Monday, September 17, 2018

'ஆரிராரோ.. ஆராரிராரோ...' 18 ஆண்டுகளாய் காத்திருக்கும் மகள் : படுக்கையில் கிடக்கும் மகளுக்கான பாசப்போராட்டத்தில் தாய்

Updated : செப் 17, 2018 00:22 | Added : செப் 16, 2018 23:00




மதுரை: ''18 ஆண்டுகளாய் படுக்கையில் கிடக்கும் ஒரு மனுஷிக்கு இதை விட வேறு என்ன கஷ்டம் தான் வந்துவிடப் போகிறது,'' என கதறும் ஒரு தாய். ''அம்மாவின் குரலை ஒரு முறைகூட கேட்கவில்லை,'' என 18 ஆண்டுகளாக பதறும் மகள், என ஒரே குடும்பத்தில் மூன்று பெண்களின் சோக, பாசப்போராட்டம் நெஞ்சை பிழிகிறது.

வலியின் வாழ்க்கை :
 
குமரி மாவட்டம் பொன்மனை அருகே உள்ள இடைக்காட்டன்காலை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா,60. இவரது கணவர் சோமன். போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தார். இவர்களது மூத்த மகள் ஷோபா, 38. பிளஸ் 2 படித்திருந்த ஷோபாவிற்கும், அதே பகுதியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ரமேஷ்பாபுவிற்கும் 1998ல் திருமணம் நடக்க, மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.''எங்களுக்கு வாய்த்த இந்த கொடிய வாழ்க்கை உலகில் யாருக்கும் வாய்க்கக்கூடாது... இந்த வலிகளை தாங்கி தாங்கி இனி அழுவதற்கு என்னிடம் இனி கண்ணீரும் இல்லை,'' என தன் வலிகளை வார்தைகளாக்குகிறார் வனஜா...

''மகள் ஷோபாவின் பிரசவத்திற்காக எல்லோரும் சந்தோஷமாக குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2000 மார்ச் 3ல் கூடியிருந்தோம்.'சிசேரியன்' என்றார்கள். முடிந்ததும் அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சி. சில மணி நேரம் ஆகியும் இருவரையும் எங்களிடம் காட்டவில்லை. சண்டை போட்டு அறையின் உள்ளே சென்று பார்த்தால் மகள் ஜன்னியால் துடித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மாறிவிடும் என்றனர். உடல் அசைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டாள். மருத்துவ சிகிச்சையில் எங்கோ தவறு நடந்து விட்டது என்பதை மட்டும் எங்களால் உணர முடிந்தது. வேறு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அன்று அது நிஜமாகவே சிவராத்திரியாகவும் இருந்தது.

துரத்தும் மருத்துவம் : 

''நாகர்கோயிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது கோமா நிலை மாறுமா என்று எல்லோரும் ஏக்கத்தோடு காத்திருந்தோம். அவள் பெற்றெடுத்த மகளை (ஆதர்ஷா) அப்போது யாரும் கவனிக்கவில்லை. ஷோபாவுக்கு கபம் ஏறிவிட்டது. தொண்டை கழுத்து, பக்கவாட்டில் ஓட்டை போட்டு சிகிச்சை அளித்தார்கள். 40 நாட்கள் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

எங்களது மொத்த சம்பாத்தியமும் தீர்ந்தது. அங்கு இந்த சிலர் குழந்தை நன்றாக தானே இருக்கிறது. அவளை கவனியுங்கள் என சொல்ல எனது அக்கா ேஹமாவதி அங்கு பராமரித்தார். அதன் பின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி, நெய்யாற்றின்கரை தாலுகா மருத்துவனை என 6 மாதங்கள் மருத்துவமனை வாழ்க்கையானது.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நாங்கள் நலமாக்கிக் காட்டுகிறோம் என சில டாக்டர்கள் சொல்ல அவர்களது மருத்துவமனை என இப்படி பல ஆண்டுகளை கடந்தோம். 2012 ல் அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. பேத்தி ஆதர்ஷாவின் நிலையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கும். கடன் பிரச்னை, கஷ்டம் இப்படி எல்லாம் இழந்த நான் அப்பா குஞ்சன்பிள்ளை வீட்டில் அடைக்கலமானேன். அங்கு என்து அம்மா குட்டியம்மா, ஆதர்ஷாவை முழுமையாக அரவணைத்துக் கொண்டார். வீட்டில் ஷோபாவை கவனிக்கும் வகையில் சிறு வசதிகளை ஏற்படுத்தினோம்.

அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை : 

மகளின் இந்த நிலையை பார்த்து துவண்டுபோன எனது கணவர் சோமனும் 2003 ம் ஆண்டில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். மூன்றாவது நாள் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கடிதம் வந்தது. மருத்துவ சிகிச்சை தொடர்பாக தக்கலை நுகர்வோர் கோர்ட்டில் ஆதர்ஷாவின் அப்பா ரமேஷ்பாபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு தெரியாமல் வேறு பெண்ணை ரமேஷ்பாபு திருமணம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் பதிவானது. இந்த வழக்குகள் எல்லாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டன. நுகர்வோர் நீதின்றத்தில் ரமேஷ்பாபு தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு பதில் நான் ஆஜராக வேண்டிய நிலை வந்தது. இப்படி நீதிமன்றம், மகளின் மருத்துவம், பேத்தியின் தனிமை என மனசு முழுவதும் உடைந்து போனது.நெஞ்சம் உடைகிறது''ஷோபாவை கவனிப்பதில் உள்ள சிரமங்கள் சொல்லிமாளாது. இப்போது சாப்பிடுகிறாள். உணவு ஊட்டும் போது கையை கடித்து வைத்து கொள்வாள். அவை புண்களாகி, வடுக்களாகவும் மாறிவிட்டன. சிறு வயதில் மிகவும் அழகாக இருப்பாள்.

இப்போது பற்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. அவளை துாக்கி உட்கார வைக்க முடியவில்லை. எனக்கும் நெஞ்சு வலி, சுகர், பிரஷர் வந்து விட்டது. ஆதர்ஷாவின் பாசத்துக்குரிய எனது அம்மா குட்டியம்மாவும் இறந்துவிட்டார். சிலநேரம் ஷோபாவை நினைத்து கோபப்படுவேன். அதை பார்த்துவிட்டு ஆதர்ஷா 'எனது அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள்' என என்னிடம் கேட்டு அழுது கொண்டு குடியம்மா கல்லறையில் போய் உட்கார்ந்துவிடுவாள். அது என் நெஞ்சை அடித்து உடைத்தது போன்ற வலியை தரும். எனது கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. (என சொல்கையில், அருகில் இருந்து கேட்கும் நபர்களின் கண்களில் தண்ணீர் ஓடுகிறது). எனக்கு என் மகள் நலம்பெறுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என பேச்சை முடித்த போது, கல்லுாரிக்கு சென்றிருந்த ஆதர்ஷா வீட்டிற்குள் நுழைந்தார்.

மகளின் அவதாரம் :
ஆதர்ஷா தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நுாருல் இஸ்லாம் கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படிக்கிறார். தனது சோகங்களை தெய்வத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இதயத்தை கொண்டிருக்கிறார். ''குழந்தையாக இருந்து இதுவரையிலும் நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. வலிகளில் தான் வாழ்ந்துவருகிறேன்,'' என்றார். ஆறுதலாக இருந்த குட்டியம்மாவும் போய்விட்டார். அம்மாவுடன் சேர்ந்து அடிக்கடி 'செல்பி' எடுப்பதும், காதருகே பேசுவதும், சிரிக்கவைக்க முயற்சிப்பதுமாக இருக்கும் ஆதர்ஷாவுக்கு எதிர்காலம் பெரிய கேள்விக்குரியாகவே முன்னிற்கிறது.

