Friday, August 3, 2018

கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை

Added : ஆக 03, 2018 00:24



  விருத்தாசலம் : கடலுாரைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிங் பட்டதாரியை, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், திருமணம் செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் - மணிமேகலை தம்பதியின் மகள் சாருலதா, 32; பி.இ., பட்டதாரி. இவர், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் ஆங்கிலம் கற்பிக்கும் பணி புரிகிறார். அதே நாட்டைச் சேர்ந்த தாமஸ் - க்வேதா தம்பதியின் மகன் லுாகாஸ், 40; கணினி நெட்வொர்க் தொழில் நுட்ப பணியாளர். இருவரும், காதலித்தனர்.

தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த மார்ச் மாதம் செக் குடியரசு நாட்டின் பாரம்பரிய முறைப்படி லுாகாஸ், சாருலதாவை மணம் முடித்தார். சாருலதா வீட்டில்,தமிழ் பாரம்பரிய முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதையடுத்து. மணமக்கள் இந்தியா வந்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில், தமிழ் பாரம்பரிய கலாச்சாரப்படி, வேட்டி சட்டை அணிந்த லுாகாஸ், சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

Added : ஆக 02, 2018 23:53



மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

ஆடிவெள்ளியும், ஆடிப்பெருக்கும் இணையும் நன்னாள் இன்று. இந்நாளில் காவிரியன்னையுடன் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அம்மன்கள் மற்றும் மகா லட்சுமியை வழிபட்டால் மங்கள வாழ்வு உண்டாகும்.

* 'பெருக்கு' என்றால் 'பெருகுதல்' மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு துாய்மை பெறும். மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

*தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல்களால் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். அதோடு தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

*லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மாவட்ட செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ரோகிணி அறிவிப்பு




சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:04 AM

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
 
சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்

சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்
 
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை(சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 1 முதல் 5 மற்றும் 7-வது பிளாக், டி.எச்.சாலை, கிருஷ்ணன் தெரு, சந்திரன் தெரு, ஆசிரியர் காலனி, காந்தி நகர், வடிவுடையம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, காவேரி சாலை.

புழல்: ஸ்ரீபத்மாவதி நகர் 1 முதல் 120-வது தெரு, லட்சுமி காந்தம்மாள் நகர், ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், ஆர்.சி.அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வெங்கடேசுவரா நகர், திருமால் நகர் 1 முதல் 24-வது தெரு, கிரேஸ் நகர், விஜயலட்சுமி நகர், வேல் முருகன் நகர், காமராஜ் நகர்.

புழல் குடிநீர் தேக்க நிலையம்: சென்னை குடிநீர் தேக்க நிலையம், புழல் சிறைச்சாலை 1 மற்றும் 2, புழல் பெண்கள் சிறைச்சாலை.

பெசன்ட் நகர்: 1-வது மெயின் ரோடு, பீச்.ஓம்.அவென்யூ, தமோதரபுரம்.

அடையாறு: ஜீவரத்தினம் நகர், பத்மநாபன் நகர், பரமேசுவரி நகர், பெசன்ட் அவென்யூ.

பெருங்களத்தூர்: பழையபெருங் களத்தூர், பார்வதி நகர், முடிச்சூர், ராயப்பா நகர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், வரதராஜபுரம், ரங்கா நகர்.

கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை ஏ, பி, சி, டி பிளாக், அம்பாள் நகர், பிள்ளையார் 3, 5, 6-வது தெரு, பூமகள் தெரு, அண்ணாசாலை பகுதி, ஜே.என்.சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி.

பரங்கிமலை: மெகஸின் சாலை, பட்ரோடு, பட்லேன், மிலிட்ரி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, ராமர் கோவில் தெரு, செயிண்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பர்மா மற்றும் ஸ்ரீபுரம் காலனி, போலீஸ் அதிகாரி சாலை, அச்சுதன் நகர்.

தரமணி: தெற்கு லாக், மேற்கு கேனல் சாலை, அங்காளம்மன் கோவில் தெரு, ஏரிகரை தெரு, குருவப்பா தெரு, பூண்டி தெரு, வரதராஜபுரம், நாயுடு தெரு, துலுகாத்தம்மன் கோவில் தெரு, கருணாநிதி தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

வேளச்சேரி: புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி.செல்வ நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியம் காலனி.

திருமுடிவாக்கம்: நத்தம் காலனி, சம்பந்தம் நகர், பத்மாவதி நகர், மாணிக்கம் நகர், தேவகி நகர், தேவி நகர், வழுதலம்பேடு.

