Sunday, August 12, 2018

இனி, முழுநேரம் விவசாயம் தான் ! பணி ஓய்வு போலீஸ் அதிகாரி அசத்தல்

ந.பா.சேதுராமன்

தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.



முழுநேர விவசாயமே, இனி என் வாழ்க்கை என்கிறார், இன்று பணி ஓய்வு பெறும் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன். 1987-ம் ஆண்டு 'பேட்ச்' நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறைக்கு வந்தவர், என்.பி.ராஜேந்திரன். 35 ஆண்டு காலம் காவல் பணியாற்றி, பதவி உயர்வில் டி.எஸ்.பி வரை வந்த ராஜேந்திரன் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்ட டி.எஸ்.பியாகி பணி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றவருக்கு இன்று (12.8.2018) மதுராந்தம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் பிரிவுஉபசார விழா நடக்கிறது. விழாவை உள்ளூர் கிராம மக்களே முன்வந்து நடத்துகின்றனர்.

2002- மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பணியாற்றினார். குறிப்பிட்ட அந்த இரண்டாண்டுகளில் மட்டுமே கைது நடவடிக்கையாக 2015 பேரை ராஜேந்திரன் சிறையில் அடைத்திருக்கிறார், 120 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார். பல முன்னணி நடிகைகள், துணை நடிகைகள் நாள்தோறும் கைது நடவடிக்கையில் சிக்கியதும் அந்த காலகட்டத்தில்தான். விபசார உலகின் தரகர்களாக அறியப்பட்ட பூங்கா வெங்கடேசன், ஐதராபாத் பிரசாத், டெய்லர் ரவி, ராயப்பேட்டை சுரேஷ், விக்கி, மும்பை நாகேஸ்வரராவ் போன்ற பலர், சிறைக்குப் போன பட்டியலில் இடம் பெற்றனர். ராஜேந்திரனால், 'தொழில்' பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கருதிய விபசாரக் கும்பல், ராஜேந்திரனைக் கொலை செய்து விட்டு அதை விபத்து போல சித்தரிக்கத் திட்டம் போட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த காவல் பணிக்கான பதக்கம், தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மெச்சத்தகு முதல் விருது என ராஜேந்திரன் விருதுகளால் கௌரவிக்கப் பட்டார். சென்னை நகரே 2015-ல் வெள்ளத்தில் மூழ்கியபோது கோட்டூர்புரம் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது தத்தளித்த ஏராளமான பொதுமக்களை நீரில் சென்று காப்பாற்றிய வகையில், போலீஸ் உயரதிகாரிகளின் பாராட்டும் ராஜேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. பணி ஓய்வு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், "காவல் பணியில், உயரதிகாரிகளிடம் எந்தத் தண்டனையும் பெறாமல், பொது மக்களின் குற்றச் சாட்டுக்கும் ஆளாகாமல் என்னுடைய 35 ஆண்டுகால சர்வீஸை முடித்ததே பெரிய சாதனை என்றுதான் நினைக்கிறேன். போலீஸை நம்பித்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. குடும்பச் சண்டைகள் தொடர்பான 90 சதவிகிதம் பிரச்னைகளுக்கு அதிலேயே தீர்வு கிடைத்து விடும். ரோந்துப் பணியில் தீவிர கவனம் செலுத்தினால் சமூக விரோதிகளின் நடமாட்டமே இல்லாமல் போய்விடும். இந்த யூனிபார்ம் முழு மனநிறைவோடு விடைபெறுகிறது. அதே மனநிறைவை நான் மீண்டும் பெற, இடுப்பில் துண்டோடு கழனியில் இறங்கி விவசாயம் பார்க்கப் போகிறேன், இனி அதுதான் என் உலகம்" என்கிறார் ராஜேந்திரன்.
``பால் ஊற்றியது மத சடங்கில்லை... தமிழ் மரபு!” கருணாநிதி சமாதிக்குப் பால் ஊற்றியது குறித்து மதன் கார்க்கி ..vikatan 12.08.2018

சனா

மறைந்த முதல்வர் கருணாநிதி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.



