Saturday, July 7, 2018

HC: Docs need not provide contact details to patients

TNN | Jul 5, 2018, 12.09 AM IST


Thiruvananthapuram: A single bench of the high court on Wednesday stayed the Kerala State Consumer Disputes Redressal Commission order that doctors should provide their mobile numbers and contact details to the patients. The HC move came following a petition filed by the state branch of the Indian Medical Association (IMA). The commission had directed hospitals in the state to keep a register containing details of doctors working with them, like postal and email addresses and contact number, and share the same with their patients upon request.

IMA opposed the directive and moved the high court stating that the commission’s directive was an infringement on the privacy of the doctors.

The high court, in its order, said the doctors can share their contact details on their own and it cannot be made mandatory through an order or by law.

“The doctors are already stressed with work load and if the patients start calling them their work will become 24X7, which is humanly impossible. The specialist doctors work for 10 to 12 hours in a day. It will be difficult for them if the patients start contacting them,” said IMA state secretary Dr N Sulphi.

The IMA told the high court that only the duty doctors and hospital authorities should be allowed to contact the doctors in case of an emergency. “Hospitals are in possession of the contact details of all doctors working. Once doctors are out of the hospital after the duty hours, the duty doctors or other emergency staff can contact them at any time,” said Dr Sulphi.

The consumer disputes redressal commission had issued the order after observing the practice of private hospitals feigning ignorance about the whereabouts of doctors when complaints are registered against them by patients for alleged medical negligence. Several cases were pending before the forum since the hospitals claim to be ignorant about the whereabouts of the doctors whose service they had utilized in the past.

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு!


தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.

 இதனால்  பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
`தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா..?' - சி.பி.எஸ்.இயை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

அருண் சின்னதுரை

ஈ.ஜெ.நந்தகுமார்  vikatan 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரெங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ``நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்" எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் சி.பி.எஸ்.இ சார்பாக வழக்கறிஞர் ஆஜராகினர். அவர் பேசுகையில் ``இந்த வழக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் வழக்குத் தொடரவில்லை. பொது நலன் வழக்காக மட்டுமே வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார். நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள் பின்னர் அது சரியென்று கூறுவீர்களா. சி.பி.எஸ்.இ சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறதா. தவறான கருத்துகளை சரியாக்க முயற்சி செய்ய வேண்டாம். இராகத்துக்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்குப் பதிலாக கடைநிலை என்றும், இரத்த நாளங்கள் என்பதற்குப் பதிலாக இரத்தம் நலன் என்றும் தவறாக கேட்கப்பட்டுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியதை விடத் தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி அதிகரிக்கப்பட்டது. கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாகத் தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன். இவ்வாறு நீங்கள் தவறு செய்தது தெளிவாகத் தெரிகிறது. இதுதான் ஜனநாயகமா. இல்லை சர்வாதிகாரமா செயல்படுவதா. தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படிச் சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள். இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா? மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ செயல்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். மொழி மாற்றம் எவ்வாறு செய்தீர்கள்? எந்த டிக்ஸ்னரி பயன்படுத்தப்பட்டது என்று கேள்வி கேட்டனர். பின்னர் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு பின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
நன்னிலம், திருவெண்காடு, திருப்பாம்புரம்... போதைப் பழக்கங்களிலிருந்து மீள உதவும் கோயில்கள்!



மு.ஹரி காமராஜ்  vikatan 

போதை பழக்கத்தில் இருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைக் கூறும் கட்டுரை இது!