அதிர்ந்த ஆதர்ஷா : 

தனது நிலை பற்றி ஆதர்ஷா அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கவர்னர் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது தான் கல்லுாரி முதல்வருக்கே ஆதர்ஷாவின் நிலை தெரிந்திருக்கிறது. தவறான சிகிச்சையால் தனது தாய் கோமா நிலையில் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷூக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 'ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், டாக்டர்கள் குழு அமைத்து பரிசோதிக்க வேண்டும். சிகிச்சையின் அடிப்படையில் குணப்படுத்த முடியுமா அல்லது கருணை கொலை செய்ய வேண்டுமா,' என செப்., 25ல் அறிக்கை தாக்கல் செய்ய செப்., 11ல் நீதிபதி உத்தரவிட்டார்.

'கருணை கொலை' வார்த்தையால் துடிதுடித்துப்போனார் ஆதர்ஷா. பள்ளி, கல்லுாரியில் பெறும் வெற்றிகளை வீட்டின் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் சென்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஆதர்ஷா, அந்த கோயில் முன் அழுது புரண்டார். அவரை ஆறுதல்படுத்தி தேற்றியுள்ளனர்.

தெய்வமே துணை : 

அம்மாவின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஆதர்ஷா பேசுகிறார்... அம்மாவை நான் தினமும் பார்க்கிறேன். ஆனால் அவரது குரலை ஒரு நாள் கூட கேட்டது இல்லை. அம்மாவின் தாலாட்டை கேட்க சின்ன வயசில் ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு நடனம் மீது ரொம்ப ஆசை. பல நிகழ்ச்சிகளில், போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அப்போது என்னோடு ஆடும் பிள்ளைகளின் பெற்றோர் வந்து ஊக்கப்படுத்துவதும், முத்தம் கொடுப்பதை ஏக்கத்தோடு பார்ப்பேன்.

எனக்கு யாருமே இருக்க மாட்டார்கள். அந்த தனிமை என்னை ரொம்பவே பாதித்தது. கோ - கோ விளையாட்டிலும் நான் இதை உணர்ந்தேன். அதன் பின் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பறையில் எங்கள் ஆசிரியை ஒரு பெண் கோமா நிலையில் பல ஆண்டுகள் படுத்துகிடப்பதாகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் எனது கதையை பற்றி ஒரு மீடியாவில் வந்ததை பார்த்து சொன்னார். அப்போது என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாணவி அந்த கதைக்குரிய மாணவி இவர் தான் என சொன்ன போது அந்த ஆசிரியை அழுதுவிட்டார்.

என்கதை என்னோடு என்று இருந்துவிடுவேன். யாரிடமும் என் அம்மா, அப்பா பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை. அம்மாவை விட்டு அப்பா போய்விட்டாலும், நான் இன்னமும் அப்பாவின் பாசத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது தான் எனது கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்தேன்.

சோகங்களை பாடல்கள் கேட்டும், அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலும், பூட்டியின் கல்லறையிலும் சொல்லி என்னை தேற்றிக்கொள்கிறேன். சில நேரங்களில் பெற்றோரே இல்லாதவர்களை நினைத்து ஆறுதலடைவேன். ஆனாலும் எனக்கு உள்ள ஒரே நம்பிக்கை, என் அம்மா எழுந்து நடப்பார்கள் என்பது தான். அனைவருக்கும் அம்மா எப்போதும் மதிப்புக்குரியவள். அவள் இல்லாத உலகம் வெறுமையானது. அம்மா ஐ லவ் யூ.

தொடர்புக்கு:
94424 72865aadharshababu@gmail.com- டபிள்யு.எட்வின்
மருத்துவ மாணவிக்கு குவியும் நிதியுதவி

Added : செப் 17, 2018 00:35

பெரம்பலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவ மாணவிக்கு, வாசகர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். பெரம்பலுார், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த பணமின்றி, கூலி வேலைக்கு சென்றார்.இது குறித்து, நமது நாளிதழில், 12ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 'தினமலர்' வாசகர்கள், மாணவி கனிமொழியின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு எண்ணை பெற்று, தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.கனிமொழி கூறியதாவது:வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எனக்கு, நிதியுதவி பெற்றுத் தந்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. செய்தி வெளியான நாள் முதல் இன்று வரை, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், 'தினமலர்' வாசகர்கள், எனக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது' : கவர்னருக்கு 14 பேர் குடும்பத்தினர் மனு

