Wednesday, September 19, 2018

The New College principal: Madras University told not to interfere with posting

Mohanlal submitted that committee recommended by the UGC is unconstitutional, ultra vires and void as the college is a minority educational institution.
 
Published: 19th September 2018 06:16 AM | Last Updated: 19th 

September 2018 06:18 AM

By Express News Service

CHENNAI:The University of Madras has been directed by the High Court to not to interfere with the continuance of the new college principal Dr A Abdul Jabbar, whose qualification was not approved by the varsity as it wanted the college to follow the regulations of the University Grants Commission, 2010, which stipulated that a selection committee has to be constituted.

Justice Satrughana Pujahari passed the injunction after hearing the argument by senior counsel Isaac Mohanlal representing the petitioner secretary and correspondent of The New College, a minority institution, which challenged the university’s decision not to approve the qualification of the principal as it failed to abide by UGC norms to constitute the selection committee to choose the principal.

Mohanlal submitted that committee recommended by the UGC is unconstitutional, ultra vires and void as the college is a minority educational institution. Selection and appointment of teachers is one of the essential facets of the right of administration guaranteed to the minorities. The inclusion of outsiders like nominees of the Vice-Chancellor of the university, subject experts from outside (as per norms of the UGC selection committee) is a grave inroad into the rights of the minorities.

“The university failed to see that the formation of such selection committees which involved the participation of outsiders in the selection of teachers would not apply to the minority educational institutions. The law is well settled that the prescription of such committees amounts to infringement of the right of administration guaranteed to minorities. As far as the petitioner college is concerned, the selection and appointment of Principal and other staff is done by the managing committee of the college,” he submitted.

The judge also issued notices to advocate P Kavitha, representing the government, Directorate of Collegiate Education and Joint Director of Collegiate Education and Stalin Abhimanyu on behalf of the University.
Power supply to be cut tomorrow for maintenance in Chennai

For carrying out maintenance work, power supply will be suspended by TANGEDCO on Thursday from 9 am to 4pm in these following areas.

Published: 19th September 2018 06:38 AM | Last Updated: 19th September 2018 06:38 AM 


By Express News Service

CHENNAI : For carrying out maintenance work, power supply will be suspended by TANGEDCO on Thursday from 9 am to 4pm in these following areas.

NEELANKARAI: Blue Beach Road, Maraikayar Nagar, Sea View Avenue, Casuarina Drive, Periya Neelankarai Kuppam.

MADURAVOYAL NORTH: MMDA 1st to 7th Blocks, Kandasamy Nagar, Ganga Nagar, Krishna Nagar, Rukmani Nagar, Krishnamachari Nagar, Police Line, PH Road (One part),Varalakshmi Nagar, Venkateswara Nagar, Viswas Nagar, Asthalakshmi Nagar, Rajiv Nagar, Ganapathy Nagar, Bhayalakshmi Nagar, Ganesh Nagar Industrial Estate, Naicker Industrial Estate, Ekambaram Street, Karpagam Chamber, Sundar Nagar, Alappakkam Main Road, Dhanalakshmi Nagar, Srinivasa Nagar, Sridevi Nagar, Seemanthamman Nagar, PH Road, Maduravoyal market, North and South Mada Street, Perumal Koil Street, Sannithi Street, Sri Lakshmi Nagar, Rajiv Gandhi Street, Kanniamman Nagar, Odama Nagar, Ganapathi Nagar, Raja Raja Nagar, Anna Industrial Estate, Balamurugan Kovil Street, Karthikeyan Nagar, Bharathiyar Street, Sanni Street, Kambar Nagar, Sathya Murthy Nagar, Pallavan Nagar, Gangaiamman Nagar, Srinivasa Nagar, Kandhasamy Nagar, Ayyayu Nagar, Krishna Nagar, Vel Nagar.

WEST MAMBALAM: Entire West Mambalam, Rangarajapuram to Govindan Road, Railway Border Road, Reddi Kuppam Road, Paulmore Street, Thalayari Street, Padavattam Street, Ariya gowada Road, Lake View Road, Thambiah Road and Extension, Natesan Street, Kannamapet, Usman Road, Corporation Colony, Mahalakshmi Street, Rameshwaram Street, Rama Nathan Street and Ranganathan Street.

ENJAMBAKKAM: Harichandra 1st to 4th Street, Enjambakkam Kuppam, VGP Layout, Shalimar Garden, Periyar Street, Pothigai Street, Ponniyamman Kovil Street, Part of ECR, VOC Street, Thiruvalluvar Salai, Cholamandal Devi Nagar and Artist Village, Betheal Nagar north and south, Nanjandarao Salai, Gangaiamman Kovil Street, Kakkan Street, Pallavan Nagar.

KK NAGAR: KK Nagar, Ashok Nagar, MGR Nagar, Ekkattuthangal, Kalaimagal Nagar, Balaji Nagar, Visalakshi Nagar, part of West Mambalam, Brindavan Nagar, Nakkeran Street, part of Guindy, Jhafferkhanpet, West KK Nagar, part of Nesapakkam, part of Vadapalani.

