Monday, September 24, 2018

Q&A

‘Cleaning of sewers and septic tanks is not just a sanitation issue but also a human rights issue’

Manual scavenging in India is illegal. Yet, reports on deaths caused by it appear with depressing regularity. Bezwada Wilson, founder of Safai Karmachari Andolan (SKA), has battled over 25 years to end this practice. A winner of the Ramon Magsaysay award, he tells Avijit Ghosh why this degrading practice continues to be India’s shame:

How many sewage line and septic tank cleaners have died since January 1, 2017, as per your records?

We have documented 221 such deaths. Of them, 132 died between January 1 and December 31, 2017, and 89 this year. The number provided by National Safai Karamchari Commission – 123 during the same period – is lower because they mostly rely on newspaper clippings. We have 6,800 volunteers in 500 districts.

What keeps causing such deaths?

Sewer lines and septic tanks are like death traps. The 2014 Supreme Court judgment prohibits anyone from working in sewers and septic tanks. It is permitted, as per central government rules, only in case of emergency after putting on adequate safety gear. It is stipulated that the worker must use facemask, goggles, gumshoes, gloves, safety belt, etc, and that he should perform his task in the presence of a senior official. An ambulance should be there on the spot. None of these precautions were followed before the west Delhi tragedy earlier this month. Several similar cases have happened in the national capital this year. Delhi has accounted for 21 such deaths since January 1, 2017. These are not deaths but killings.

What is the attitude of officials?

That’s the saddest part. Whenever such incidents happen, neither the state nor the central government or the local bodies are willing to take responsibility. The same pattern repeats itself every time. On September 25, we have organised a protest against the killings in sewers at Jantar Mantar. There must be a timebound action plan to end what’s an illegal practice.

How do we stop these deaths that are caused by sheer callousness?

We must mechanise sewage cleaning. Our sewer systems vary from one city to another. Some are over 150 years old. Many small towns and older parts of metropolitan India have complex sewer networks that run below narrow lanes. We need to use mini-sucker machines and robotic equipment. They are available in India. And we need proper sewage treatment plants to be set up in a diversified manner. Even after 70 years of Independence, we have not moved one inch in mechanising our sewers. We must remember that cleaning of sewers and septic tanks is not just a sanitation issue but also a human rights issue.

How difficult is collating data and documenting these deaths?

We started documenting the deaths after the historic Supreme Court judgment in 2014 which, among other things, also said that the family/dependent of every victim since 1993 must be given Rs 10 lakh. We have gathered evidence to show that at least 1,790 deaths occurred over the past two decades. And the number is still increasing. Documenting evidence of a death that might have occurred years ago is a complex process. Our volunteers do fieldwork. Sometimes they come to know of a death which might have occurred 20 or 25 years ago. Sometimes people call us. Which is why we need to create more awareness.

We are looking only into reported cases; the number of unreported cases would be higher.

Till 2014, we were primarily trying to get compensation for the victims. But then we asked ourselves, how do we prevent deaths? In 2015-16, we carried out a Bhim Yatra across the country over 125 days which raised awareness on the issue. Now people are asking: who is accountable for these deaths? The truth is we are not trying to find solutions on how to clean our drains and look for human intervention to help us out. Which is why the most marginalised and oppressed are pushed into doing this kind of work and asked to go inside the drains.

How difficult is it to get Rs 10 lakh cash as decreed by the Supreme Court for each of those dead?

You have to die another 10 times to get Rs 10 lakh. You need to furnish at least four to five documents – FIR, death certificate, postmortem reports, identity proof, newspaper clippings – to satisfy the officials. Putting them all together is not easy for the family or relatives who belong to the lowest strata. We collect these things that government officials ask for before accepting an application for compensation. Even then not everyone gets Rs 10 lakh. In some cases, you get Rs 3 lakh, in other cases Rs 6 lakh. Only 169 out of 1,790 have got compensation, as per our records.

The 2014 SC judgment lays out a roadmap for rehabilitation of manual scavengers. What’s the progress on the issue?