Added : செப் 16, 2018 23:02

சென்னை; 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, இ - மெயில் வாயிலாக, மனு அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்; இவர், 1991 மே, 21ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால், கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 14 பேர் பலியாகினர்.இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஏழு பேரை விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, தமிழக அரசுபரிந்துரை அனுப்பியுள்ளது.இந்நிலையில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது' என, அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த ஏழு பேரையும் விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணம் ஆகிவிடும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவுடன், எங்கள் உறவினர்கள், 14 பேரை பலி கொடுத்து உள்ளோம். அவர்கள் என்ன பாவம் செய்தனர்' என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், 14 பேர் குடும்பத்தினரும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கவர்னருக்கு, 'இ - மெயில்' வாயிலாக, மனு அனுப்பி உள்ளனர்; நேரில், மனு அளிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, 14 பேர் குடும்பத்தாரை ஒருங்கிணைத்து வரும், அப்பாஸ் கூறுகையில்,''ராஜிவ் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். அவருடன், ஒரு பாவமும் அறியாத, 14 பேர் பலியாகி உள்ளனர். கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது, குற்றத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்,'' என்றார்.

விடுதலை கிடைக்குமா : ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்' என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இ - டிக்கெட்' முன்பதிவு : 5 சதவீத கட்டண சலுகை

Added : செப் 16, 2018 21:05


ரயில்களில், 'பிம்' மொபைல் போன் செயலி யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, 5 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், உணவு, 'பெட்ஷீட்' உள்ளிட்டவற்றையும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயணியர் அலைச்சலை போக்கும் விதமாக, 'இ - டிக்கெட்' பெற, புதிய மொபைல் போன் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, 'பிம்' எனும் செயலி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, 'பிம்' செயலி மூலம் டிக்கெட் பெறும் பயணியருக்கு, அடுத்தாண்டு ஜூன், 13 வரை, 5 சதவீதம் டிக்கெட் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -



Sunday, September 16, 2018

தமிழில் எழுதினால் பணத்தை வாரி வழங்கும் கூகுள்!

tamil in google adsense


தமிழ் மொழியை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளால் தமிழில் எழுதப்படும் பிளாக் பதிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காளம் ஆகியவை மட்டுமே கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மொழியும் கூகுளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூகுளின் விளம்பரப் பிரிவான Google AdSense மற்றும் Google Ads ஆகியவற்றிலும் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் பிளாக் (Blog) எழுதுபவர்கள் அதனை Google AdSense ல் பதிவுசெய்ய வேண்டும். பின், அதிக வாசகர்களை ஈர்க்கும் வார்த்தைகளைக் கொண்ட படைப்புகளை எழுதி பிளாக் பதிவுகளாக வெளியாட்டால் Google AdSense பிளாகில் விளம்பரங்களை இடம்பெறச் செய்து வருவாய் ஈட்டித்தரும்.
விஜயபாஸ்கர் குட் டாக்டர் இல்லை.. குட்கா டாக்டர்.. டிடிவி தினகரன் 

பொளேர்!

 By Hemavandhana Published: Sunday, September 16, 2018, 9:30 [
\
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடி உள்ளார். திருவப்பூர் அருகே அமமுக பொதுக்கூட்டம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விஜயபாஸ்கர் மீது சாடல் விஜயபாஸ்கர் மீது சாடல் அப்போது பேசிய தினகரன், வருகிற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அமமுகதான் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து பேசிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக தாக்கி பேச தொடங்கினார்.

 காற்றில் பறக்கும் அப்பளம் காற்றில் பறக்கும் அப்பளம் விருந்து ஒன்றில் அண்ணா அவர்கள் 'நாலனா முட்டை அமைதியாக இருக்க, காலனா அப்பளம் காற்றில் பறக்கிறது' என்று பேசியதுதான் ஞாபகம் வருகிறது. அதுபோல,தற்பொழுது இந்த காலனா அமைச்சர்கள், ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை.

