Sunday, September 16, 2018

Time to wake up from slumber, HC tells govt officials

TIMES NEWS NETWORK

Chennai:16.09.2018

It is time officials in Tamil Nadu woke up from their ‘Kumbhakarna-type’ slumber and comply with court directions, said the Madras high court, blasting government officials for their ‘callous’ attitude in making administrative decisions, leading to longdrawn litigations and waste of judicial time.

A division bench of Justice K K Sasidharan and Justice R Subramanian made the observations on a batch of appeals challenging a government order issued by the school education department on January 12, 2015 and a consequential order of the director of public libraries dated January 13, 2015 pertaining to district library officers.

Allowing the appeals, the bench said: “Once it is found that the appellants appointment was pursuant to direct recruitment, they cannot be reverted to a lower rank…”

Expressing dissatisfaction over the way the issue was handled by the state, the bench said, “A policy decision to rationalise the service of local library authorities and to bring them into one single unit was taken by the government as early as December 11, 1989. But the adhoc rules were framed only in 2006 after a lapse of nearly 17 years.”

This exhibits the callous indifference shown by officials of the state, the bench said. In 1995, the state administrative tribunal had specifically observed that administrative decisions which involve change in service rules should be followed up by necessary changes by way of amendment without any delay, the bench pointed out.

“Despite the direction, the government has taken 17 years for framing rules, because of which the appellants had been running from pillar to post from 2007. This failure of the state to do its duty has led to this long-drawn litigation resulting in waste of court hours on trivial issue of promotions and seniority,” the court said.

The court slammed officials for their ‘callous’ attitude in making administrative decisions, leading to long-drawn litigations and waste of judicial time
Only Class XII marks to count for college admissions in state

B Sivakumar & Ram Sundaram TNN

Chennai: times of india 16.09.2018

In a major policy reversal, the state government has announced that Class XI board examination marks will not be considered for college admissions. As was the practice till last year, only Class XII marks will be taken into account, school education minister K A Sengottaiyan announced on Saturday.

The rethink comes after record number of state board students either failed or absented themselves in their first-ever Class XI board exams this year.

In 2017, Tamil Nadu government introduced board exam for Class XI to end the practice of private schools skipping the portions of Class XI and training students only for Class XII exams, scores in which were considered for college admissions.

The minister had then said that equal weightage would be given to Class XI and XII board exams and a consolidated marksheet for 1,200 marks would be issued to students after successful completion of the exams. Alongside the reform, the government had also introduced a new syllabus for Class XI state board students.

Max marks cut from 1200 to 600

Exactly a year later, the government has retracted its stance. Explaining the rationale behind the move, Sengottaiyan said, “We received many complaints through CM’s special grievance cell stating students were stressed to write three board exams at a stretch.” So, from this year, Class XI scores will not be considered for college admissions, he added.

However, Class XI students will continue to write their board exams. Marksheets will be issued for 600 marks to Class XII students, but only if they cleared all the subjects under the two-year higher secondary course.

If a student failed in one or more subjects, a mark statement, mentioning the scores secured by them in the other subjects, would be issued, said a government order issued by Pradeep Yadav, school education secretary, in connection with the announcement.

While many experts, teacher associations and parents have condemned this decision effected in the middle of an academic year, others said this might remove the burden off students’ shoulders. P Fredrick Reymend, a government school teacher, said there was no logic now that private schools were going to be serious about Class XI, which formed the base for higher education.

Educationist Prince Gajendra Babu said, “By revising the syllabus and conducting the board exams the very same year, they have put last year’s students under unnecessary pressure. Parents, teachers and experts were not consulted before taking this decision or earlier ones, including merger of language papers and changing the nomenclature of districtlevel elementary offices.” But school education expert S S Rajagopalan said, “Holding public exams at the end of Class XI is against students. Admissions for Class XI go on up to September, leaving little time for students to complete the syllabus.”
வடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்

Published : 14 Sep 2018 16:48 IST


இந்து குணசேகர்

 



கோம்பை அன்வர்

அந்தப் பரப்பரப்பான பேருந்து நிலையக் காட்சிகள் இரண்டரை வருடங்கள் கழித்தும் இன்னும் நினைவில் ஓடிக் கொண்டிருக்கிறது...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துக் கொண்டிருக்கும்போது, மதிய நேர வகுப்பாக களப்பணிக்கு பேராசிரியர்கள் மாணவர்களை அனுப்புவது வழக்கம்.
 
