Friday, November 16, 2018

SC/ST grant: Students made to enter exam halls 30 minutes late

Ram.Sundaram@timesgroup.com


Chennai:16.11.2018

Scheduled Caste and Scheduled Tribe students of a private engineering college in the suburbs were last week not allowed to enter their exam hall for half an hour as punishment for the government not paying the fees.

The Tamil Nadu government has not released the SC/ ST Post Matriculation Scholarship amount since June 2017 saying the Centre had failed to release its share. Caught in this crossfire were students from Shri Andal Alagar College Of Engineering in Mamandur and thousands of others from engineering colleges affiliated to the state-run Anna University. N Anitha*, a second year student, said, “Despite explaining our situation, we were not allowed inside the exam hall for the first 30 minutes.” Andal Alagar College initially denied penalising the students in this manner, but later said it would look into the matter.

Dip in SC/ST students joining engg

Chennai: “Minutes before the exam had begun, we were asked to report to the office room. I was not able to focus on the exam and complete (the exam) on time,” Anitha said.

The management, however, did admit that students were repeatedly pulled up for not paying the fees. It is not up to the students to pay the fees, the government pays the college directly.

K Dinakaran*, another student from a private engineering college in Kancheepuram, has not got his hall ticket for exams that were scheduled this week, but were since postponed. "But I don't know whether I'll be able to allowed to write it," he said. The 19-year-old is the first from his hamlet to pursue higher education.

For the first time in eight years, there has been a major dip in the number of SC/ST students joining engineering colleges through Anna University counselling. From 42,000 in 2017-18, the number has come down to 32,000 (23% drop) in 2018-19, according to official data. Even when overall engineering admission figures declined due to poor placements and quality, SC/ ST enrolment was on the rise.

Dalit and Tribal students' rights activists have attributed this to amendments to the PMS scheme. The Tamil Nadu Adi Dravida Welfare Department, state agency which implements the scheme, issued an order in July 2018 removing SC/ST students joining private and government aided institutions under the management quota from the ambit of the scheme. The move was based on revised guidelines released by the Union Social Justice and Welfare Ministry.

However, R Christodas Gandhi, retired IAS official who is now with the Ambedkar Kalvi Centenary Movement, said, "The state government misinterpreted the Centre's revised guidelines. By 'management quota’, the Centre referred only to the 10% seats filled by managements of government aided college and not the 35% seats in self-financing (or private) colleges filled through a consortium for private colleges".

The state government has not released the SC/ST Post Matriculation Scholarship amount since June 2017

Thursday, November 15, 2018


கற்பிதமல்ல பெருமிதம் 31: நைட்டி நல்ல உடையில்லையா?

Published : 11 Nov 2018 10:19 IST






தீபாவளிக் கொண்டாட்டம் ஒருவழியாக முடிந்தது. சாப்பிட்டபோது, பட்டாசு வெடித்தபோது என வெவ்வேறு தருணங்களில் எடுத்த போட்டோக்களை வலைத்தளங்களில் போடத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். விடியற்காலையில் எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் தவிர மற்ற எல்லா போட்டோக்களிலும் அவன் அம்மாவும் மனைவியும் நைட்டி அணிந்தபடி இருந்தனர். சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. அம்மாவைத் திட்ட முடியாது. மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

எப்படித்தான் இந்தப் பெண்கள் எப்போதும் நைட்டியுடனே திரிகிறார்கள் என்று புரியவில்லை. அன்றைக்குப் பார்த்தால், அடுத்த வீட்டு அம்மா, அவர்கள் தெருவில் இருந்த பால் பூத்துக்குப் பால் வாங்க நைட்டியுடன் வந்திருந்தார். நைட்டிக்கு மேல் ஒரு துண்டு வேறு. பார்க்கவே சுரேஷுக்கு அருவருப்பாக இருந்தது.

இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அவன் மனைவி புடவை அணிந்திருந்தாள். அம்மா வழக்கம்போல் நைட்டிதான். சுரேஷ், மனைவியைப் பார்த்து, கட்டை விரல்களை உயர்த்திக் காண்பித்தான். மனைவியிடம் அம்மாவை சைகையால் காண்பித்து, கட்டை விரலை கீழ்நோக்கிக் காண்பித்தான்.