Nothing has happened on that front.
Air India flight gets ‘hot brake’ warning mid-air

TIMES NEWS NETWORK

New Delhi  24.09.2018

: Air India is probing a “hot brake” warning which its Kuwait-Goa flight got while cruising at 35,000 feet, where the temperature is way below freezing point. On getting this warning, the pilot descended 10,000 feet and flew at the lower altitude to reportedly cool the landing gear before ascending to the higher altitude.

Later routine monitoring of the flight’s data recorder confirmed what was reported by the pilot. “We have called the pilot and just want to see how an issue like could be handled in a better way,” said the official.
Students to get only one chance a year to retake board examination

Nivedha.Selvam@timesgroup.com  24.09.2018

Students of Class X, XI and XII, who were given two chances a year to retake the public examination until the last academic year, will get only one chance from the next academic year, school education minister K A Sengottaiyan said in Erode on Sunday.

Until last academic year, if the students of Class X, XI and XII appearing for their board exam failed in the first attempt, they were given two additional chances every year to clear the exam in the July and September respectively.

“From the next academic year, if the students fail, they will be given only one additional chance in the year to clear the exam and it will be in June itself,” Sengottaiyan said.

He said students would not face any difficulty in their pursuit of pursue higher education because of the state’s decision to reduce the total marks in the Class XII exams from 1200 to 600, as the total marks for CBSE students in Class XII is 500.

While speaking to reporters at his residence in Gopichettipalayam, he stated that about 82,000 teachers have written the Teachers Entrance Test (TET) in the years 2011, 2014 and 2017. Sengottaiyan said that all these 82,000 teachers were given an another opportunity to go for a test as the weightage system was cancelled. "Teachers clearing the test will be posted in appropriate positions. Until then the temporary vacancies will be filled through the Parents Teachers Association (PTA) and the teachers recruited through PTA will be paid ₹7,500 a month," he added.

The minister said he had initiated work to computerize Class IX, X, XI and XII, apart from setting up smart classrooms in 3000 schools across TN.

Sengottaiyan said that as many as 1,50,000 books have been given to schools and libraries, including the oldest library in Yazhpanam in Sri Lanka.

“From the next academic year, if the students fail, they will be given only one additional chance to clear the exam and it will be in June itself,” the minister said

Sunday, September 23, 2018

ஆன்மீகம்

அழிவிலும் ஓர் ஆதாயம்!

By ஆசிரியர்  |   Published on : 20th September 2018 01:54 AM  

சபரிமலையில் மண்டல, மகர விளக்குப் புனித யாத்திரைக்கான காலம் தொடங்கியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் சரண கோஷங்களுடன் சபரிமலை சந்நிதானத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழும இருக்கிறார்கள். நவம்பர் முதல் ஜனவரி வரையிலுள்ள மூன்று மாத காலத்தில் சபரிமலைக்கு வரவிருக்கும் அந்த லட்சக்கணக்கான ஐயப்பன்மார்களை எதிர்கொள்ளும்படியான முன்னேற்பாடுகள் அங்கே இருக்கின்றனவா என்கிற ஐயப்பாடு பரவலாகவே காணப்படுகிறது.

கடந்த மாதம் கேரளத்தைத் தாக்கிய பிரளயம் போன்ற அடைமழையும், பெருவெள்ளமும் சபரிமலையைச் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. சபரிமலைக்குச் செல்வதற்கு நுழைவாயிலாக இருக்கும் பம்பையில் மழைவெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளைச் சொல்லி மாளாது. 
ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டிருந்த கழிப்பறைகள் இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. பம்பையையொட்டி அமைந்த 4,000 பேருக்கு மேல் ஓய்வெடுக்க வசதியாக இருந்த ராமமூர்த்தி மண்டபம் இப்போது இல்லை. மூன்று மாடிக் கட்டடமான அன்னதான மண்டபம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. மின் கம்பிகளும், மின்மாற்றிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பம்பையில் இருந்த இரண்டு மாடிக் கட்டடமான அரசு மருத்துவமனை இடிபாடுகளுடன் காணப்படுகிறது. பம்பையிலும் சரி, திரிவேணியிலும் சரி, சுமார் 25 மீட்டர் உயரத்தில் மண் சரிந்து விழுந்து குவிந்து கிடக்கிறது. 