அப்போது எங்களது பிரதான தேர்வாக பிராட்வேவும், அதனைச் சுற்றியிருந்த இடங்களும் இருந்தன. முன்பின் தெரியாத மனிதர்கள்...சற்று வித்தியாசப்பட்டிருக்கும் முகங்கள்...இவர்களைத் தொலைவிலிருந்து கவனித்து அவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க வேண்டும். அதுவும் சுவாரஸ்யமாக...

இவ்வாறு எனது காலச் சக்கரத்தில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களையும், இடங்களையும் ஒருங்கே சேர்ந்து காணப்படும் பிராட்வேவை பற்றித்தான் வடசென்னை பற்றிய இந்தத் தொகுப்பில் காண இருக்கிறோம்....

பிராட்வே..... வடசென்னையின் அதிமுக்கியப் பகுதி. சாமானிய மக்கள் ஏதோ ஒருவகையில் தங்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளவும், தங்களது பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் குவியும் முக்கியப் பகுதிகளில் ஒன்று.

அவ்வாறு வரும் மக்களை முதுகில் தட்டிக் கொடுத்து நம்பிக்கை தரும் இடமாக பிராட்வேயின் பாரீஸ் கார்னர், பர்மா பஜார், பூக்கடை, பீச் ஸ்டேஷ்னை ஒட்டியுள்ள பகுதிகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன.

தொழில் சார்ந்து பிழைக்க வந்த மக்கள் நாளடைவில் அதனைச் சுற்றியோ அல்லது அதன் அருகிலுள்ள பகுதிகளிலோ தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொள்வதன் தொடர் கலாச்சாரம் பிராட்வேயில் பரவுவதை நாம் காணலாம்.

இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக பர்மா பஜாரைக் குறிப்பிடலாம். 1960 -களில் பர்மாவிலிருந்து அங்கு குடியேறிவர்களின் காரணமாக இப்பகுதி பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே அங்கு பர்மிய பாரம்பரியம் சார்ந்த உணவு வகைகளான அத்தோ, மொய்ங்கோ போன்ற உணவுப் பொருட்கள் சார்ந்த கடைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு சென்னையின் குட்டி வணிகச் சந்தையாக அடையாளப்படுத்தப்படும் பிராட்வேவுக்கு இன்னும் பல சுவராஸ்யமான முகங்கள் உள்ளன என்பதை நமக்கு படமிட்டுக் காட்டுகிறார், ’யாதும்’ ஆவணப் பட இயக்குனர் கோம்பை அன்வர்,

”பிரெஞ்சுக்காரர்களுக்கு பிறகு, போர்ச்சுகீசியர்கள் , யூதர்கள் என ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் மாறி மாறி வந்திருக்கிறது பிராட்வே. இதன் காரணமாகவே பிராட்வே தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது.

இதன் காரணமாகவே அக்காலத்தில் வணிகம் சார்ந்த வளர்ச்சி சென்னையைப் பொறுத்தவரை தெற்கு நோக்கி என்றில்லாமல் வடக்கிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. இதனால் பெரும் வளர்ச்சிக்குரிய இடமாகவே பிராட்வே கருதப்பட்டது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டுகளில் பிராட்வே நெருக்கடிக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து பல வணிக நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் மதராஸின் தெற்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்தன. எடுத்துக்காட்டுக்கு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியைக் குறிப்பிடலாம்.

பிராட்வேயில் அமைந்துள்ள கட்டிடங்கள் பல பாரம்பரியத் தன்மை கொண்டவை. குறிப்பாக ஜார்ஜ் டவுன் மிகுந்த பழமையானது. மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டதும் கூட.... இதன் சிறப்பு கருதியே யுனெஸ்கோவால் இது பாரம்பரியம் மிக்க (ஹெரிடேஜ்) இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாது பச்சையப்பன் முதலியார் அறக்கட்டளை சார்ந்த பள்ளிக் கூடங்கள், கல்லூரிக் கட்டிடங்கள் எனப் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கட்டிடங்கள் பல இங்கு உள்ளன.

