Tuesday, September 25, 2018


மதுரைக்கு வருமா 'எய்ம்ஸ்'; கிடைக்குமா உயர் சிகிச்சை :
முட்டுக்கட்டை போடுகிறதா தமிழக அரசு 


dinamalar 25.09.2018

மதுரை:மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை துவக்க மத்திய அரசு கேட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை செலுத்தாமல் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரைக்கு வருமா எய்ம்ஸ், தருமா உயர் சிகிச்சை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.



மதுரை தோப்பூரில் இம்மருத்துவமனை துவங்கும் அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அரசு நிலம் 200ஏக்கரில் மருத்துவமனை, டாக்டர்கள், ஊழியர்கள் குடியிருப்பு கட்ட முடிவு செய்து எச்.எல்.எல்., நிறுவனம் தர ஆய்வுக்காக மண் எடுத்து நாக்பூர் அனுப்பியது. இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1.6 கி.மீ., துாரமுள்ள பெட்ரோல் குழாய் பகுதியில் கட்டுமான பணிக்கு தடையில்லா சான்று வழங்கியது.இதற்கு பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்கான காரணத்தை அறிந்து நிவர்த்தி செய்யும் பணியில் தமிழக அரசு இறங்காமல் சுணக்கம் காட்டுகிறது.

மாநில அரசு முட்டுக்கட்டை

இங்கு கட்டுமான பணியை துவக்க 200 ஏக்கர் அரசு நிலத்தை எய்ம்ஸ் மருத்துவமனை பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். மதுரை துாத்துக்குடி நான்கு வழிச்சாலை - தோப்பூருக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க 20 மெகாவாட் திறனுள்ள துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை நிறைவேற்றித்தர மத்திய அரசு, மாநில அரசிடம் கோரியது.இவற்றை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை காட்டாததால், மத்திய அரசு அரசாணை வெளியிடவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தோப்பூர் மருத்துவ மனைக்காக தேர்வான இடத்தில் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

நிலம் தேர்வு அரசாணை

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: எய்ம்ஸ் துவக்க தேவையான நிலம், இணைப்பு சாலை, மின்வசதி எங்கிருந்து பெறப்படும், ரயில்வே ஸ்டேஷன் இணைப்பு சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தடையில்லா சான்று உட்பட அனைத்து ஆவணங்களையும் சுகாதாரத்துறை மூலம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். முதல்வர் பழனிசாமியும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நிலம் தேர்வு செய்ததற்கான அரசாணை கூட வெளியானதால் மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி கூறியுள்ளார். எய்ம்ஸ் வருவதற்கு முழுமூச்சாக செயல்படுகிறோம்.

'எய்ம்ஸ்' உறுதி

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய 200 ஏக்கரை சர்வே செய்து, மண் ஆய்வும் நடத்தி விட்டனர். கட்டுமான பணிக்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து, மத்தியநிதித்துறையின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் உள்ளன. மத்திய அமைச்சரவையில் அனுமதி பெற்று நிதி ஒதுக்கிய பின் கட்டுமான பணி துவங்கும். மதுரைக்கு எய்ம்ஸ் உறுதி. அதில் மாற்றமில்லை.மாநில அரசுக்கு

 அக்கறையில்லைவி.எஸ்., மணிமாறன், ஒருங்கிணைப்பாளர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்:மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிட்டதும், அமைச்சர்கள் உட்பட பலர் தடபுடலாக பொதுக் கூட்டங்களில் பேசினர். அதற்கு பின் மாநில அரசு இம்மருத்துவமனையை துவக்க செய்வதில் அக்கறை காட்டவில்லை. இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. செப்.,15 பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்றனர். மத்திய அரசு நிபந்தனைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசே முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது. அறிவிப்பு வெளியாகி 3 மாதங்களுக்கு மேலாகியும் பூர்வாங்க பணிகள் கூட துவக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.முனைப்பு காட்டாத மாநில அரசுஸ்ரீநிவாசன், மாநில செயலர், பா.ஜ.,: மதுரையில் எய்ம்ஸ் அமையும் என மத்திய அரசு அறிவித்தவுடன் பா.ஜ., சார்பில் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் அரசிதழில் வெளியிட வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு நிபந்தனைகளான இணைப்பு ரோடு, நில ஒப்படைப்பு, மின்வசதி குறித்து எந்த பணிகளையும் மாநில அரசு தோப்பூரில் மேற்கொள்ளவில்லை. சுகாதார அமைச்சர் டில்லி சென்று மத்திய அரசிடம் பேசி அரசிதழில் வெளியிட வைத்து நகல் பெற்று வர வேண்டியது தானே. இவர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாகி விடுகிறது. பிறகு எப்படி எய்ம்ஸ் திட்டங்களுக்கு உதவ முடியும்.

காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்


Added : செப் 25, 2018 05:10

சென்னை : மகாளய அமாவாசையை முன்னிட்டு, காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், அக்., 4ம் தேதி, மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை - சென்ட்ரல் வழியாக, மதுரா வரை செல்லும். இந்த யாத்திரை ரயிலில் பயணிப்போர், மகாளய அமாவாசை அன்று, பீஹார் மாநிலம், கயாவில் உள்ள விஷ்ணு கோவிலில், முன்னோருக்கு மரியாதை செலுத்தலாம். காசியில் உள்ள கங்கை யில் நீராடலாம். விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களுக்கு சென்று வரலாம்.

உ.பி., மாநிலம் - அலகாபாதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சேரும், திரிவேணி சங்கமத்திலும் நீராடலாம். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில், மானசாதேவி கோவிலில், தரிசனம் செய்யலாம். டில்லியில், குதுப்மினார், 'லோட்டஸ்' கோவில், தீன்மூர்த்தி பவன், இந்திரா நினைவகம் மற்றும், 'இந்தியா கேட்' செல்லலாம்.

மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலுக்கும் சென்று வரலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கட்டண சலுகை உண்டு. மேலும் தகவலுக்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்துக்கு, 90031 40681, 90031 40682 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எங்கே என் ஜீவனே இன்று (செப்.25 )- மகாளயபட்சம் ஆரம்பம்

Added : செப் 24, 2018 21:36




உடலை விட்டு பிரிந்த பின் உயிரானது 13 நாள் வரை தனது வீட்டு வாசலில் நிற்கும். முதல் மூன்று நாள் நீரிலும், அடுத்த மூன்று நாள் நெருப்பிலும், அடுத்த மூன்று நாள் காற்றிலும் தங்கும். துக்கம் கேட்க வருவோரை எல்லாம் பார்த்தபின், 10ம் நாளன்று வீட்டிற்குள் கண்ணுக்குத் தெரியாமல் நுழையும். 11,12ம் நாளில் கொடுக்கப்படும் பிண்டங்களை ஏற்கும். இறுதி காரியத்தின் போது இறந்தவர் உருவமாக நியமிக்கப்படுபவரை (ஆவாஹனம் செய்யப்படுபவரை) கூர்ந்து பார்த்தால் அவர் சாப்பிடும் முறையில் இறந்த உயிரின் சாயல் தெரியும். 13ம் நாள் யமதுாதர்களான கிங்கரர்கள் உயிரை கட்டி இழுத்துச் செல்வர். பகலிலும், இரவிலுமாக நடந்து யமபுரத்தை உயிர் அடைய ஓராண்டாகும். அதுவரை உயிருக்கு பசி, தாகம் ஏற்படும் என்பதால் மாதத்தில் ஒருநாள் அதாவது இறந்த திதியன்று வழியில் தங்க அனுமதியளிப்பர். இந்த ஓராண்டு வரை மாதம் தோறும் இறந்த திதியன்று உயிரின் பசியைப் போக்க பிண்டம் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. இறந்தவர்கள் பாவி என்றால் யமபுரத்திற்கும், புண்ணியம் செய்திருந்தால் பிரம்மலோகத்திற்கும் செல்வர்.

 அவர்கள் தங்களின் வாரிசுகளை பார்க்க பூமிக்கு வரும் காலம் மகாளயபட்சமாகும். அதாவது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள். அப்போது தமக்குரிய பிண்டத்தை வழங்குமாறு நம் வீட்டு வாசலில் காத்திருப்பர். முன்னோர் இறந்த மாதம், பட்சம், திதியன்று ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்னை, துர்சம்பவம் ஏற்படும். மீண்டும் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டால் துன்பம் தீரும். சிலருக்கு முன்னோர்கள் இறந்த திதி தெரிவதில்லை. அவர்களும் மகாளயபட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளயபட்ச தர்ப்பணத்தால் ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் சேரும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளவர்களும் இதை தவிர்க்கக் கூடாது.