வடசேரிக் கரையிலிருந்து பம்பை வரையிலுள்ள சாலையில் மூன்று இடங்களில் சாலை அடித்துச் செல்லப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலையில் பல இடங்கள் மலைச்சரிவினால் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. மரங்கள் மட்டும்தான் இதுவரை முழுமையாக அகற்றப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு சோதனைக்குப் பிறகுதான் சாலைகளையும், கட்டடங்களையும் பயன்படுத்த முடியும் என்கிற நிலைதான் காணப்படுகிறது. 

இதுவரை பம்பை வரை அனுமதிக்கப்பட்ட போக்குவரத்தை இனிமேல் நிலக்கல்' என்கிற இடத்துடன் நிறுத்தி, அதை சபரிமலை புனித யாத்திரையின் தொடக்கமாக்க எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. பக்தர்களுக்குப் போதிய வசதிகளைச் செய்து கொடுக்க நிலக்கல்லில் தாராளமான இடவசதி உண்டு என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கில் வரும் வாகனங்களை நிறுத்தவும் இடமுண்டு. நிலக்கல்லிலிருந்து பம்பைக்குக் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து பேருந்துகளை இயக்குவது என்கிற ஆலோசனையும் வரவேற்புக்குரியது. 
தனியார் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுவதும், நிலக்கல் பகுதியை முற்றிலுமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையகப்படுத்தி, அங்கே ஐயப்பன்மார்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் சாத்தியம். பெருவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களைக் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 
நிலக்கல்லில் தொடங்கி சபரிமலை சந்நிதானம் வரையில் கழிப்பறைகளை ஏற்படுத்துவது, குளியலறைகளை ஏற்படுத்துவது, ஆங்காங்கே குடிதண்ணீர் குழாய்களை நிறுவுவது என்பது மிகப்பெரிய பணி. கடந்த 70 ஆண்டுகளில் படிப்படியாக செய்யப்பட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் கட்டமைப்பு வசதிகளும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அவற்றையெல்லாம் மீண்டும் உருவாக்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத அசாதாரண சவால். போதாக்குறைக்கு மின் கம்பங்களை நிறுவி, மின்சார வசதியையும் ஏற்படுத்தியாக வேண்டும். இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பம்பையில் பாலம் கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் பம்பையைக் கடக்கும் வசதியிலான பாலம் ஒன்றைக் கட்டுவதுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் இலக்கு. இதற்கான நிதி ஆதாரத்தைக் கேரள அரசு வழங்கியிருக்கிறது. 
பம்பையில் மட்டுமே ரூ.2,000 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறுகிறது. பம்பையிலும் நிலக்கல்லிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசு பணம் ஒதுக்கித் தருவதாக இதுவரை உறுதியளிக்கவில்லை. உடனடியாக இதுகுறித்த நல்ல முடிவை கேரள அரசு எடுத்தாக வேண்டும். 

கேரள அரசு மட்டுமல்லாமல், தங்கள் மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வதால், சபரிமலையின் மேம்பாட்டுக்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் சபரிமலையின் மறு சீரமைப்புக்கு உதவ வேண்டும். இதற்காக, தனியாக ஒரு நிதியை ஏற்படுத்தி, பக்தர்களிடமிருந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு நன்கொடை வசூலித்தாலும் தவறில்லை. 
சபரிமலைக்கென்று தனியாக ஒரு தேவசம் போர்டை ஏற்படுத்தி, அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பங்குபெறும் நிலைமை ஏற்பட்டால், சபரிமலையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், சபரிமலையிலிருந்து கிடைக்கும் வருவாயை சபரிமலைக்கு மட்டுமே செலவிடுவதும் உறுதிப்படுத்தப்படும். அந்தந்த மாநிலங்களிலிருந்து வரும் ஐயப்பன்மார்களின் நலமும் வசதிகளும் பேணப்படும்.
ஜாதி, மத, இனப் பாகுபாடு இல்லாமல் பக்தர்கள் வருகின்ற தேசியப் புனிதத் தலம் சபரிமலை'. இது முற்றிலுமாக அழிந்திருக்கும் நிலையில், தெளிவாகத் திட்டமிட்டு சபரிமலையின் கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அழிவிலும் கூட ஓர் ஆதாயம் இருக்கிறது என்பதைக் கேரள அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
 

Technology

நுகர்வோருக்கு லாபம்!