பாரீஸ் கார்னருக்கு எதிரே அமைந்துள்ள கோர்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் வடிவமைப்பு உள்ளேயும் வெளியேயும் வித்தியாசமான கலை நுணுக்கத்துடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மெட்ராஸின் ஆரம்பகட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தும் வடக்கிலிருந்துதான் தொடங்கியது, குறிப்பாக பிராட்வேயில் என்று குறிப்பிடலாம்..

மெட்ராஸின் முதல்ரயில்வே பாதைகள் ஏன் ராயபுரத்திலிருந்து தொடங்கின....?

இதனை அடிப்படையாக வைத்தே எல்லா தொழில் வளர்ச்சிகளும் இங்கிருந்துதான் தொடங்கப்பட்டன. தொழில் வளர்ச்சிகள் அனைத்தும் வடசென்னை சார்ந்ததாகத்தான் இருந்திருக்கின்றன.

பாரீஸை நோக்கி வணிகம் செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் வந்து பின்னர் இங்கேயே குடிபெயர்ந்தவர்களின் மதம் சார்ந்த ஆன்மிகத் தளங்களும் இங்கு பரவலாகக் காணப்படுகின்றன.


இதுமட்டுமல்லாது ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் அதற்குரிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். இதனை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று பிராட்வே மீதும், பாரம்பரிய கட்டிடங்கள் குறித்தான பிரியத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட கொம்பை அன்வர், இன்றைய இளம் தலைமுறையினர் சென்னையிலுள்ள பாரம்பரியமான கட்டிடங்களை அறிந்து கொள்வதற்காக ’ஹெரிடேஜ் வாக்’ போன்ற விழிப்புணர்வு சார்ந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனைக் களத்தில் செயலாற்றியும் வருகிறார்.

அவரது சந்திப்பிற்குப் பிறகு நமது பயணம் மேலும் தொடர்ந்தது....

சினிமா படப்பிடிப்புகள்...

பாரம்பரிய கட்டிடங்கள், பரபரப்பான வணிகப் பகுதிகள் மட்டுமல்ல பிராட்வே உள்ள பல இடங்கள் தென்னிந்திய சினிமா துறைக்கு படப்பிடிப்புத் தளங்களாக 1960, 1970 களில் பயன்பாட்டில் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக, பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள மை லேடி கார்டன் பூங்காவில் அக்காலத்தின் காலத்தின் பல பாடல் காட்சிகள் பலவும் படமாக்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் சாவித்ரி, ஜெமினி கணேசன் இடம்பெற்ற ’வாராயோ வெண்ணிலாவே’ போன்ற பாடல்கள் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் அந்த படப்பிடிப்புகள் அங்கிருந்து கொஞ்சமாக கால ஓட்டத்தில் நகர்த்தப்பட்டு பின்னர் அந்த இடங்கள் தற்போது இவ்வாறு செய்திகளில் குறிப்பிடும் இடங்களாக அறியப்பட்டு வருகின்றன.


மை லேடி கார்டன்

தற்போது அந்தப் பூங்காவில் உள்ள அந்த ஒற்றைப் பெண் சிலையும், மரங்களும்... இன்று அங்கு நடைப்பயிற்சிக்கு செல்லும் மக்களின் காலை மற்றும் அந்தி சாயும் பொழுதை இனிதே கழிக்கும் இடங்களாக மாறியுள்ளன.

செல்லப் பிராணிகளின் பெட் மார்க்கெட்

செல்லப் பிராணிகளின் காதலர்களாக இருப்பவர்கள் புது அனுபவத்தைக் கொடுக்கும் இடம் ஒன்று உள்ளது பிராட்வேயில்... பெட் மார்க்கெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெட் மார்க்கெட் என்று படித்ததும், உங்கள் சிந்தனைகளில் ஓடும் சந்தைகளின் பிம்பங்களுக்கு சற்றும் நேர்மாறாக காணப்படுகிறது அச்சந்தை.

பாரீஸிலுள்ள மண்ணடியில் ஒரு குறுகிய தெருவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடந்து கொண்டிருக்கும் சென்னையின் பழமையான சந்தை இது.