THIRUVANMIYUR: 4th, 5th and 6th Main Road, Kamaraj Nagar, PTC Depot, Thiruvalluvar Salai, 10th to 18th East Street, Kamaraj Nagar, South Avenue, Mangaleri.

MELUR: Athipattu Pudu Nagar, Chepakkam, Mouthambedu, KR Palayam, HT Consumer (IOCL, IPPL, EPL, NTCL, Chettinad bulk, HPCL, ETTPL).

KADAPERI: Pulikoradu, Amman Kovil Street, Burma Colony, Rajagopal Nagar, Nagarathinam Nagar, Jerusalem Nagar, Arputham Nagar, Renganathapuram, RV Garden, Thiruvallur Street, Jeeva Street, Anna Street, Zahir Hussain Street, part of GSTREET Road, Gandhi Road, Thorisamy Reddy Street, Ayyasamy Street, Muthuiyam Muddily Street.TIDEL PARK: Tansi Nagar, Anna Nagar, Anna Nagar Extension, Annai Indira Nagar, VGP Selva Nagar Extension, Balamurugan Street, Venus Colony.

ஜியோவுக்குப் போட்டியாக ரூ.419 திட்டத்தை அறிவித்தது ஏர்டெல்

Published : 18 Sep 2018 17:53 IST




பார்தி ஏர்டெல். - படம். | ராய்ட்டர்ஸ்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 திட்டத்துக்கு போட்டியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.419 ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல்லின் ரூ.419 திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இலவசமாகப் பெறமுடியும்.

உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகளை ஒரு நாளைக்கு 300 நிமிடங்களும் ஒரு வாரத்துக்கு 1000 நிமிடங்களும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏர்டெல் டிவி செயலியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் பயனர்கள் தினந்தோறும் 4ஜி வேகத்தில் 1.4ஜிபி டேட்டாவையும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத இலவச அழைப்புகளையும் (free voice call) பெறுவர். இதன் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும்.

இது ஜியோவின் ரூ.399 திட்டத்துக்கு போட்டியான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஜியோவில் 84 நாட்கள் வேலிடிட்டியும், நாள்தோறும் 4ஜி வேகத்தில் 1.5 ஜிபி இலவச டேட்டாவும், இலவச அழைப்பு செய்யும் வசதியும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 17th September 2018 03:39 PM  |
aadhar

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை
ஆதார் எண் இருந்தால் போதும்
தமிழ்நாடு பதிவு (ஆவணப் பதிவிற்காக அடையாள அட்டை சரிபார்ப்பு) விதிகள் 2018 (Tamil Nadu Registration (Identity Verification for the Registration of Documents) Rules, 2018.) மற்றும் பதிவு சட்டம் 1908 ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் ஜே.குமரகுருபரன் 12, செப்டம்பர், 2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கைகள் விவரம் –
ஆதார் எண் இருந்தால் இனி வருங்காலங்களில் பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை.
தமிழகத்தில் சார்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது சிலநேரங்களில் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது.  சமூக விரோதிகள் சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதைத் தடுக்க தற்போது பதிவு துறையில் புதிய யுக்தியை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் நிறுவனத்துடன் (Unique Identifi cation Authority of India) பதிவுத்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியும்.
அதில், இரண்டு பேரின் ஆதார் எண் சரிதானா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதில், குறிப்பிட்ட நபரின் ஆதார் எண் இல்லை எனில் பத்திரம் பதிவு செய்ய முடியாது. மேலும், அவர்களது ஆவணங்கள் முழுவதுமாக சரிபார்க்கப்படும். ஆதார் எண் சரியாக இருந்தால் பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை.
மேலும் வயதானவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களுக்கு கண்விழி ரேகையை வைத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இந்த விதிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

‘போலி ஆதார் எண்ணை’ பயன்படுத்தி சிலநேரங்களில் சொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அந்த புகாரின் பேரில் பதிவுத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்யப்படும் போது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு அவசியம். இவ்வாறு கைரேகை பதிவு செய்யப்படும் போது சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண், முகவரி இதுதானா என்பது பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவரும் இதன்மூலம் போலி ஆவணப்பதிவு முழுவதுமாக தடுக்கப்படும்’
என அறிக்கை தெரிவிக்கிறது

வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு...

By DIN  |   Published on : 19th September 2018 02:11 AM 

வரியைத் திரும்பப் பெற வங்கி விவரங்களைக் கேட்கும் போலி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை வரி செலுத்துவோர், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி செலுத்துவோர் தங்கள் வரியைத் திரும்பப் பெறுவதற்காக வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் தகவல் அனுப்பப்படுவதாக வருமான வரித் துறை கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எந்தவிதமான மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளை வருமான வரித் துறை அனுப்புவதில்லை. மேலும் வருமான வரித்துறை மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் பாஸ்வேர்டு (கடவுச்சொல்), வங்கி விவரங்கள் போன்றவற்றைக் கேட்பதில்லை. அத்துடன் வரி செலுத்துவோர் தங்களின் முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற சுயவிவரங்களை வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் மாற்றிக் கொள்ளலாம். 
இனி, ரேஷன் பொருள், வாங்க,கை வை !

