திலிருந்து தேவன் பாடும் பாடலைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தரும் பாடல் அது.

மெட்டின் இனிமைக்கு மெல்லிசை மன்னர்

இந்த ராகத்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது ‘படித்தால் மட்டும் போதுமா?’வில் (1962) அமைந்த ஒரு பாடல்தான். இந்த ராகத்தில் இரண்டு நி எனப் பார்த்தோம். சிறியது ஒன்று பெரிய நி மற்றொன்று. அது போல் இரண்டு வேறு விதமான பாடகர்கள். இரண்டு வேறு விதமான நடிகர்கள். பாத்திரங்கள். படத்தில் சிவாஜி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், பாலாஜி மென்மையானவர். இருவரும் மற்றவருக்காகப் பெண்பார்த்து விட்டு வந்து பாடும் பாடல். இந்த ராகத்திலும் இரண்டு நிஷாதங்கள் (நி).

கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்., மென்மையாகப் பாடும் பி. பி. எஸ். என அமைந்திருப்பது தற்செயலான விஷயமாகத் தோன்றவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற அந்தப் பாடல் இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல்களிலேயே முதன்மையானது எனலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த பாடல். வயலின், ஷெனாய், குழல் என இந்த ராகத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டியிருப்பார்கள். எம். எஸ். வி. தனது பாடல்களில் ராகத்தின் இலக்கணத்தை ராணுவ ஒழுங்குபோல் கடைப்பிடிக்க மாட்டார்.

இலக்கணத்தைவிட மெட்டின் இனிமைதான் முக்கியம் என்பது அவரது பாணி. இப்பாடலிலும் ‘நான் பார்த்த பெண்ணை’ என்ற இடத்தில் வேறு ஸ்வரங்கள் வந்தாலும் இனிமை கெடாமல் இருக்கிறது.

அதே மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் பொல்லாதவன் (1980) என்ற படத்தில் சுசீலாவின் குரலில் ‘சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே’ என்ற இனிய பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.

சரி. இசை ஞானிக்கு வருவோம். பல விதமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். கல்லுக்குள் ஈரமாய் வந்த பாடல் ஒன்று உண்டு. அது என்ன பாடல் ? க்ளூ: அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இல்லை.

தொடர்புக்கு: ramsych2@gmail.com
ராக யாத்திரை 10: துள்ளி துள்ளிப் பாடும் ராகம்

Published : 22 Jun 2018 10:54 IST
Updated : 22 Jun 2018 10:55 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



ராஜாவும் ரஜினியும்

சென்ற வாரம் கொஞ்சம் எளிமையான கேள்வி போலிருக்கிறது. பாரதிராஜாவின் அறிமுகத்தில் புதுமுகமாக நாயகன் நாயகி இருவரும் நடித்த ‘மண்வாசனை’ (1983) படத்தில் மத்தியமாவதி ராகத்தில் அமைந்த ஆனந்தமான பாடல் ‘ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலை’ என்னும் பாடல்தான் . மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தின் மென்மை காதுகளில் தேன்சிந்தும். சரியாகச் சொன்ன பலரில் முதலாகச் சொன்ன சிவகாசி கல்பனா ரத்தனுக்கும் நெய்வேலி ரவிக்குமாருக்கும் பாராட்டுகள். நட்சத்திர நாயகி என ரேவதிக்கு க்ளூ கொடுத்திருக்கத் தேவையேயில்லை போலிருக்கிறது.

மத்தியமாவதிக்கு வேறொரு வண்ணம்

எல்லா ராகத்தைப் போலவே வேறுவேறு தளங்களுக்கு, உணர்வுகளுக்கு இந்த ராகத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி. நவரசங்களில் குறிப்பாக, சிருங்கார ரசத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ‘மூன்றாம் பிறை’ (1982) திரைப்படத்தில் வரும் ‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலைச் சொல்லலாம். கர்னாடக சங்கீதத்தில் மிகவும் சுத்தபத்தமாகப் பக்திபூர்வமான மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது மத்தியமாவதி.