அம்மாவுக்குத் தெரியாமல் காண்பித்த தாகத்தான் நினைத்தான். ஆனால், அம்மா பார்த்துவிட்டாள்.

ஏண்டா, உன் பொண்டாட்டியைத் திட்டின மாதிரி என்னைத் திட்ட முடியலேன்னு வருத்தமா?

ஆமா, நீங்க எல்லாம் நைட்டுல மட்டுமே போட வேண்டிய டிரெஸ்ஸை ஏன் இப்படிப் பகல் முழுக்கப் போட்டுட்டுத் திரியறீங்கன்னு புரியலை. தீபாவளி போட்டோவுல நீங்க ரெண்டு பேரும் நைட்டிலதான் இருக்கீங்க. குடும்ப வாட்ஸ் அப் குரூப்லகூட அதைப் போடத் தோணலை.

நாங்க நைட்டியில இருக்கும்போது நீ ஏன் போட்டோ எடுத்தே? நான் காலையில புதுப் புடவை கட்டி இருந்தேனே?

அப்ப நான், அப்பா எல்லாரும் குளிச்சு புது டிரெஸ் போடலை.

நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம்தான் வேட்டி, சட்டையைப் போட்டிருந்தீங்க. கொஞ்ச நேரத்திலேயே நீ டீஷர்ட்டும் பெர்முடாவும் மாத்திக்கிட்டே. அப்பா பனியனுக்கும் லுங்கிக்கும் மாறிட்டார்.

சுரேஷின் மனைவி தன் மாமியாரை ஆச்சரியத்தோடு பார்த்தாள். தனக்கு இப்படிக் கேள்வி கேட்கத் தோணலையே என்று நினைத்தாள்.

சமீபத்தில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் ஆண் எழுத்தாளர் ஒருவர் நைட்டி போட்டு பெண்கள் வாக்கிங் வருவது பற்றிக் கிண்டல் அடித்திருந்தார். கூடவே அவரை ஆதரித்துச் சில குரல்களும் பதிவாகியிருந்தன.

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில்கூட, பகல் முழுவதும் பெண்கள் நைட்டி அணிந்து நடமாடுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்க்க வரும்போதுகூட நைட்டியும் அதற்கு மேல் சட்டையும் போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

என்னுடைய உண்டு உறைவிடப் பயிலரங்குகளில் நாள் முழுவதும் புடவையோடு இருக்கும் பெண்களை இரவு நேர பாடத்திட்டத்துக்கு வரும்போது நைட்டியோடு வரலாம் என்று கூறுவேன். அனைவரும் ஒரு சிறிய துண்டை மேலே போட்டுக்கொண்டு வருவார்கள்.

துப்பட்டாவாவது போடுவதற்கு வசதியாக நீளமாக இருக்கும். இந்த டவல் சும்மா சம்பிரதாயத்துக்குப் போட்டது போல்தான் இருக்கும். அதைப் போடுவதைவிடப் போடாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் .

ஏன் இவ்வளவு விமர்சனம்?

இரவு நேரத்தில் மட்டும் அணிய வேண்டிய உடையைப் பெண்கள் பகலில் அணிவதால் ஆண்களுக்குப் பாலியல் ரீதியான எண்ணங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லையா? பெரும்பாலான பெண்கள் குறைந்தபட்சம் கீழ்த்தட்டு, கீழ் மத்தியத் தட்டுப் பெண்கள், சினிமாக்களில் வருவது மாதிரியான மெல்லிய இரவு உடைகளையோ பளபளவென்று சாட்டின் துணியில் தைக்கப்பட்ட நைட்டி களையோ அணிவதில்லை.