By ஆசிரியர்  |   Published on : 21st September 2018 01:52 AM  

கடந்த 2017 மார்ச் மாதம் வோடஃபோன் குழுமத்தின் இந்தியப் பிரிவும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைவது என்று எடுத்த முடிவு, கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையின் ஒப்புதலைப் பெற்றது.
இடைப்பட்ட 16 மாதங்களில் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியிலிருந்தது, இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி 113 கோடியாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, இரண்டு இலக்க எண்ணிக்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த இணைப்புக்குப் பிறகு நான்காகக் குறைந்திருக்கிறது. அதில், பி.எஸ்.என்.எல். அரசுத்துறை நிறுவனம். ஏனைய மூன்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள். 

வோடஃபோன் இந்தியாவும், ஐடியா செல்லுலாரும் இணைந்து வோடஃபோன் - ஐடியாவாக மாறியதைத் தொடர்ந்து, இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியிருக்கிறது. உலகின் 2-ஆவது மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சந்தையான இந்தியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தப் புதிய நிறுவனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
வோடஃபோன் - ஐடியாவில் மொத்த வாடிக்கையாளர் இணைப்புகள் 43 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பார்தி ஏர்டெல்' நிறுவனம் 35 கோடி இணைப்புகளுடனும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 25.1 கோடி இணைப்புகளுடனும் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து செயல்பட்டாலும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவது மட்டுமல்லாமல், மூன்று தனியார் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் கார்ப்பரேட் யுத்தத்திலிருந்து அது விலகியே இருக்கிறது. இனிவரும் காலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே வலிமையான தொலைத்தொடர்பு நிறுவனங்களாகச் செயல்படும் என்று கூறலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கியது முதல், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியது. 2016 வரையில் இலவசச் சேவை வழங்கி, அதைத் தொடர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் இணையதளம் உள்ளிட்ட சேவைகளை ஜியோ வழங்கத் தொடங்கியபோது, அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் செய்வதறியாது திகைத்தன. ரிலையன்ஸ் ஜியோ இப்போது 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஜியோ செல்லிடப் பேசிகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவரும் நிலையில், எல்லா நிறுவனங்களும் தங்களது உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையின் மூலம் ஒன்றரை ஆண்டு காலத்தில் 21.5 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது. இதை எதிர்கொள்ள, ஏனைய நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. இணைப்புக்குப் பிறகு வோடஃபோன்-ஐடியா நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு, வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளுக்குத் தரும் ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்கி இருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான போராட்டம் மேலும் அதிகரிக்கும்போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தாற்போல என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை மொத்தமாகத் தனது கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள முடியாமல் இருந்ததால்தான் வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் தனித்தனியாக செயல்படாமல் இணையும் முடிவுக்கே வந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

சந்தைப் பொருளாதாரம் என்பது போட்டியின் அடிப்படையிலானது. அதிகரித்துவரும் தொலைத்தொடர்பு சேவைக்கான சந்தையில் மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியில் இறங்கியிருக்கும் நிலையில், கட்டணக் குறைப்பு யுத்தம் தொடங்கக்கூடும். அது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், இணையதள வேகமும், தரமான சேவையும், குறைந்த கட்டணத்தில் எந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் வசதியை தொலைத்தொடர்பு இடமாற்றம் (போர்ட்டபிலிடி) வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இனிமேல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அழைப்பு முறிவை (கால் டிராப்) அசட்டையாக ஒதுக்கிவிட முடியாது. 
வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த இணைப்பின் விளைவாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்திருக்கின்றன. இணைப்பின் பயனாக இந்த நிறுவனத்திடம் 3 ஜி, 4 ஜி தொழில்நுட்பக் கருவிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதும், அழைப்புக் கோபுரங்களின் (டவர்) எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களுக்கான சேவை மேம்பாட்டை உறுதிப்படுத்துவதுடன் புதிய பகுதிகளைத் தங்களது தொடர்புக்குள் கொண்டு வரவும் உதவும்.