அதை மிகவும் வேறொரு பரிமாணத்தில் விரகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைத்திருப்பார். ஜானகியின் குரலுக்குக் கேட்க வேண்டுமா?. ‘பனிக்காற்றிலே தனனா தனனா...’ என்ற இடத்தில் அந்த ராகத்தின் சங்கதிகள் வந்து விழுவதைக் கவனியுங்கள். (கட்டாயம் இந்தப் பாடலின் புகைப்படம் போடப்பட மாட்டாது).

அதே பிக்பாஸின் இன்னொரு பாடல் இதே மாதிரியான ஒரு மாதிரியான பாடலுக்கும் இந்த ராகத்தை இளையராஜா பயன்படுத்தியிருப்பார். இரவு, நிலவு, காதல் போன்ற உணர்வுகளுக்கு மிகவும் ஏற்ற ராகம் எனச் சொல்லியிருந்தேன். அதேபோல் பல இடங்களில் இந்த ராகம் பயன்பட்டிருக்கும். ‘சகலகலாவல்லவன்’ (1982) திரைப்படத்தில் வரும் ‘நிலாக் காயுது’ என்ற பாடலும் இந்த மத்தியமாவதி ராகத்திலேயே அமைந்திருக்கும். ஜானகியுடன் மலேசியா வாசுதேவன். பாடலில் சில இடங்களில் வேறு ராகங்கள் தலைதூக்கினாலும் அடிப்படையில் இந்த ராகமே மேலோங்கி இருக்கும்.

காதல் இளவரசனுக்கு அதிரடியாக என்றால் காலாவுக்கு வேறு மாதிரியாக அமைதியான சிருங்கார ரசப் பாடல். முதலிரவுப் பாடல்தான். மகேந்திரனின் இயக்கத்தில் வந்த ‘கை கொடுக்கும் கை’ (1984) படத்தில் வரும் ‘தாழம்பூவே வாசம் வீசு’ என்ற பாடல்தான் அது. எஸ்.பி.பி., ஜானகி குரலில் இனிமையாக ஒலிக்கும் ஒரு மெல்லிய பூங்காற்றாக வரும். தாழம்பூவை ஒளித்து வைத்தாலும் வாசம் போகாது என்பது போல் மத்தியமாவதி எந்த உருவில் வந்தாலும் அதன் அடையாளமான இனிமையை வெளிப்படுத்திவிடும்.இன்னொரு அதிரடி சிருங்காரப் பாடலான ‘சின்ன மாப்பிள்ளை’ (1993) படத்தில் மனோ, சுவர்ணலதா குரலில் வரும் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’வும் மத்தியமாவதிதான்.

‘நாடோடிப் பாட்டுக்காரன்’ (1992) படத்தில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ என்ற பாடல் இரண்டு முறை வரும். ஆண்குரலில் ஒன்று; பெண்குரலில் ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம். அதில் எஸ்.பி.பியின் குரலில் வரும் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது. (சுசீலா பாடும் பாடல் லதாங்கி என்னும் அரிய ராகம்- அதுபற்றிப் பின்னர்). ‘கெட்டவர்க்கு மனம் இரும்பு, நல்லவரை நீ விரும்பு’ என்பது போன்ற எளிய வரிகளுடன் நாட்டுப் புற மெட்டில் இனிமையாக இந்த ராகத்தை அமைத்திருக்கிறார் இசைஞானி.

ஆனால், மேக்னம் ஓப்பஸ் என ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் இந்த ராகத்தின் சிகரமாக அமைந்த பாடல் ஒன்று ராஜாவின் இசையில் அமைந்துள்ளது. தெலுங்கு டப்பிங் பாடல்தான் என்றாலும் கொஞ்சம்கூட ‘அக்கட’ உள்ள வாசனை தெரியாமல் இருக்கும் பாடல். எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை பாடத் தெரியாதவன் சுருதி சேர்ப்பதுபோல் (‘பாட்டும் நானே’ –சிவாஜி நினைவுக்கு வரும்) ஆரம்பித்துப் பின் ராகத்தின் மேடு பள்ளங்களிலெல்லாம் வேகமாக ஓடிவரும்.


