Sunday, September 16, 2018

Chennai police help American woman tourist return home 

By NT Bureau Published on Sep 15, 2018 04:54 PM IST


Kela Marine Nelson

Chennai: The city police found a woman tourist from the US losing her passport and made arrangements to help her get back home.

According to the police, Kela Marine Nelson (26), an American citizen allegedly married to Vimal, a local, was staying at Velacheri.

But, she was found by the Kanchipuram police with her passport missing on 12 September.

Sources said Vimal lost his job a couple of days ago, took Kela to Kanchipuram and 'abandoned' her. She was later found by the locals, who informed the police.

The police said Kela was not sure where Vimal's house was in Velacheri. She told the police that she was looking for a job and lived in a lodge in Kanchipuram.

She has been in India for the past two years and married a year ago.

Kela told the police that the duo was living in a multi-storeyed apartment at Velacheri and she did not know about his whereabouts for the past few days.

The police said she wanted to return to USA. "We shifted her to a shelter in Panayur, ECR. Subsequently, we contacted the US embassy and she travelled to Florida Friday," the police added.
Bike thief who learnt from YouTube held Google PlusGmailPinterestLinkedin Bellie Thomas Bellie Thomas, DH News Service, Bengaluru, Sep 16 2018, 00:28am ist updated: Sep 16 2018, 01:12am ist A 23-year-old PUC dropout, who st...

Read more at: https://www.deccanherald.com/city/thief-who-learnt-youtube-held-692875.html

HBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? விரிவான விளக்கம்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %  
50,001 முதல் 1,50,000 வரை : 7%  
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%  
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. 
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். 
யாரெல்லாம் கடன் பெறலாம்?: 
சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். 
கடனின் பல்வேறு பிரிவுகள்: 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று. 
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம். 
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு. 
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம். 
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை. 
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம். 
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம். 
வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும். 
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் ) 
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு 
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று 
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion ) 
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று 
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம் 
மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும். 
முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும். 
இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். 
ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். 
ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். 
இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும். 
வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
சிறப்பு குடும்ப நலத்திட்டம்: 
வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும். 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
வாழ்ந்து காட்டுவோம்: அறிவுரை வேண்டாம் அன்பே போதும்

Published : 09 Sep 2018 13:04 IST


எல். ரேணுகா தேவி




உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது. தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முடி உதிர்வால் உயிரிழந்த மாணவி

உலகம் முழுவதும் வருடத்துக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 2005 முதல் 2015 வரை 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-ல் மட்டும் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் 14 முதல் 30 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முடி உதிர்தல் பிரச்சினையால் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்கள் என்றாலே அழகாகவும் நீளக் கூந்தலுடனும் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் நிர்ப்பந்தம்தான் அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணம். தனது கூந்தலை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துகொண்ட பிறகு அந்த மாணவிக்கு அதிக அளவு முடி உதிரத் தொடங்கியுள்ளது. எங்கே தனக்குத் தலை வழுக்கையாகிவிடுமோ என்ற பயத்தால் கல்லூரிக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இளைஞர்கள் மனத்தளவில் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த மாணவியின் மரணம் சாட்சியாக இருக்கிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நொடிப்பொழுது மனநிலையைக் கடந்துவருவதில்தான் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“இனிமேல் தன்னால் வாழவே முடியாது என நினைப்பவர்கள்தாம் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள். வேறு சிலர் தங்களுடைய கஷ்டத்தைக் கத்திப் பேசியோ அழுதோ வெளிப்படுத்துவார்கள்.


மனதுக்குள் இருப்பதை இப்படி ஏதாவது ஒருவகையில் நெருக்கமானவர்களிடமோ நம்பிக்கைக்குரியவர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்தால் என்றாவது ஒருநாள் அது பிரஷர் குக்கர்போல் வெடித்துவிடும். இதுபோன்ற நேரத்தில்தான் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் விஷயம்கூட, மனத்தளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கலாம்.

அதைக் கண்டறிந்து அவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். கஷ்டங்களை உடனுக்குடன் பேசிவிட்டாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும்” என்கிறார் அவர்.