சுற்றிலும் மார்வாடி மக்களும், இஸ்லாமியர்களும் பரவலாகக் காணப்படும் அம்மன் கோவில் தெருவில் நடந்து கொண்டிருக்கிறது இந்தக் குட்டி சந்தை.

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதல் நண்பகல்வரை மனிதத் தலைகளால் நிறைந்து காணப்படும் இந்தச் சந்தை அமைந்துள்ள தெருவில் கோழி, மீன், புறா, நாய்க்குட்டிகள் என பல்வேறு வகையான செல்லப் பிராணிகளை நீங்கள் வரிசையாகக் கடக்கலாம்.


பெட் மார்க்கெட்டில் விற்கப்படும் செல்ல பிராணிகள்

அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போதுதான் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களை சம்மணமிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலுவைப் பார்க்க நேர்ந்தது.

வியாபாரத்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்துள்ள அவர் கொண்டு வந்த புறாக்கள். சிறுது நேரம் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

முதலில் பேசத் தயங்கியவர்... பின்னர் சுற்றியிருந்த அவரது சக நண்பர்களும், அருகிலிருந்த டீ கடைக்காரர்கள் உற்சாகப்படுத்த தயக்கத்துடனே தொடங்கினார்,

"வேலு என்னோட பெயர். திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். கடந்த மூப்பது வருடமாக இங்கு வியாபாரத்துக்காக வந்து கொண்டிருக்கிறேன். நமது பாடப் புத்தகத்தில் படிச்சிருப்பீங்களே, பண்ட மாற்றுமுறையைப் பற்றி. அதுதான் இங்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சந்தைக்கு வாங்குகிறவர்களும் வருவார்கள்... விற்கிறவர்களும் வருவார்கள்.

நான் பல வருடங்களாக புறாக்களில் பல வகைகளை இங்கு கொண்டு வந்து விற்று வருகிறேன். மாடப் புறா, சங்கிலி புறா, கிங், காக்டோ, மெக்கோ போன்ற பல வகைகள் இங்கு விற்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் இந்தத் சந்தை நடைபெறும். 200 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை இங்கு புறாக்கள் விற்கப்படுகின்றன.



வேலு

யார் வேண்டுமானாலும் தங்களிடம் ஆரோக்கியமாக உள்ள செல்லப் பிராணிகளை இங்கு கொண்டு வந்து விற்கலாம். பச்சைக்கிளி போன்ற பறவைகளை மட்டும் இங்கு விற்க அரசு தடை விதித்துள்ளது.

முன்பெல்லாம் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் நிறைய பேருக்குத் தெரிந்துள்ளது. வெவ்வேறு இடங்களிருந்து இந்தச் சந்தையைப் பார்வையிட வருகிறவர்களும் உண்டு.

முன்பெல்லாம் 2 ஆயிரம் பேர் வந்தார்கள் என்றால் தற்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது.

அதிகாலை 6 மணியிலிருந்து மக்கள் கூட்டம் வரத் தொடங்கும். நண்பகல் வரை எங்கள் சந்தை நடைபெறும். எந்தவித சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் எங்களது வணிகத்தை இங்கு ஓட்டிக் கொண்டிருக்கிறோம். போதிய வருமானமும் கிடைக்கிறது" என்ற வேலு எந்தவித மனக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டார்.

செல்லப் பிராணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரியும் இளைஞர்கள் பலரும் இங்கு செல்லப் பிராணிகள் விற்கும் தொழிலை துணைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

பிராட்வேயில் ஞாயிறு பொழுதுகளில் எங்கேனும் சிக்கிக் கொண்டீர்கள் என்றால் சற்று பொடி நடையாய் இந்தச் சந்தையை சுற்றிப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றாது...

அனுபவப் பயணங்கள் தொடரும்....

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
மாதவிடாய் கறை அவமானமா?

