Sunday, August 12, 2018

ஜெ., நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ்
முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி 

 

dinamalar 12.08.2018

மெரினாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது, ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் தொடர்ந்த வழக்குகளை, வாபஸ் பெற வைத்தது போன்ற நடவடிக்கைகளால், முதல்வர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினரிடம் ஆதரவு கிடைத்துள்ளது.




காமராஜர் நினைவிடம் :

தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆக., 7ம் தேதி மாலை இறந்தார். 'அவரது உடலை, சென்னை, மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மெரினா கடற் கரையை ஒதுக்க முடியாது. அதற்கு பதிலாக, கிண்டியில், காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்குவதாக, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்து, மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி, நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். மெரினாவில், ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே, தி.மு.க., - பா.ம.க., வழக்கறிஞர்கள் தொடுத்திருந்த வழக்குகளை, திடீரென அவர்கள் வாபஸ் பெற்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி உத்தரவிட்டது. கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் கொடுக்க, அரசு மறுத்த தகவல் வெளியானதும், தி.மு.க.,வினர், முதல்வர் பழனிசாமியை வசைபாடினர். அ.தி.மு.க.,விலும்
பெரும்பாலானோர், 'அவர்கள் கேட்ட இடத்தை கொடுத்திருக்கலாம். தேவையில்லாமல் இடத்தை மறுத்து, கெட்டப் பெயர் வாங்க வேண்டியதில்லை' என, கருத்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை :

'துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும், முதல்வரிடம் இடத்தை வழங்கி விடலாம்' என, தெரிவித்துள்ளனர்.ஆனால், முதல்வர் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அவர் ஏன், அத்தகைய முடிவெடுத்தார் என்பதை, வழக்கு விசாரணைதெளிவுபடுத்தியது. மெரினா கடற்கரையில், ஜெ.,க்கு நினைவிடம் கட்டினால், சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி, வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றதன் வாயிலாக, அவர்களுடைய நோக்கம், சுற்றுச்சூழல் அல்ல; ஜெ., தான் என்பது தெளிவானது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட, முட்டுக்கட்டையாக இருந்த வழக்குகள், வாபஸ் பெறப்பட்டதால், நினைவிடத்திற்கான தடைகள் நீங்கின. நெடுஞ்செழியன், ஜானகி போன்றோர் மறைந்தபோது, அவர்கள் உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி, அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். இதற்கான ஆதாரங்கள், அரசு தரப்பில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.காமராஜருக்கு, கடற்கரையில் இடம் தர, கருணாநிதி மறுத்தாரா என்பதும், விவாதப் பொருளாகி உள்ளது. அப்போது, காங்கிரசில் முக்கிய தலைவர்களாக இருந்த, சிலர் மறுத்துள்ளனர்; வேறு சிலரோ உண்மை என, தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் தர மறுத்த, முதல்வர் பழனிசாமி மீது கோபப்பட்ட அ.தி.மு.க.,வினர், தற்போது, அவரை பாராட்ட துவங்கி உள்ளனர். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெ., வழியில் :

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கருணாநிதி எதிர்ப்பே, அ.தி.மு.க., துவங்க காரணம். கட்சியை துவக்கிய, எம்.ஜி.ஆர்., அவருக்கு பின், கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர், கருணாநிதியை எதிர்த்தே, அரசியல் செய்தனர்.கருணாநிதி குடும்பத்தினர் கேட்டதும், மெரினாவில் இடம் ஒதுக்கி


இருந்தால், முதல்வர் பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் என, சிலர் கூறுகின்றனர். நல்ல பெயர், தி.மு.க.,வினரிடம் கிடைத்திருக்கும். அதனால், அ.தி.மு.க.,விற்கு என்ன பயன்?கருணாநிதி உத்தரவை எடுத்துக்காட்டி, இடம் தர மறுத்ததால், தற்போது, ஜெ., வழியில் முதல்வர் செயல்படுகிறார் என்ற உணர்வு, கட்சிக்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும், ஜெ.,வை, நீதிமன்ற படியேற வைத்தவர்களை, இறுதி அஞ்சலிக்காக, நீதிமன்றம் செல்ல வைத்துவிட்டார். கடற்கரையில் நினைவிடம் கட்ட, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டதும், அவர்கள். வாபஸ் பெற்றதும் அவர்களே. தற்போது, ஸ்டாலினுக்கு வெற்றி என்கின்றனர். இது, எப்படி நியாயமாகும்; எட்டு மணி நேரம், தி.மு.க.,வினரை அலைய வைத்து, முதல்வர் பழனி சாமி வெற்றி பெற்றுள்ளார்.