ராயபுரம்: எம்.சி.சாலை, என்.என்.கார்டன், எம்.எஸ். கோவில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி. கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, சிங்கார கார்டன், சோமசெட்டி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, டேங் தெரு, டோபி கான தெரு, பிச்சான்டி தெரு, பணைமரத்தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, மாநகராட்சி மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயணன் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம், என்.ஆர்.டி.சாலை, வெங்கடேசன் தெரு 1 முதல் 4-வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8-வது தெரு வரை, பி.சி.பிரஸ் தெரு.

செம்பியம்: சிம்சன் கம்பெனி, டப்பே 2 பாயின்ட், அடிசானால் பெயின்ட், எல்.எம். வேன் மெப்ப, டப்பே ஆர்-டி, பைய்மெட்டால் பேரிங்.

பனையூர்: கடற்கரை நகர் 1 முதல் 6-வது அவென்யூ, குடிமியான்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர்.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை




தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். #AnnaUniversity

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:45 AM

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்ச பணம் பெற்று மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரி உமா சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் நடந்த சோதனையில், பணம், நகை போன்ற எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி பேராசிரியர் (கணக்கு) சிவக்குமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் திண்டிவனம் சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது. சோதனையின் போது 2 வீட்டு கதவுகளும் பூட்டப்பட்டு, அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் ரகசியமாக நடந்தது.

சோதனையின்போது அவர்களிடம், திண்டிவனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து மறுமதிப்பீட்டுக்கு எத்தனை மாணவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாலையில் சோதனையை முடித்த போலீசார் விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

10 பேராசிரியர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

10 பேர் வீடுகளிலும் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா வீட்டில் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலும் சிக்கி உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு தொடர்பாக நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலில் எழுதிய தேர்வில் ஒரு மாணவன் 7 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளான். அந்த மாணவனுக்கு மறுமதிப்பீட்டின் போது 70 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. 10 மடங்கு அதிகமாக மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு தான் இது. இதுபோல் நிறைய மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண்கள் போட்டிருக்கிறார் கள். அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

தேர்வுத்தாள் திருத்துவதில் முறைகேடா?




மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது.

ஆகஸ்ட் 03 2018, 03:00

மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது. நீதி தேவதைபோல கையில் துலாக்கோலை வைத்துக்கொண்டு, விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட வேண்டிய கடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி படிப்பில் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், 13 உறுப்புக் கல்லூரிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவையில் மண்டல மையங்களும் இருக்கின்றன. இதுதவிர, 593 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில், பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு எழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் என்று ஏற்கனவே புகார் வந்தது. இப்போது, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மறுமதிப்பீட்டில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில், 73 ஆயிரத்து 733 மாணவர்கள் பாஸ் மார்க் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றதாக அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஆக, 90 ஆயிரத்து 369 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில், பெரிய முறைகேடு லஞ்சஒழிப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாணவர், தான் தேர்வில் பெற்ற மதிப்பெண் திருப்தியில்லாமல் மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.300 பணம் கட்டி முதலில், குறிப்பிட்ட விடைத்தாளின் போட்டோ காப்பியை பெறவேண்டும். அதில், மதிப்பெண் குறைவாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால், மீண்டும் ரூ.400 கட்டி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மறுமதிப்பீடு செய்வதற்காக, அமைக்கப்பட்ட மையத்தில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. லஞ்சஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முன்பு பணியாற்றிய பேராசிரியை ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் மத்தியிலும், இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெரிய மவுசு உண்டு. கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை விட, பணம் கொடுத்து சரியாக படிக்காத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக விடைத்தாள் திருத்தும் முறை, மறுமதிப்பீட்டு முறையில் ஒரு கண்டிப்பான நடைமுறையை கொண்டுவர வேண்டும். மறுமதிப்பீட்டில் சிறிதும் தவறு ஏற்படக்கூடாது. மறுமதிப்பீட்டில் பெரிய மாற்றம் இருந்தால், ஏற்கனவே விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இங்குவந்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்த தயங்கிவிடுவார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

Thursday, August 2, 2018

மருத்துவம்: கூடுதல் இடம் இல்லை

சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு  02.08.2018

புதுடில்லி : தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



தமிழகத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள், தாங்களும்

மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கி, இதற்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய உத்தரவுகளை, நீதிபதிகள் பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அதை, நாங்கள் மீண்டும் செய்யப் போவதில்லை.

மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, நீதிபதிகள் கூற முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த எண்ணிக்கையை விட அதிகமாக, ஒரு இடத்தைக் கூட புதிதாக உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதித்தாலும், நாங்கள் அதை செய்ய முடியாது. இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமா என்பதை மட்டுமே, நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...