Sunday, September 16, 2018

வியர்வை வடிவில் வெளியேறும் ரத்தம்! - கிருஷ்ணகிரி அர்ச்சனாவுக்கு என்ன நேர்ந்தது?

ஜெ.நிவேதா

``ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும்" குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அர்ச்சனாவுக்கு உடலிலிருந்து வியர்வை வடிவில் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்பட்டது. உள்ளூர் மருத்துவர்களால் ரத்தம் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறியமுடியாததால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் அர்ச்சனா.



அர்ச்சனாவின் தற்போதைய நிலை குறித்து, அவரின் தந்தை நாகராஜிடம் பேசினோம். ``ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருதடவை அர்ச்சனாவுக்கு வியர்வை வெளியேறுறமாதிரி காது, கண், மூக்கு பகுதிகளைச் சுற்றி ரத்தம் வெளிவந்துச்சு. சில தனியார் மருத்துவமனையில காண்பிச்சோம். ஆனா, என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை. எங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில அர்ச்சனாவை புதன்கிழமை அட்மிட் பண்ணோம். அன்னைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லாதான் போச்சு. அடுத்தநாள் வியாழக்கிழமை இரவுல மட்டும், பதினேழு முறை கண், காது, மூக்கு, கைன்னு உடம்போட எல்லா பக்கமுமிருந்து ரத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. வெள்ளிக்கிழமை காலையிலும் சிலதடவை ரத்தம் வந்துச்சு.

`இப்படி ரத்தம் வெளிவரதுனால, பாப்பாவோட உடம்புல எந்தப் பாதிப்பும் ஏற்படலை, அதனால பயப்படாதீங்க'ன்னு டாக்டர்லாம் சொல்லியிருக்காங்க. ஒருகட்டத்துல, 'ரத்தம் வந்தா நீங்களே துடைச்சுவிட்டுக்கோங்க'னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அவளும், ரொம்ப நார்மலா இருக்கா. நல்லா விளையாடுறா, சாப்பிடறா, தூங்குறா... இன்னைக்கு (சனிக்கிழமை) காலையிலருந்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், மூளைக்கான பரிசோதனைகள்னு சொல்லி நிறைய பரிசோதனைகள் செஞ்சாங்க. குழந்தைக்கு மட்டுமில்லாம, எனக்கு, என் மனைவிக்கு, எங்களோட மற்ற இரண்டு மகள்களுக்கும் பரிசோதனைகள் செஞ்சாங்க. எல்லாமே நார்மல்னு சொல்லிட்டாங்க. இப்பதான், ஓரளவுக்கு திருப்தியா இருக்கு. திங்கள்கிழமையும் ஏதோவொரு பரிசோதனை இருக்காம். எல்லாம் முடிஞ்சபிறகு, ரிப்போர்ட்டை பார்த்துட்டு, `பாப்பாக்கு வந்திருக்கிறது என்ன நோய்'னு உறுதியா சொல்லறதா சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு முறை அவ உடம்புல இருந்து ரத்தம் வரும்போதும், எங்களுக்கு உயிரே போய்டுது. ஒரே ஒரு ஆறுதல் அவளுக்கு வலி, சோர்வு, ரத்த எண்ணிக்கை குறைவுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை. திங்கள்கிழமைக்காக காத்திருக்கோம்" என்கிறார் ஏக்கத்துடன்.

   அர்ச்சனாவின் நிலை குறித்து குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் சீராலரிடம் பேசினோம். ``அர்ச்சனா இப்போது கண்காணிப்பில் (Observation) இருக்கிறாள். ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும். சிலருக்கு வியர்வை வெவ்வேறு நிறத்தில் வெளிவரும். க்ரோம்ஹிட்ரோஸிஸ் (Chromhidrosis) என்ற பிரச்னையாக இது இருக்குமோ என்றும் பரிசோதிக்கிறோம். 'த்ரோபாஸ்டினியா' (Thrombasthenia) என்ற பாதிப்பாக இது இருக்கலாம் என கிருஷ்ணகிரியில் சிகிச்சை செய்த சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே, அதற்கான பரிசோதனைகளையும் செய்ய இருக்கிறோம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, அடுத்த வார தொடக்கத்தில் என்ன பாதிப்பு என்று உறுதிசெய்யப்படும்" என்றார்.



நம் முதல் நண்பன்... இன்னும் நம்முடன் நட்போடு இருக்கிறாரா?!

சக்தி தமிழ்ச்செல்வன்

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும் போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பருக்கு தானே.



தனிமை நிரம்பிய
ஆண்களின்
பிற்பகுதி வாழ்க்கையில்
நண்பர்கள் தருகிற
வெளிச்சத்தை
வேறு யாராலும் தர முடிவதில்லை!

- வண்ணதாசன்.

உங்கள் வாழ்வின் சிறுபிராயத்தில் அறிமுகமான உங்களின் முதல் நண்பனை/தோழியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எந்தக் கனவுகளும், எதிர்பார்ப்புகளும், வாழ்வு குறித்த பயமுமற்ற அந்தச் சிறுவயதில் உங்களின் எல்லா முழுமுதற் சேட்டைகளிலும் உடனிருந்த அந்த நண்பன், இப்போது உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? சிலருக்கு தொடர்பில் இருக்கலாம். பலருக்கும் அந்த நண்பனின் பெயர் சட்டென நினைவில் வராமலிருக்கலாம்.