3.5 லட்சம் அகண்ட அலைவரிசை (பிராட்பாண்ட்) இணைப்புகளையும், 17 லட்சம் சில்லறை விற்பனையாளர்களையும், 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அது எப்படி ரிலையன்ஸ் ஜியோவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..!" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2


விகடன் விமர்சனக்குழு

'சாமி 2' திரை விமர்சனம்



'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்கள். உண்மைதான். சில பழைய விஷயங்களை திரும்ப தூசி தட்டி மீட்டெடுக்கவே கூடாது. காரணம், சில சமயங்களில் அப்படி தூர்வாரி தூசிதட்டும்போது தங்கம் துருப்பிடித்த தகரமாகிவிடும் வாய்ப்புகளுண்டு - இந்த டயலாக்கிற்கும் இந்த பட விமர்சனத்திற்கும் சாமியின் மேலிருக்கும் ஸ்கொயர் சத்தியமாக தொடர்பில்லை. (தூர்... தூசு... துரு... - அதாவது நாங்க ஹரி படம் பார்த்துட்டு வந்துருக்கோம்.) 'சாமி 2' படம் எப்படி?



திருநெல்வேலியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெருமாள் பிச்சையை போட்டுத் தள்ளியதிலிருந்து தொடங்குகிறது சாமி ஸ்கொயரின் வேட்டை. ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான பாபி சிம்ஹா. அவர் பெயர் ராவண பிச்சை, அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தரின் பெயர் மகேந்திர பிச்சை, இரண்டாவது அண்ணனின் பெயர் தேவேந்திர பிச்சை. (படிக்கவே தலை சுத்துதா?... அப்போ இதை எல்லாம் ஹரி ஸ்டைல் ஃபாஸ்ட் பார்வேர்ட்ல பாத்த எங்களுக்கு எப்படி இருக்கும்?)

ஆடியன்ஸ் தவிர மீதி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பெருமாள்பிச்சை பற்றிய தங்கமலை ரகசியத்தை தரையிறங்கிய இரண்டே நாட்களில் தெரிந்துகொள்கிறார், ராவண பிச்சை. அதன்பின் அவருக்கும் விக்ரமுக்குமான மோதல் சூடுபிடிக்கும் என நினைத்தால் அங்குதான் வெச்சுருக்காங்க ட்விஸ்ட். சடசடவென 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகி, 2031-ல்(???) நடக்கிறது கதை. அங்கும் ஒரு விக்ரம் இருக்கிறார். ஒரு பாபி சிம்ஹா இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் யார்?. ஆறுச்சாமிக்கு என்னாச்சு என்பதை சொல்லும் கதைதான் சாமி ஸ்கொயர்.

ஆறுச்சாமியாக விக்ரம். 2031-ல் இல்லை, நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும்கூட மனிதர் அப்படியேதான் இருப்பார் போல. 'சாமி' முதல் பாகத்தில் பார்த்த அதே விக்ரம். எடையைத் தவிர எதுவும் மாறவில்லை. நடிப்பும் அதே எனர்ஜி மற்றும் துள்ளலோடு! ஆனால் விக்ரம் 'சாமி' முதல் பாகத்திற்குப் பின் நடிப்பில் வெவ்வேறு உயரங்களைத் தொட்டுவிட்டதால் அதே பழைய ஃபார்மெட் கதை அவருக்கேற்ற தீனியைத் தராதது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது.