நாளுக்கு நாள் பெருகிவரும் போதைக் கலாசாரம் பெரும் கவலைக்கு உரிய விஷயமாகிவருகிறது. தமிழ்நாட்டில் மது அருந்துவோர், புகைபிடிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. மது மற்றும் புகையிலை உபயோகிப்போரின் சராசரி ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. 13 வயதில் புகைபிடிப்பதும், 15 வயதில் மது அருந்துவதும் இங்கு சர்வ சாதாரணமாகி வருகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், கையில் புழங்கும் தாராளமான பணமும்தான் இதற்குக் காரணம். போதைப் பழக்கத்தால் நாடும் வீடும் சீரழிந்து வரும் இந்த வேளையில், கொடுமையான இந்தப் பழக்கத்தில் இருந்து மீள ஆன்மிகமும் தனக்குரிய பங்கினை அளித்தே வருகிறது. சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியும், பெரியவர் மீதான மரியாதையும், குருவின் நல்ல வழிகாட்டலும் உள்ளவர்கள் போதையின் பாதையில் விழுவதே இல்லை. நல்லவர்கள் தொடர்பே இல்லாதவர்கள்தான் இந்தப் பாழுங்குழியில் விழுந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஆரம்பத்திலேயே உங்கள் பிள்ளைகளை நன்னெறி சொல்லிக்கொடுத்து ஆன்மிகச் சூழலில் வளர்த்து வருவதே வருமுன் காப்பதாகும். இப்படி போதைக்கு அடிமையான பலர், அதிலிருந்து மீள ஆன்மிகரீதியான வழிமுறைகள் எதுவுமிருக்கிறதா என்று அறிய திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யரைத் தொடர்புகொண்டோம்.



மனிதனை நல்வழிப்படுத்துவதுதான் ஆன்மிகம், ஆலய வழிபாடு எல்லாம். மனிதனை பக்குவப்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்த்தும் பணியையே ஆன்மிகம் செய்திருக்கிறது எனும்போது தீய பழக்கங்களை ஒழிப்பது என்பது எளிதான வேலையே. ஆண்டவனை நம்புபவர்கள் மன திடத்தோடு இருக்க வேண்டும். மனதை வென்றவர்கள் ஆண்டவனின் அருகிலேயே இருக்கிறார்கள் எனலாம். விரதம், சத்தியம் எல்லாம் நல்லவற்றைத் தொடரத்தான். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் ஒரு மண்டலம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இருப்பதில்லையா? காரணம், ஆண்டவன் விஷயத்தில் ஒழுக்கத்தை மீறினால் பெரும் குற்றம் என்ற பயம். குடும்பத்துக்கு ஏதும் தீங்கு வருமோ என்ற அச்சம்தான் விரத காலங்களில் ஒருவனை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறது என்றால் அந்த தெய்வ நம்பிக்கை நல்லதுதானே? மனதை உறுதியாக்கி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வழிப்படுத்தும் பூஜா முறைகள் எல்லாமே நன்மை தரும். பைரவர் போன்ற உக்கிரத் தெய்வங்களின் மீது சத்தியம் செய்பவர், தனது ஒழுக்கத்தை கடைபிடிப்பது வழிபட்டால் மட்டுமல்ல, உக்கிர தெய்வத்தின் மீது சத்தியம் செய்திருக்கிறோம் என்ற பயத்தினாலும்தான்.



செவ்வாய் உடலின் ரத்தத்துக்கு அதிபதி. அந்த ரத்தம் கெட்டுப்போக செவ்வாய் நீச்சமாவதும் காரணம். அதுபோல குருபகவான் நல்ல ஒழுக்கத்துக்கு காரணகர்த்தா. குருவருள் இல்லாவிட்டால் கெட்ட சேர்க்கை உண்டாகி தீய பழக்கங்கள் உருவாகும். அதைப்போலவே சந்திர பகவான் போகத்தின் கடவுள். இவர்கள் மூவரின் அருள் இருந்தால் ஒருவர் தீய பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்பது உண்மை. இதுவரை தவறு செய்தவர்கள் இறைவனருளால் விடுபட்டு நல்வாழ்வு பெற திருக்கோயில்களை சரணடைவது நல்லதே'' என்றார்.
  அமாவாசை, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாள்களில் பைரவருக்கு விளக்கிட்டு, அவருக்கான ஸ்தோத்திரங்கள் சொல்லி போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட்டவர்களை அநேக சிவாலயங்களில் பார்க்கலாம். தற்போது ஆங்காங்கே பெருகி வரும் நல்ல விஷயம் இது. தவற்றை உணர்ந்து கொள்வதே திருத்திக் கொள்வதின் முதல் படிதானே? இதைக் கடந்து அவரவர் ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை பெற்று, இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட சில கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.