சிப்பிக்குள் முத்து

தொடர்ந்து ஜானகி ‘நிஸரிமபநிஸரிநிரிஸநிபமபநிஸா’ என இந்த ராகங்களின் ஸ்வரங்களின் ஆரோகண அவுரோகணங்களில் ஒரு ரோலர்கோஸ்டர் ரங்கராட்டினம் போல் ஏறி இறங்கி வருவார். இந்த ராகத்தில் ஸரிமபநி மட்டும்தான் என்பது நினைவிருக்கிறதா?. சிப்பிக்குள் முத்து (1985) படத்தில் வரும் ‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா’ என்னும் பாடல்தான் அது. சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட அக்மார்க் மத்தியமாவதி ராகப் பாடல் அது. இடையில் வரும் குழல், வயலினிசை என எல்லாம் கலந்து ஓர் உன்னதமான அனுபவம் அளிக்கும் லேசான சோகத்தைச் சொல்லும் பாடல் அது.

இதற்குமேலும் ராஜாவின் மத்தியமாவதியை ஆராய வேண்டாம். பிற இசையமைப்பாளர்களில் ‘உயிருள்ளவரை உஷா’வில் (1983) டி.ஆர் ‘இந்திர லோகத்துச் சுந்தரி’ என அருமையான பாடலொன்றை இந்த ராகத்தில் போட்டிருப்பார். ‘கொடிபறக்குது’ (1988) படத்தில் வரும் ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ என்ற பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசையமைப்பாளர் அம்சலேகா. நல்ல துள்ளலான இசை.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ராகத்தில் ஒரு பாடலில் பின்னியிருப்பார். ‘ஸ்டார்’ (2001) என்ற படத்தில் வரும் ‘தோம் கருவில் இருந்தோம்’ என்ற பாடல். சங்கர் மகாதேவனின் குரலில் வேகமும் ஆவேசமும் கலந்த அருமையான மத்தியமாவதி அது.

கொஞ்சம் சிலபஸ்சைக் கடினமாக்கிக் கேள்வி கேட்போம். மத்யமாவதியின் ஸரிமபநி ஸநிமபரி என்னும் சுரங்களில் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் இன்னொரு இனிய ராகம் வரும். அது?

படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
வாடகைக்குக் குடியிருப்பவரால் பெண் இன்ஜினீயருக்கு நடந்த துயரம்- சிசிடிவி கேமராவால் சிக்கினார்



எஸ்.மகேஷ்



சென்னையில் வாடகைக்கு குடியிருந்தவர், வீட்டின் உரிமையாளரின் மகளிடம் எல்லை மீறி நடந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

வடசென்னையைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றம்). இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உதவி கமிஷனர் அரிக்குமாரிடம் கண்ணீர் மல்க புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் சுமதி வீட்டில் குடியிருந்த பெயின்டர் பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் நவரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு அரிக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் பரமேஸ்வரனைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுமதியின் அப்பா, ரயில்வேயில் பணியாற்றுகிறார். அம்மா இந்தி டீச்சராக உள்ளார். தம்பி, கல்லூரியில் படிக்கிறார். சுமதியின் அப்பா நான்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதில் ஒரு வீட்டில் கடந்த ஓராண்டுக்கு மேல் பரமேஸ்வரன் என்பவர், குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரனின் மனைவி டீச்சராக பணியாற்றுகிறார்.