Published : 12 Sep 2018 09:23 IST

 

காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ நீங்கள் கழிவறை நோக்கி விரைகிறீர்கள் என்றால், உடல் கழிவுகளை அகற்றச்சொல்லி மூளை கட்டளையிடுகிறது என்று அர்த்தம். அதன் பின்பு கழிவறைக்குப் போகிறோம். ஆனால், எந்தக் கட்டளையையும் மூளை இடாமலே வெளியேறுவதுதான் மாதவிடாய். மாதத்தில் இந்த சில நாட்களில் மாதவிடாய் வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்குமே தெரியாது. சிலருக்கெல்லாம் சொல்லிவைத்தாற்போல் மாதம்தோறும் சரியான நாட்களிலும் வந்துவிடுவதில்லை. ஒரு வாரம் முன்பின்கூட ஆகலாம்.

முன்பெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டுச் செல்லாதவர்களாக இருந்தார்கள். எந்த நேரத்துக்கும் துணியை வைத்துச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது எப்போதும் வீட்டைத் தாண்டி வெளியில் பயணிக்கும் சூழல் பெரும்பாலான பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. எப்போதும் கைப்பையில் நாப்கின் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு இல்லாவிட்டாலும், நம் சகதோழி காதில் வந்து ரகசியமாய் சொல்லிவிட்டுப் போகும்போது கொடுக்கவாவது எப்போதும் இருப்பொன்று தேவையாக இருக்கிறது.

சரி... இதெல்லாம் முன்னேற்பாடுகள்தான். நாப்கின் இல்லாத சூழல் ஒன்றில் தன்னையும் அறியாமல் ஆடையில் குருதி படிந்துவிட்டால், அதென்ன உலக மகா குற்றமா என்ன? சில நேரங்களில் நாப்கினே வைத்தாலும் அதிகப்படியான உதிரப்போக்கால் கறை படிவதென்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால், நீல நிற மையை நாப்கினில் கொட்டிக் காட்டும் விளம்பரங்களெல்லாம் கறைபடிவதை அவமானத்தின் அடையாளமாகத்தானே சித்தரித்துக்கொண்டிருக்கின்றன! 'செக்... செக்.. செக்' என பகிரங்கமாகவே சின்னத்திரையில் வரும் நாப்கின் விளம்பரத்தில் வகுப்பில் இருக்கும் பெண் பிள்ளைகள் தங்களின் பின்புறத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் தயாரிப்பு நாப்கினை வாங்கினால் ஆடையின் பின்புறத்தை அடிக்கடி சரிபார்க்க வேண்டாமாம். இதில் எட்டு மணி நேரத்துக்கு மேலாகத் தாக்குப்பிடிக்குமென்று இன்னொரு தகவலையும் பரப்புகிறார்கள். ஒரு உயிர் திரவம் சிறிய நாப்கினில் 8 மணி நேரம் தேங்கிக் கிடந்தால் பெண்ணுறுப்பு எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை யோசிக்கிறோமா?

நாப்கின் இருந்தால் குதிரையில் சவாரி செய்யலாம். ஓட்டப்பந்தயத்தில் ஓடலாம்.. வெற்றிக் கோப்பையோடு வீடு திரும்பலாம் என்கிற போலிக் கற்பிதங்களைத்தான் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். விளம்பரங்கள் மாதவிடாயைப் பெண்ணுக்கான பெரும்பாவமாய் சித்தரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், பள்ளிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? ‘‘ம்மா.. எதுக்கும் இன்னிக்கு ரெண்டு நாப்கின் வச்சிட்டுப் போயிடுறேன். மிஸ் அடிக்கடி பாத்ரூம் போகவிட மாட்டேங்குறாங்க. பாய்ஸ் வேற பேக் ரோவுல இருக்காங்க’’ என்று சொல்லும் மகளிடம் எவ்வளவு புரிதலை ஏற்படுத்தினாலும் ‘‘மிஸ்... பாய்ஸ்’’ என இரண்டே வார்த்தைகளில் தயக்கம் காட்டிவிட்டு நழுவிக்கொள்கிறாள். ஏழாம் வகுப்பிலேயே பெரும்பாலான பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படியிருக்க இதுவரை மாதவிடாய் விழிப்புணர்வை இருபாலருக்கும் சொல்லித்தருவதைப் பள்ளிகள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

நீங்கள் சந்திக்கும் சகோதரியோ.. தோழியோ உங்கள் முன்னால் கறையோடோ இல்லை மெதுவாகவோ நடந்துசென்றால் நீங்கள் உடனடியாக ஓடிச்சென்று நாப்கின் வேண்டுமா என்று கேட்கிறீர்களோ இல்லையோ... பின்னால் இருந்து கிசுகிசுக்காமல் இருந்தாலே போதும். எங்களுக்குப் பயமெல்லாம் கறை மீது அல்ல... கரை சேர முடியாமல் பெண்களுக்கென புதிதுபுதிகாகக் கட்டவிழ்ந்துகொண்டிருக்கும் இத்தகைய காரணங்கள்தான்!