பெரும்பாலும் கெட்டியான பருத்தி நைட்டிகளையே அணிகிறார்கள். நைட்டியில் தங்கள் உடல் எந்தவிதத்திலும் காட்சிப் பொருளாக ஆகாததாகவே அவர்கள் உணர்கிறார்கள். அதனாலேயே இன்று நைட்டி என்பது பெண்கள் மத்தியில் சுலபமாக, சௌகர்யமாக அணியும் உடையாகிவிட்டது. இது ஏன் ஆண்களின் கண்களை உறுத்த வேண்டும்?

ஆண்களுக்கு என்ன பிரச்சினை?

சின்ன டிரவுசர்/பெர்முடா போட்டுக் கொண்டு ஆண்கள் பொது இடங்களில் நடமாடுகிறார்கள். சில வேலைத் தளங்களில்கூட இன்று அரை (அ) முக்கால் போன்ட்டுகளைப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

லுங்கி கட்டுபவர்கள்கூட, பாதம் வரை அணிவதில்லை. முட்டிக்கு மேல் வருகிறபடிதான் மடித்துக் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஆபாசம் இல்லையா? ஆபாசமாக, ஊடுருவிப் பார்க்கும்படியாக நைட்டி இல்லை என்பதுதான் ஆண்களின் பிரச்சினையா?

நடைப்பயிற்சிக்கு நைட்டி அணிந்துவரும் பெண்ணோ, வீட்டில் பகலில் வேலை செய்வதற்குத் தோதாக நைட்டி அணியும் பெண்களோ, அதற்கு ஏற்றாற்போல் கெட்டியான, தடித்த நைட்டிகளைத்தான் அணிகிறார்கள். பலரும் உள்ளாடைகளை அணிந்துதான் நைட்டியையும் அணிகிறார்கள். உடலை இறுக்கிப் பிடிக்காத தொள தொள நைட்டிகளையோ அல்லது ஃபிரில் வைத்த நைட்டிகளையோதான் அணிகிறார்கள்.

மாற வேண்டியது மனப்பான்மையே

நைட்டி என்பதில் பொருளாதாரச் சிக்கனமும் அடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சில பெண்கள் வெளியே போட்டுச் செல்லும் உடைகளைக் கொஞ்சம் பழையது ஆன பிறகு வீட்டில் போடும் பழக்கம் இருந்தது. இப்போது 150 ரூபாயிலேயேகூட ஓரளவுக்கு நல்ல நைட்டிகளை வாங்க முடிகிறது. வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே நைட்டி போடுவது சவுகரியமாக இருப்பதோடு, சிறிது நேரமே அணிந்த வெளி உடைகளைக் காற்றாட விட்டுவிட்டு, திரும்ப மறுபடியும் அணிகிறார்கள் சில பெண்கள்.

இயல்பாக அணுகும் பெண்கள்

நைட்டி போடுவது பற்றி ஆண்களின் அசலான பிரச்சினை என்ன? அது இரவு நேரத்துக்கான உடை என்று மண்டைக்குள் ஊறி இருப்பதால், பெண்கள் நைட்டியோடு நடமாடினால் படுக்கையறையைத்தான் ஆண்களால் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றால், அது அவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் எண்ணம்.

மாற வேண்டியது நம் மனப்பான்மைதான். புடவையோ சுடிதாரோ நைட்டியோ, தனக்கு சவுகரியமாக உள்ள உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. அவர்கள் கண்ணியத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். பெண்களின் உடைக்கான கலாச்சாரக் காவலர்கள் பொறுப்பை ஆண்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்பினால், கோபப்பட்டால் அவர்கள் அணியும் உடைக்கும் அதை நீட்டிக்க வேண்டும். அதுதான் நியாயம்.

ஆண்கள் இறுக்கமான டிஷர்ட் அணிகிறார்கள். அரை டிராயரை அணிகிறார்கள். பெரிய தொப்பையை வைத்துக்கொண்டு சட்டையை டக் இன் செய்துகொள்கிறார்கள். டிரவுசருக்கு மேல் வரும்படி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு லுங்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் சகஜமாகப் பார்க்கும் பக்குவத்தைப் பெண்கள் பெற்றுவிட்டார்கள். அதனால்தான் பெண்கள் இவற்றைப் பற்றி எல்லாம் எரிச்சல்படுவதும் இல்லை. புலம்புவதும் இல்லை.

கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தில் வாழும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஒரு சாராருக்கு மட்டும் வரையறைகள் விதிப்பது பெருமிதமல்ல; கற்பிதம். கற்பிதங்களை உடைப்பதில் பெருமிதம் கொள்வோம்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com | ஓவியம்: அ. செல்வம்
அடடா என்ன திறமை; போலீஸாரே வியந்த ’டிப்டாப்’ திருடன்: ஏடிஎம்மில் இப்படியும் உங்கள் பணம் பறிபோகலாம்

Published : 13 Nov 2018 19:47 IST



ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைத்திருப்பி பணத்தை அபேஸ் செய்துவந்த திருடனை பிடித்த போலீஸார், அந்த நபர் திருடிய விதத்தைப் பார்த்து வியந்துபோயுள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பபவர்களின் பணம் திருடப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வங்கியிலிருந்தும், வாடிக்கையாளர்கள் சார்பாகவும், சென்ட்ரல் ரயில்வே போலீஸுக்கும், அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்திற்கும் அதிக அளவு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீஸார் புகார் கூறியவர்கள் பணம் எடுத்த நாட்களில் அந்தந்த ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சோதனையிட்டனர். அப்போது அனைத்து சம்பவங்களில் ஒரு நபர் இருப்பது தெரியவந்தது. அனைத்து சம்பவங்களிலும் இந்த இளைஞர் எப்படி அங்கு இருக்கிறார் என்று குழப்பமடைந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இளைஞர் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.

சிலர் எங்களுக்கு தெரியவில்லை, ஞாபகமில்லை என்று தெரிவித்தனர், சிலர் ஆமாம் சார் இவர்தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தார் என்று தெரிவித்தனர். சிலர் இவர்தான் சார் பணம் எடுக்கும்போது ஏடிஎம் மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி பக்கத்து மெஷினில் எடுக்கச்சொன்னார் என்று தெரிவித்தனர்.

போலீஸார் அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் எடுக்கும்போது ஏதோ கூறுவதும், பின்னர் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டுச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸார் அந்த இளைஞரை பிடிக்க வலைவிரித்து காத்திருந்தனர். வழக்கம்போல் ஏடிஎம்மில் தனது கைவரிசையை காட்ட வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் சிக்கினார். அவரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் கோபி கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் கூறியது போலீஸாரை திடுக்கிட வைத்தது. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று சிரித்துக்கொண்டனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை அவர்கள் அறியாமலே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் எடுத்த அந்த நபர் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் விமானத்தில் சொந்த ஊருக்கு பறந்து விடுவாராம்.

எப்படி பணத்தை நூதன முறையில் ஏமாற்றி எடுப்பேன் என்பதை அந்த நபர் நடித்து காட்டியுள்ளார். டிப்டாப்பாக உடையணிந்து இரண்டு எந்திரங்கள் உள்ள ஏடிஎம்மில் சென்று நின்றுக்கொள்வார். பணம் எடுக்க வருபவர்கள் ஒரு எந்திரத்தில் கார்டை சொருகி வெளியே எடுத்தவுடன் இவர் அவசரமாக குறுக்கிட்டு சார் இந்த மெஷின் வேலை செய்யவில்லை அந்த மெஷினில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்.

பணம் எடுக்க வந்தவர் நன்றி கூறிவிட்டு அடுத்த எந்திரத்தில் கார்டை நுழைத்து பணம் எடுப்பார். இவர் அவர்கள் பதிவு செய்யும் சீக்ரெட் நம்பரை கவனித்து வைத்துக்கொண்டு டக்கென்று அந்த நம்பரை முதலில் கார்டை நுழைத்த எந்திரத்தில் அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுத்துவிடுவார். இதில் பல நேரம் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். கணக்கில் கணிசமாக பணம் வைத்துள்ளவர்கள் பணத்தை அழகாக சுருட்டிவிடுவார்.