கடந்த சில மாதங்களாக பரமேஸ்வரனின் அநாகரிகமான செயல்களால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சுமதியின் அப்பா தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, தகாத வார்த்தைகளால் பரமேஸ்வரன் பேசியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுமதியிடம் எல்லை மீறி பரமேஸ்வரன் நடக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இதனால் பாதிக்கப்பட்ட சுமதிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் பரமேஸ்வரனைக் கைது செய்துள்ளோம். அப்போது அவர், தெரியாமல் தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று போலீஸிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ ஆதாரங்கள் இருந்ததால் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,``பரமேஸ்வரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததும் வழக்கறிஞர்கள் சிலர் வந்தனர். அவர்கள், பரமேஸ்வரனுக்கு ஆதரவாகப் பேசினர். அப்போது, எங்களிடமிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வழக்கறிஞர்களிடம் காண்பித்தோம்.இதனால் அவர்கள் கிளம்பிவிட்டனர். பரமேஸ்வரனின் மனைவி, முதலில் எங்களிடம் மன்னிப்புக் கேட்டார். பிறகு அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். ஆனால், அவரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படவில்லை. பரமேஸ்வரன், பெயின்டர் வேலை செய்கிறார். அவர் மீது அசிங்கமாக திட்டுதல், கையால் தாக்குதல், மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்

வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபரால் உரிமையாளரின் மகளுக்கு நேர்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா?

துரை.நாகராஜன்

க .தனசேகரன்

எட்டு வழி பசுமைச்சாலையில் புது பிரச்னை!

“ஐயா... நாங்களும் இந்தியர்கள்தானய்யா. எங்களுக்கும் நாட்டின் மீது பற்று உண்டு. அதனாலதானய்யா சொல்றோம்... விவசாயம் செழிப்பா இருக்குற நிலமய்யா. இத அழிச்சிட்டு ரோடு போடுறது பாவமய்யா. பூமித்தாய்க்கு செய்யுற துரோகமய்யா...’’ - சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் இருக்கும் விவசாயி மோகனசுந்தரத்தின் குரல் இது.

‘‘சின்ன கல்வராயன் மலை, பல ஜீவராசிகள் வாழுற இடம். தும்பி பறக்குற வெளி தொடங்கி, யானை நடந்து போற பாதை வரைக்கும் இதை சுத்திதான் இருக்கு. இது அழிஞ்சா சூழலுக்குப் பெரும் கேடு. இன்னும் நூற்றுக்கணக்கான விவசாயக் கிணறுகள், சிற்றோடைகள், விவசாய போர்வெல்கள்னு பல நீர்நிலைகளும் அழிஞ்சே போகும். இந்தச் சாலை எங்களுக்கு வேண்டாமுங்க...” - தர்மபுரி மாவட்டத்தின் இருளப்பட்டி கிராமத்தில் இருக்கும் சந்திரகுமாரின் குரல் இது.

இந்தக் குரல்களைத் தமிழக அரசு கண்டுகொள்வதாக இல்லை. எல்லா எதிர்ப்புகளையும் மீறி சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலைக்கான வேலைகளைப் படுவேகமாக நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. ‘வளர்ச்சி’ என்று பேசும் தமிழக அரசின் இரட்டை வேடம், இப்போது நீதிமன்ற வழக்கு ஒன்றில் அம்பலமாகி யிருக்கிறது.



2006-11 தி.மு.க ஆட்சியின்போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிதி ஒதுக்கப் பட்டு பணிகள் துவக்கப்பட்டன. அந்தப் பணிகள் முழுமையடையாத நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்குத் தடை விதித்தது. அதற்குக் காரணமாக அ.தி.மு.க அரசு சொன்னது... இன்று மோகனசுந்தரமும், சந்திரகுமாரும், இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் சொல்லும் அதே காரணத்தைத்தான். ‘திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படும், நீர்வழித்தடங்கள் தடைபடும். இயற்கைச் சூழலுக்குக் கேடு வரும். நீர்நிலைகளைப் பாதுகாத்து, இயற்கைச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது’ என்றது அரசு.

