Saturday, September 22, 2018

தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு

Added : செப் 22, 2018 05:45

புதுடில்லி: அமெரிக்காவில், தெலுங்கு மொழி பேசுவோர் எண்ணிக்கை,86 சதவீதமும், தமிழ் பேசுவோர் எண்ணிக்கை, 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அமெரிக்காவில், 2017க்கான மக்கள் தொகை விபரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அவர்களின் தாய் மொழி ஆகிய தகவலும் இடம் பெற்றுள்ளது.இதன்படி, 2010ல், வெளியிடப்பட்ட மக்கள் தொகை பட்டியலுடன் ஒப்பிடுகையில், 2017ல், தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில், 86 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, வங்க மொழி பேசுவோர், 57 சதவீதமும், தமிழ் பேசுவோர், 55 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.ஹிந்தி பேசுவோர், 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோர், 23 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.அமெரிக்க மக்கள் தொகை, 30.6 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில், வீட்டில், ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 21.8 சதவீதமாக உள்ளது.இந்திய மொழிகளில், ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை தான், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், 8.83 லட்சம் பேர், ஹிந்தி பேசுகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக, 4.34 லட்சம் பேர், குஜராத்தியும், 4.15 லட்சம் பேர், தெலுங்கும் பேசுகின்றனர். தமிழ் மொழியை, 1.48 லட்சம் பேர் பேசுகின்றனர்.அமெரிக்க மக்கள் தொகையில், 26.10.லட்சம் பேர், இந்தியாவில் பிறந்து, அங்கு குடியேறியவர்கள்.
சிறப்புக் கட்டுரைகள்

60 வயதில் தடுமாற வைக்கும் ‘அல்சைமர்’



இன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அல்சைமர் தினம்.

பதிவு: செப்டம்பர் 21, 2018 10:54 AM

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகமக்களை அதிக அளவில் கொல்லும் ஐந்து முக்கிய நோய்களில் அல்சைமரும் ஒன்று. உலகில், அல்சைமர் நோயில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள். அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது. இறுதியில் மிக சாதாரணமான வேலைகளை செய்யும் திறன்களைக்கூட முழுமையாக இழக்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் குணப்படுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆரம்பக்கட்டத்தில் அறிந்தால், மேலும் சீர்கெடுவதை தவிர்க்க முடியும்.

அல்சைமர் என்பது டெம்னீஷியா என்கிற நோயின் ஒரு வகையாகும். டெம்னீஷியா என்பது மூளைக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டித்தும், ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கவும் செய்கிறது. அல்சைமர் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை அழித்து, நினைவுகள், மற்றும் மொழியாற்றலை செயலிழக்க செய்கிறது. இந்நோயினை முதன்முதலாக கண்டறிந்த மருத்துவர் அலோய்ஸ் அல்சைமர் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. தன்னிடம் நோயாளியாக வந்து இறந்துப் போன பெண் ஒருவரின் மூளை திசுக்களை ஆராயும்போது அவைகள் இயல்பாக இன்றி, ஒன்றுக்கொன்று பிணைந்தும், முறுக்கிக்கொண்டும் இருந்தன. படலங்கள் திசுக்கள் மீது படர்ந்து இருந்தது. இதன்காரணமாக, நரம்புமண்டலத்திற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மூளையிலிருந்து நரம்புமண்டலத்தின் வாயிலாகத்தான் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்கும் உத்தரவுகள் செல்கின்றன. இத்துண்டிப்பின்காரணமாக உறுப்புகள் செயல்பாட்டினை இழக்கிறது. மூளையில் ஏற்பட்டிருந்த இந்நோயின் காரணமாகவே அப்பெண் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அல்சைமர் கண்டறிந்தார்.

அல்சைமர் நோய்க்கான ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு தகவல்களை உள்வாங்குவதிலும், அதனை நினைவில் தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம்உண்டாகும். இதனால், நினைவில் நிறுத்த திரும்ப திரும்பகேள்விகள் கேட்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பொருளைஎங்கே வைத்தோம் என்றுநினைவுக்கு வராமல் தேடிக்கொண்டே இருத்தல், தினமும் சென்று வரும் இடங்களுக்கான வழிகளைக்கூட மறந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும்ஆற்றலும் மங்கிவிடுகிறது. இதனால், சாதாரண முடிவுகள் உதாரணமாக, சாலையை கடப்பதில் கூட தவறுகள் உண்டாகி விபத்தில் முடிகின்றன. மேலும், பேச்சு, படிப்பு, எழுதுதல் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அறுபது வயதானவர்கள், அறுபது வயதினை கடந்தவர்களை இந்நோய் தாக்கினாலும், இளம் வயதினருக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வயது மூப்பு மட்டுமின்றி, முன்னோர்களிடமிருந்து மரபணுக்கள் வாயிலாக சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. இவைகளைத்தவிர விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைபாதிக்கப்பட்டால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் மோட்டார் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதும், காரில்பயணிப்போர் இருக்கை பட்டை அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



அல்சைமர் நோய்வராமல் எப்படிதடுப்பது? தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல், நீரழிவு நோயினைக்கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல்அவசியம்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான, செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதியதிறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று. உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள். தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமதுமூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும்வைத்திருக்க உதவுகிறது.ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது. நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்புநிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும். இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதைதடுக்கலாம்.

-கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
தேசிய செய்திகள்

4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்




4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் புகைப்படங்கள் அடங்கிய தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 21, 2018 11:31 AM
புதுடெல்லி

மத்திய அரசு முதல் முறையாக பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளத்தை ( என்டிஎஸ்ஓ) வெளியிட்டு உள்ளது. இதில் 4.5 லட்சம் தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். மேலும் இதில் 3.5 லட்சம் பேரின் புகைப்படம் இடம் பெற்று உள்ளது.

இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈவ் டீசிங் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த ஆவணங்களை உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன்( டபிள்யூசிடி) இணைந்து தேசிய குற்றப்பதிவு ஆணையமும்( என்சிஆர்பி) பராமரிக்கும்.

பாலியல் குற்ற வழக்குகளை கண்காணித்து, விசாரணை செய்வதற்கு, சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இந்த ஆவணங்கள்(என்டிஎஸ்ஓ) உதவும்.

ஏப்ரல் 2018 ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த ஆவணம் உலகில் ஒன்பதாவது நாடாக இந்தியா பாலியல் குற்றவாளிகளின் தேசிய ஆவணத்தை (என்டிஎஸ்ஓ) அமைப்பதற்கும் பராமரிக்க உள்ளது.

மத்திய உள்துறை தகவல் படி மாநில போலீஸ் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆவணத்தை தொடர்ந்து புதுப்பிக்கும்படி கோரப்பட்டு உள்ளது. ஆவணத்தில் ஒவ்வொருவருக்கும் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைரேகை விவரங்கள் உள்ளன. எனினும், ஆவணமானது எந்த நபரின் தனியுரிமையையும் சமரசம் செய்யாது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சைபர் கிரைம் விசாரணையை வலுப்படுத்தவும், போலீஸ் அதிகாரிகள், பொது வக்கீல்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி திட்டங்களை நடத்தவும் சைபர் பார்ன்சிக்-கம்-பயிற்சி ஆய்வகங்களை நிறுவுவதற்காக மாநிலங்களுக்கு / யூனியன் பிரேதேசங்களுக்கு 94.5 கோடி ரூபாய் வழங்கி உள்ளது

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல் படி, ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சமூகத்திற்கு ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்த கூடிய பாலியல் குற்றவாளிகள் குற்றம்சார்ந்த வரலாற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என கூறினார்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது, நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சிகளாகும். இது பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டது. பாலியல் குற்றவாளிகள் மற்றும் சைபர்கிரைம் புகாரளிப்பு வலைதளத்தை தேசியமயமாக்குதல் எங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கை ஆகும். என அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்ற தடுப்புச் சட்டம் (சிசிபிடபிள்யூசி) எனும் மற்றொரு வலைப்பக்கமும், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வழக்குகளைப் பற்றி புகார் தெரிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைச் சரிபார்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கடுமையான தண்டனையை வழங்குவதற்கும், நவீன தடயவியல் வசதிகளை உருவாக்குவதற்கும், விசாரணைகளை மேம்படுத்துவதற்கும், MHA வில் பெண்களின் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கும் என மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

இதன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள், சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேசங்களின் போலீஸ் அதிகாரிகளால் கையாளப்படும் மற்றும் மாநில போலீஸ் விசாரணையில் உதவுவதற்கு ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் மற்றும் URL ஐயும் பதிவேற்ற முடியும்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதள தொடக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், இணையதளத்தை மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது:-

நாட்டில் நடக்கும், 30 சதவீத பாலியல் குற்றங்கள், பெண்கள் காப்பகத்தில் தான் நடக்கின்றன. எனவே, இந்த குற்றங்களை கண்காணித்து, குற்றவாளிகள் மீது, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்



சென்னையில் பயணிகளை கவருவதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் மேலும் சாதாரண கட்டண பஸ்களை இயக்குகிறது. அவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 22, 2018 04:00 AM
சென்னை,

தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுமார் 20 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரித்தது. இந்த பஸ் கட்டண உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கினர்.

சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால், சில நாட்களிலேயே அரசு போக்குவரத்து கழகம் பஸ் கட்டணத்தை சிறிதளவு குறைத்தது.

அதன்படி சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயானது. அதாவது சாதாரண கட்டண பஸ்களில் (வெள்ளை நிற பெயர் பலகை பொருத்தப்பட்டது) மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையை பொறுத்தவரையில், சாதாரண கட்டண பஸ்கள், விரைவு பஸ்கள் (பச்சை நிற பெயர் பலகை பொருத்தப்பட்டது) மற்றும் சொகுசு பஸ்கள் என 3 வகையான பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

அதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பஸ்களில் வரும் நிலையிலும், அவர்களில் யாரும் டிக்கெட் எடுக்காமல் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்து அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இதனால், அவர்கள் அடிக்கடி பஸ்களில் களஆய்வு மேற்கொண்டனர். இதனால் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதும் உண்டு. எனினும் பயணிகளின் எண்ணிக்கை அவர்கள் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையில் எதிரொலியாக மீண்டும், பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், மின்சார ரெயில் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு தங்கள் பயணத்தை மாற்றிக்கொண்ட பஸ் பயணிகளை மீண்டும் பஸ்களில் பயணிக்க ஈர்க்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

அதாவது, சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் சாதாரண கட்டண பஸ்கள், விரைவு பஸ்கள், சொகுசு பஸ்கள் என 3,300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து கடந்த 4 வாரங்களில் பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் அதிகரித்து உள்ளது.