இப்படி செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பல ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பல வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் எடுப்பார். இப்படி கணிசமாக சேரும் பணத்தில் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்று வருவார். நூதனமான முறையில் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பணம் எடுக்கும்போது அருகில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் பணம் பறிபோக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர். நூதனமான முறையில் பணத்தை திருடிவந்த நபர் பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
கருவூலத்துறை அதிகாரியிடமே லஞ்சம் கேட்கும் சக அதிகாரிகள்!

எம்.கணேஷ்
   vikatan

``29 வருடம் நேர்மையாக வேலைபார்த்தேன். என்னிடமே லஞ்சம் கேட்கிறார்கள்!” – ஓய்வுபெற்ற அரசு அதிகாரி




நேர்மையாக வேலைபார்த்த தன்னிடமே ஓய்வூதியப் பலன்களை வழங்க லஞ்சம் கேட்கிறார்கள் என்று முன்னாள் கருவூலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தேனி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.

என் பணம் அவர்களிடம் எப்படிச் சென்றது?

இதுகுறித்து, கருவூலத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான ரவிச்சந்திரன், ``என் பெயர் ரவிச்சந்திரன். 29 ஆண்டுகளாக கருவூலத்துறையில் வேலைபார்த்து, ஆண்டிப்பட்டி கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலராகப் பதவி உயர்வு பெற்று, கடந்த ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெற்றேன். ஓய்வுபெற்ற பின்னர் எனக்குக் கிடைக்க வேண்டிய பலன் தொகையைக் இப்போதுவரை என்னை அலைக்கழித்து, லஞ்சம் கேட்கிறார்கள். பொதுவாக ஓய்வு பெற்ற பின்னர். ஈட்டிய விடுப்புத்தொகை என்ற முறையில் பணம் வரும். அது வந்தது. அதைத்தொடர்ந்து பணிக்கொடை, பொது சேமநல நிதி, அகவிலைப்படி நிலுவைத்தொகை என மொத்தமாக 8 லட்சத்து 89 ஆயிரத்து 897 ரூபாய் எனக்கு வர வேண்டும். அதைக் கேட்டால், எங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு உன் பணத்தை வாங்கிக்கொள் என்றார்கள். 29 வருடங்களாக நேர்மையாக வேலை பார்த்தேன். அதற்குப் பரிசாக என்னிடமே லஞ்சம் கேட்கிறார்கள். இப்படிப் பணம் கேட்கிறார்கள் என்ற செய்தியை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல திட்டமிட்டேன். அதை அறிந்துகொண்டு, அவசர அவசரமாக எனது வங்கிக்கணக்கில் அந்தப் பணத்தை நவம்பர் 7-ம் தேதி டெபாசிட் செய்தார்கள். பணம் வந்துவிட்டது என்று என்னால் சந்தோசப்பட முடியவில்லை.




காரணம், என்னுடைய வங்கிக்கணக்கிற்கு தனி நபரின் வங்கிக்கணக்கிலிருந்து பணம் வந்திருந்தது. அந்த வங்கிக்கணக்கு யாருடையது என்று பார்த்தால், உதவிக் கருவூல அலுவலர் புனிதா ராணியின் வங்கிக்கணக்கு என்று தெரியவந்தது. அதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. எனக்குக் கிடைக்க வேண்டிய பணம் எப்படி அவரது வங்கிக் கணக்கிற்குச் சென்றது என்று எனக்குப் புரியவில்லை. உடனடியாக வங்கிக்குச் சென்று அந்தப் பணத்தை கருவூல வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டேன். இப்போது கேட்டால் பணம் தரமுடியாது என்கிறார்கள். என் மகளின் திருமணத்திற்கு இந்தப் பணத்தை நம்பிதான் இருக்கிறேன்” என்றார்.



சட்டப்படிக் குற்றம்:

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை சக அதிகாரி கையாள முடியுமா என்று தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்த போது ஆச்சர்யத் தகவல்கள் பல கிடைத்தன. ``பொதுவாக அனைத்துத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்குமே இந்த அனுபவம் இருந்திருக்கும். கருவூல அதிகாரிகள்தான் இறுதியாகக் கிடைக்க வேண்டிய பெனிஃபிட் பணத்தைக் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும்போது அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய எழுதப்படாத நடைமுறைதான் இங்கே பின்பற்றப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கருவூல அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டதுதான்” என்றனர்.

புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன்:

ஓய்வுபெற்ற அரசு கருவூல அதிகாரி ரவிச்சந்திரனின் புகாரை மாவட்டக் கருவூல அலுவலர் சீதா ராமனிடம் எடுத்துச்சென்றோம். ``ஒரு தனிநபர் வங்கிக் கணக்கிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வங்கிக் கணக்கிற்கு கருவூலப்பணம் பரிவர்த்தனை என்பது குற்றம். பாதிக்கப்பட்டவர் எழுத்துபூர்வமாகப் புகார் அளிக்கவில்லை. அளித்தால், கலெக்டரின் பார்வைக்கு இவ்விவகாரத்தை எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ரவிச்சந்திரனின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய உதவிக் கருவூல அலுவலர் புனிதா ராணியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர், ஆண்டிப்பட்டியிலிருந்து நிலக்கோட்டைக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. சட்டத்திற்குப் புறம்பாக கருவூலத்துறையில் நடக்கும் முறைகேடுகள் இனியேனும் களையப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நவம்பரில் 31ம் தேதி இருக்கா ஆபீசர்ஸ்? : சென்னை போக்குவரத்து கழகத்தில் கூத்து!

Added : நவ 14, 2018 23:24

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக முன்னாள் நடத்துனரின் கேள்விக்கு, நவ., 31ல் பதில் அளிப்பதாக, போக்குவரத்து இணை கமிஷனர் அனுப்பிய கடிதம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின், குரோம்பேட்டை பணிமனையில், ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் முதல்வராக உள்ளவர், சரிதா. இவர், ஏற்கனவே, தார்பாய் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியவர்.தற்போது, பயிற்சி பள்ளி முதல்வராக இருக்கும் இவர், தண்டனை பெற்ற ஓட்டுனர்களுக்கு, பேருந்துகளை இயக்கி காட்டி விளக்கம் அளிக்க வேண்டியது, அவரின் பொறுப்பு.ஆனால் அவர், ஒரு நாள் கூட, பேருந்தை இயக்கியதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், சரிதாவின், 'ஹெவி லைசென்சை' ஆய்வு செய்வதோடு, அவர் வாகனம் ஓட்டுவது தொடர்பாக, ஆய்வு நடத்தக் கோரி, முன்னாள் நடத்துனரான கோதண்டன், மார்ச்சில், மீனம்பாக்கம் போக்குவரத்து இணை கமிஷனருக்கு மனு தாக்கல் செய்தார்.அதற்கு, சென்னை, தெற்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, 3ம் தேதி, ஒரு கடிதம் வந்தது.அதில், நவ., 31ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, புகார் குறித்த ஆதாரங்களையும், விளக்கத்தையும் அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், நவ., 8ம் தேதி, மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'நவ., 3ம் தேதி நடந்த விசாரணைக்கு, நீங்கள் ஆஜராகவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது.இந்த முரண்பட்ட தகவல்களால் கோதண்டன் கிறுகிறுத்தார்.இது குறித்து, கோதண்டன் கூறியதாவது:எம்.டி.சி., பயிற்சி பள்ளி முதல்வரின், 'லைசென்சின்' உண்மைத் தன்மை மற்றும் அவரின் திறமை குறித்து ஆய்வு செய்யும் படி, நான் மனு அளித்திருந்தேன். என்னை, நவ., 31ல் ஆஜராகும் படி அழைத்திருந்தனர். நவம்பரில், 31ம் தேதியே கிடையாது என்பது கூட, அதிகாரிகளுக்கு தெரியவில்லை.மீண்டும் வந்த கடிதத்தில், 'குறிப்பிட்ட நாளில் ஆஜராகவில்லை' என, என் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த விஷயத்தை மூடி மறைக்க, அதிகாரிகள் முயற்சிக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
விமானத்தில் தகராறு: போதை பெண் கைது

