Friday, September 7, 2018

பல் மருத்துவ படிப்புக்கு மீண்டும் கவுன்சிலிங்

Added : செப் 07, 2018 02:57

சென்னை:தனியார் பல் மருத்துவ கல்லுாரி களில் உள்ள, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி துவங்குகிறது.தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., படிப்புக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து உள்ளது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 569 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, இதுவரை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்காதோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதன்படி, 207 பேர் புதியதாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நடைபெற உள்ளது. அரசு ஒதுக்கீட்டிற்கு, காலை, 9:00 மணிக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, பிற்பகல், 2:00 மணிக்கும் கவுன்சிலிங் துவங்கும்.இது குறித்து, மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:பல் மருத்துவ இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோர்; ஏற்கனவே விண்ணப்பித்து, கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர்; கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 07, 2018 05:30 AM
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருக்கிறார். வண்டலூர் ஓட்டேரி இல்லத்தில் அவரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து பேரறிவாளனின் தாயார் தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறதே?

பதில்:-இப்போது தான் கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 27 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறது. மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை நீதிபதிகள் உறுதி செய்து இருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மேலும் சிறையில் வைக்க வேண்டாம், வெளியே விட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை கருத்தில் கொண்டு, கவர்னரிடம் ஆலோசனை செய்தோ அல்லது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியோ என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுகோள். இந்த விஷயத்தில் இனியும் கால தாமதம் செய்யக்கூடாது.

கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களின் விடுதலை குறித்து நேரில் வேண்டுகோள் விடுக்க இருக்கிறீர்களா?

பதில்:- இந்த தீர்ப்பின் முழு விவரம் வந்ததும் நான் முதல்-அமைச்சரை சந்திப்பேன். நாளைக்கு (இன்று) போகலாம் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் முழு விவரம் வேண்டும், மனு தயார் செய்ய வேண்டும் அல்லவா?. வக்கீல்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேட்டு மனு தயார் செய்ய வேண்டும்.

கேள்வி:-இந்த தருணம் உங்களுக்கு எப்படி உள்ளது?

பதில்:-நம்பிக்கையாக இருக்கிறதுப்பா... இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
மாவட்ட செய்திகள்

சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்



காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிதாக 4 அடுக்குமாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

பதிவு: செப்டம்பர் 07, 2018 04:00 AM
காஞ்சீபுரம்,


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சங்கரா பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், சங்கரா பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், பல்கலைக்கழக துணை வேந்தர் விஷ்ணுபோத்தி, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து, காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை தந்த பிராணாப் முகர்ஜி, முக்தியடைந்த காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது பிருந்தாவனத்திற்கு சென்று வணங்கினார். பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுக்கலாம்


ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து, கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 07, 2018 05:45 AM
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி ஆனார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ரவிச் சந்திரன், ஜெயகுமார் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அந்த கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க தாமதம் ஆனதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்துடன் கருணை மனு தாக்கல் செய்து நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தர விட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசிடம் மனு அளித்தனர்.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

ஆனால் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை கடந்த ஏப்ரல் 16-ந் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சார்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 7 பேரும் ஏற்கனவே தமிழக கவர்னருக்கு கருணை மனு தாக்கல் செய்து இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கவர்னரால் முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்றும், எனவே சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 7 பேர் சார்பில் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மற்றும் வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதாடுகையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் அரசியல் சாசனப் பிரிவு 161-ன் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த பிரிவின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்து அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறினார்கள். அதன் அடிப்படையில் தான் எடுக்கும் முடிவையும், தனது பரிந்துரையையும் மாநில அரசு, கவர்னருக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன் கீழ் இதுகுறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு என்று கூறினார். அத்துடன் அந்த அதிகாரத்தை பயன்படுத்தியும் பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் மத்திய அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்றும், இதுபற்றி தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள்.

அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.
தலையங்கம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி



1992–ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமண ஒழிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவந்த பன்வாரி தேவி என்ற சமூகசேவகர் ஒரு கும்பலால் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டார்.

செப்டம்பர் 07 2018, 03:30

1992–ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமண ஒழிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவந்த பன்வாரி தேவி என்ற சமூகசேவகர் ஒரு கும்பலால் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டார். இதை எதிர்த்து ‘விசாகா’ என்ற பெண்கள் உரிமைக்குழுவும் மற்றும் சில குழுக்களும் சேர்ந்து ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. இதையொட்டி உச்சநீதிமன்றம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்கள் பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட ‘விசாகா வழிமுறைகள்’ என்றபெயரில் சில வழிமுறைகளை வகுத்து தீர்ப்பு கூறியது. இந்த வழிமுறைகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடைசெய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக 2013–ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. இந்த சட்டப்படி 10 பெண்களுக்குமேல் பணிபுரியும் இடங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அங்கு பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராக கொண்டு, குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப்பிறகும், மத்திய அரசாங்க சட்டத்துக்குப்பிறகும், பல அரசு அலுவலகங்களில் இன்னும் இத்தகைய கமிட்டி அமைக்கப்பட்டதுபோல தெரியவில்லை.

இந்தநிலையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் ஐ.ஜி.யாக பணிபுரியும் ஒரு உயர் அதிகாரி மீது, அதேதுறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் ஒரு அதிகாரி தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தியதாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிக்க கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, டி.ஜி.பி. அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு ஆகியோரும், ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரஸ்வதி ஆகியோரும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு ‘விசாகா கமிட்டி’ அமைக்கப்பட்டது. ஆனால், போலீஸ் துறையில் இப்போது நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே, இந்த கமிட்டியை மாற்றி அமைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இப்போது நியமிக்கப்பட்டுள்ள ‘விசாகா கமிட்டி’யிடம், அந்தப்பெண் பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அவரது கோரிக்கையின் அடிப்படையிலும், அந்த உயர் அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒரு பாடமாகக்கொண்டு, அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உடனடியாக ‘விசாகா கமிட்டி’ அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டி யார் தலைமையில், யார்–யாரை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது? என்பதை விளக்குகின்ற போர்டுகள் அந்தந்த அலுவலகங்களில் வைக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டால்தான் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கோ, வெளியிலிருந்து வரும் பெண்களுக்கோ பாலியல் துன்புறுத்தல் நடந்தால், எங்கு புகார் தெரிவிக்கவேண்டும்? என்பது தெளிவாகத்தெரியும். ‘விசாகா கமிட்டி’யிடம் கொடுக்கப்படும் புகார்களை ஒரு குறிபிட்ட காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு அறிக்கை தரவேண்டும். அந்த அறிக்கையின்பேரில், மேல் நடவடிக்கைகளும் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

Thursday, September 6, 2018


சான்றிதழ்களில் ஆதார் பதிய தடை : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

Added : செப் 06, 2018 00:11

மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக, ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும், சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017 மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம். மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
குட்கா ஊழல்: குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது

Updated : செப் 06, 2018 13:40 | Added : செப் 06, 2018 11:14 |




சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

சோதனை

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா வீடுகள் உட்பட தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரையும் விசாரணைக்கு பிறகு டில்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து , குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். செந்தில்முருகன், பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் அதிகாரிகளை கைது செய்தனர். குட்கா ஊழல் தொடர்பாக இன்று மட்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சீல் :

குட்கா ஊழல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சம்பத்தின் வீட்டில் சோதனைக்கு பிறகு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...