காதுகொடுத்துக் கேளுங்கள்

தற்கொலை முயற்சிக்கான ஆரம்ப கட்டம் மன அழுத்தம்தான். பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை நாடிச் செல்வார்கள். அந்தத் தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்துக்கான தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. “மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய வட்டத்திலிருந்து விலகிச் செல்ல நினைப்பார்கள். தூக்கமின்மை, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்றவை அதற்கு உதாரணம்.

ஒரு சிலர் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் தென்பட்டால் அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. அதேபோல் யாராவது தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டால் உடனே

அறிவுரை வழங்காமல் கொஞ்சம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டுப் பழக வேண்டும். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிடும், இதுவும் கடந்துபோகும்’ என்பது போன்ற வார்த்தைகளை அறிவுரை என்ற பெயரில் மன அழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். ‘உனக்கு எப்ப கஷ்டமாக இருந்தாலும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்’ எனப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் கவுன்சலிங் வழங்கிவருகிறோம். எங்களுடைய அமைப்புக்கு 044-24640050, 044-24640060 ஆகிய எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். பேசும் நபர் யார், எங்கிருந்து பேசுகிறார் போன்றவற்றை நாங்கள் கேட்கமாட்டோம். அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான ஆலோசனையை மட்டுமே வழங்குவோம்” என்கிறார் ‘சிநேகா’ தற்கொலைத் தடுப்பு அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவரான இளங்கோ. கேட்பதற்குக் காதும் சாய்ந்துகொள்ள தோளும் இருந்தாலே பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடும்.
வானவில் பெண்கள்: இங்கே பூண்டு உரித்துத் தரப்படும்

Published : 16 Sep 2018 11:01 IST


அன்பு

 

வாணலியில் கடுகு பொரிந்துவிடுவதற்குள் அடுத்ததாகப் போடவேண்டிய பூண்டை அவசர அவசரமாகத் தரையில் நசுக்கி உரிக்கும்போதுதான் பூண்டு உரிப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்று தெரியும். யாராவது பூண்டு உரித்துக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா மகளிர் சுயஉதவி குழுவினர்.

இந்தக் குழுவில் 27 பேர் உள்ளனர். இவர்கள் கேட்டரிங், மெஹந்தி, சமோசா விற்பனை, தேநீர் விற்பனை ஆகியவற்றுடன் தற்போது பூண்டு உரித்துக் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகின்றனர்.

“நான் டிப்ளோமா நர்சிங் முடித்ததும் கல்யாணமாகிவிட்டது. இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். வீட்டுவேலை முடிந்த பிறகு கிடைக்கிற நேரத்தில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம் என்பதற்காகத்தான் மகளிர் குழுவைத் தொடங்கினேன். மற்ற குழுக்களைப் போல் அல்லாமல் குழுவினரின் முயற்சியால் சிறு நிறுவனங்களில் ஆர்டர் பிடித்து, குழு உறுப்பினர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலைத் தொடங்கலாம் என முடிவுசெய்தோம்.


தற்போது கோயில் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன மீட்டிங், வீட்டு விசேஷங்களுக்கு மெஹந்தி போடுவது, சமையல் போன்ற சிறு ஆர்டர்கள் கிடைக்குது. அப்படித் தோன்றியதுதான் பூண்டு உரித்துக் கொடுக்கும் வேலை. இதற்காக சூப்பர் மார்க்கெட்களுக்குப் போய் ஆர்டர் பிடித்தோம். ஒவ்வொரு முறையும் கடை கடையா ஏறி இறங்க முடியாது. அப்பதான் முகநூலில் எங்கள் குழுவின் சார்பில் பூண்டு உரித்துக் கொடுக்கப்படும்னு என் தம்பி மனைவி ஃபேஸ்புக்ல எழுதினாங்க. அதைப் பலர் பார்த்ததும் இப்ப நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு” என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாக்யலட்சுமி.

இவர்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோவுக்கும் மேல் பூண்டு உரித்துத் தருகிறார்கள். இதில் குறைவான தொகையை மட்டுமே லாபமாகப் பெறுவதால் நிறைய ஆர்டர் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் அந்தச் சொற்ப லாபம், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஆர்டர் எடுத்து கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

“அரசு வங்கியில் லோன் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் கப், தட்டு, சானிட்டரி நாப்கின் இப்படி நிறைய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பாக்யா.

