Wednesday, September 26, 2018

மாநில செய்திகள்

ரஜினிகாந்துடன் புதிய நீதிக்கட்சி இணைந்து பயணிக்கும் ஏ.சி.சண்முகம் பேட்டி



ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதும், புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:24 AM
சென்னை,

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

‘தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பதிவு: செப்டம்பர் 26, 2018 05:00 AM
சேலம்,

சேலத்தில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் வசிக்கின்ற தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், கொடுமைகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கருணாநிதி தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த போதும், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் தான் இலங்கையில் நமது இனமக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்தியா, இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்த காரணத்தினாலே விடுதலைப்புலிகளை எளிதாக முறியடிக்க முடிந்தது என்று ராஜபக்சே பேட்டி கொடுத்தார். இதன்பின்னர் தான் தி.மு.க. நடத்திய நாடகம் வெளியானது.

தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் போர்க்குற்றம் செய்திருக்கின்றார்கள், அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றார்கள், இனமக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். எனவே, இவர்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அண்மையிலே, ஸ்டாலின் இங்கே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்வதைப் போல ஒரு தோற்றம் அளிக்கின்ற ஒரு செய்தியைச் சொன்னார். ஏனென்று சொன்னால் ஒரு பொய்யை திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மக்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அடிக்கடி இந்த பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கின்றார்களே. இதிலே ஏதாவது இருக்குமா? என்று சந்தேகம் வந்துவிடும். அதை நிவர்த்திப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.

செயல்படமுடியாத தலைவருக்கு செயல் தலைவர் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்படி செயல்பட முடியாத ஒரு தலைவருக்கு தி.மு.க. தலைவர் என்று ஒரு பட்டம் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவரது மகன் தான் தி.மு.க.வில் முக்கிய பொறுப்புக்கு வர முடிந்தது.

அதேபோன்று ஈரோட்டில் என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.ராஜா ஆகியோர் தான் ஆதிக்கம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தார். இப்போது அவரது மகனும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். இப்படியெல்லாம் இருந்தால் அந்த கட்சியை கம்பெனி என்று தான் சொல்ல முடியும். கட்சி என்றா சொல்ல முடியும்?.

அ.தி.மு.க.வில் கட்சிக்காக, கொள்கைக்காக, விசுவாசமாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும். இது ஜனநாயக கட்சி. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் யாரும் மிராசுதாரர் அல்ல, தொழில் அதிபர் அல்ல, கோடீஸ்வரர் கிடையாது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். உழைத்து வாழக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்கள்.

எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இரும்பு மனம் உடையவர்கள், உழைக்கப் பிறந்தவர்கள். தி.மு.க.வினரைப் போன்று மற்றவர்கள் உழைப்பில் வாழப்பிறந்தவர்கள் அல்ல. அ.தி. மு.க.வை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. மு.க.ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும், முதல்-அமைச்சர் கனவில் இருக்கின்றார். அவர் கனவு தான் காண முடியும், எப்பொழுதுமே முதல்- அமைச்சர் ஆக முடியாது.

தி.மு.க.வினர் அவ்வப்போது கொள்கையை மாற்றிக்கொள்வார்கள். அது ஒரு கொள்கை இல்லாத கட்சி. அதிகாரம் எங்கே கிடைக்கிறதோ அங்கே தாவி விடுவார் கள். அவர்களுக்கு நாற்காலி மீது தான் ஆசை. மக்களைப் பற்றிய கவலையில்லை.

எங்களைப் பொறுத்தவரைக்கும் மக்கள் தான் முக்கியமானவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தான் எங்களுக்கு விலாசம் கொடுத்தார்கள். ‘நமக்கு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை பாத்திரமாக இருக்க வேண்டும். இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற வேண்டும்’ என்று ஜெயலலிதா அடிக்கடி எங்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு. அ.தி.மு.க. பலத்தை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். அ.தி.மு.க. அரசில் எல்லாத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு அகில இந்திய அளவிலே துறை வாரியாக விருதுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். சிறப்பான நிர்வாகம் இருந்தால் தானே தேசிய விருது பெற முடியும். இந்த விஷயம்கூட மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு தவறான தகவலை, பொய்யான தகவலை எல்லா கூட்டத்திலும் அவர் கூறிக்கொண்டிருக்கிறார். பொறாமையால் அவர் இதுபோன்று பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் தான் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று சொன்னேன்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சியென்றால், அது தி.மு.க. ஆட்சி தான். எங்களைப் பார்த்து ஊழல் ஆட்சி என்று சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் பலம் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாவட்ட செய்திகள்

