Friday, September 21, 2018

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்

Added : செப் 21, 2018 02:34 |



கோல்கட்டா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த, கவுரவ டாக்டர் பட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 45, ஏற்க மறுத்துவிட்டார்.

மேற்கு வங்கத்தில், உள்ள ஜாதவ்பூர் பல்கலையின், 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, டிச., 24ல் நடக்கவுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு எடுத்தது. இது குறித்து, சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க, சச்சின் மறுத்து விட்டார்.

ஏற்கப்போவதில்லை:

இது குறித்து, பல்கலை துணை வேந்தருக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில், கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது, தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலை, தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர முன் வந்தபோதும், அதை ஏற்க சச்சின் மறுத்து விட்டார். வேறெந்த பல்கலை இந்த நடவடிக்கை மேற்கொண்டாலும், அதை ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
சிறப்புக் கட்டுரைகள்

மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, ஜியோமி நிறுவனம்




ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் கடந்த வாரம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2018 13:02 PM

‘ரெட் மி 6’, ‘ரெட் மி 6 ஏ’ மற்றும் ‘ரெட் மி 6 புரோ’ என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருப்பதோடு வெவ்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையிலும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட் மி 6

‘ரெட் மி 6’ ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா மற்றும் ஆக்டோ கோர் புராஸெசர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 12 என்.எம். செயலி இருப்பதால் இது 48 சதவீதம் குறைவான சக்தியைப் பயன்படுத்துகிறது. இதன் தொடு திரை 5.45 அங்குலம் கொண்டது. இதன் மேல் பாகம் பாலி கார்பனேட்டால் ஆனது. இதன் பின்பகுதியில் 12 மெகாபிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. இதனால் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும். இதன் முன்பகுதியில் உள்ள 5 மெகா பிக்செல் கேமரா செல்பி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாகும்.





இது இரண்டு வகைகளில் வருகிறது. முதல் இரண்டு மாதங்களுக்கு அறிமுக விலையாக 3 ஜி.பி.ரேம் மற்றும் 32 ஜி.பி. உள்நினைவகம் கொண்ட மாடல் ரூ.8 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. அதேசயம் 3 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவக மாடல் ரூ. 9,499 ஆகவும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட் மி 6 ஏ

‘ரெட் மி 6 ஏ’ மாடல் 5.45 அங்குல தொடு திரை கொண்டது. இதன் விலை ரூ. 5,999 ஆகும். இதில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதில் 13 மெகா பிக்செல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்செல் முன்புற கேமரா உள்ளது.




இதில் முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் ‘பேஸ் அன்லாக் சிஸ்டம்’ உள்ளது. இதில் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இது தவிர மைக்ரோ எஸ்.டி. கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. இதில் மற்றொரு மாடலின் விலை ரூ. 6,999. இதில் 2 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. திறன் கொண்டது.

ரெட் மி 6 புரோ

‘ரெட் மி 6 புரோ’ இது ஸ்டைலான வடிவமைப்போடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் செயலியுடன் வந்துள்ளது. இதில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பது சிறப்பம்சமாகும். இதன் பேட்டரி இரண்டு நாள் வரை செயல்படும்.





பின்பகுதியில் 12 மெகா பிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் ஏஐ (கிமி) கேமரா உள்ளது. உலோக வடிவமைப்பு இதற்கு ஸ்டைலான தோற்றப் பொலிவை அளிக் கிறது.

3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. உள்நினைவகம் மற்றும் 4 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவகம் என இரு மாடல்களில் இது வந்துள்ளது. 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999-க்கும் மற்றும் 4 ஜி.பி.ரேம் மாடல் ரூ.13 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

சலுகை

இந்த போன்களை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்க முடியும். ஹெச்.டி.எப்.சி. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ரூ.500 ‘கேஷ் பேக்’ சலுகையும் அளிக்கப்படுகிறது.
சிறப்புக் கட்டுரைகள்

வங்கிகள் இணைப்பு: யாருக்கு லாபம்?




மத்திய அரசு பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி என்ற மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்றும் இவை ஒரே பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும் திடீரென அறிவித்துள்ளது.
பதிவு: செப்டம்பர் 20, 2018 10:30 AM

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு என்பது மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை பிரதிபலிப்பதாகும். இன்றைய தேவையாக வங்கிகளை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும். இதற்கு பதிலாக இந்த இணைப்பினால் எந்தவித பலனுமில்லை.