சென்னை - சேலம் திட்டத்தைச் செயல்படுத்தும் அதே தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI)தான், திருச்சி-காரைக்குடி திட்டத்தையும் செயல்படுத்தியது. ஒரே நிறுவனம் செயல்படுத்தும் ஒரே மாதிரியான இரண்டு திட்டங்களுக்கு, இரு வேறான முரண்பட்ட கருத்துகளைச் சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது தமிழக அரசு.

அப்போது அ.தி.மு.க அரசு விதித்த தடையை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தடையை விலக்கி உத்தரவிட்டது. ஆனால், மேல்முறையீடு செய்தது அ.தி.மு.க அரசு. அந்த வழக்கு இன்றுவரை நிலுவையில் இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். ‘இந்தப் பசுமைச்சாலை திட்டத்துக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஏராளமான நீர்நிலைகளும் அழிக்கப்பட உள்ளன. மரங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்படும் முன்னர், இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, இரண்டு பிரச்னைகள் தொடர்பான வழக்குகளையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வுக்கு மாற்றியுள்ளனர். இதனால், தமிழக அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். ‘‘ஜூன் 29-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிராக, சூரியபிரகாசம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதே விஷயத்தில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சூரியபிரகாசம் தொடுத்த வழக்கிலும் அதே பிரச்னைகள்தான் எழுப்பப்பட்டுள்ளன. எனவே, இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் திருச்சி- புதுக்கோட்டை -காரைக்குடி நெடுஞ்சாலைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த வழக்கும் இவற்றுடன் சேர்த்து விசாரிக்கப்படும். இங்கு நீர்நிலைகளைப் பொறுத்தவரைப் பொதுப்படையான ஒரு சட்டம் கிடையாது. திட்டத்திற்கு தகுந்தவாறு மாநில அரசு தன் கொள்கையை மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சிக்கல்” என்றார்.



பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், “சூழல் பாதுகாப்புக்காக உள்ள ஒரே சட்டம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்தான். அதன்படி, மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டே ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் தவிர்த்து மாநில அரசாங்கத்திடம் தெளிவான வேறு சட்டங்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காக முடிவுகள் அவ்வப்போது மாறுகின்றன. 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம், 2011-ம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டத்திற்காக நீக்கப்பட்டது. திட்டம் ஒன்றுதான்... கொள்கை மட்டும் மாநில அரசுக்கு வேறாக இருக்கிறது” என்றார்.

‘திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் நீர்நிலைகளைப் பாதுகாத்து, இயற்கைச்சூழலைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது’ என நீதிமன்றத்திலேயே உறுதி கூறியிருக்கிறது தமிழக அரசு. காஞ்சிபுரம் முதல் சேலம் வரையிலான மாவட்டங்களில் இந்தப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறதா, இல்லையா என்பது நீதிமன்றத்தில் விரைவில் தெரிந்துவிடும்.

- துரை.நாகராஜன், படம்: க.தனசேகரன்
`61 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் கடந்து செல்லும் ஆமை வேக ரயில்' - தவிக்கும் காரைக்குடி பயணிகள்!



பாலமுருகன். தெ


சாய் தர்மராஜ்.ச





காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை இயங்கும் ரயிலை மதுரை வரைக்கும் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை காரைக்குடி மக்களிடம் வலுத்திருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன் கூறுகையில், ``காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரைக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பட்டுக்கோட்டை மொத்தமே 61 கி.மீ தூரம் தான். இந்தத் தூரத்தை கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. இதைவிடக் கொடுமையான விசயம் என்னவெனில் ரயில் டிரைவர் அருகில் இரண்டு பேர் இருக்கிறார்கள்.