சமூக வலைதளங்களின் சாத்தியங்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், அவரை உங்களால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். அந்த நண்பரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல்கூடபோயிருக்கலாம். காலத்தின் பயணத்தில் பின்னோக்கி விரையும் மரங்களைப்போல பல உறவுகள் கணநேரத்தில் மறைந்துவிடும் துர்ப்பாக்கியமான காலமிது.

பால்யத்தில் தொடங்கிய உறவுகளின் கண்ணி, காலத்தால் அறுபடாமல் பத்திரப்படுத்திவைத்திருக்கும் வரம்பெற்ற பாக்கியவான்கள் வெகுசிலரே. சக்கரம் கட்டிக்கொண்டு காலம் விரைகையில் யதேர்சையாக `ஹேய்... நீ அவன் (அவள்)தானே?!' எனச் சிலாகித்து சில நிமிடம் உரையாடிப் பிரிந்தவுடன், அன்றைய இரவின் சாளரங்கள் முழுக்க தொலைந்த நினைவுகளின் பனிக்காற்று நிறைந்து கண்கலங்கும்தானே. மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர ஆக்கிரமிக்கும் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்றல்லவா அது. வாழ்வில் சரிபாதிக்கும்மேலாகக் கடந்துவிட்ட நபர் ஒருவர், தன்னுடைய 5 வயதிலிருந்து 10 வயது வரை நண்பராக இருந்து பிரிந்த ஒருவரை 60 வருடம் கழித்துச் சந்தித்திருக்கிறார்.



சென்னையின் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பெற்றோர்களாகிவிட்ட தங்கள் பிள்ளைகளால் அனுப்பப்படும் பணத்தில் தங்களின் எஞ்சிய காலத்தை அசைபோடும் தாய்-தந்தையர்களால் அந்த இல்லம் நிறைந்திருக்கிறது. தனிமையும் கடந்து வந்த வாழ்வு பற்றிய நினைவுகளும்தான் முதியோர் இல்லவாசிகளின் சொத்து. ஏதாவதொரு பத்திரிகையை அசைபோட்டபடி தொடங்குகிறது அவர்களது நாள். பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் புதிதாக அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது பத்திரிகைகளில் தென்படும் படங்களைப் பார்த்தபடி பக்கங்களைக் கடக்கிறார்கள். அவர்களின் மூன்று வேளை உணவுகூட ஏதோ மாத்திரை விழுங்குவதற்கான முன்னேற்பாடாக மட்டுமே மாறிப்போனது. உடன் இருப்பவர்களிடம் தங்களின் சொந்தக் கதையை மாறி மாறிப் பகிர்ந்துகொள்கின்றனர். அதன்பொருட்டு ஒருவரின் கதை மற்றவருக்கும் மனப்பாடமாகிவிடுகிறது. பக்கத்து அப்பார்ட்மென்டில் எங்கேயாவது குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டால், விமானத்தைப் பார்க்கும் தென்கோடிக் கிராமத்து சிறுவன்போல பரவசமாகிறார்கள். அப்படி தனது வாழ்நாளைக் கழித்து வந்தவர், புதிதாக வந்த ஒரு முதியவரிடம் தன் கதையைக் கூறியிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட ஏதோ இனம்புரியாத ஓர் இணக்கம் அவரிடம் தொடர்ந்து கதைக்கவைத்திருக்கிறது.



இருவரும் தங்கள் கதைகளைப் பேசியதில் இருவரின் உரையாடலிலும் ஒரே கிராமத்தின் புழுதிவாசம் நிறைந்திருந்ததை உணர்ந்தனர். சிறுவயதில் உற்ற நண்பர்களாக ஊருணிகளில் மீன் பிடித்துத் திரிந்த சித்திரம் அவர்கள் கண்களில் கண்ணீராய்க் கசிந்தன. மீசை முளைக்காத வயதில் கடைசியாகச் சந்தித்த நண்பனின் நரையைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக முகச்சுருக்கங்களுக்கு மத்தியில் புன்னகை அமர்ந்துகொண்டது. அன்பு, பாசம் என எதுமின்றி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவதைப்போல் வந்து சந்தித்துவிட்டு `பிளாஸ்டிக்' புன்னகையோடு கடந்துபோகும் உறவுகள் சூழ வாழும் மனிதருக்கு அந்த நண்பனின் உள்ளங்கை கடத்திய வெப்பம் அவரின் வாழ்நாள் நிம்மதியை மீட்டுக்கொடுத்தது.