ஜெ., படத்தை, சட்டசபையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்றனர். எங்கள் தலை வியை இழிவுப்படுத்த, எல்லா வகையிலும் முயற்சித்தனர். நாங்கள், அந்த அளவுக்கு கீழிறங்கவில்லை. அவர்கள் போட்ட வழக்குகளையும், உத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டே, இடம் மறுக்கப்பட்டது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் தொடர்ந்த வழக்குகளை, அவர்களாகவே வாபஸ் பெற வைத்து, அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை, பழனிசாமி தேடி தந்துள்ளார். உண்மையில் இது, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
காஞ்சிரபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

Added : ஆக 12, 2018 08:25

காஞ்சிபுரம் : ஆடிப்பூரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவால் நிகழும் குழந்தை மரணங்களில் முதல் குற்றவாளிகள் பெற்றோர்களே!

By RKV | Published on : 11th August 2018 04:06 PM |



இன்று நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி...

"குழந்தைகள் நலனுக்காக தனித் துறையை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது."

இப்படிப்பட்ட கேள்விகள் எழக்காரணம், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கவனக்குறைவு மரணங்கள் மற்றும் விபத்துகளே!

இதோ பண்ருட்டியில் இருந்து வந்த செய்தி ஒன்று மீண்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

அண்டா நீரில் மூழ்கிய குழந்தை சாவு...

பண்ருட்டி அருகே அண்டா நீரில் மூழ்கிய ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன் (32). புதுவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (26). இவர்களது குழந்தைகள் மிதுன் (2), லக்ஷன் (7 மாதம்). வியாழக்கிழமை மதியம் வீட்டிலிருந்த அண்டா நீரில் மூழ்கிய நிலையில் லக்ஷன் உயிரிழந்துள்ளார்.
இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை உயிரிழந்த வேதனையில் வீட்டிலிருந்து வெளியேறிய தாய் ஜெயசித்ராவை காணவில்லையாம். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையிலும் இதே போன்று உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம்...

ஹஜ் பயணத்திற்கு தாத்தாவை வழியனுப்ப வந்த 2 வயதுக் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்...

ஹூப்ளியில் வசித்து வரும் மோசிம் என்பவர் தனது தந்தை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருந்ததால் அவரை வழியனுப்புவதற்காக குடும்பத்துடன் இரு நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்போது தந்தைக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்க அவரை அழைத்துக் கொண்டு தன் 2 வயதுமகன் அப்துல்லாவுடன் ஹஜ் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். சுமார் 100 அறைகளைக் கொண்ட அந்த ஹஜ் கமிட்டி அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் மோசிமின் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முற்பகல் 11 மணியளவில் தாத்தா பாட்ஷா பயணத்திற்காக விமானநிலையம் சென்றடைந்ததும் தங்களது அறைக்குத் திரும்பிய மோசிம் குடும்பத்தார் அறையை காலி செய்து கொண்டு ஊர் திரும்பத் தயாராக பெட்டிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து கீழிறங்கும் முனைப்பில் இருந்திருக்கின்றனர். அப்போது மூன்றாவது மாடி பால்கனியில் ஒரு பெரிய ஷூட்கேஸின் மீது அமர்ந்து வெளியே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை அப்துல்லா தவறிப்போய் அங்கிருந்து கீழே விழுந்திருக்கிறான்.

குழந்தை கீழே விழுவதைக் கண்டதும் பீதியில் உறைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாகக் குழந்தையை அருகிலிருக்கும் எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார்கள். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அப்துல்லா சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிகிறது.

இந்த மரணம் நிகழ்ந்திருப்பதும் கவனக்குறைவினால் தான். 2 வயதுக் குழந்தைய உயரமான ஷூட்கேஸில் அமர வைத்தது யார் குற்றம்?

பெற்றோர்களின் கவனக்குறைவே பிள்ளைகளின் உயிர் குடிக்கும் எமனாகி விடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட!

இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நிகந்ததுண்டு.


மூன்றாம் மாடி ஜன்னலருகே படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மரணம்...

கடந்தாண்டும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மூன்றாம் மாடியில் படுக்கையறை ஜன்னல் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயதுக் குழந்தை ஒன்று அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பரிதாபகரமானது.

