Monday, August 13, 2018


ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் பட்டு

Added : ஆக 13, 2018 01:55




ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று நடக்கும் ஆடித்தேரோட்டத்தை முன்னிட்டுஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்கலபொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர். ராமசுப்பு, அறங்காவலர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா மற்றும் சுந்தர் பட்டர் ஆகியோர் கொண்டு வந்த பட்டுவஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை, ஆண்டாள் கோயில் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் மாடவீதிகள் சுற்றி, வரபட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்தும் நேற்று மாலை 6:00 மணியளவில் பரிவட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
கனமழை அறிவிப்பால் அச்சத்தில் மூணாறு மக்கள்

Added : ஆக 13, 2018 00:55

மூணாறு: மூணாறில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைவாக இருந்தாலும்,கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மற்ற பகுதிகளைக்காட்டிலும், மூணாறில் அதிகம் பெய்யும். இந்தாண்டு பருவமழை மே 29ல் துவங்கி ஒரு வாரம் பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது கன மழை பெய்த நிலையில், இம்மாத துவக்கத்தில் மழை குறைந்து வெயில் முகம் காட்டியது.இந்நிலையில் ஆக.6 முதல் மழை தீவிரமடைந்து ஆக.9ல், 34.64 செ.மீ., பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .அதன்பின் மழை வெகுவாக குறைந்தது. ஆக.10ல் 7.04, 11ல் 8.10, நேற்று காலை 8:30மணிப்படி 6.34 செ.மீ., என பதிவானது. எனினும் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். -----
மருத்துவம்: 76 இடங்களுக்கு கவுன்சிலிங்

Added : ஆக 13, 2018 01:35

சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 3,501 எம்.பி.பி.எஸ்., - 1,198 பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7 வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பி வகுப்புகள் துவங்கின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை, கவுன்சிலிங்கில் இடம் பெற்று, கல்லுாரியில் சேராதவர்கள் என, 268 இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார், அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், 35 இடங்கள் நிரம்பின. நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 940 மாணவர்கள் பங்கேற்றதில், 157 பேர் இடங்கள் பெற்றனர். இரண்டு நாட்களில், மொத்தம், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களை நிரப்ப, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.
சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Added : ஆக 12, 2018 23:21


சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூவேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், 'ப்ளூவேல்' என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, 'டாஸ்க்' தரப்படும்.கட்டளைகள் உதாரணமாக, 'உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; 'செல்பி' எடுத்து அனுப்பு. 'நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, 'வீடியோ' காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்' என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. 

ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும். 'டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, 'ஹேக்' செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், 'ப்ளூவேல்' விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.

கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், 'ஆன் லைன்' விளையாட்டிற்கான, 'ஆப்'வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், 'ஆப்'கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் --


சிறுமியரை,கற்பழித்தால்,துாக்கு தண்டனை,சட்டம்,அமலானது,அரசு,அதிரடி

dinamalar 13.08.2018

புதுடில்லி : பெண்கள், சிறுமியரை பாதுகாக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்யும் கொடியவருக்கு, முன் ஜாமின் கிடைக்காது. பலாத்கார குற்றங்கள் அனைத்துக்கும், புதிய சட்டப்படி, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

உ.பி., மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில், ஒரு பெண்ணும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் ஒரு சிறுமியும், இந்தாண்டு துவக்கத்தில், கொடூர கும்பல்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய, பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

ஒப்புதல் :

இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உட்பட, கடுமையான தண்டனைகளை வழங்கும் ஷரத்துகளுடனான அவசர சட்டத்தை, மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் இயற்றியது.



இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா, கடந்த வாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறின. இந்நிலையில், புதிய கிரிமினல் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலியல் குற்றங்களை தடுக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றாக, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம், 'கிரிமினல் சட்டம்- 2018' என அழைக்கப்படும்;

இது, 2018, ஏப்., 21ல், அமலுக்கு வந்ததாக கருதப்படும்.

இந்த புதிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றில் தக்க திருத்தங்களுக்கு வகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்நாள் சிறை :

புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறை அல்லது துாக்கு தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 - 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம்  செய்தால், குறைந்தபட்ச தண்டனை, 10 ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தண்டனை, குற்ற வாளி இறக்கும் வரை, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வரை, அதிகரிக்கப்படலாம். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தண்டனை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.