ரூ.50-க்கு நிரப்பி விட்டு ரூ.250 வசூல்: பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகை



சேலத்தில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு 250 ரூபாயை வசூலித்ததால், பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:15 AM
சேலம்,

சேலம் 4 ரோடு அருகே ராமகிருஷ்ணா சாலையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை வின்சென்ட் பிள்ளையார் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் (வயது 66) என்பவர், தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்புமாறு 500 ரூபாயை கொடுத்தார்.

அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் ரூ.250 மட்டும் மீதியை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனபால் அந்த ஊழியரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, 200 ரூபாயை ஏமாற்றுகிறாய் என சத்தம் போட்டார்.

இதைகேட்ட ஊழியர் ரூ.250-க்கு தான் பெட்ரோல் நிரப்பியதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த தனபால் தனது வண்டியில் இருந்த பெட்ரோலை கேனில் நிரப்பி பார்த்தார் அதில் ரூ.50-க்கு உரிய பெட்ரோல் மட்டும் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நின்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டனர். பின்னர் தனபால் மற்றும் அங்கு நின்ற வாகன ஓட்டிகள் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வாகன ஓட்டிகளும், தனபாலும், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் நேரில் வர வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்தவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் தனபால் ஸ்கூட்டருக்கு ரூ.50-க்கும் மட்டுமே பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இதையடுத்து மீதமுள்ள தொகையை தனபாலிடம் பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் திருப்பி கொடுத்தனர். இதேபோல் அங்குள்ள புகார் புத்தகத்தில் இது தொடர்பாக தனபால் தனது புகாரை பதிவுசெய்தார்.

இந்த முற்றுகை போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ‘சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுபோன்று பணத்தை ஏமாற்றி வருகிறார்கள். ரூ.100 கொடுத்து பெட்ரோல் போடச்சொன்னால் ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் லிட்டர் அளவு வேறு வேறு உள்ளது. இதுகுறித்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டால் நாங்கள் நிரப்பும் பெட்ரோல் அளவு சரிதான் என கூறுகிறார்கள். எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு பெட்ரோல் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தலையங்கம்

விமானப்பயணத்தை எளிதாக்குவோம்



விண்ணில் பறப்பது என்பது கண்ணுக்கு மட்டும் எட்டிய கனவாக இருந்த நிலைமாறி, இப்போது கைக்கு எட்டிய நனவாக ஆகிவிட்டது.

செப்டம்பர் 26 2018, 04:00

விண்ணில் பறப்பது என்பது கண்ணுக்கு மட்டும் எட்டிய கனவாக இருந்த நிலைமாறி, இப்போது கைக்கு எட்டிய நனவாக ஆகிவிட்டது. ஒருகாலத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் பார்க்கப்போகும் இடங்களில் ஒன்று விமான நிலையங்கள் என்றநிலை இருந்தது. அப்போதெல்லாம் வானில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து பார்த்த சிறுவர்கள் இன்று விமானத்தில் ஏறி பயணம்செய்வதற்கு காலம் கைகொடுத்திருக்கிறது. எளியவர்களை அது எட்டியிருப்பதும், பலருடைய பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதும் பயணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் பறந்துவிரிந்த உலகம் தினமும் சுருங்கி வருவதுமே இன்று ஏராளமானவர்கள் விமானப்பயணத்தை நாடுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

