Friday, November 9, 2018

ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு

Added : நவ 09, 2018 03:35

சென்னை:'ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 

எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்

Added : நவ 09, 2018 03:37

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 09, 2018 04:45 AM
மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது? என்பது குழப்பமாக இருந்து வந்தது. அதை உறுதிபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். அதன்பேரில், மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்று கடந்த ஜூன் 20-ந் தேதி அரசு அறிவித்தது.

தமிழகத்துடன் சேர்ந்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன், அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் இங்கு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடந்ததாக தெரியவில்லை. ஏற்கனவே பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு விட்டது.

நிதி ஒதுக்க வேண்டும்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவதில் தாமதம் கூடாது. எனவே மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக மத்திய அரசு மந்திரிசபையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் எந்த மாற்றமும் இருக்காது” என தெரிவித்தார்.

எப்போது தொடங்கும்?

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவது எப்போது? இந்த பணிகள் எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டிசம்பர் 6-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மாநில செய்திகள்

‘சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?



‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: நவம்பர் 09, 2018 05:15 AM

சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்-அமைச்சராகவும், ராதாரவி அமைச்சராகவும் வருகிறார்கள். பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவள்ளி என்று உள்ளது. இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் என்று கூறுகின்றனர்.

அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மெத்தனமாக செயல்படுவதாக விஜய் சாடும் வசனம் உள்ளது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சிக்கும் வசனமும் உள்ளது.

நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்துத்தான் பணம் பார்க்கிறோம். அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று முதல்-அமைச்சர் சொல்வதுபோல் வசனம் உள்ளன.

கந்து வட்டியால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த உண்மை சம்பவம், கன்டெய்னரில் பணம் பதுக்கும் காட்சிகளும் உள்ளன. அரசு வழங்கிய இலவச பொருட்களை ஏ.ஆர்.முருகதாஸ் தீயில் அள்ளிப்போட்டு கொளுத்துவது போன்றும் காட்சிகள் இருக்கிறது. கள்ள ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர துடிக்கும் அரசியல் கட்சி அந்த கட்சிக்கு எதிராக அனைத்து தொகுதிகளிலும் சமூக சேவைகளில் ஈடுபடுவோரை சுயேச்சைகளாக வெவ்வேறு சின்னங்களில் நிறுத்தி ஜெயிக்க வைத்து ஆட்சியை பிடிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.

இதன் காரணமாகவே அமைச்சர்களும், அ.தி.மு.க தொண்டர்களும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைத்த போலீசார்



தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த பொதுமக்கள், சென்னை திரும்பி வந்தனர். பெருங்களத்தூரில் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

பதிவு: நவம்பர் 09, 2018 05:30 AM

தாம்பரம்,


சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து அதிக அளவிலான பொதுமக்கள், கார்களிலேயே சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.


தீபாவளி விடுமுறை முடிந்து, கார்களில் சென்றவர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே சென்னை திரும்பி வரத்தொடங்கினர். வழக்கமாக பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அதேபோல போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஏ.அருண் மேற்பார்வையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

போக்குவரத்து சீரமைப்பு

அதன்படி தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் 6 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள், 150-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக் கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் மாலையில் தொடங்கி விடிய, விடிய போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணி முதல் அதிக அளவு கார், ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்து வந்தன.

தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். கார் போன்ற வாகனங்களை சாலையின் வலது புறத்திலும், பயணிகளை ஏற்றிவரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களை இடது புறத்திலும் வருமாறு போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.

நெரிசல் இல்லை

பயணிகளை இறக்கி செல்லும் பஸ்களை தவிர மற்ற வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது எனக்கூறி போக்குவரத்தை மாற்றியதால் போக்குவரத்து சீராக சென்றது. எந்த இடத்திலும் வாகனங்கள் நிற்காததால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற் படவில்லை.

வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக எங்கும் நிற்காமல் நகர்ந்தபடியே இருந்தது. கனரக வாகனங்கள், வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி எளிதாக சென்றனர்.




இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வழக்கமாக பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள பொதுமக்கள் தென் மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு செல்லும்போதும், விடுமுறைக்குப்பின் சென்னை திரும்பி வரும்போதும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

ஆனால் இதுபோல நடக்காமல் இருக்க அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி, நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் வாகனங்களை எங்கும் நிற்கவிடாமல் தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் அதிகமாக வந்ததால் சீரான வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது. இருப்பினும் போக்குவரத்து எங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இடையூறு இல்லை

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். பின்னர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது செங்கல்பட்டில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

அவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பொதுமக்கள் அதில் சிக்கி பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்லவே பல மணி நேரம் ஆகும். இதனால் அனைவரும் அவதிப்பட்டு வந்தோம். ஆனால் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பியபோது எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் அனைத்தும் நகர்ந்தபடியே இருந்தது. இதனால் எந்த இடையூறும் இன்றி எளிதாக உரியநேரத்துக்கு எங்களால் வந்துசேர முடிந்தது.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
தலையங்கம்

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி


பழைய திரைப்பட பாடல் ஒன்றில், ‘நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?, இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?’ என்று வரிகள் வரும். இது இப்போது புதிதாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்– தெலுங்குதேசம் கட்சி உறவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 09 2018, 04:00

பழைய திரைப்பட பாடல் ஒன்றில், ‘நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?, இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?’ என்று வரிகள் வரும். இது இப்போது புதிதாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்– தெலுங்குதேசம் கட்சி உறவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நடிகர் என்.டி.ராமராவ் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவில் தன்னிகரற்று ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தெலுங்குதேசம் கட்சியை தொடங்கினார். 1983–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றிபெற்று, என்.டி.ராமராவ் முதல்–மந்திரி ஆனார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றநிலை இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வில்லை, சிறப்பு நிதி உதவிகள் அளிக்கவில்லை என்பதற்காக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகினார். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், பா.ஜ.க. அல்லாத அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் மற்றும் பல எதிர்க்கட்சி களுக்கும் இருக்கிறது. இந்தநிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்றமுறையில் காங்கிரஸ் கட்சியோடு சந்திரபாபு நாயுடு உறவுகொள்ள நினைத்து, சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். இது ஒரு ஜனநாயக நிர்ப்பந்தம் என்று இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்தார். நம் நாட்டை காப்பாற்றி ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும். ஜனநாயக நிர்ப்பந்தத்தால் நாட்டை பாதுகாக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று சந்திரபாபு நாயுடு இந்த அபூர்வ சந்திப்பு பற்றி கூறினார். இந்த பின்னணியில் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஒரே அணியில் திரட்ட முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமி என்று பல தலைவர் களோடு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து இன்று மாலையில் சந்தித்து பேச இருக்கிறார். பா.ஜ.க. அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் தி.மு.க. தலைமையில் தமிழ் நாட்டிலும் ஒன்றிணைக்க முயற்சி நடக்கிறது. அப்படி யொரு கூட்டணி அமைந்துவிட்டால் 2019 பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட இந்த கூட்டணி உருவாகிவிடும். இந்த புதிய கூட்டணிக்கு யார் தலைவர்? என்பதில்தான் கண்டிப்பாக சிக்கல் ஏற்படும். ஏனெனில், இந்தப்படையில் எல்லோருமே தலைவர்கள் தான். சந்திரபாபு நாயுடு, ராகுல்காந்தி, சரத்பவார், மாயாவதி, மம்தா பானர்ஜி என எல்லோருமே தலைமை பொறுப்புக்குவர ஆசைப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த ஒரு பிரச்சினையில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சுமுகமான தீர்வு ஏற்படுமா? என்பது போகபோகத்தான் தெரியும். இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் வேகமாக தொடங்கிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Deepavali treat for passengers: Airlines offer discounts, deals

Passengers can now save up to 30% on Economy and Premiere base fares across its network as well as its codeshare partners, Air France and KLM Royal Dutch Airlines.

Published: 08th November 2018 09:14 AM 



Image of Jet Airways aircraft used for representation. (File photo | Reuters)

By Express News Service

BENGALURU: To mark its 13th anniversary, GoAir will offer up to 13 lakh seats for an all-inclusive fare of Rs 1,313. The special 13-day sale period, which opened on November 5 will be on till November 18, said an official release. It is valid for a travel period from November 5, 2018, to November 4, 2019. The offer will be on a first come, first serve basis.

In a statement, Cornelis Vrieswijk, CEO, GoAir said, “This milestone would not have been possible without the loyalty and support of millions of guests who have chosen to fly with us.”
This offer is available exclusively across GoAir networks (GoAir website www.goair.in, its ticketing counters, call centre and travel agents). It is not valid on infant bookings and the group discount is not applicable on this offer, the release added.

Jet Airways extends Deepavali sale

Due to popular demand during the festive season, Jet Airways has extended its Diwali sale for international and domestic travel up to midnight of November 11, said an official release. The seven-day offer period was initially slated to end on November 5.


Passengers can now save up to 30% on Economy and Premiere base fares across its network as well as its codeshare partners, Air France and KLM Royal Dutch Airlines. This will result in substantial savings of upto `54,680 on Premiere travel and `25,390 on international return bookings.

Guests can book one-way flights for as low as `6723 onwards for Mumbai-Muscat and `1998 onwards for Mumbai-Kochi. Guests travelling internationally can commence travel with immediate effect while premiere guests undertaking domestic travel can commence travel after a period of 8 days.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...