பாக்யலட்சுமி

தொடர்புக்கு: sriannapoorna1982@yahoo.com
இனிப்பு தேசம் 22: மனசு இனிக்கச் சாப்பிடுவோம்…

Published : 15 Sep 2018 16:10 IST

மருத்துவர் கு. சிவராமன்





இரவு விருந்துப் பழக்கம், கடந்த இரு தலைமுறைகளில் பற்றிக்கொண்ட புதுப் பழக்கம். இந்தப் பழக்கம் நம் நலத்திலும் மனத்திலும் நிறையவே தீங்குகளை விதைத்துவிட்டது. சனிக்கிழமை இரவு தமிழகத்தின் அத்தனை நகர்ப்புறத்து உள்வட்ட சாலைகள், குறிப்பாக, உணவு விடுதிகள் உள்ள சாலைகளில் பயணிக்க வழியின்றி, ‘பார்க்’ செய்யப்பட்ட வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

அன்று இனக்குழுக்களாகத் திரிந்தபோது, இரவில் நிலவொளியில் கள்ளருந்தி ஆடிக் களித்த வரலாறிருந்தால்கூட, அந்த வாழ்க்கையின் உடலுழைப்பையும் அப்போதிருந்த தேக வன்மையையும் இப்போதைய நம் உடலோடு கனவிலும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

இரவு உணவு என்பது ‘இயலாதவன் உணவு போல’ நலிந்து, குறைவாக இருக்க வேண்டும் என்பது நம் மரபு சொன்ன உணவு விதி. ஆனால், ‘இரவுதான் களிப்புக்கான நேரம் உள்ள பொழுது’ என சந்தை நாகரிகம் மொத்தமாய் நம்மை மாற்றிவிட்டது. சிறு, எளிய உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, பேருண்டியாய், அதிக கலோரி உணவாக மாறிப்போனது. இனிப்பு நோயின் பெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம் இது.

இரவில் எதைச் சாப்பிடலாம்?

அநேகமாக, சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் படுக்கப் போகும் பழக்கமுள்ளோருக்கு இரவு உணவு முதலில் குறைந்த கலோரியைத் தருவதாக இருக்க வேண்டும். இரவு, சந்திரனுடைய ஆட்சி. உடல் பிரபஞ்சத்தின் குளிர்ச்சியிலிருந்து தன்னைப் பாதுகாக்க, சற்று வெம்மையாகத் தன்னை வைத்திருக்கும் நேரம். அப்போது நாம் சாப்பிடும் உணவு கண்டிப்பாகக் கூடுதல் வெம்மையைக் கொடுத்துவிடக் கூடாது. கூடுதல் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடாது.

கொள்ளுப்பயறு, எண்ணெய்யில் பொரித்தது, கோழிக்கறி, பரோட்டா இவை கொஞ்சம் சூட்டைத் தருபவை. தர்பூசணிப்பழம், வெள்ளைப்பூசணிக் கூட்டு, நீர்க்காய்கறிகள், புளிப்பான பழங்கள் போன்றவை குளிர்ச்சியைத் தருபவை. இரண்டுமே ஆகாது. வெம்மையும் குளிர்ச்சியும் அளவாய்த்தரும் இட்லி ஆகச் சிறந்தது.

அதுவும் குறிப்பாக வெள்ளை அரிசி இட்லிக்குப் பதிலாய், சிறுதானியமான குதிரைவாலியில் செய்த இட்லி சிறந்தது. தானியங்களை அரைத்து மாவாக்கிவிட்டால் அது முழு தானிய உணவு அளவுக்குச் சிறந்தது இல்லை என்றாலும், பிற ‘ரெடி டு ஈட்’ உணவு வகைகளைக் காட்டிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கோதுமை உணவு வகைகள், உடற்சூட்டைத் தரக்கூடியவை. குறிப்பாக மைதா சேர்ந்த உணவு வகைகள். குறைவான அளவில் முழு, பட்டை தீட்டாத கோதுமை உணவை எடுப்பதை (வாரம் ஒரு நாள் போல) ஏற்றுக்கொள்ளலாம். அதையும் கோதுமை ரவை கிச்சடி (பல காய்கறிகளுடன்) என எடுப்பது நல்லது. வேகவைத்த காய்கறிகளுடன், கொஞ்சமாய் ஞவரை அரிசிச் சோறு, மோரும் வெங்காயமும் சேர்த்த கம்பங்கூழ், முடக்கறுத்தான் தோசை, பாலக் கீரை போட்ட புல்கா சப்பாத்தி என இரவு உணவு இருப்பது சிறப்பு.