திருவெண்காடு: சிவபெருமானின் 64 வடிவங்களில் சிறப்பானவர் அகோர மூர்த்தி. இவர் ஈசனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றி தீயவர்களையும் தீமைகளையும் அழித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. அகோர மூர்த்தி அருளும் திருத்தலம் திருவெண்காடு. போதைப் பழக்கத்தால் தவிக்கும் ஒவ்வொருவரும் வளர்பிறை திங்கட்கிழமையன்று திருவெண்காடு ஆலயத்துக்குச் சென்று திருக்குளத்தில் நீராடி அகோர மூர்த்தி சந்நிதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விழிப்பு உணர்வு பெற்று ஜாதக ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் பெற்று மெள்ள மெள்ள போதையிலிருந்து மீள்வார்கள் என்கிறார்கள்.



திருப்பாம்புரம்: ராகுவும் கேதுவும் ஒரே உருவாக நின்று ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி அருள்பெற்ற தலம் இது. திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பிரம்மராம்பிகை சமேத சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விசேஷமாகச் சொல்லப் படுகிறது. ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) இங்கு வந்து ஈசனை வணங்கி அர்ச்சித்து 9 முறைகள் வலம் வந்து பலரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுகிறார்கள். போதைப் பழக்கத்தில் இருந்து மட்டுமல்ல, இங்கு வந்து வணங்கினால் 264 வகையான பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று தல புராணம் சொல்கிறது.

நன்னிலம்: கும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விருத்திராசுரனை வெற்றி கொள்ள தேவர்கள் இந்தத் தலத்து ஈசனை வண்டு வடிவில் தேன் மழை பொழிந்து வழிபட்டார்கள். இதனால் ஈசன் மதுவனநாதர் எனப் பெயர் கொண்டார். இங்குள்ள மது தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.

திருக்களர்: திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் அமைந்த ஊர் திருக்களர். இங்கு வீற்றிருக்கும் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் சகல தீய பழக்கங்களில் இருந்தும் விடுபட அருள் செய்பவர். துர்வாச முனிவருக்கு பிரமதாண்டவ தரிசனம் அளித்து ஆசி வழங்கிய இந்த ஈசன் இன்பமே வடிவானவர். இவரைத் தரிசிப்பவர்கள் மற்ற போலியான மயக்க இன்பங்களைத் தவிர்த்து திருந்துவார்கள் என ஆன்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.

காணிப்பாக்கம்: விஹாரபுரி என்று அழைக்கப்பட்ட காணிப்பாக்கம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் சத்தியமே வடிவானவர். இவருக்கு முன்பாக சத்தியம் செய்துவிட்டு அதை மீறாதவர்களுக்கு அளப்பரிய நலன்களை வழங்குபவர். ஒவ்வொரு நாளும் இங்கு போதைப்பழக்கம் கொண்ட பலரும் வந்து, பிள்ளையாரை வணங்கி 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து பிள்ளையாரின் அருட்பிரசாதமான கிணற்றுத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி தீய பழக்கத்தில் இருந்து மீள்கிறார்கள். சொன்னபடி செய்யும் பக்தர்களை விநாயகப்பெருமானும் காத்து வருகிறார்.



மேலே சொன்ன ஆலயங்கள் மட்டுமின்றி ஜோதிடரீதியாக நல்ல சிந்தனையை அளித்து பலவீனங்களை ஒழிக்க குருபகவான் ஆலயங்களுக்கு சென்றும், செவ்வாய் அனுக்கிரகம் பெற திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோயில் சென்றும் தீய பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். முன்ஜன்ம கர்ம வினைகளால் போதையில் விழுகிறவர்கள், சித்தர் சமாதிகளை வணங்கி விடுபடுகிறார்கள். நீர்த்தலமான திருவானைக்கா சென்றும் வழிபடுகிறார்கள். ஆலயங்கள், வழிபாடுகள் மட்டுமின்றி தீய பழக்கங்களில் இருந்து விடுபட தியானம், யோகா, கூட்டு வழிபாடு, பஜனை போன்ற ஆன்மிக விஷயங்களும் பெரிதும் பயன்படுகிறது. தினம்தோறும் சாய்பாபா கோயிலுக்கு சென்று தியானித்து போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் அநேகம் என்று மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சொல்வதை நேரடியாகவே கேட்கலாம்.