``என் சின்ன வயசுல இருந்தே கலைஞர் ஐயாவை தெரியும். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களில் அவர் என் கூட இருந்திருக்கிறார். அவரை நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது'' எதிர்முனையில் அவர் அழுகிறார் என்பது புரிந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

''அப்பாவுக்கும் கலைஞர் ஐயாவுக்குமான உறவு அரசியல் சார்ந்ததுனு நிறையபேர் நினைச்சிட்டு இருக்காங்க. அது தவறு. ரெண்டு பேருக்கும் இடையிலே இருக்கிறது இலக்கியம் சார்ந்த உறவு. காலையில் எழுந்ததும் அப்பா 'முரசொலி'யைப் படிச்சுட்டு, அதில் இருக்கக்கூடிய கவிதைகள், கட்டுரைகள் பற்றி கலைஞர் ஐயாவுக்குப் போன் பண்ணி பேசுவார். அந்த உரையாடல் நீண்ட நேரம் தொடரும்.




கலைஞர் ஐயாவும் அப்பாவுடைய நூல்களைப் படிச்சிட்டு அவருடைய கருத்துகளை சொல்லுவார். பலநாள் அப்பாவோட சிரிப்பொலி கேட்டு அதிகாலை நேரங்களில் எழுந்திருக்கேன். கலைஞர் ஐயாவும் அப்பாவும் சிரிச்சிட்டே பேசுற அதிரொலி வீடு முழுக்க எதிரொலிக்கும். ஆமாம், அந்த அதிகாலை நேரத்திலேயே எங்கள் வீடு முழுக்க கலைஞர் வாசம்தான் வீசும்.

அப்பா எந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் ஐயாவிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனா, முதல்முறையா எனக்காக ஓர் உதவி கேட்டார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புல எனக்கு ஆர்வம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்கிட்ட குறைவான மதிப்பெண்தான் இருந்தது. அதனால எனக்கு சீட் கிடைப்பது கஷ்டமான காரியமா இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அப்பா, கலைஞர் ஐயாகிட்ட உதவி கேட்டார். உடனே, 'தமிழ் அறிஞர்' கோட்டா மூலமா சி.எம் செல்லுல இருந்து பேசி எனக்கு சீட் கிடைத்தது.

சிலர் மட்டும்தான் அந்தக் கோட்டா வழியே படிக்க வருவாங்க. அதில் நானும் ஒருவன். அதற்கு முழு காரணம் கலைஞர் ஐயாதான். அதுக்காக அவருக்கு நான் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஏன்னா, எனக்கான கல்வி ஆரம்பிச்சதே அண்ணா பல்கலைக்கழகத்துலதான். ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் படிப்பு மேலே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனா, அண்ணா பல்கலைக்கழத்துல இருந்த பேராசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துலதான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையே அங்கிருந்துதான் தொடங்கிச்சு.



கலைஞர் ஐயா டைடல் பார்க் திறந்துபோது, நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சொசைட்டி செகரட்டரி. அந்தச் சொசைட்டியில் இருந்த மாணவர்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து கலைஞர் ஐயாவுக்கு நன்றி சொல்றதுக்காக அவரை நேரில் சந்தித்து கவிதை ஒண்ணு படிச்சு காட்டினோம். உங்களுடைய இந்தத் திட்டம் எதிர்காலத்தையே மாற்றப்போகுதுங்கிற நோக்கில் எழுதிய கவிதை அது.

''இந்த மாதிரி பூங்கா கட்டிய உங்களுடைய கைகளுக்கு, எங்களால் பூக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால், எதிர்காலத்தில் நாங்கள் எங்கே இருந்தாலும் எங்களுடைய அறிவும் ஆற்றலும் இந்த மண்ணுக்குதான் பயன்படும். நாங்கள் இங்கே வந்துதான் உழைப்போம்''னு அவர் முன்னால் உறுதி எடுத்துக்கிட்டோம். இப்ப என் நண்பர்கள் பலரும் அவர் கட்டித்தந்த டைடல் பார்க்கில்தான் வேலை பார்த்துட்டு இருக்காங்க. பலருக்கும் அவர் வாழ்க்கை கொடுத்திருக்கார்.