எந்தத் தானிய மாவாக இருந்தாலும், கூடவே நிறைய நார்ச்சத்துள்ள வேகவைத்த காய்கறியைச் சேர்க்கும்போது, இரவில், தானியத்தின் சர்க்கரை, ரத்தத்தில் வேகமாகக் கலக்காது.

இரவு உணவுக்குப் பின்னர்?

இரவு உணவுக்குப் பின், மெல்ல ஒரு குறு நடை (20-30 நிமிடங்கள்) நடப்பது நன்று. சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவது, ‘டெஸர்ட்’ எனச் சொல்லி, உணவுக்குப் பின்னர் பழத்துண்டுகள், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்களை உணவுக்கு முன்னதாக மாலை 6-7 மணி போல சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் மா, பலா, வாழை இரவில் கண்டிப்பாக வேண்டாம்.

சர்க்கரை வியாதியின் வலியில்லா மாரடைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் ஏற்படுவதற்கு, இரவில் சாப்பிடும் மதுவும் பெருவிருந்தும் மிக முக்கியக் காரணம். விசேஷ நிகழ்வுகளில் அவசியமில்லாத, அளவற்ற இனிப்புகளுடன் கொண்டாடப்படுவது இங்கே பெருகிக்கொண்டிருக்கிறது.

இலையில் மூன்று இனிப்பைப் பரிமாறுவதும், பெருவாரியான உணவைத் தூர எறிவதும் நாம் சமூகத்துக்குச் செய்யும் பெருங்குற்றம். வளர்ந்த ஒரு நாட்டில், ஒரு நாள் தூர எறியும் உணவின் அளவு சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள 21 ஏழை நாடுகளின் ஒரு வருட உணவாம்!

விருந்தில் வீட்டுச் சாப்பாடு!

சர்க்கரை நோயாளிகள், ‘பஃபே’ உணவை இரவில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த காசுக்கு அல்லது செய்த மொய்க்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் என 15 வகையில் ஒவ்வொன்றிலும் ஒரு கரண்டி என எடுத்தாலும் முடிவில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாம் சாப்பிட்டிருப்பது சுமார் 1,100 கலோரியைத் தாண்டியிருக்கும். இனிப்பு நோயர், திருமணத்துக்குப் போனால், ‘நல்லா இருங்க’ என மணமக்களிடம் கைகுலுக்கிவிட்டு, சமர்த்தாக வீட்டில் வந்து சாப்பிடுவது சாலச் சிறந்தது.

கடற்கரை வரை இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் காதல் நிரம்பப் பயணித்து, சற்று அலையோடு விளையாடி, காற்றோடு உறவாடி, கொஞ்சம் கடல் மணலில் ஓடி, கடைசியாக வீட்டில் சுட்ட சோளப் பணியாரத்தை, கெட்டியான காரச் சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்… அடடா, ஏகத்துக்கு இனிக்கும். ரத்தத்தில் இல்லை, மனத்தில் மட்டும். ஆம் நண்பர்களே… விருந்தில் இனிக்க வேண்டியது நா அல்ல. மனசு!

(தொடரும்)

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மனசு போல வாழ்க்கை 23: லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

Published : 25 Aug 2015 12:06 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே!

மன விகாரம்

புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள் யாவும் அக உலகில் நிகழ்ந்த மாற்றங்களினால்தான். நீங்கள் பார்க்கும் அனைத்தும் நீங்கள் உருவாக்கியவை. அல்லது பிறர் உருவாக்கும்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தவை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பங்கு உள்ளதை உணருங்கள். அதனால் எதையும் குறை சொல்வதில் பயன் இல்லை.

“எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை” என்று சொல்வதும் ஒரு மன விகாரம்தான். உலகில் அனைத்தும் உள்ளது. எதைப் பார்ப்பது, என்ன செய்வது என்பதெல்லாம் நம்மிடம்தானே உள்ளது?