இவையெல்லாவற்றையும் விட அதிகக் கண்டனத்துக்குரியது சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 11 வயதுச் சிறுமிக்கு 7 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தப் பட்டு வந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம். அதில் பிடிபட்டு அடையாளம் ஊர்ஜிதப்படுத்தப் பட்ட குற்றவாளிகள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனை இன்னனும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்கதையாவதைக் கண்டு தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளனர். தங்களது கேள்விக்கான காரணங்களாக உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் காரணங்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவையே. அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பின்மை குறைய வேண்டுமெனில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் மீதான கவனத்தையும், பொறுப்புணர்வையும் அதிகரித்தே ஆக வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. எத்தனை கவனமுடன் இருந்த போதும் சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய விஷயங்களைப்பற்றி அறிந்து கொள்ளும்படியாகவும், உடல் மற்றும் மனவேதனை கொள்ளும்படியானதுமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதைத் தடுக்க வேண்டியது முதலில் பெற்றோர்களின் கடமையல்லவா?

அதனால் தான் நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு, வெளி நபர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார்?
தன் மகளைக் கூட அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாதா? என்று கேள்வி எழுப்பியதோடு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறைவின் காரணமாக பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த முறையில் சில நன்மைகளும், சில பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என கருத்து தெரிவித்தார்.

மேலும், ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் அதிகமாக உருவாகியுள்ளது. விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர், குழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ அல்லது தந்தை இல்லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.
குழந்தைகள் நலன் கருதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை, பெண்கள் நலத் துறை' என்றும் குழந்தைகள் நலத் துறை' என்றும் மத்திய அரசு இரண்டாகப் பிரித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்பு? 


By DIN | Published on : 11th August 2018 07:16 PM |



கோப்புப்படம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கும் விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் பஞ்சாப் அரசு இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க இருக்கும் பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அரசின் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சித்துவுக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்துள்ளார். சித்து அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

இதனால், இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தர்: ஷீலா ஸ்டீபன் நியமனம்


By DIN | Published on : 11th August 2018 08:56 PM |




தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபனை நியமித்து தமிழக ஆளுநரும், பல்கலைகழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை பணிநியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

இதன்மூலம் ஷீலா ஸ்டீபன் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை பெற்றார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பணியாற்றவுள்ளார்.

ஷீலா ஸ்டீபன் 70-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து ராஜ்நாத் சிங் விசாரிப்பு

By ANI | Published on : 11th August 2018 10:02 PM |




புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(94) உடல்நலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று கேட்டறிந்தனர்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூட்டுவலி பிரச்னையினால் அவதிப்பட்டு வந்தநிலையில், கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயது மூப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதை அடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த சிறுநீர் வெளியீடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

வாஜ்பாய் உடல் நலம் குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவர்களின் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வயதுமூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பணி பதிவேடு தராமல் 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பு அரசு மருத்துவக்கல்லூரி நர்ஸ் தற்கொலை முயற்சி : மனிதாபிமானமற்ற அதிகாரிகளே காரணம் என கடிதம்


2018-08-12@ 02:45:05

திருவண்ணாமலை: பணி பதிவேடு தராமல் அதிகாரிகள் 2 ஆண்டுகளாக அலைக்கழித்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ் தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவரது மனைவி மீரா (38). இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், அரசு பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் மீராவுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இவருக்கு பிறகு பணியில் சேர்ந்த நர்ஸ்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மீரா, தனது பணி பதிவேட்டில் தான் பணியாற்றிய விபரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய திருவண்ணாமலை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார்.

ஆனால், அதிகாரிகள் சரிவர பதில் தெரிவிக்காமல் மீராவை அலைக்கழித்ததுடன், உங்களது பணி பதிவேட்டை சென்னை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அங்கு சென்று விசாரித்ததில் பணி பதிவேடு எங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்களாம். கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கும், சென்னைக்கும் மீரா அலைக்கழிக்கப்பட்டார். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று முன்தினம், உடன் பணிபுரியும் நர்சுக்கு போன்செய்து, தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மீராவின் கணவர் செல்வராஜூக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது மீரா மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீரா மயங்கி கிடந்த அறையில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் இயக்குனருக்கு எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், 2 ஆண்டுகளாக பணி பதிவேடு தேடி அங்கும்இங்கும் நடந்து கொண்டிருக்கிறேன். எனது பணி பதிவேடு உள்ளதா, இல்லையா? என்பது தெரியவில்லை. என்னை யாரும் மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை. அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனு கொடுத்தும் பலனில்லை. எனது தற்கொலையிலாவது நர்ஸ் சமூகத்திற்கு விடிவு பிறக்கட்டும். எனது மரணத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகளே காரணம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தண்டாரம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWS TODAY 28.06.2026