என் மனைவி நந்தினியை அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் சந்திச்சேன். எங்களுக்கிடையேயான காதல் அங்குதான் தொடங்குச்சு. எங்கக் காதலை வீட்டில் சொன்னப்ப அப்பா தயங்கினார். யோசிச்சார். அந்தச் சமயத்துல அப்பாவின் நண்பர்கள் யார்கிட்டயாவது இந்த விஷயத்தைச் சொல்லலாம்னு தோணுச்சு. அப்பாவுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. அதனால கலைஞர் ஐயாகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேசச் சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். தயாளு அம்மா மூலமா கலைஞர் ஐயாவை பார்த்து என் காதல் பற்றிச் சொன்னேன்.

கவிபேரசரின் மகனார் அவர்களே! , தமிழ்ப் பேறிஞர் அவர்களே! "பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விஷயம்தான். இதுபற்றி தொல்காப்பியத்திலும் இருக்கு." எந்த இடத்தில் இருக்கு என்று இடஞ் சுட்டிப் பொருள் வி...
View Comments Post comment

''நீ, கவலைப்படாத தம்பி. கோபாலபுரத்தில் நிறைய பேர் காதல் திருமணம் புரிந்தவர்கள்தான். அப்பாகிட்ட நான் பேசுறேன்''னு சொன்னார். சொன்ன மாதிரியே அப்பாகிட்ட வந்து பேசுனார். அவர் வீட்டுக்குள்ள போய் அப்பாகிட்ட பேசிட்டு திரும்பிவரும்போது வீட்டு வாசலில் நானும் நந்தினியும் நின்னுட்டு இருந்தோம். எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு, 'நான், சொன்ன மாதிரியே சம்மதம் வாங்கிக் கொடுத்துட்டேன். என்னோட தலைமையிலதான் உங்க கல்யாணம் நடக்கும்''னு சொல்லிட்டுப்போனார்.

அவர் சொன்ன மாதிரியே அவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். என் பையன் பிறந்தவுடனேயே அவரிடம் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன். நேரடியா, கலைஞர் ஐயா எங்க வாழ்க்கையில் நடத்திய விஷயங்கள் இதெல்லாம். இதுதவிர, அவருடைய திரைப்பட வசனங்கள் மூலமா, அரசியல் திட்டங்கள் மூலமா நிறைய கற்றிருக்கேன். 'பாகுபலி' படத்துக்கு வசனம் எழுதும் போது அவருடைய திரைப்படங்கள் பார்த்து வசனங்கள் பற்றி தெரிஞ்சிகிட்டேன்.



கலைஞர் ஐயாவுடைய உடல்நிலை சரியில்லனு கேள்விப்பட்டவுடனே அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். அவருடைய இறப்புக்கு இரண்டு நாளுக்கு முன்னால் அப்பா உடைந்துபோய் உட்கார்ந்திருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பு அப்பாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அப்பாவுடைய வாழ்க்கையில் கலைஞர் எவ்வளவு முக்கியமான மனிதர் என்கிற விஷயம் எனக்கு நல்லா தெரியும். ரொம்ப நாளாவே கலைஞர் ஐயாவுடைய குரல் கேட்க முடியலைனு அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். இந்தளவுக்கு அப்பா எமோஷனல் ஆகி நான் பார்த்ததே இல்லை. அப்பாவை தேற்றவே முடியலை. ஐயாவின் இறுதிசடங்கு வரைக்கும் உடன் இருந்தார்.

குடும்பத்தில் இருந்த எல்லாரிடமும் கலைஞர் பற்றிய நிறைய விஷயங்களை சொல்லிட்டு இருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பிலிருந்து அப்பா இன்னும் மீளவே இல்லை. எங்க அப்பா உட்பட எங்க குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரையும் கலைஞர் ஐயா, தம்பினுதான் அழைப்பார். இனி அந்தக் குரலை எப்போது கேட்கப்போறோம். கலைஞர் ஐயாவுடைய சமாதியில் அப்பாவோட சென்று பூக்கள் போட்டு, பால் ஊற்றிட்டு வந்தோம்.