மாற்றி யோசி

என் நண்பர் ஒருவர் இளையராஜாவின் தீவிர ரசிகர், என்னைப் போலவே. இளையராஜாவின் அதிகம் பிரபலமாகாத அற்புத பாடல்கள் நிறைய உள்ளன என்று ஒருநாள் பேசினோம். பின் ஒரு 20, 25 பாடல்களை பட்டியல் போட ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடத்தில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் முழுவதுமாக நனைந்தோம். எல்லாம் கற்பனையில் தான். எல்லா பாடல்களையும் கேட்ட திருப்தி.

அவர் ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்க வந்தவர் அவர் எழுந்து போகும்போதும் அந்தப் பிரச்சினை எள்ளளவும் குறைவில்லை. ஆனாலும் உற்சாகமாக கிளம்பிப்போனார் அவர். இது தான் மனதின் செயல்பாடு.

மிக மோசமான மன நிலையிலும் எண்ணத்தை திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி யோசிக்க முடியும். முயற்சிதான் முக்கியம். பிரச்சினை முடிந்த பின்தான் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகில் யார் நிம்மதியாக நடமாட முடியும்? அப்படியே ஒரு பிரச்சினை முடிந்தாலும் அடுத்தது வராமல் போய்விடுமா என்ன?

இசையும் கவிதையும் ஓவியமும் விளையாட்டும் மனிதனை எந்த நேரத்திலும் இளக வைக்க உதவுகின்றன. மனம் ஒன்றிச் செய்யும் எந்த செயலும் மனக்கவலையிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை. இதை இப்படிக் கூட புரிந்துகொள்ளலாம்: மனக் கவலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு செயலை மனம் ஒன்றிச் செய்தாலே போதும்! இதைத் தான் ‘mindfulness’ என்று புத்த மதம் சொல்கிறது. மனம் லயித்துச் செய்யும் காரியம் மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

உழைப்பின் பயன்

ஒரு பிரச்சினை மனதை எதிர்மறையாகக் குவிக்கிறது. அதைச் சிதறடிக்க ஒரு சிறு நேர்மறை விஷயம் போதும். ஒரு குழந்தையின் சிரிப்போ, நகைச்சுவை துணுக்கோ, அந்நியரின் அர்த்தமற்ற செய்கையோ கூட போதும். அது பிரச்சினையிலிருந்து உங்கள் மனதை நொடிப்பொழுதில் வெளியே கொண்டு வந்து விடும்.

ஒரு கணவனும் மனைவியும் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி கேட்கிறது. கணவன் முகத்தை சரி செய்து கொண்டு போய் பார்க்கிறான். அடுத்த வீட்டு தம்பதி பொழுது போகாமல், அரட்டை அடிக்க இங்கு உரிமையாக கதவைத் தட்டுகிறார்கள். முகம் கழுவி வந்த மனைவி பிரமாதமாக உபசரிக்கிறாள். கணவனும் எதுவும் நடக்காதது போல மிக உற்சாகமாக நடந்து கொள்கிறான். சில நிமிடங்களில் சமூக உறவுகளுக்காக சொந்த சோகம் கிடப்பில் போடப்படுகிறது. இதுதான் நிஜம்.

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. சமூக உறவுகள் நிறைய உள்ளவர்களுக்கு சொந்த சோகங்களை கையாள்வது எளிமையாகிறது. அதே போல உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் மன உளைச்சல் அதிகம் தங்காது.

சந்தோஷமாக நடி

ஒரு இந்திப் படத்தில் வந்த உரையாடல் இது.

“நான் என் கணவனை பிரிய முடிவு செய்து பெட்டியைக் கட்டி வைத்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன்”

“அப்புறம் என்னாயிற்று?”

“அவன் வருவதற்குள் தூங்கிப்போய்விட்டேன். மறு நாள் எழுகையில் மனம் மாறிவிட்டது!”

இப்படித்தான் பல தீவிர முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்க கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளைச் சற்று தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.

சரியான மன நிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மன நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலன் தரும்.

சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you Make it!