ஒருகாலத்தில் பயணத்தை தூரம் நிர்ணயித்தது. ஆனால் இப்போது நேரம் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களினால் தான், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருந்த சிக்கிமில் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் விமானநிலையம் இல்லாத நிலைமாறி, நேற்று முன்தினம் முதல்முறையாக அங்குள்ள பாக்யாங் நகரில் அமைக்கப்பட்டுள்ள முதல் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். இந்தியாவின் 100–வது விமானநிலையமான இந்த விமானநிலையம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதிலிருந்து 60 கி.மீ. தூரத்தில்தான் இந்தியா–சீனா எல்லை இருக்கிறது. 4,590 அடி உயர மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.605 கோடி செலவிலான இந்த விமானநிலையம் கட்டும் திட்டம் 2000–ம் ஆண்டில் உருவாகியது. 2002–ல் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் அடிக்கல் நாட்டினார். 2012–ல்தான் கட்டுமானப்பணிகள் தொடங்கின. இந்த விமானநிலையம் கட்டியதின்மூலம் சிக்கிம் மாநிலத்திற்கு செல்லும் பயணநேரம் வெகுவாக குறைந்துள்ளது. இப்போது தொடங்கப்பட்டுள்ள விமான சேவைமூலம் கொல்கத்தாவிலிருந்து பாக்யாங் விமானநிலையத்திற்கு 1¼ மணிநேரத்தில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் சாலைமார்க்கமாக ‘காங்டாக்’ நகருக்கு சென்றுவிடலாம்.

இந்த விழாவிற்காக விமானத்தில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, விமானத்தில் இருந்தே சிக்கிம் மாநிலத்தின் எழில்மிகு தோற்றத்தை படம் எடுத்திருப்பது பரவசமூட்டுகிறது. பயணிகள் போக்குவரத்திற்கு ஒருபக்கம் பயனுள்ளதாக இருந்தாலும், மறுபக்கம் இந்தியா–சீனா எல்லைக்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு பணிகளுக்காகவும் இந்த விமானநிலையத்தை பயன்படுத்தலாம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது இந்தியாவில் 65 விமான நிலையங்கள்தான் இருந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் 35 விமானநிலையங்களை கட்டிமுடித்து, பிரதமர் மகிழ்ச்சியுடன் இந்தியா சதம் அடித்துவிட்டது என்று கூறியதுபோல, இன்று 100 விமானநிலையங்கள் நாட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக பெருமிதம் அளிக்கிறது. இப்போதெல்லாம் விமானபயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மாதாமாதம் உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் உள்நாட்டில் விமானபயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து, ஒருகோடியே 13 லட்சத்து 50 ஆயிரம்பேர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். பெருகிவரும் தேவையை கருத்தில் கொண்டு, எங்கெங்கு சிறிய விமானநிலையங்கள் அமைக்கமுடியுமோ அங்கெல்லாம் அமைக்க மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும். விமான கட்டணங்களையும் இன்னும் குறைக்கமுடியுமா?, சாதாரண நடுத்தர மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்குமா? என்பதை பரிசீலிக்கவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவ பயன்பட்டிற்காக கட்டப்பட்டு, இப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமானநிலையங்களை பயணிகள் போக்குவரத்திற்காக மாற்றமுடியுமா? என்பதையும் அரசு முயற்சிக்கவேண்டும்.








தேசிய செய்திகள்

ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு



ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

பதிவு: செப்டம்பர் 26, 2018 05:00 AM
புதுடெல்லி,

ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.

அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பின்னர் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.

அடுத்த வாரம் தலைமை நீதிபதி ஓய்வுபெற உள்ள நிலையில், ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Life sentence in doctor murder case upheld

MADURAI, SEPTEMBER 26, 2018 00:00 IST



The Madurai Bench of the Madras High Court
Accused hacked her after his wife died in her clinic

The Madurai Bench of the Madras High Court on Tuesday upheld the life sentence awarded by Thoothukudi Mahila Court to the key accused in the murder of a government doctor.

A Division Bench of Justices M.M. Sundresh and N. Sathish Kumar upheld the life sentence awarded to R. Mahesh, an auto driver, in 2015 for the murder of T. Sethulakshmi, chief doctor at ESI Hospital, Thoothukudi. However, the court acquitted the other accused in the case.