‘பால் ஊற்றினது கலைஞர் பின்பற்றும் பகுத்தறிவுக்கு எதிரானது. இந்துமுறை சடங்கு. அதை அப்பா பண்ணினது ஏன்’னு சிலர் கேட்கறாங்க. ஆனா, அது உண்மையில்ல. 'நீத்தார்க்கு பால் வார்த்தல்'னு நம்ம தமிழ் மரபில் இருக்கு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு கிடையாது. மலர்களை வைத்து எப்படி அஞ்சலி செலுத்துறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விஷயம்தான். இதுபற்றி தொல்காப்பியத்திலும் இருக்கு. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் கடவுள் வழிபாடு, இந்துமுறை சடங்குகள் எதுவும் செய்யவில்லை. பால் தெளித்தோம். அது, நம்ம மனசை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மரபு. அப்பாவுடைய கிராமத்தில் அதை இன்னும் கடைப்பிடிக்கிறாங்க.



எனக்கும் அப்பாவுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் மனைவியும் சாமி கும்பிட மாட்டாங்க. அதை யார்மீதும் நாங்க திணித்ததும் இல்லை. என் அம்மாவுக்கும் தம்பிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அம்மா என்னை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னால் அவங்களைக் கூட்டிட்டுப் போவேன். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதற்காக நாங்க கடவுள் எதிர்ப்பாளர்கள் கிடையாது.”
''நாங்க ஒட்டுற பேப்பரை தெய்வமா கும்பிடுறதைப் பாக்கறப்போ...!’’ - 2019 காலண்டர் தயாரிக்கும் சிவகாசி பெண்கள்

அருண் சின்னதுரை


ஆர்.எம்.முத்துராஜ்

சிவகாசியில் பட்டாசுக்கு அடுத்து, காலண்டரும் டைரியும்தான் நிறைய பேரின் வீட்டுல பசி தீர்க்கும் வேலையைக் கொடுக்குது.




''கைபேசியிலே பல ஆண்டுகளுக்கான தேதிகளைப் பார்க்கும் டிஜிட்டல் உலகத்திலும், காலண்டர் மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை'' என்கின்றனர் காலண்டர் விற்பனையாளர்கள். ஆண்டுதோறும் காலண்டர் உற்சாகமாக விற்பனை செய்கின்றனர்.



தினமும் காபி , டீ குடிக்கும் முன்பு, காலண்டரின் முந்திய நாள் தாளைக் கிழித்துவிட்டு, ராசி பலன், நல்ல நேரம், தினம் ஒரு தத்துவம் எனப் படிக்கும் பழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்னதான் கணிப்பொறி, எலக்ட்ரானிக் காலண்டர்கள் என வந்தாலும், பிள்ளையார், முருகன், இயேசு என தங்கள் இஷ்ட தெய்வங்களை படங்களாககொண்ட காலண்டரை, வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் சுவரில் மாட்டி அழகுப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. அதுதான் அந்த இடத்துக்கு நிறைவைக் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று காலண்டர் தயாரிப்பு தொடங்கிவிடும் சிவகாசியில் இதன் தயாரிப்பு ஜோராக இருக்கும். வரும் 2019-ம் ஆண்டுக்கான காலண்டர்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பெண்களை நேரில் சந்திக்க, சிவகாசியில் இருக்கும் கேலண்டர் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்றோம்.

 

தினசரி காலண்டருக்கான பிரதிகளை அடுக்கிக்கொண்டிருந்த பிரேமா, ‘'7 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். மிஷினில் அடித்துத்தரும் பிரதிகளைத் தேதி மாறாமல் வேகமாவும் கவனமாகவும் அடுக்கணும். கொஞ்சம் கவனம் மாறினாலும், பார்த்த வேலையெல்லாம் வேஸ்ட் ஆகிரும். காலண்டரோட ஒரு தாள் மாறினாலும் மொத்த வேலையையும் திருப்பி பாக்கணும். நாம அடுக்கின பின்னாடி ஒருத்தர் சரிபார்ப்பாங்க. நான் ஒருமுறைகூட தப்பா அடுக்கினதில்லே. ஜூன் முதல் ஜனவரி வரைக்கும்தான் காலண்டர் வேலை இருக்கும். மற்ற மாதங்கள் பைண்டிங் ஒர்க் மாதிரி கிடைச்ச வேலையைச் செய்வோம். நாம வேகமாக அடுக்கும் பிரதிகளுக்கு தகுந்த மாதிரி சம்பளம் கையில் நிற்கும். காலையில 10 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரை செய்வேன்.