இருவரும் தங்கள் தினங்களை நிறைவாகக் கடப்பார்கள் என்ற ஆசுவாசம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. அந்த முதியோர் இல்லத்தில் பலரின் முகத்திலும் ஏதோ ஒரு நிறைவின்மை தென்பட்டது. ஒரு நாளில் நாம் சந்திக்கும் பலரின் முகங்களின் அதே போன்றதொரு நிம்மதியற்றிருப்பதைப் பார்க்க முடியும். மனதின் சுவர்களில் படிந்திருக்கும் தீரா சோகங்களின் வெளிப்பாடுதான் முகத்தில் நிம்மதியின்மையைக் கொடுக்கும். மனதுக்கு நெருக்கமான யாரிடமாவது பகிராத வரை அவை மனதை அழுத்தி வருத்திக்கொண்டேதான் இருக்கும். முதியவர்களுக்கு இந்த நிலை இன்னும் கொடுமையானதாக அமையும்.

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும்போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பரைத்தானே. அதுபோலவே சிறுவயதில் நம் நண்பனிடமே பகிர்ந்திருப்போம். அந்த நண்பனிடம் இப்போது நாம் பகிர சொற்கள் உண்டுதானே.

சிங்கப்பூர் - திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை - வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo 


12/9/2018 12:03 Update: 12/9/2018 14:04


சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும்.

மேல் விவரங்களுக்கு Indigo இணையத்தளத்தை நாடலாம்.



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் - விமானச் சேவை ரத்து 


16/9/2018 8:56

விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் இருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலந்திற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று (செப்டம்பர் 16) காலை 7 மணிக்கு SQ247 விமானச்சேவை மெல்பர்னிலிர்ந்து (Melbourne) கிளம்பவிருந்தது.

பிற்பகல் 12.20 மணிக்கு அது வெலிங்டனைச் (Wellington) சென்றடையவிருந்தது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், விமான ஊழியர்களிடம் திடீர் இரத்தப் பரிசோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில், SQ247 விமானச்சேவையின் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது விமானியின் இரத்தத்தில் மதுபான அளவு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் இருவழிச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

விசாரணைகள் தொடரும் வேளையில் அந்த விமானி தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் அதிருப்தியைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்துத் தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.



HC orders compensation of Rs. 8 lakh for accidental fall from local train 

Legal Correspondent 

 
CHENNAI, September 15, 2018 00:00 IST

Holds that the victim’s family cannot be expected to produce his ticket

The Madras High Court has directed Southern Railways to pay a compensation of Rs. 8 lakh to the family of a passenger who died after an accidental fall from an electric train between Saidapet and Mambalam railway stations in Chennai in 2013.

The court held that the family could not be expected to produce his ticket (to establish his bona fide as a passenger) and that it was up to the railways to prove that he was a ticketless traveller.

Justice M.V. Muralidaran passed the order while allowing an appeal preferred by legal heirs of the deceased Srinivasan who was travelling between Tambaram and Beach stations on the fateful day. The appeal was filed against dismissal of their claim petition by the Railway Claims Tribunal, Chennai Bench on January 6, 2015 for want of proof that he was a bona fide traveller.

The judge agreed with the appellants’ counsel R. Parthasarathy that only the deceased would be in a better position to state whether he had purchased a ticket or not and that the family could not be denied the statutory compensation just because a ticket was not found in his pocket though it contained Rs. 2,510 in cash.

Stating that a person who had so much of cash in pocket would not have travelled without purchasing a ticket that would have cost Rs. 15 to Rs. 20, the judge said the general presumption of every passenger being a bona fide traveller would have to be thwarted only by the railways by producing adequate evidence to prove that he/she had not purchased a ticket.

Facts and circumstances

“When a person dies in an accident by falling down from train, it is not possible for the legal heirs to produce the ticket or valid authority to travel in the train. Depending upon the facts and circumstances of a given case, the Tribunal and/or the Appellate Court infers about the deceased being a bona fide passenger.

“In the present case, facts and circumstances prima facie indicate that the deceased was a bona fide passenger who lost his life in the railway accident,” the judge observed. Further, he took note of the fact that the quantum of compensation for accidental deaths during train travel had been increased from Rs. 4 lakh to Rs. 8 lakh with effect from January 1, 2017.

The present appellants were entitled to the enhanced amount along with interest at the rate of 7.5% per annum from the date of claim, he ordered.
IndiGo launches daily service to Singapore 

Special Correspondent 

 
Tiruchi, September 16, 2018 00:00 IST

IndiGo, on Saturday launched non-stop daily services on the Tiruchi-Singapore-Tiruchi sector. This is the first international flight service of the private airline, which is already operating to domestic destinations from the city.

Flight (No.6E-43) will depart from Tiruchi at 6.40 p.m. and reach Singapore at 1.45 a.m.

In the return direction, flight (No.6E-44) will depart from Singapore at 2 p.m. and reach Tiruchi at 3.55 p.m. The airline would operate an Airbus A320 aircraft on the sector.

The new flights are designed to cater to business and leisure travellers who are constantly on the lookout for new and affordable flying options. Customers can plan their travel by booking tickets through our websitewww.goindigo.inThe airline also launched a service on the Kolkata-Singapore-Kolkata sector on Saturday.

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்!!!

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)*

*(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)*

*(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)*

*(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)*

*(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)*

*(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)*

*(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)*

*(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)*

*(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)*

*(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm] ‪+91 94426 43238‬: அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

Posted by SSTA

NEWS TODAY 03.07.2026