- பொன் விமலா, பத்திரிகையாளர்.
உலகிலேயே அழகான கையெழுத்தைக் கொண்ட பிரக்ரிதி மாலா: கணினி எழுத்தைவிட மேம்பட்ட கையெழுத்துக்குச் சொந்தக்காரி

Published : 15 Sep 2018 12:59 IST

க.சே.ரமணி பிரபா தேவி
 


பிரக்ரிதி மாலா. | இணையத்தில் வைரலான அவரின் கையெழுத்து

''கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு!''

''உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயுமே பார்த்ததில்லை..!'' - இவையெல்லாம் நம்முடைய, நம் நண்பர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டும் கடந்தும் வந்தவை...

ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.

9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது.

அழகான, தெளிவான எழுத்துகள்தான் படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.



பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து

நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான பிரக்ரிதி மாலா, குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.
எழுவர் விடுதலை நம் கரிசனத்தின் தொடக்கம் ஆகட்டும்!

Published : 12 Sep 2018 09:02 IST

  hindu tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு. முதல்வர் பழனிசாமியின் ஆட்சிக் காலகட்டத்தில், தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் வரலாற்று முடிவு இது என்று சொல்லலாம்.

ராஜீவ் காந்தி 1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ரத்தக்கறையாகவே படிந்துவிட்டது. பொதுவாக வன்முறைக்கு எதிரான பாதையிலேயே பயணித்து வந்திருக்கும் நவீன தமிழக வரலாற்றில், துயரமான ஒரு கரும்புள்ளி என்றே இந்த அரசியல் படுகொலையைச் சொல்ல வேண்டும். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள் தொடர்பான தமிழக மக்களின் பார்வையிலேயே மாற்றம் உண்டானது. பின்னாளில், ஈழப் போராட்டத்தின் மிக மோசமான தோல்விக்கும்கூட இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.

ராஜீவ் படுகொலையின் பிரதான குற்றவாளிகள் என்று இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாத நிலையில், அந்தக் கொலையின் முழுப் பின்னணியும்கூட பொதுச் சமூகத்தின் முன் கொண்டுவரப்படாமலேயே போனது இன்னொரு துயரம். இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத சூழலில், பிடிபட்டவர்களைக் கடும் குற்றவாளிகளாக்கும் போக்கு, இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே வெளிப்பட்டது. முன்னாள் பிரதமர் கொலை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் பார்க்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும் விடுதலைக்கான சாத்தியம் என்பது எழுவருக்கும் மறுக்கப்பட்டே வந்தது. ராஜீவ் கொலை வழக்கின் அடுத்தடுத்த நிலைக் குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்ட நிலையில், 26 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் சிறையிலேயே வாட வேண்டியிருப்பது இங்கு ஒப்பிடப்பட வேண்டியதாகிறது.

இந்நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உட்பட பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் ஒருமித்த முடிவை எடுத்திருப்பது ஆக்கபூர்வமான விஷயம். 2014-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய துணிச்சலான சட்ட மன்றத் தீர்மானம் இங்கு நினைவுகூரப்பட வேண்டியது. மறைந்த முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. தமிழக அரசின் இந்தப் பரிந்துரையைத் தாமதிக்காமல் ஆளுநர் செயல்படுத்த வேண்டும்.

இந்த எழுவரும் விடுவிக்கப்படுவது தமிழகத்தைத் தாண்டியும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னெடுக்கும் மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும். அது என்னவென்றால், சிறைகளில் உரிய விசாரணை இல்லாமலும் இந்த எழுவரைப் போலத் தொடர் மேல்முறையீடு, ஊடக கவனம், அரசியல் அழுத்தம் இல்லாமலும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கான கைதிகளின் எதிர்காலம் மீதான கரிசனம்.