முதலாவதாக வங்கிகள் இணைப்பின் மூலமாக வங்கிகள் நன்றாக செயல்படும் என்ற கருத்து தவறானது. கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் ஐந்தையும் இணைத்தது. ஆனால் இதன்பின் எந்தவித மாற்றங்களும் நடைபெறவில்லை. மாறாக கிளைகளை மூடுவது, வராத கடன் எண்ணிக்கை அதிகரிப்பு, வங்கி ஊழியர்களை குறைத்தது, வங்கியின் ஒட்டுமொத்த வியாபாரம் குறைந்தது போன்றவற்றையே பார்க்க முடிந்தது. இந்த இருநூறு ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி நஷ்டத்தையே அடையவில்லை. ஆனால் வங்கி இணைப்பிற்கு பிறகு கடந்த ஆண்டில் நஷ்டத்தில் உள்ளதை பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்த துணை வங்கிகளின் வராத கடன் 31.03.2017-ம் ஆண்டு வரை சுமாராக ரூ.65 ஆயிரம் கோடியும் பாரத ஸ்டேட் வங்கியின் வராத கடன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியும், ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது 2018-ல் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே வங்கிகள் இணைப்பு வாராக்கடன் குறைய உதவாது என்பது தெளிவாகிறது.


வங்கித்துறையில் இன்று நாம் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாராக்கடனேயாகும்.

நமது முக்கிய கோரிக்கையே மத்திய அரசு வாராக்கடனை வசூலிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, வேணுகோபால் தூத் போன்றவர்கள் வங்கிகளை ஏமாற்றியது வங்கித்துறையே அதிரவைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற ஏமாற்றும் பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இன்று தினம் தினம் பத்திரிகைகளில் பார்க்க முடிகிறது. பொதுத்துறை வங்கிகள் 21-ல் 19 வங்கிகள் நஷ்டத்தில் உள்ளன. 21 பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் 31.03.2018 அன்று ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 565 கோடி. வாராக் கடனுக்காக வங்கிகள் ஒதுக்கீடு செய்தது ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி. இதன் காரணமாக வங்கிகளின் நிகர நஷ்டம் ரூ.85ஆயிரம் கோடியாகும்.

இதன் காரணமாக வங்கிகளில் வாராக்கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் முக்கியமாக அவர்களை குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அறிவிப்பதற்கு மாறாக இந்த 3 வங்கிகள் இணைப்பு என்பது மக்கள் மத்தியில் கவனத்தை திருப்பும் நடவடிக்கையாக பார்க்க முடிகின்றது.

பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.80 ஆயிரம் கோடியாகும். இதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதே மத்திய அரசின் இந்த இணைப்பு நாடகம் என்பதை பார்க்க முடிகிறது.

எனவே மத்திய அரசின் இந்த இணைப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது மட்டுமல்லாமல் இதை திரும்ப பெறவேண்டும் மற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.

சி.எச்.வெங்கடாசலம்,
பொதுச்செயலாளர் ,
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்.
மாவட்ட செய்திகள்

அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வாய்முக புனரமைப்பு மையம் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்




சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ரூ.1.14 கோடியில் வாய்முக புனரமைப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பதிவு: செப்டம்பர் 21, 2018 05:00 AM

சென்னை,

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ரூ.1.14 கோடியில் முப்பரிமான மாதிரி வடிவ அச்சு, டி.எம்.ஜே. ஆர்த்ரோஸ்கோப்பி போன்ற அதிநவீன கருவிகளுடன் கூடிய வாய்முக புனரமைப்பு மையம் மற்றும் திசை திருப்பல் கருவி, மாணவர் உடற்பயிற்சி மையம், ரத்த தான முகாம், கல்லூரிக்கான புதிய பஸ் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் புதிய கட்டிடங்கள், அதி நவீன உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டு ஒப்புயர் மையமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டு உள்ள அதிநவீன உபகரணமான முப்பரிமான மாதிரி வடிவ அச்சு மூலம் 3-டி அச்சிடுதல் தொழில் நுட்பத்தை கொண்டு பல்வேறு சிகிச்சைகள் சிறப்பாக வடிவமைக்க முடியும். இதனைக் கொண்டு எலும்புகளில் உள்ள தேய்மானம் அறுவை சிகிச்சைக்கான மாதிரி வடிவம் போன்றவற்றை அறுவை சிகிச்சைக்கு முன்பே கணித்து மிக நுட்பமான அறுவை சிகிச்சை செய்து வாய் முக புனரமைப்பு செய்திட முடியும்.

மேலும், இக்கல்லூரியில் வாரம் இருமுறை பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடமாடும் பல் மருத்துவ வாகனம் விரைவில் தொடங்கப்படும். அரசு பல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உள்ள 2-வது மாடி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்



சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 21, 2018 05:45 AM
சென்னை,

இதற்கு, பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து, இந்த திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மேலும் சிலரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அட்டவணை மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், “8 வழி சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு விட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், “8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. விதிகளின்படி, இதுபோன்ற நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ளலாம். அதே விதிகளின்படி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மேற்கொண்டு மேற்கொள்ள முடியாது. அதனால், இந்த திட்டத்தை தொடர மாட்டோம்” என்று கூறினார். அதாவது, திட்டம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் இவ்வாறு கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1,200 மரங்களை நட இருப்பதாகவும் அவர் கூறினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சிவஞானசம்பந்தன் கூறுகையில், பசுமைச்சாலை திட்டத்தினால், பாதிக்கப்படும் நபர்களுக்கு எழுத்துப்பூர்வமான மனுக்களை எழுதி கொடுத்த 4 பேரை செய்யாறு போலீசார் கைது செய்து இருப்பதாக தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், போலீசாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்த திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசும், அதிகாரிகளும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும், யாரையும் துன்புறுத்தவேண்டாம் என்றும் பலமுறை நாங்கள் கருத்து தெரிவித்து உள்ளோம். அதையும் மீறி 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். எனவே, இதுகுறித்து அரசு பிளடர், போலீசாரின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டம் தொடர்பான களப்பணியில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பிரச்சினையை பெரிதுப்படுத்தக்கூடாது. மக்களை துன்புறுத்தக்கூடாது. இந்த செயலை தொடர்ந்து செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