Added : நவ 14, 2018 21:15

மும்பை: 'ஏர் இந்தியா' விமானத்தில், அதிக மதுபானம் வழங்காத, விமான பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி, தகராறில் ஈடுபட்ட, பெண் பயணியை, போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து, பிரிட்டன் நாட்டின், லண்டன் நகருக்கு, இயக்கப்பட்ட, ஏர் இந்தியா விமானத்தில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவு நாடான, அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தாள்.விமானம் புறப்பட்டதும், இரண்டு முறை மதுபானம் வாங்கி குடித்த அந்த பெண், மறுபடியும் மதுபானம் கேட்டபோது, விமான பணிப்பெண், வழங்க மறுத்துவிட்டார்.இதையடுத்து, விமான பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தடுக்க வந்த ஊழியரின் கன்னத்திலும், அந்த பெண் அறைந்தாள்.இந்த காட்சிகளை விமான ஊழியர் ஒருவர், 'வீடியோ'வாக பதிவு செய்தார். பயணியின் செயல் குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமான நிறுவனம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விமானம், லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த பெண் பயணியை போலீசார் கைது செய்தனர்.
முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் : குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்

Added : நவ 14, 2018 22:37



திருச்சி: முசிறியில், கூலித் தொழிலாளியின் மனைவி, 11வது பிரசவத்தில், 12வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.திருச்சி, முசிறியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி கண்ணன், 47; மனைவி சாந்தி, 45. இவர், 10 முறை கர்ப்பமடைந்து, ஒரு முறை இரட்டை குழந்தை என மொத்தம், 11 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், மூன்று குழந்தைகள் இறந்து விட்டன.எட்டு குழந்தைகள்தற்போது, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து, சாந்திக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். சாந்தியின், 10 பிரசவங்களுமே, வீட்டிலேயே சுகப்பிரசவமாக நடந்துள்ளன. பிரசவத்துக்கு, அவரது கணவரே உதவி செய்துள்ளார்.

இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன், சாந்தி மீண்டும் கர்ப்பமானார். இந்த பிரசவத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்த தம்பதி, மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இது குறித்து, கிராம செவிலியர் மூலம் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், கடந்த மாதம், 25ம் தேதி, சாந்தியை வீட்டில் சந்தித்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர்.மறுத்த சாந்தி, 'அங்கு வந்தால், குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்' எனக் கூறி, காவிரி ஆற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார். போலீசாரின் உதவியுடன், அவரை முசிறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்தனர்.தீபாவளிக்கு, 'எஸ்கேப்'தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி, மருத்துவமனையில் இருந்து சென்ற சாந்திக்கு, 12ம் தேதி இரவு வீட்டிலேயே, 12வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம் அவரை, தண்டலைபுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரு பிரசவத்தையே பெரும் பிரச்னையாகக் கருதும் காலத்தில், 11 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்துக் கொண்ட சாந்தி கூறியதாவது:என் பிரசவத்தை நானே பார்த்துக் கொள்வேன். கணவர் உதவி செய்வார். இந்த பிரசவத்துக்கும் அவர் தான் உதவினார். பிரசவம் முடிந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி, அரை மணி நேரத்திற்கு பின், டீ குடித்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.அதற்குள் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். 

நான் நன்றாக வேலை பார்ப்பேன். கர்ப்பம் பற்றி கவலைப்படாமல் வேலை பார்ப்பேன். சுகப்பிரசவத்துக்கு வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. பிரசவ நேரத்தில், கணவரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் விட மாட்டேன். இந்த முறை தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது.இவ்வாறு, சாந்தி கூறினார்.மணல் விற்பனைகாவிரி ஆற்றங்கரையில் மூட்டையில் மணல் அள்ளி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில், சாந்தி, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு, 300 மூட்டைக்கு மேல் மணல் சுமந்து விற்று விடுவார். இதுவே, சுகப்பிரசவத்துக்கு காரணம் என, சாந்தி கூறுகிறார்.

NEWS TODAY 14.07.2026