விசாரணைகளை விரைந்து நடத்தி நீதி வழங்கும் அமைப்பாக இன்னும் நம்முடைய நீதித் துறை வளரவில்லை. நாடு முழுவதும் விசாரணைக் கைதிகளாக 2.8 லட்சம் பேர் சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய நீதிக் கட்டமைப்பின் மிக மோசமான நிலை என்றே இதைச் சொல்ல வேண்டும். நீதித் துறை விசாரணைக்காக சாமானியர்கள் கொடுக்கும் விலை இந்நாட்டில் இன்னும் கொடூரமானதாகவே இருக்கிறது. அவர்கள் மீதான கரிசனத்தின் தொடக்கப்புள்ளியாக இந்த எழுவரின் விடுதலை அமையட்டும்.
கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசு விழிக்கும்: ஐகோர்ட் நம்பிக்கை

Added : செப் 16, 2018 02:34

சென்னை, 'கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விழித்து எழுந்து, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றம்நம்பிக்கை தெரிவித்துள்ளது.மாவட்ட நுாலக அதிகாரிகளாக பணியாற்றி வந்த, மணிகண்டன் என்பவர் உட்பட சிலர், 'கிரேடு - ௧' மற்றும், 'கிரேடு - ௨' நுாலகர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, ௨௦௧௫ம் ஆண்டில், பொது நுாலக இயக்குனரகம் பிறப்பித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதன் வாயிலாக, மாவட்ட நுாலக பணியில் இருந்து, மாநில கல்வி பணிக்கு மாறி விட்டோம். சீனியாரிட்டி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம், எங்களை பாதிக்காது. எனவே, பதவி இறக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டது, தற்காலிக அடிப்படையில் தான்; அதனால், மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், மற்றவர்களை விட, ஜூனியர் நிலையில் மனுதாரர்கள் உள்ளனர்' என, கூறப்பட்டது.இதையடுத்து மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடன், உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:நுாலகத்துறை, ஒரே பிரிவாக இயங்க துவங்கிய பின், கிரேடு - ௧ நுாலகர்களாக பணியாற்றிய சிலர், கிரேடு - ௩க்கு மாற்றப்பட்டனர். இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. கால தாமதமின்றி, பணி விதிகளில் திருத்தம் கொண்டு வர, தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.கடந்த, ௧௯௮௧ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, நேரடி தேர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித் துறையில், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் சேர்ந்து விட்டனர். பதவி உயர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் வரவில்லை. அதனால், இவர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பதவி இறக்கம் செய்த உத்தரவும், ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, ௨௫ ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை வழங்கப்பட வேண்டும்.இந்தப் பிரச்னையை, மாநில அரசும், அதிகாரிகளும் கையாண்ட விதத்தில், எங்களுக்கு திருப்தி இல்லை. நுாலக துறையை, ஒரே பிரிவாக கொண்டு வர, ௧௯௮௯ல், கொள்கை முடிவு எடுக்கப்பட்டும், ௧௭ ஆண்டுகளுக்கு பின், ௨௦௦௬ல் தான், இடைக்கால விதிகள் ஏற்படுத்தப்பட்டன. கால தாமதமின்றி, விதிகளை உருவாக்கும்படி, தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.இருந்தும், விதிகளை உருவாக்க, அரசுக்கு, ௧௭ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால், மனுதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர். அரசு இயந்திரத்தின் செயல்பாடு, வேதனை அளிக்கிறது. அரசு இயந்திரம் கடமை தவறுவதால், பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிக்காக வழக்கு தொடுப்பதும், அதனால், நீதிமன்ற நேரம் வீணாவதும் நடக்கிறது.இனிமேலாவது, கும்பகர்ண துாக்கத்தில் இருந்து, அரசு விழித்து எழும் என, நாங்கள் நம்புகிறோம். நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தாமதமின்றி பின்பற்றினால், இதுபோன்ற வழக்குகளை, எதிர்காலங்களில் தவிர்க்கலாம்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

NEWS TODAY 01.07.2026