நிர்ணயம் :

பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, புதிய சட்டம் வகை செய்கிறது. பாலியல் பலாத்கார வழக்குகள் அனைத்தையும், இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீடுகள் மீதான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், முன்ஜாமின் பெற முடியாது.

கேரளா :பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி தர சுஷ்மா உத்தரவு

Added : ஆக 13, 2018 03:05 |



புதுடில்லி: கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:




Sushma Swaraj
✔@SushmaSwaraj



There are unprecedented floods in Kerala causing huge damage. We have decided that as the situation becomes normal, passports damaged on account floods shall be replaced free of charge. Please contact the concerned Passport Kendras. #KeralaFloods Pls RT
5:52 PM - Aug 12, 2018
10.1K
3,262 people are talking about this
Twitter Ads info and privacy

சேதமடைந்த அல்லது இழந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் கேரளாவில் ,பாஸ்போர்ட்டுகள் வெள்ளம் அல்லது மழைக்காலத்தில் சேதமடைந்திருந்தால் இலவசமாக மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Special trains for Onam, Velankanni festival

SALEM, AUGUST 13, 2018 00:00 IST

The Railways will operate special trains in connection with the Onam and Velankanni shrine annual festival.

The train No. 82615 Chennai Central to Ernakulam junction Suvidha special train will leave Chennai Central at 10.30 p.m. on August 23 and will reach Ernakulam at 10.55 a.m. the next day.

The train will halt at Katpadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Thrisur, Aluva and Ernakulam Town.

The No. 06014 Ernakulam Junction – Chennai Central special fare special train will leave Ernakulam at 2.45 p.m. on August 24 and will reach Chennai Central at 4.50 a.m. the next day.

The train will halt at Aluva, Thrisur, Palakkad, Coimbatore, Tirupur, Erode, Salem, Jolarpettai, Katpadi and Perambur.

The No. 06047 Chennai Central – Kochuveli special fare special train will leave Chennai Central at 3 p.m. on August 21 and will reach Kochuveli at 6.45 a.m. the next day.

The No.06048 Kochuveli – Chennai Central special fare special train will leave Kochuveli at 12.30 p.m. on August 22 and 28 and will reach Chennai Central at 7.40 a.m. the next day.

These trains will halt at Arakkonam, Katpadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Tiruvalla, Chengannur, Kayamkulam and Kollam.

The No. 06046 Thiruvananthapuram – Velankanni special fare special train will leave Thiruvananthapuram at 3.30 p.m. on August 29 and September 5 and will reach Velankaani at 3.45 a.m. the next day.

Train No.06045 Velankanni – Thiruvananthapuram special fare special train will leave Velankanni at 10.10 p.m. on August 30 and September 6 and will reach Thiruvananthapuram at 12.15 p.m. the next day.

These trains will stop at Kulitturai, Eraniel, Nagercoil Town, Valliyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Thanjavur, Tiruvarur and Nagapattinam.

The No. 06016 Ernakulam Junction – Velankanni special fare special train will leave Ernakulam at 11 p.m. on August 28 and 31 and September 4 and 7 and will reach Velankanni at 1 p.m. the next day.

The No.06019 Tirunelveli – Mangalore Junction special fare special train will leave Tirunelveli at 5.55 p.m. on August 23 and will reach Mangalore at 12.30 p.m. the next day.

The No.06020 Mangalore Junction. – Tirunelveli special fare special train will leave Mangalore at 3.40 p.m. on August 24 and will reach Tirunelveli at 9.45 a.m. the next day. These trains will halt at Nagercoil Town, Kulitturai, Neyyattinkara, Thiruvananthapuram, Kollam, Kayamkulam, Chengannur, Tiruvalla, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Shoranur Jn., Tirur, Kozhikode, Vadakara Thalassery, Kannur, Payyanur, Kanhangad and Kasaragod.

The No.06023 Nagercoil Junction – Mangalore Junction special fare special train will leave Nagercoil at 4.15 p.m. on August 26 and will reach Mangalore at 6.30 a.m. the next day.

The No.06024 Mangalore Junction – Nagercoil special fare special train will depart Mangalore at 8.30 a.m. on August 27 and will reach Nagercoil at 10.15 p.m. the same day.

These trains will halt at Thiruvananthapuram, Kollam, Kayamkulam, Chengannur, Tiruvalla, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Shoranur Jn., Kozhikode, Kannur and Kasaragod. Advance reservation for all these trains commenced on August 8, an official press release of Salem Railway Division said.

NEWS TODAY 28.06.2026