Death of wife of accused

It was alleged that Mahesh plotted the murder of Dr. Sethulakshmi after he held her responsible for the death of his 24-year-old wife.

His wife, who was 24 weeks pregnant, was admitted to the clinic of Dr. Sethulakshmi in 2012. But she died after developing complications while under treatment.

Mahesh, irked by the death of his wife, attacked the doctor at her clinic in Kamaraj Nagar, along with four of his friends and hacked her to death. The police had booked the accused under Sections 452 (trespass), 302 (murder) and 324 (voluntarily causing hurt) of the Indian Penal Code. It was alleged that Mahesh, a history-sheeter, had several cases pending against him prior to the murder of the doctor.

The murder of the doctor had shocked the medical fraternity and widespread protests were held all over the State by various medical and doctor associations. They called for a stricter implementation of the Tamil Nadu Hospital Protection Act, 2008, after several such incidents were reported.
Major changes in train services from today

COIMBATORE, SEPTEMBER 26, 2018 00:00 IST

Southern Railway has announced major changes in operation of trains passing through Salem and Coimbatore from September 26 to 30 in view of the engineering works at Salem Junction.

Train no. 66602 Coimbatore- Salem Passenger is partially cancelled between Erode Junction – Salem Junction from October 10 to 12 and train no. 66603 Salem - Coimbatore Passenger is partially cancelled between Salem Junction - Erode Junction from October 10 to 12.

September 26: Train No. 22619 Bilaspur -Tirunelveli Weekly express will be regulated for 90 minutes between Jolarpettai and Salem. Train No. 56514 KSR Bengaluru- Karaikkal passenger will be regulated for 35 minutes between Omalur and Salem. Train No. 56513 Karaikkal- KSR Bengaluru Passenger will be regulated for 15 minutes at Salem.

Train No. 13352 Alleppey to Dhanbad/Tata Bokaro Express will be regulated for 40 minutes between Erode and Salem. Train No. 12678 Ernakulam Jn- KSR Bengaluru Express will be regulated for 25 minutes between Erode and Salem. Train No. 66020 Salem to Katpadi Passenger, scheduled to leave Salem at 3.30 p.m., is rescheduled to 4.30 p.m.

September 27 : Train No. 56514 KSR Bengaluru- Karaikkal passenger will be regulated for 35 minutes between Omalur and Salem. Train No. 12970 Jaipur - Coimbatore Weekly Express will be regulated for 60 minutes between Jolarpettai and Salem. Train No. 16360 Patna- Ernakulam Weekly Express will be regulated for 35 minutes between Jolarpettai and Salem.

Train No. 16339 Mumbai CSTM - Nagercoil Express will be regulated for 30 between Tirupattur and Salem.

September 28: Train No. 13352 Alleppey - Dhanbad/Tata Bokaro Express will be regulated for 40 minutes between Erode and Salem. Train No. 12678 Ernakulam - KSR Bengaluru Express will be regulated for 25 minutes between Erode and Salem.

Train No. 66020 Salem - Katpadi Passenger scheduled to leave Salem at 3.30 p.m. is rescheduled to 14.30 p.m. Train No. 56514 KSR Bengaluru - Karaikkal Passenger will be regulated for 35 minutes between Omalur to Salem, Train No. 16339 Mumbai CSTM - Nagercoil Express will be regulated for 20 minutes between Tirupattur to Salem.

September 29: Train No. 56514 KSR Bengaluru- Karaikkal Passenger will be regulated for 35 minutes between Omalur and Salem. Train No. 16339 Mumbai CSTM - Nagercoil Express will be regulated for 20 minutes between Tirupattur and Salem .

September 30: Train No. 56514 KSR Bengaluru- Karaikkal Passenger will be regulated for 10 minutes between Omalur and Salem. Train No. 07115 Hyderabad- Kochuveli Weekly Special train will be regulated for 10 minutes at Salem. Train No. 66020 Salem - Katpadi Passenger, scheduled to leave Salem at

3.30 p.m., is rescheduled to 3.50 p.m.

NEWS TODAY 05.07.2026