'இவருக்குப் பதில் இனி இவர்' என்ற மெகாசீரியல் கான்செப்ட்டை சீக்வல் சினிமாக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார், ஹரி. ஆனால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது பொருத்தமில்லாத சாய்ஸாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு இயல்பாகவே அழகாக இருக்கும் அவரை மெனக்கெட்டு வெள்ளையாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். மற்றொரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் மற்ற ஹரி பட ஹீரோயின்களைப் போலவே வருகிறார்... விழுகிறார்... விரட்டுகிறார்... விரட்டப்படுகிறார்!

காமெடியில் இது சூரிக்கு அடுத்த லெவல் படம். முன்பெல்லாம் கோபம் வருவதுபோல காமெடி செய்தவர், இதில் ஒருபடி மேலேறி கடுப்பைக் கிளப்பும் காமெடிகள் செய்திருக்கிறார். எரிச்சலில் ஆடியன்ஸ் கொடுக்கும் கவுன்ட்டர்களே பலமடங்கு பெட்டர். 1432-வது முறையாக சொல்கிறோம் சூரி! உங்களது ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!

மற்ற அனைவரும் அடக்கிவாசிப்பதால் தனியாகத் தெரிகிறார், பாபி சிம்ஹா. அதே 'ஹே... ஏய்... ஏலேய்..' டைப் வில்லன்தான். ஆனாலும் ஆங்காங்கே அசால்ட் சேது தெரிவதால் ரசிக்க முடிகிறது. பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா - படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.



டி.எஸ்.பி இசை - நோ கமென்ட்ஸ். ஒரே கருவியை உருட்டி உருட்டி சவுண்ட் ரெக்கார்டிங் முடித்திருப்பார் போல. பழைய சாமியின் பி.ஜி.எம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அதில் ஒரு சதவீதம்கூட புது பேக்ரவுண்ட் ஸ்கோரில் இல்லை. பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். அதைவிடக் கொடுமை அவை இடம்பெற்றிருக்கும் இடங்கள். ப்ரியனும் அவருக்குப் பின் வெங்கடேஷ் அங்குராஜும் செய்திருக்கும் ஒளிப்பதிவுதான் படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது.

சூரியைப் போல ஹரியும் அடுத்த லெவல் பயணித்திருக்கிறார். முன்பெல்லாம் சீன்களில்தான் ஃபாஸ்ட் பார்வேர்டு மோடில் இருக்கும். இப்போதெல்லாம் கதையே 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகிறது. முதல் பாகத்தையும் இதையும் கனெக்ட் செய்யும் இடங்கள் எல்லாம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

சின்னச் சின்ன 'அட' ட்விஸ்ட்கள்தான் ஹரி ஸ்பெஷல். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகள் எதுவுமே இல்லை. முதல்பாதி முழுக்க இழுஇழுவென இழுத்தடிக்கும் திரைக்கதை. இரண்டாம் பாதியில்தான் ஹரியின் சாயல் தெரிகிறது. ஆனால் அதுவும் மிகப்பழைய சாயல். ஒரு கட்டத்தில் இது ஆக்‌ஷன் படமா, பேய்ப்படமா இல்லை டைம் ட்ராவல் படமா என்ற சந்தேகம் வேறு மூளைக்குள் வட்டமடிக்கிறது.

படம் முழுக்க யாராவது யாரையாவது அறைந்துகொண்டே இருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் பட்ஜெட்டைவிட எண்ணிக்கையில் தாண்டும் போல. போதாக்குறைக்கு விக்ரமும் 'இப்போது கையைத் தூக்கியடிப்பது உங்கள் விக்ரம்' என விடாமல் ஸ்க்ரோல் போடுமளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வசனங்கள். 'ஐ.ஏ.எஸ் மூளை.. ஐ.பி.எஸ் வேலை', நடந்தா ஒருவாரத்துல சாவ, ஓடுனா ஒரே நாள்ல சாவ' என அநியாயத்துக்கு அவுட்டேட்டட் வசனங்கள் காதைக் குடைகின்றன.