வாரத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிருவேன். வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு இது பெரிய விஷயமில்லியா? வீட்டு கஷ்டத்தையும் கொஞ்சம் குறைக்க முடியுது. ரேடியோவில் பாட்டு ஓடவிட்டுட்டு விறுவிறுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சோம்ன்னா அலுப்பு தெரியாது. நாங்க தயாரிக்கும் காலண்டரைப் பல கடைகளில் சாமியா நினைச்சு கும்பிடறதைப் பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். அதைவிட பெரிய சந்தோஷம், நீங்க பார்க்கிறதுக்கு முன்னாடி நாங்கதான் முதல் ஆளா காலண்டரை பார்ப்போம். இந்த ட்ஜிட்டல் யுகத்திலும் காலண்டர் வாங்குறது குறையலை'' எனப் புன்னகைக்கிறார்.



காலண்டர் சிலிப்களை ஒட்டிக்கொண்டிருந்த பாண்டிச்செல்வி, “சிவகாசியில் பட்டாசுக்கு அடுத்து, காலண்டரும் டைரியும்தான் நிறைய பேரின் வீட்டுல பசி தீர்க்கும் வேலையைக் கொடுக்குது. வெறும் சம்பளத்துகஆன் வேலையா மட்டுமே பார்க்காமல், புதுசு புதுசா டிசைன் டிசைனா வரும் காலண்டரை ரசிச்சு ஒட்டுவேன். புது காலண்டர் வாசனையும் எனக்குப் பிடிக்கும். இபப்டி ரசிச்சு செய்யறதால, எங்க வீட்டுல இருக்கும் காலண்டரின் தாளை கிழிக்கவே மனசு வராது. ரப்பர் பேண்டு போட்டு மாட்டி வெச்சிருவேன். ஒரு காலண்டர் உருவாக பலகட்ட வேலைகள், பலரின் உழைப்பு இருக்கு. கடைகளில் இலவசமா கொடுக்கிறாங்கன்னு நிறைய பேரு அதை அலட்சியமா நினைக்கிறப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கும். எங்களை மாதிரி பல தொழிலாளர்களின் உழைப்பு அதில் அடங்கியிருக்கு. தினமும் காலண்டர் பார்க்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்கணும். அதில் பால் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுப்பாங்க'' என நெகிழ்வுடன் சொல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் 15 ரூபாய்க்கு ஆரம்பித்து 2000 ரூபாய் வரை கேலண்டர் விற்பனையாகிறது. புதுப் புது தொழில்நுட்பங்கள் வந்தாலும், சிவகாசி காலண்டர்களுக்கான மவுசு குறையவில்லை.

Delhi HC grants relief for girl seeking MBBS admission

The court’s direction came on a plea by Nancy Rustagi who, through counsel Rekha Rustagi, sought quashing of the order by which her MBBS seat in the medical college was cancelled.

Written by Pritam Pal Singh | New Delhi | Published: August 11, 

2018 1:36:09 am

The Delhi High Court Friday came to the rescue of a medical student, whose MBBS admission was cancelled, saying when it comes to the admission of deserving candidates, authorities should be more “sensible and responsible”.

Justice Siddharth Mridul directed the Centre to give the student admission in Lady Hardinge Medical College for the academic year 2018-19. “Particularly in view of the fact that the seats for the course are available,” the court said, adding that “freedom of choice cannot be curtailed”.

“When it comes to admission of students, the officials of the respondents (Ministry of Health and Family Welfare, Directorate General of Health Services and Lady Hardinge Medical College) required to be more sensible and responsible,” it said, adding that they should especially be so for “meritorious” ones.

The court’s direction came on a plea by Nancy Rustagi who, through counsel Rekha Rustagi, sought quashing of the order by which her MBBS seat in the medical college was cancelled.

The girl was allotted a BDS seat at Maulana Azad Institute of Dental Sciences by the Medical Counselling Committee during the second round of counselling — in the name of upgradation.