வாழ்வைச் சீரழித்து வருங்காலத்தை நாசமாக்கும் போதைப் பழக்கத்தை இறையருளாலும், நல்லவர்களின் தொடர்பாலும் சீக்கிரமே விட்டுவிடுங்கள். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்...!
வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்!



மு.உதய சங்கர்

போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்கத் தேவையான வழிமுறைகளை யோசித்து வருகிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை நம் வாழ்க்கைக்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. இவைகள் மூலம் ஏராளமான தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் தவறான தகவல்களும் பரப்பப்படுவதும் உண்டு. தவறான வதந்திகள் பற்றி மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், 'வாட்ஸ்அப் பொதுமக்களிடையே சட்டம், ஒழுங்கு, மத நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான வழிமுறைகளை வாட்ஸ் அப் அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது. அதில், `வாட்ஸ்அப் மூலம் வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும்.

போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளைப் பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை வாட்ஸ்அப் யோசித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒரு செய்தியை யார் பார்வர்ட் செய்கிறார் என்பதை கண்காணிப்பது. யாரிடமிருந்து அந்த செய்தி வந்தது என்ற விவரங்களை இதன் மூலம் அறிய முடியும். இது மிகப் பெரிய சவால். இதற்கு அரசாங்கம், பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் குரூப் சாட்டுகளில் தேவையில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. குரூப்பை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சில உத்திகளை அமல்படுத்தி வருகிறோம். இதெல்லாம் வதந்திகள், தவறான செய்திகள் பரவுவதை ஓரளவு தடுக்க உதவும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கியுள்ளது.
வதந்தியால் குழந்தையுடன் சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்...!



சி.வெற்றிவேல்

மங்களூரில் குழந்தையுடன் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்...

மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் ஆட்டோவில் கடைக்குச் சென்றவரை, 'குழந்தையைக் கடத்திச் செல்கிறார்' என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



கர்நாடக மாநிலம் மங்களூரில் கலீத் என்பவர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது குழந்தை எதையோ கேட்டு அடம்பிடிக்க கலீத் குழந்தையைத் திட்டி, அடித்திருக்கிறார். இதனால் குழந்தை அடம்பிடித்து அழுதிருக்கிறது. அப்போது இருசக்கரத்தில் சென்றவர்கள் ஆட்டோவை மறித்து நிறுத்தியிருக்கிறார்கள். அத்தோடு இல்லாமல் கலீத்தை ஆட்டோவை விட்டுக் கீழிறக்கி என்ன ஏதுவென்று கேட்காமல் கண்மூடித்தமாகத் அடித்து உதைத்துத் தாக்கியிருக்கிறார்கள்.

கலீத், ``இது என் குழந்தை. அடிக்காதீர்கள்" என்று கூறிக் கெஞ்சியிருக்கிறார். ஆனால், அவர் கூறியதைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் தொடர்ந்து தாக்க, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று மீட்ட அவலம் அரங்கேறியிருக்கிறது.

கலீத்தைத் தாக்கிய அனைவரையும் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். குழந்தையுடன் சென்ற தந்தையையே பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதில்லை:-வருமான வரி ஆணையர் சுற்றறிக்கை!


அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதில்லை!

சென்னையில் உள்ள 50 சதவிகித அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என அரசு அலுவலகங்களுக்கு வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என்பதை வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத ஒவ்வொருவருக்கும், தாமதக் கட்டணம் வசூலிக்கும் வகையில், வருமானவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாத வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள், ஜூலை 31க்கு முன், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகை, வட்டி வருவாய் உட்பட, அனைத்து வருவாய்களையும் வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதில் ஏதேனும் விடுபட்டது தெரியவந்தால், அதற்குத் தனி அபராதம் விதிக்கப்படும்.

கால வரம்பை மீறுபவர்களுக்கு, தாமதக் கட்டணமாக, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். மேலும், அவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 26.01.2026