தந்தை இறந்த திதியில் இந்த தர்ப்பணம் செய்வது நல்லது. தர்ப்பணத்தின் போது மூன்று தலைமுறையினர் அதாவது தந்தை, தாத்தா, முப்பாட்டனார், தாயார், பாட்டி, முப்பாட்டியின் பெயர்களை குறிப்பிட வேண்டும். திதி தெரியாதவர்கள் அஷ்டமி அல்லது பரணி நட்சத்திரத்தில் செய்யலாம். இக்காலத்தில் அசைவம், வெங்காயம், பூண்டு சேர்க்காமல் வீட்டில் மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய்க் குளியல், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். இன்று மகாளய பட்சம் துவங்குகிறது. செப். 28ல் மகாபரணி, அக்.2ல் மத்யாஷ்டமி அக்.8ல் மகாளய அமாவாசை வருகின்றன. தவறாமல் முன்னோரை வழிபடுங்கள். வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள். எஸ்.சந்திரசேகர்


Monday, September 24, 2018

108 ஆம்புலன்ஸ் சேவை தெரியும்... `515 கணேசன் கார் சேவை’ தெரியுமா?

ப.பிரியதர்ஷினி

108 ஆம்புலன்ஸ் சேவை நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்... `515 கணேசன் இலவச கார் சேவை’ தெரியுமா? தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை... எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர் கார்.



புதுக்கோட்டையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலங்குடி. ஊரில் இறங்கி, `கணேசன்...’ என்ற பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. `515...’ என்றால் உடனே அடையாளம் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு டீக்கடைக்காரரிடம் `515 கணேசன்’ குறித்து விசாரித்தோம்... ``நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டாரு. உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை... சமயத்துல வெளி மாநிலங்களுக்குக்கூட அவரோட கார் பறக்கும். `கையில் காசு இல்லை’னு சொன்னா, `எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாரு 515. (அவரை `515’ என்றுதான் ஊர் மக்கள் அழைக்கிறார்கள்). பெத்த புள்ளைக்கு அஞ்சு ரூபா தர்றதுக்கு யோசிக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷர். சாதாரண ஓட்டு வீட்டுலதான் குடியிருக்காரு. `ரேஷன் கடை அரிசியும் பருப்பும் இருந்தாப் போதும்... எங்க வயிறு நிறைஞ்சிடும்’னு சொல்லிட்டு வர்றவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்வார். இவரோட நல்ல எண்ணத்துக்கு ஏராளமான பரிசுகள் கிடைச்சிருக்கு. வேற என்ன... ஏகப்பட்ட பட்டங்கள், சான்றிதழ்கள்தான். இவ்வளவு ஏன்... அவர் தெருவுல இருக்குறவங்க, அவங்களோட வீட்டுக்கு வழி சொல்லணும்னா எப்படிச் சொல்வாங்க தெரியுமா... `515 வீட்டுலருந்து நாலு வீடு தள்ளி எங்க வீடு இருக்கு’, `515 வீட்டுக்கு எதிர்ல எங்க வீடு...’ இப்படியெல்லாம்தான் சொல்வாங்க’’ என்று சொல்லி கணேசன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார் டீக்கடைக்காரர்.




`பல வருடங்களாக இப்படி ஒரு சேவை செய்ய வேண்டும் என்றால் ஒன்று, அவர் பெரும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். அல்லது, ட்ரஸ்ட் ஏதாவது நடத்தி, நிதி திரட்டி, அதைக்கொண்டு உதவி செய்பவராக இருக்க வேண்டும்.’ - இப்படியெல்லாம் யோசித்தபடி வழி விசாரித்துக்கொண்டு `515’ வீட்டுக்குச் சென்றோம். நாம் நினைத்ததுபோல அவர் வீடு பெரிய பங்களா எல்லாம் இல்லை. சாதாரண பிளாஸ்டிக் கூரை வேய்ந்த எளிமையான வீடு. வீட்டுக்கருகில் அழகழகான குட்டிக் குட்டிச் செடிகள்... சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்ட தரை. மலர்ந்த முகத்தோடு நம்மை வரவேற்றார் கணேசன். நரைத்த தலை, லுங்கி, சாதாரணமான ஒரு சட்டை. `இவரா மக்கள் சேவை செய்பவர்?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே சரளமாகப் பேச ஆரம்பித்தார் கணேசன்...

``ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. அப்புறம் நானா ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன். வாழ்க்கையில முன்னேறிக் காண்பிச்சவங்க எல்லாருக்குமே மனைவிதான் உதவியா இருப்பாங்க. எனக்கும் என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு அஞ்சு பெண் குழந்தைங்க... எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு...’’ என்றவரிடம், ``அது ஏன் உங்களை `515’-னு எல்லாரும் கூப்பிடுறாங்க?’’ என்று கேட்டோம்.



அது, 1968-ம் வருஷம். ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ஒருத்தர், தன்னோட மனைவியை ஒரு தள்ளுவண்டியிலவெச்சு தள்ளிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாரு. ஏன்னு பார்த்தப்போதான் தெரிஞ்சுது... அந்தப் பொண்ணு நிறைமாத கர்ப்பிணினு. என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்கு வந்து, என் மனைவி தெய்வானைகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவறதுக்கு ஏதாவது பண்ணணும்’னு என் ஆதங்கத்தையும் சொன்னேன். அவங்க, `இதை உங்களால மாத்த முடியுமா... இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு உங்களால என்ன பண்ண முடியும்’னு கேட்டாங்க. `முடியும்’னு சொன்னேன். நான்வெச்சிருந்த பழைய இரும்புக்கடையை வித்தேன். 17,500 ரூபா கிடைச்சுது. அந்தப் பணத்துல, செகண்ட் ஹேண்ட்ல ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அந்த காரோட நம்பர் TNZ-515. நான் முதன்முதல்ல வாங்கின காரோட நம்பரையே `515 இலவச சேவை கார்’னு பேரா வெச்சேன். `உதவி’னு கேட்குறவங்களுக்கு, நேரம் காலம் பார்க்காம காரை எடுத்துட்டுப் போய் என்னால ஆனதைச் செய்றேன்...’’ அடக்கத்தோடு சொல்கிறார் கணேசன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார் கணேசன். அதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. காருக்கு டீசல் போடுவது, அது ரிப்பேர் சரி பார்ப்பது... என அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவைக்கு வேளை வராத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டது, இனி ஓடும் கண்டிஷனில் இல்லை என்று தெரிந்ததுமே அடுத்த காரை வாங்கிவிடுவார். எல்லாமே செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். அத்தனைக்கும் `515’தான் பெயர். அவரேதான் முதலாளி, அவரேதான் டிரைவர்!



இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறது, விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றிருக்கிறது 515 கார். அது மட்டுமல்ல... பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போக முடியாமல் தவிப்பவர்களுக்கும் இவரின் கார் உதவிக்கு ஓடி வரும்... இலவசமாக! அப்படி, இது வரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. கொச்சின், பெங்களூரு, தூத்துக்குடி... என கணேசன் பயணித்த ஊர்கள் எண்ணற்றவை. நாம் அவரைப் பார்ப்பதற்கு சற்று முன்னர்தான் திருநெல்வேலி வரை ஒரு கர்ப்பிணியை அழைத்துச் சென்று, விட்டுவிட்டு வந்திருந்தார்.

நாம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே செல்போனில் அவருக்கு அழைப்பு! உள்ளே போனவர், கார் சாவியுடன் வெளியே வந்தார். `நீங்க என் மனைவி தெய்வானைகிட்ட பேசிக்கிட்டு இருங்க. பக்கத்துல ஒரு பொண்ணுக்குப் பிரசவ வலியாம்... ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்துடுறேன்.’’ நம் பதிலை எதிர்பாராமல், காரை எடுத்துக்கொண்டு விரைந்தார் கணேசன். `காலம் மாறினாலும், சிலரின் குணங்கள் மாறாது’ என்பார்கள். உலகெங்கும் நாம் அறியாத எத்தனையோ கணேசன்கள், பிரதிபலன் பார்க்காமல் யாருக்கோ உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 515 கணேசனின் சேவையை மனமார வாழ்த்தலாம், வணங்கலாம்!



Posted Date : 13:40 (24/09/2018)Last updated : 13:40 (24/09/2018)

`நான் செஞ்ச சேவைக்கு மரியாதை கிடைச்சிருக்கு!'‍- டாக்டர் பட்டம் பெற்ற ஆலங்குடி கணேசன் நெகிழ்ச்சி

இரா.செந்தில் குமார்

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் போல, இலவச கார் சேவை செய்துவருபவர், ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன் என்னும் 70 வயது முதியவர். இன்று நேற்றல்ல, கடந்த 46 வருடங்களாக இந்தச் சேவையை அவர் செய்துவருகிறார். ஆலங்குடி மட்டுமல்ல புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 515 கணேசனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. நம் விகடனில்கூட இவரின் சேவையைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.