ஹரி படத்தில் லாஜிக் பார்ப்பது தெய்வக்குத்தம்தான். ஆனால் இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் கடைக்கோடி குடிமகனோடு 'ஹாய் டூட், நைட் என்ன டின்னர்?' ரேஞ்சுக்கு சாட் செய்வதெல்லாம் ஹரி படத்தில் மட்டுமே சாத்தியம்! 'எங்ககிட்டயும் கிராஃபிக்ஸ் பண்ண ஆளிருக்கு' எனக் காட்டுவதற்காகவே சி.ஜியை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒய் பாஸ்?

ஓரிடத்தில் 'இன்னுமா ஜாதி எல்லாம் பார்க்குறாங்க?' எனக் கேட்கிறார் விக்ரம். அதற்கு சில காட்சிகள் முன்னதாக, 'உன்னை நான் இந்த அடையாளத்தோட வளர்த்தேன்' என தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ். ஓப்பனிங் காட்சியில் பெண்களை எப்படியெல்லாம் நடத்தவேண்டும் என பாடமெடுக்கிறார் ஹரி. நல்லது! ஆனால் விக்ரம் பளீர் பளீரென கீர்த்தி சுரேஷை அறைவது மட்டும் எப்படி ஹீரோயிசத்தில் வரும்? சாமி முதல் பாகம் வந்தபோது ஹீரோயின்களுக்கு படங்களில்கூட பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது பாகம் வரும் நேரத்தில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என பெண்கள் ஷீரோக்களாக படம் பண்ணி லாபம் பார்க்கும் வகையில் மார்க்கெட்டில் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் எத்தனை காலத்திற்கு பொண்ணுங்க இப்படி இருக்கணும், பசங்க அப்படி இருக்கணும் என்ற பாடம்?

'நான் பொறந்த ஊருல எதுவும் இன்னும் மாறல' என ஆதங்கமாக பாட்டும் வசனமும் வைப்பதெல்லாம் சரிதான். அந்த மாற்றத்தை ரசிகர்கள் உங்களிடமும் எதிர்பார்ப்பார்கள்தானே! கதையிலும் கருத்திலும் உங்களிடம் அந்த மாற்றம் எப்போது வரும்?

பறக்கும் விமானத்திற்குள் காற்றழுத்தம் குறையும்போது ஏன் காது, மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது ?


இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு Jet Airways விமானத்தில் காற்றழுத்தக் கோளாறு ஏற்பட்டு பயணிகளின் காது, மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது.
அதைத் தொடர்ந்து காற்றழுத்தக் கோளாற்றுக்கும் காது, மூக்கில் இரத்தம் வருவதற்கும் என்ன தொடர்பு என்று ''செய்தி" அறிய விரும்பியது.
தொலைபேசி மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர். ரவி சேஷாத்திரியிடம் தொடர்பு கொண்டு பேசியது.

விமானம் மேலே செல்லச் செல்ல வெளிப்புறக் காற்றழுத்தம் குறைகிறது.
அதை ஈடுகட்ட விமானத்தினுள் காற்றழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுவது முக்கியம்.

இல்லாவிட்டால், பயணிகள் சுவாசிக்கப் போதுமான பிராணவாயு இல்லாமல் போகும்.

பொதுவாகக் காற்றழுத்தம் திடீரென இறங்கி, போதுமான பிராணவாயு இல்லாதபோது நம் காது, மூக்கின் உட்பகுதிகள் எளிதாக பாதிக்கப்படும்.
அப்போது அந்த பாகங்களில் உள்ள சின்னச் சின்ன இரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வர ஆரம்பிக்கும் என டாக்டர். ரவி குறிப்பிட்டார்.
சில நேரங்களில் காற்றழுத்தக் கோளாறு மோசமாக இருந்தால் காதின் உள்செவிப்பறைகள் கிழியும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு காற்றழுத்தக் கோளாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காதில் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்து காது கேளாமல் போகலாம்.

அது சில மணி நேரம், சில நாள், இல்லை சில மாதம் வரைகூட நீடிக்கலாம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...