அதைத் தொடர்ந்து பஸ் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் கூடுதலாக 300 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 1,100 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பயணிகள் சாதாரண கட்டண பஸ்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று பெரிய அளவில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது.

இதே போன்று விரைவு பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.7 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பஸ் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Coimbatore: Uphill task to find new VC for 'Bharathiar University'

DECCAN CHRONICLE. | LAKSHMI L LUND

PublishedSep 21, 2018, 2:52 am IST

The stipulated term of the former BU vice chancellor is scheduled to end in March 2019.



Bharathiar University logo

Coimbatore: Faced with an uphill task, the spade work to form a search committee to find a suitable candidate for post of vice chancellor of the Bharathiar University (BU) in Coimbatore will commence in November, a source from the university confirmed to DC.

"Higher education department will form a search committee. Appointment to posts like public relations officer, controller of examinations and research coordinator that are currently served by officials in-charge will also be done in November," the source said. The department has already communicated in writing to the university, that it will start work from scratch in November to form a search committee to appoint a new vice chancellor, added the source.








The stipulated term of the former BU vice chancellor is scheduled to end in March 2019. As per norms, the search committee to appoint his successor is formed six months ahead of the end of term of the serving vice chancellor.


Unfortunately, Dr A Ganapathi, former vice-chancellor, was suspended in February following charges of accepting bribe for issuing an appointment order. Since then, the post is vacant.


Meanwhile, the university's affairs continue to be taken care of by a three-member convener committee formed under the leadership of principal secretary of the department of Higher Education. In August, following the transfer of Mr Sunil Paliwal to the Department of Labour, Mr. Mangat Ram Sharma has taken over as principal secretary to Government of Higher Education department, it may be recalled.
IndiGo bus with 50 on board catches fire at Chennai airport

PTI

PublishedSep 21, 2018, 10:17 am IST

No one was injured as the blaze was put out immediately by Fire and Rescue Services personnel, officials said.



The IndiGo bus caught fire as it was nearing the arrival point with about 50 passengers on board. (Photo: ANI)

Chennai: A bus belonging to IndiGo Airlines caught fire on Thursday at the airport in Chennai while ferrying passengers of a domestic in-bound evening flight, according to airport officials.

No one was injured in the incident as the blaze was put out immediately by Fire and Rescue Services personnel, they said.








The bus caught fire as it was nearing the arrival point with about 50 passengers on board.


Since the blaze was doused immediately, preliminary assessment indicated not "much damage", either to the interiors or the exteriors of the bus, they added.


The authorities are looking into the incident.

Surgical Strike Day: State varsities yet to decide on UGC letter

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedSep 22, 2018, 4:23 am IST

When enquired officials from Madras University said, “We are yet to take a call on the issue. We will decide about it next week.”



University Grants Commission

Chennai: The University Grants Commission’s (UGC) letter to vice-chancellors of all universities on celebrating the Surgical Strike Day on September 29 has attracted criticism from eminent educationists in the state who called it “as an unwarranted infringement on universities’ autonomous space”.

The commission also asked the universities to encourage students to pledge their support for the armed forces besides instructing NCC units of all universities to hold a special parade to mark the day in which Army launched a secret attack to destroy terrorist camps across the Line of Control in 2016.

“The universities may organise a talk-session calling ex-servicemen to sensitise about sacrifices made by the armed forces,” UGC had said in its communication to the universities.

When enquired officials from Madras University said, “We are yet to take a call on the issue. We will decide about it next week.”

Meanwhile, officials from Anna University said they have referred the letter for taking further action.

Calling the UGC’s move as militarizing the education, former vice-chancellor of Manonmaniam Sundaranar University V. Vasanthi Devi said, “It is a completely unwarranted encroachment into the autonomy of higher educational institutions.” “Armed forces are having a limited role and one must be thankful for the sacrifices made by them. But we must be equally thankful for larger sections of the society constituting labourers, workers and farmers,” she added.

She also reminded that UGC is merely a funding agency and that funding powers too now taken away by the central government.

Further, she said, “Nobody has the right to claim a monopoly over the rights of patriotism. In higher educational institutions, even nationalism, patriotism should be subjected to the critical appraisal. The universities should raise the issue with UGC about the circular. They must consider it as unwarranted infringement into their autonomous space.”

Anna University former Vice-Chancellor E. Balagurusamy said, “UGC should avoid sending such circulars.”

“UGC has other things to do instead of focusing on these issues. Quality in higher education is deteriorating day by day and a majority of universities lack basic facilities for research and teaching. So it needs to concentrate on higher education rather concentrating the issues which are political in nature,” he noted.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...