ரேஷனில், இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயம். அதற்கான, 'பயோமெட்ரிக்' பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், 1.87 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. நான்கு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கார்டுகளில், ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இழப்பு

அரிசிக்கு பதில், விருப்பத்திற்கு ஏற்ப, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையும் இலவசமாக வாங்கி கொள்ளலாம். இவற்றுக்காக, தமிழக அரசு, நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள், தங்கள் கார்டுகளை, வேலையாட்கள், உறவினர்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.

இதனால், தேவைக்கு அதிகமாக கிடைக்கும் ரேஷன் பொருட்களை, வெளியில் விற்கின்றனர்.

கடை ஊழியர்களும், யாரும் வாங்காத


பொருட்களை, விற்பனை செய்தது போல பதிவு செய்து, வியாபாரிகளிடம் விற்கின்றனர். இதனால், அரசுக்கு, இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, உணவு துறை முடிவு செய்தது.

இதற்காக, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவிகள் மற்றும், 'பிரின்டர்' சாதனங்கள் வாங்க, மே, 29ல், 'டெண்டர்' கோரப்பட்டது. அதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றின் தொழில்நுட்ப விபரங்களை, ஆய்வு செய்து முடித்துள்ள அதிகாரிகள், இந்த வாரத்தில், விலை குறைப்பு பேச்சு நடத்த உள்ளனர்.

பின், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, இம்மாத இறுதிக்குள், கொள்முதல் ஆணை வழங்க உள்ளனர். இதையடுத்து, அக்., 15ம் தேதி முதல்,

விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின், 'ஆதார்' விபரங்கள் அடிப்படையில், 1.97 கோடி குடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்
வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஆதார் கார்டில், விரல், விழி ரேகைகள் பதிவாகியுள்ளன. இதனால், பயோமெட்ரிக் கருவியில், விரல் ரேகை பதிவு செய்ததும், அந்த விபரம், கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் தெரியும்.

அதிகரிப்பு

ஒரு ரேஷன் கடையில், 500 அரிசி கார்டுதாரர்கள் இருந்தால், 300 பேர் மட்டும் முறையாக வருவர். மற்றவர்கள், தெரிந்தவர்களிடம், கார்டுகளை கொடுத்து அனுப்புவர்.பயோமெட்ரிக் திட்டத்திற்கு முன்னோட்டமாக, குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள உறுப்பினர்கள்வந்தால் மட்டுமே, தற்போது, பொருட்கள் வழங்க படுகின்றன.

இதனால், தற்போது கடைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் திட்ட மிடப்பட்ட, பயோமெட்ரிக் திட்டம், உறுதியாக அடுத்த மாதம், 15ல் அமல் படுத்தப்படும். இனிமேல், விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இன்று ஆய்வு!

உணவு பொருட்கள், ஏழை மக்களுக்கு, ஒழுங்காக கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய, உணவு துறை அமைச்சர், உயரதிகாரிகள், அடிக்கடி ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வர். நாமக்கல்லை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இருந்து, அதிகளவில் ரேஷன் பருப்பு வாங்கியதில், முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து, பருப்பு சப்ளை செய்த நிறுவனங்கள் மற்றும் வாணிப கழக அலுவலகத்தில், வருமான வரித்துறை, சமீபத்தில் சோதனை நடத்தியது. இதனால், முடங்கிய ஆய்வு பணியை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள், சென்னையில், இன்று முதல், மீண்டும் துவக்க உள்ளனர்.

- நமது நிருபர் -
அரசு நடத்திய பேச்சில் சமரசம்: டாக்டர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு

Added : செப் 18, 2018 22:45


சென்னை, அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம், நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரம் அரசு டாக்டர்கள், வரும், 21 காலை, 7:30 முதல், 22ம் தேதி காலை 7:30 மணி வரை வேலை நிறுத்தத்தில், ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து, அரசு டாக்டர்கள் சங்கத் தினருடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், தலைமை செயலகத்தில், நேற்று பேச்சு நடத்தினர். மதியம் 12:00 முதல் இரவு 8:15 மணி வரை நடத்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:எங்கள் கோரிக்கையை, குழு அமைத்து பரி சீலிப்பதாகவும், அதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும், அரசு தரப்பில் கோரினர். அரசு அமைக்கும் குழுவில், எங்கள் பிரதிநிதியையும் சேர்க்க கோரியுள்ளோம்.அரசின் உறுதியை ஏற்று, போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 03.07.2026