As per the girl’s plea, at the time of securing admission in the first round, she had expressed willingness for the next round of counselling for purpose of upgradation. The counsel said the girl had only opted for upgradation of the institute and did not want to go for degradation of course in the second round of counselling.
MCI gives anxious moments to house surgeons at Rajiv Gandhi Institute of Medical Sciences in Hyderabad
Medicos at Rajiv Gandhi Institute of Medical Sciences (RIMS), Adilabad, and Government Medical College, Nizamabad, are tensed as Medical Council of India (MCI) has kept the ‘recognition’ of the two i

Published: 12th August 2018 04:16 AM | Last Updated: 12th August 2018 04:16 AM | By Express News Service

HYDERABAD: Medicos at Rajiv Gandhi Institute of Medical Sciences (RIMS), Adilabad, and Government Medical College, Nizamabad, are tensed as Medical Council of India (MCI) has kept the ‘recognition’ of the two institutes on hold. The students, along with Telangna Junior Doctors Association (JUDA), would submit representations to State Health minister C Laxma Reddy requesting him to look into the issue.

However, officials from the State Health department have urged the students not to worry as steps would be taken to get recognition from the Council.

House surgeons from the two institutes said that their degrees will not be valid and they will not be able to take National Eligibility cum Entrance Test (NEET) if the institutes are not recognised by March next year. While the Medical college in Nizamabad was established in 2013, RIMS was established in 2008.
As per procedure, MCI conducts inspection annually for five-years after a college is established and thereafter, inspections are carried every five year.

After recent inspections, the MCI inspection team kept recognition of the two institutes on hold.
“If the institutes are not recognised by March 2019, our degrees will not be recognised,” said a house surgeon from the Medical college in Nizamabad.

The official said that while senior resident doctors signed in registers and left to work in their wards, they were not considered and remarks were made that there is deficiency.

Contingency measures

Director of Medical Education Dr K Ramesh Reddy said as people are not interested to work in interior parts, they are going to recruit professors, assistant and associate professors, tutors on contract basis to fill vacancies

In round two of NEET, most MBBS seats reallotted

TIMES NEWS NETWORK

Chennai:12.08.2018

In the second round of MBBS counselling that began Saturday, 893 out of 2,273 students, who had been called for counselling, turned up.

While 35 students were allotted seats afresh, 412 of them were reallotted seats in better colleges or colleges of their choice. While 365 students were realloted seats in government medical colleges, 29 were allotted seats in ESIC colleges and 51 in self-financing colleges. Two of them were realloted seats in government BDS college.

“We hoped to get into a medical college, but my son did not get a chance because most students got reallotment by opting for better colleges than what had been allotted in the first round,,” said Krishnan S, a parent. “I am hoping he will get his chance tomorrow(Sunday),” he said.

But N K Adityan, who had secured 84th NEET rank but could not get a seat of his choice in the first round was happy. On Saturday, he walked away with a seat in Madras Medical College.

The seat matrix for second round MBBS counselling, which began on Saturday, opened with 242 MBBS seats including 128 seats in government medical colleges, 26 seats in Annamalai University, 11 seats in ESIC Chennai and 77 seats under government quota in private colleges.
Illegal phone exchange case: Charges to be framed on Aug 17
Maran Brothers Face Trial After HC Junks Their Discharge


TIMES NEWS NETWORK

Chennai:  12.08.2018

A special court for CBI cases here re-commenced the trial against former Union telecom minister Dayanidhi Maran and his older brother Kalanithi Maran in the illegal telephone lines case, a fortnight after the Madras high court set aside their discharge from the case.

The XIV additional judge for CBI cases, R Vasanthi, posted the case to August 17 for framing charges.

On March14, special judge Natarajan passed an order discharging all the seven accused, including the Maran brothers, from all the charges. The judge said he was discharging them since there was no prima facie evidence to prove the charges against them.

Assailing the order, the CBI moved an appeal in the high court. Allowing the appeal on July 25, the high court set aside the discharge order noting that the court was fully satisfied that heaps and heaps of material were available to frame charges against all the accused. “None of the reasons given by the trial court to discharge them is sustained in law. The trial court judge has totally forgotten the fact that he should only weigh the probability of the case for framing charges,” the high court had said.

According to the CBI, Dayanidhi Maran— between June 2004 and December 2006 when he was Union minister for communication and information technology— misused his office and installed telephone lines at his residences in Chennai and used it for business transactions involving Sun Network, owned by Kalanithi. The CBI said more than 700 telecom lines had been installed in Maran’s residences in Boat Club and Gopalapuram, causing a loss of ₹1.78 crore to exchequer.



Dayanidhi (L) & Kalanithi Maran

NEWS TODAY 28.06.2026