குட் டாக்டர் இல்லை குட் டாக்டர் இல்லை ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது. புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்றே அழைப்போம். கைவிட்ட முதல்வர் கைவிட்ட முதல்வர் நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அப்போது விஜயபாஸ்கர், "என்னை முதல்-அமைச்சர் கைவிட்டு விட்டார்" என்று என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/pudukottai-public-meeting-ttv-dhinakaran-talks/articlecontent-pf325633-329837.html
Celebrating their tireless work on Neonatal Nurses Day 

By Bhavani Prabhakar Published on Sep 15, 2018 02:42 PM IST


Usha Rani

Chennai: While doctors are glorified and celebrated all the time, not often do we realise the importance of nurses. Neonatal nurses, in particular, are unsung heroes who are responsible for tending to newborns, including preterm infants.

On the occasion of Neonatal Nurses Day today, Kanchi Kamakoti Childs Trust Hospital, nurse manager, Usha Rani, in a tête-à-tête with News Today, shares her experiences of working as a neonatal nurse for the past 13 years.

Usha Rani says, "As a neonatal nurse, our duty comprises establishing breathing and feeding of the infants. For preterm babies, the procedure is complicated as they breathe and are fed through tubes which must be carefully handled. To make the work easier, every nurse gets a baby allotted which must be cared by the specified nurse till the baby’s discharge from hospital. In case of any strange symptoms, the nurse can identify it as she would be familiar with the health condition of the baby."

The food habits of infants must be taken care properly. For instance, preterm newborns are fed with one or two ml of mother's milk.

"Quite a number of preterm babies are admitted to our hospital. Making them get accustom to food is a tough task. The mothers would not produce breast milk owing to complications in case of which the nurses encourage them by explaining the nutritional benefits. However, we have a milk bank to cater to the nutritional needs of the newborns," she explains.

Nonetheless, the role of a neonatal nurse is challenging as she has to ensure the neonate is not infected, well-fed and properly taken care of. In addition to such physical challenges, they also undergo emotional roller-coaster as there are infants who fail to respond to their care and treatment.

"Another major challenge that we face is handling parental emotions. Even if everything is handled with utmost care, the parents are concerned and we have to intervene and explain as to what is being performed," adds Usha Rani. 



Usha Rani at her work spot.

NEWBORN CARE

For about one week of admission, the neonates are checked for complications and congenital abnormalities and physical examination. It could be fatal if the nurses ignore these.

When a child is born, chances of it getting affected with hypothermia is more. It must be immediately covered with sterile towels and shifted to a warmer so that the temperature is maintained.

Most preterm neonates are diagnosed with respiratory distress and would be requiring additional support of oxygen which is given either through ventilator or tubes.

UNIQUE CASE

"We had an extremely complicated preterm baby recently. We were informed that the mother conceived after several years and they do not hail from a well-off family. The infant was extremely underweight and had respiratory illness. With the aid of Milaap, an online funding platform, we raised the money required for the treatment," explains Usha.

Talking about the treatment, she goes on to say, "The infant was on ventilator support for about two months; and from 680 grams, the baby weighed 4 kg when it was discharged. In addition, it did not require an external oxygen support. We extubated and intubated more than seven times which we have never experienced and it was a life-threatening condition."

TECH AND TRAINING

Mechanical ventilator with high frequency oscillator and supply of nitrous oxide to prevent pulmonary hypertension, continuous positive airway pressure (CPAP), resuscitating infant neopuff and a transport ventilator to meet the respiratory needs of the child during transit in the neonatal ambulances are the technological advancements in neonatal services.

"The nurses are trained through in-service education and continuous nursing education that is offered in our hospital. During the in-service exercise, classes are held weekly twice, mock drills are conducted and based on the feedback the nurses will be moved to the next level. In the continuous nursing education, the nurses will be strengthened in specific services with the help of doctors," adds Usha Rani.

NEWS TODAY 03.07.2026