பெரும் பிரச்சினையா? அதே எண்ணமாக இருக்கிறதா? ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். செய்வதற்கு எதுவுமில்லை; என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பது மட்டும்தான் வேலை என்றால் முதலில் மனதை திசை திருப்புங்கள்.

மனமும் நிலா போலதான்

பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பிடித்ததைச் செய்யுங்கள். பழைய அலமாரியை சுத்தம் செய்யுங்கள். முடி வெட்டிக்கொள்ளுங்கள். நிறைய நேரம் நிதானமாக குளியுங்கள். வண்டி ஓட்டும் போது பாட்டு பாடிக்கொண்டே செல்லுங்கள். காமெடி சீன் பாருங்கள். நீண்ட நாட்கள் பேசாத நண்பரிடம் பேசுங்கள். யூ டியூப் அல்லது டெட் வீடியோ பாருங்கள். தனி வாகனத்தில் செல்வோர் பொது வாகனத்தில் சென்று வாருங்கள். சுடோகு போடுங்கள். இது வரை செய்யாத ஏதாவது செய்யப்பாருங்கள். மனம் மாறும்.

மதி என்றால் நிலா என்றும் பொருள். மனம் என்றும் பொருள். மனமும் நிலா போலத்தான். வளரும். தேயும். முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும். ஒரு நாள் இருப்பது போல மறு நாள் இருப்பதில்லை. இந்த நிலையில்லாத தன்மையை புரிந்து கொண்டால் விதியை மதியால் வெல்வது சாத்தியமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


அடங்கா மாணவர்கள்; தீர்வா தண்டனைகள்?

Published : 11 Sep 2018 12:34 IST

முகமது ஹுசைன் 




பொதுவெளியில் மாணவர்களின் அத்துமீறல்களும் வன்முறைகளும் எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதே அளவு கண்டிக்கத்தக்கது தண்டனை என்ற பெயரில் அவர்களுக்குப் பொதுவெளியில் கொடுக்கப்படும் அவமானங்களும். தண்டனையின் நோக்கம் தவறின் வீரியத்தைக் குறித்த புரிதலை உண்டாக்குவதும்தான்.

அந்தப் புரிதல் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடி மாணவரை மேம்படுத்தும். இங்கே பெரும்பாலான தண்டனைகள் புரிதலுக்குப் பதில் அவமானத்தையும் பயத்தையும் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. 18 வயது மாணவனைக் குற்றவாளி என்று பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதும் அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், அதற்குப் பின்னான அவன் வாழ்வை அழித்துவிடாதா? அவனை ஒரு முழுநேர குற்றவாளி ஆக்கிவிடாதா?


‘பஸ் டே’யா ‘வன்முறை நாளா’?

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள் சென்னை வாசிகள் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த ’பஸ் டே’ சம்பவத்தின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறையின்போது, கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களைக் காவல்துறை தாக்கியது. கடந்த ஜூன் 18 அன்று கொண்டாடப்பட்ட ‘பஸ் டே’யில் சில மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு பூங்காவில் இருந்த இளம் ஜோடிகள் எல்லாம் கைதுசெய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர். மாணவிகள் மட்டும் அவர்களுடைய பெற்றோர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டனர். இன்று அந்த மாணவிகளின் நிலையோ அந்த ஆண்களின் நிலையோ என்ன என்பது யாருக்கும் தெரியாது.

வைரலான வீடியோ?

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று மாநகரப் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீளப் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டுகளில் பயணித்துள்ளனர். படியில் தொங்கியபடி தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு ‘ஜே’ என்று கோஷமிட்டபடி அவர்கள் பயணித்துள்ளனர். மேலும், சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி தீப்பொறி பறக்கச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வின் காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவியது.

தொடரும் அவமானங்கள்

காவல்துறை, 5 மாணவர் களைக் கைதுசெய்தது. கைதுக்குப் பின் அந்த மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தாக்கப்பட்டனர். அவர்கள் அழுது அரற்றினர். அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சிக் கதறினர். இவை கேமராவின் அகன்ற விழிகளுக்கு முன்பாக அரங்கேறின.