பின்னர் அவர்கள் வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Lower court’s refusal to de-freeze fixed deposits set aside

The counsel for Canara Bank argued that if the ownership of the property was certain, then the property was to go back to the owner of the property.

Published: 20th September 2018 03:34 AM |



Image used for representational purpose only.

By Express News Service

CHENNAI : The Madras High Court allowed the criminal revision case filed by Canara Bank against the order, passed by the principal sessions judge who refused to de-freeze the fixed deposits held by various companies and to direct the Enforcement Directorate to pay Rs 13.22 crore lying in the credit of fixed deposits along with interest accrued thereon to the bank.

Justice RMT Teekaa Raman set aside the order passed by the principal sessions judge in Chennai while remitting the case back and directing principal sessions judge to take into consideration the amendments to the Prevention of Money Laundering Act, 2002, as extracted and whereby during the course of the trial, the claim of parties can be considered for restoration of the property and deal with the same in accordance with law.

The learned principal sessions judge, Chennai, has held that as all accused are appearing before the court and the matter is ready for presentation of the prosecution, the conditions stated under Section 8(7) of the Act have not been arrived at and accordingly, dismissed the petition, observing that the trial of the case has not been concluded.

The counsel for Canara Bank argued that if the ownership of the property was certain, then the property was to go back to the owner of the property. “Only if the ownership of the property was doubtful, the property has to be a part of the trial proceedings and one has to wait for the conclusion of the trial,’ the counsel stated.“Even though trial had not commenced, as the money belonged to the petitioner bank, there was no bar for them to claim the money nor any bar on the first respondent herein from handing the money,” the bank stated.

Changes in PMLA 

Principal sessions judge directed to take into consideration the amendments to the Prevention of Money Laundering Act, 2002, as extracted and whereby during the course of the trial, the claim of parties can be considered for restoration of the property and deal with the same in accordance with law
Link Aadhaar number with EPFO’s UAN, says provident fund official

TIRUNELVELI, SEPTEMBER 21, 2018 00:00 IST


‘Only 1.55 lakh out of 3 lakh subscribers have complied’


The Employees Provident Fund Organisation’s Tirunelveli Region has set a target of linking the Universal Account Number (UAN) of nearly three lakh subscribers of the region with their Aadhaar number before October 2.

The move was aimed at making their PF transactions/settlements easier, M. Mathialagan, Additional Central Provident Fund Commissioner, Coimbatore Zone, told reporters here on Thursday,

The EPFO, which was moving towards its ‘paperless office’ goal, would be able to settle the claims and deal with other transactions effectively if the employers and employees cooperated with the organisation.

The employees, having their Universal Account Number activated and Know Your Customer seeded with it, could claim their benefits through www.epfoindia.gov.in or Unified Mobile Application for New-age Governance (UMANG) app of the Government of India since online filing of return and remittance by the employer was already in place.

For availing the benefits instantly, the employer must have digital signature or e-signature, and the employees should get their KYC i.e. Aadhaar number, bank account details and mobile phone number linked with their UAN.

However, only 1.55 lakh out of the three lakh-odd subscribers in the region had linked their Aadhaar number with UAN although both the employers and the employees had been sensitised to its necessity on various occasions.

If the Aadhaar number and other required details were seeded with the UAN, it would immensely expedite the settlement of claims and other PF transactions.

Hence, the employers and the employees should cooperate with PF officials by linking their KYC with UAN, Mr. Mathialagan said.

On the housing assistance scheme launched by EPFO’s Tirunelveli Regional Office last year, wherein the subscribers could withdraw 90% of their accumulation in the PF account for constructing or buying a house, Mr. Mathialagan said the initiative set in motion by the regional office had reached the final stages as construction of houses for employees of a Thoothukudi-based shipping company would take off soon.

Unused funds

The amount in inoperative PF accounts would not be diverted for any other purpose, he said when asked about the Finance Ministry’s proposal for using the unused funds for the welfare of senior citizens.

“Since EPFO is the custodian of the funds once paid by the subscribers, it has the responsibility of returning it back to the subscriber or to their legal heirs,” said K. Muthuselvan, Regional PF Commissioner – I, Coimbatore Zone.

Later Mr. Mathialagan handed over pension orders to beneficiaries in the presence of Sanat Kumar, Regional PF Commissioner– I, Tirunelveli.


Both the employers and employees should cooperate with PF officials for easy settlement of claims, transactions

M. Mathialagan,Additional Central Provident Fund Commissioner, Coimbatore Zone

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...