பிரசவம், அவசர சிகிச்சையா உடனே 515 கணேசனுக்குப் போன் வந்துவிடும். எந்தவித கட்டணமும் இல்லாமல், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்துகொண்டிருக்கிறார். இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கும், விபத்துக்குள்ளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் உதவியிருக்கிறார் கணேசன். அதுமட்டுமல்ல, இறந்த சடலங்களைத் தங்களின் இருப்பிடங்களுக்கு எடுத்துச்செல்ல கஷ்டப்படுபவர்களுக்கும் உதவிவருகிறார். அப்படி, இதுவரை 5000-க்கும் மேற்பட்ட சடலங்களைக் கொண்டுசெல்வதற்கு உதவியிருக்கிறார்.




அவரின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, பெங்களூரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம், சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ``இத்தனை நாள் செஞ்ச சேவைக்கு ஒரு மரியாதை கிடைச்சிருக்கு. நெறையப் பேரு போன் பண்ணி வாழ்த்துறாங்க. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன் " நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் 515 கணேசன்.
HC pulls up UGC for failure to check deemed varsities
TNN | Sep 9, 2018, 12.29 AM IST



CHENNAI: Pulling up the University Grants Commission (UGC) for failing to check irregularities committed by deemed universities, the Madras high court has directed the commission to take appropriate action against Vinayaka Mission University for making MPhil course available through distance education mode without necessary recognition.

Justice S M Subramaniam passed the order on a batch of pleas, including one moved by S Sivan — a MPhil holder from the university whose degree was declared invalid by the UGC. Sivan is a BT assistant employed by state school education department. While on the job, in 2009, he completed MPhil from Vinayaka Mission University and was receiving incentive increment from the UGC— an increment granted to teachers for acquiring higher educational qualification.

To his shock, on October 3, 2012, the school education department issued an order that incentive increments cannot be granted to holders of degrees that are not valid as per the University Grants Commission Act and its regulations.

Aggrieved, Sivan approached the court. The government submitted that the MPhil obtained by him is invalid and therefore, he is not entitled to any incentive increment. The UGC submitted that deemed universities declared under Section 3 of the UGC Act are not empowered to conduct distance education courses without the commission’s nod.

Recording the submissions, Justice Subramaniam said, “This court is of an opinion that incentive increment is a concession granted to teaching staff in school education department to encourage the morale of the teachers. Such being the special nature of concession, the same is to be regulated in accordance with the terms and conditions of the orders in force.”

It is up to the UGC to initiate appropriate action since students from poor economic background are exploited, the court said, adding in the event of serious irregularities, the UGC is competent to initiate action, even to cancel the status of the university. Such actions, however, are rarely taken by the UGC for reasons not known to the court, the judge said. The university concerned must be held accountable by the authorities of UGC, the judge added.
Do Phd for breakthrough innovation not for degree: MoS, MHRD

TNN | Aug 6, 2018, 10.28 AM IST



MANGALURU: We don't need 10 PhDs, but need one that will contribute to the country in a big way. Importantly, all of those quality works should be relevant to our country, asserted Satyapal Singh, minister of state in ministry of Human Resource Development and ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation.

Satyapal was in National Institute of Technology- Karnataka, Surathkal to dedicate first of its kind eLibrary and other facilities, here on Saturday.

Stressing why MHRD has proposed 20 institutions including 10 private as 'Institution of Eminence' (IoE), said that it is because that no institution in country matches to international standards. "Through this IoE tag, we want to develop such institutions to meet those standards in coming years. Government will provide whatever it requires," he added.

Minister expressed that PhD in India only gives degrees nothing else. "What today we need is commitment, innovation, research, truthfulness. In total, one must have dedication that his/her PhD shouldn't get just a degree but major breakthrough and knowledge," stressed Satyapal. He also gave call to 'original innovation'.

Earlier, some of the countries were leading in science and technology, however, minister feels that there is no monopoly anymore. "To have an upper hand we need innovative ideas. Meanwhile, there is a need all multi-discipline studies and interdisciplinary learning. It is because in coming days all the technologies are going to merge," he added.

During an interaction with budding engineers, to question what government is doing to stop students abroad for higher studies, minister said that to stop brain-drain Prime Ministers Research Fellowship is introduced. The enrolled student will get monthly remuneration of Rs 70,000 to 80,000 and also seed money of Rs 2 lakh. "Apart from it, we are also tracking all 3rd M.Tech student so that don't fly outside India for work or further studies."

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...