சடுதியில் அவர்களின் கெஞ்சல் வாட்ஸ் அப்பில் பரவியது. “அவனுங்க எல்லாம் மாணவர்களே இல்லை, பொறுக்கிப்பசங்க, பஸ்ஸுல பாட்டுப் பாடறது, புட் போர்டு அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் அவங்க வேலை. படிக்கிற வயசுலேயே கத்திய தூக்குற இவனுங்களை எல்லாம் போலீஸ் சும்மா விடக் கூடாது” என்பதே அதைப் பார்த்த பலரின் கருத்தாக எதிரொலித்தது. மாணவர்களின் அத்துமீறல்களும் அதற்காகப் பொதுவெளியில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் இன்றும் தொடர்வதை இந்த இரண்டு வீடியோக்கள் உணர்த்துகின்றன.

மாணவர்களின் பிரச்சினை என்ன?

சிறு வயது முதலே குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் தொடர்களும் திரைப்படங்களும் பலம் மிகுந்தவனையே நாயகனாகச் சித்திரிக்கின்றன. சண்டைக் காட்சி இல்லாத படம் அவர்களுக்குச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. தன்னை நாயகனாக மாற்றுவதற்கு, அறிவுக்குப் பதிலாக அவன் பலத்தையே நம்புகிறான்.


பிருந்தா ஜெயராமன்

அபாயகரமான கூட்டணி

கல்லூரிப் பருவத்தில் மாணவர் களுக்குப் பெரும்பாலும், குடும்பத்தைவிட நண்பர்களே பிரதானமாகிவிடுகிறார்கள். நட்புக்காக எதையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஒரு மாணவர் கல் எறிந்தால், மற்ற மாணவர்களும் கல் எறிகிறார்கள். ’நாயகனாக மாற வேண்டும்’ என்ற உந்துதலும் ’நட்பே பிரதானம்’ என்ற நிலைப்பாடும் ’குழு மனப்பான்மையும்’ மிகவும் அபாயகரமான கூட்டணி’ என்கிறார் மனநல மருத்துவர் பிருந்தா ஜெயராமன்.

“17, 18 வயதுகளில் இருக்கும் மாணவனுக்கு முன் பகுதி மூளை (Prefrontal Cortex) முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. இதனால் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பக்குவமும் தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை. அதேநேரம் அவர்களுக்கு மூளையில் இருக்கும் Amygdala முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எதையும் யோசிக்காமல் அவர்கள் செயல்படுவதன் காரணம் இதுதான்” என்கிறார் அவர்.

யார் தவறு இது?

சரி, தவறு என்று எதையுமே முழுமையாக முத்திரைகுத்திவிட முடியாது. நேற்று குற்றமாகக் கருதப் பட்டது இன்று சட்டரீதியாக நியாயமாக நிறுவப்படும்போது உலகம் அதைக் காலப்போக்கில் அங்கீகரிக்கும், ஏற்றுக்கொள்ளும். ஆக எது சரி, எது தவறு என்பதைச் சூழலே தீர்மானிக்கிறது.

அப்படியிருக்க, ஒரு சிறுவனை, இளைஞனைக் குற்றவாளி எனச் சொல்லிப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதும் முத்திரை குத்துவதும் எந்த வகையில் நியாயம்? இந்தச் செயல் அந்த மாணவனை நிஜக் குற்றவாளியாக்கிவிடும் ஆபத்து கொண்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பியவர்களின் இன்றைய நிலை இதைத்தான் சொல்கிறது.

நாமும் பொறுப்பு ஏற்போம்

மாணவர்களின் செயல்களுக்கு அவர்களை மட்டும் பொறுப்பாளராக்குவது முறையல்ல; பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தில் இருக்கும் நாமும் அவற்றுக்குப் பொறுப்பாளர்களே. வளர்ப்பின் குறைகளும் போதிப்பின் போதாமைகளும் சமூகத்தில் நீர்த்துப்போன ஒழுக்க விதிகளும் மாணவர்களைத் தவறு செய்யத் தூண்டிவிடும் ஊக்கிகள் என்பதை நாம் மறுக்க முடியாது.

அடித்து உதைத்து அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்குப் பதில், அன்புடன் அணைத்துப் பக்குவமாகப் பேசி, அவர்களின் வாழ்வை நாம் செழுமையாக்குவோம், மேன்மையாக்குவோம். நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

NEWS TODAY 03.07.2026