அவர்களில் ஒருவர் கேங்க்மேன், இன்னொருவர் கேட் கீப்பர். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வரைக்கும் 35 கேட் இருக்கிறது. ஒவ்வொரு கேட்டிலும் ரயிலை நிறுத்தி ஏற்கனவே ரயிலில் இருந்து வரும் கேட் கீப்பர் கேட்டை அடைப்பார். ரயில் நகர்ந்ததும் கேட் மேன் கேட்டை அடைத்து விட்டுச் செல்லுவார். இப்படியே 35 கேட்டுகளை கடந்து செல்லுவதற்கு கிட்டத்தட்ட ஏழுமணி நேரம் ஆகிறது. இத்தனை மணி நேரம் செல்லும் ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது. நோயாளிகள், முதியோர்கள், பெண்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தென்னக ரயில்வே நிர்வாகம் மோசமாக இருக்கிறது என்பதற்குச் சான்றான இதைவிட மோசமான ஒருவிசயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. இந்த ரயிலுக்குத் தேவையான டீசல் பிடிக்க வேறு இடத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது. வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மானாமதுரை வழியாக மதுரை வரைக்கும் சென்றால் மானாமதுரையில் டீசல் பிடிக்கலாம். அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கையும் கூடும். பயணிகள் பஸ்சில் மதுரை வரைக்கும் பயணம் செய்யக் குறைந்தது நூறுரூபாய் செலவு ஆகிறது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர இருப்பதால் தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த ரயில் சேவையால் நிறையவே பயன்படுவார்கள் என்கிற கோரிக்கை காரைக்குடி மக்களிடம் வலுத்திருக்கிறது என்கிறார் சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதன்.
Parties should adopt poor meritorious students: Madras HC 

DECCAN CHRONICLE.


Published Jul 4, 2018, 6:32 am IST


Observation follows report on medical aspirant suicide. 



Madras high court

Chennai: Madras high court has observed that political parties could adopt poor and meritorious students to help them in completing their courses.

Justice N. Kirubakaran, before whom petitions relating submission of nativity certificates by aspirants of medical course came up for hearing on Tuesday, observed that the political party leaders, who show sympathy on the students committing suicide, could adopt poor and meritorious students and support the students who struggle to pay the fees.

Political party members could adopt at least 10 poor and meritorious students. The party can even mention such measures in their election manifesto and the parties could become a role model to the others in the society. He made the observation when an advocate submitted that several medical course aspirants commit suicide after they failed to get admission in the course.

The judge directed the assistant solicitor general G. Karthikeyan to submit a report on students, who have applied for medical courses in other southern states.

Though it is clear that a total number of 1,250 students applied for medical seats in Tamil Nadu, it is not known whether they had applied for medical courses in other states also, the judge said.

The judge also directed Centre to conduct an enquiry and submit a report in connection with issue and submit report by July 10, 2018and posted that matter to July 6 for further hearing.

Originally, writ petitioner from R. Neeraj Kumar of Ayanavaram, a medical course aspirant, alleged that 104 candidates from other states got admission in Chennai medical colleges and over all 440 students got admission in TN colleges from other states. When the matter came up for hearing on June 22 the judge made it clear that production of Aadhaar card and its photocopy compulsory at the time of counseling to admission into medical courses.
University Grants Commission seeks sexual abuse data 

DECCAN CHRONICLE. | ANUSHA PUPPALA


Published Jul 4, 2018, 12:27 am IST


Varsities told to give details about cases reported.


HYDERABAD: The University Grants Commission (UGC) has directed universities to send an annual report on cases of sexual harassment for the period ending March 31, 2018. Universities have to furnish the number of cases of sexual harassment reported to the committee, number of cases which were disposed of, and number of cases which were left pending for more than 90 days.

Universities also need to provide details of the action taken in response to a reported case of sexual harassment. The report must contain the number of workshops on awareness and programmes against sexual harassment conducted on campus in the stated period. Universities are also required to send details of the constitution of their Internal Complaints Committee to UGC.

The annual report is to be filed in accordance with UGC (Prevention, Prohibition, and Redressal of Sexual Harassment of Women Employees and Students in Higher Educational Institutions) Regulations, 2015. The UGC had made it mandatory for colleges and universities to constitute an internal complaints committee and a Special Cell in their respective institutions to address gender based violence and conduct gender sensitisation programmes.

NEWS TODAY 26.01.2026