Friday, December 14, 2018

JAYA DEATH PROBE

Commission summons OPS, Vijayabaskar, Ponnaiyan
Health Min, Secy To Be Important Witnesses


Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai:14.12.2018

Deputy Chief Minister O Pannerselvam, whose ‘Dharma Yudham’ led to the government forming an inquiry commission to probe late Chief Minister J Jayalalithaa’s death, has been summoned by the commission.

The Justice (retd) A Arumughaswamy commission has summoned OPS to appear on December 20. Health minister C Vijayabaskar has been asked to appear on December

18. Senior leader and founding member of AIADMK C Ponnaiyan has also been summoned to appear on the same day.

Jayalalithaa’s personal security officer (PSO) Perumalsamy and current deputy commissioner of police (DCP), Anna Nagar, Dr M Sudhakar IPS, who was part of her security team, have been summoned on December 20 as well.

As part of the cabinet, OPS was present at Apollo hospital during Jayalalithaa’s two-and-a-half month stay from September to December 2016. Multiple witnesses have deposed stating he was present at the hospital and was aware of her health conditions, which is likely to be the basis for the commission’s line of questioning, sources said.

The deposition of then chief secretary Rama Mohana Rao, who stated that a decision to airlift Jayalalithaa to a foreign country for treatment was tabled in the cabinet which didn’t decide anything, will also be key, sources said.

Vijayabaskar and health secretary J Radhakrishnan were briefed regularly by Apollo about Jayalalithaa’s health condition and hence will be important witnesses, sources said.

Ponnaiyan was AIADMK’s spokesperson when Jayalalithaa was in the hospital and briefed the press regarding it. Later, when he joined OPS after his Dharma Yudham, he reportedly said that he had some material to share with the commission, sources said. He also reportedly made comments about Jayalalithaa’s cheek being punctured with three holes, which was visible after her death. Commission sources said Ponnaiyan would be questioned about this.

Raja Senthoor Pandian, counsel for Jayalalithaa’s aide V K Sasikala and OPS’s current political rival, claimed victory for the summons issued to him. “We have been demanding this since March that he be summoned. This was based on our initiative,” he said.
Asst prof suicide: HC notice to govt, university, pvt college

TIMES NEWS NETWORK

Chennai:14.12.2018

A month after an assistant professor of an engineering college committed suicide, after the college management detained his certificates, Madras high court has issued notices to the higher education department, Anna University and principal of Sree Sastha Institute of Engineering and Technology.

Vasanthavanan, had committed suicide at his residence of Tambaram on November 12.

On Thursday, a division bench comprising Justice M Sathyanarayanan and Justice P Rajamanickam, before which a PIL filed by KM Karthick, president of Educational Institution Employees Association, came up for hearing, issued notices and asked the respondent-authorities and the college to file their responses by January 24, 2019.

Alleging that the college demanded ₹3 lakh for the return of the certificates and even made him to prostrate before the correspondent. The petitioner said when Vasanthavanan lodged a complaint with Nazarathpet police, the station inspector handed over the complaint copy to the principal of the college himself.
Cyclone likely, Chennai may get heavy rainfall

TIMES NEWS NETWORK

Chennai:14.12.2018

Nearly a month after Cyclone Gaja made landfall near Vedaranyam, another storm is brewing over Bay of Bengal and may bring heavy rain to north coastal Tamil Nadu including Chennai this weekend. The system which is now a deep depression, India Meteorological Department (IMD) said, is likely to intensify into a tropical cyclone by Friday and move in a northwesterly direction towards Andhra Pradesh and north Tamil Nadu. Once formed, it would be called Phethai, a northern Indian Ocean tropical cyclone name contributed by Thailand.

IMD’s regional weather inference said the depression was about 1,150km southeast of Chennai and 1,350km south-southeast of Machilipatnam. “It is very likely to intensify further into a deep depression in the next 12 hours and into a cyclonic storm during the subsequent 24 hours. It is very likely to move towards Andhra Pradesh and adjoining north Tamil Nadu coast during next 72 hours,” it said.

This may bring heavy to very heavy rain in isolated places over north coastal TN from December 15, IMD said.

Mahesh Palawat, chief meteorologist of independent weather forecasting agency Skymet, said the system may intensify into a storm when it nears the coast. If it happens, it would be seventh cyclone this season in the Indian Ocean region. “There will be rain from Saturday and it would gradually pick up pace. After a heavy spell on December 16, its intensity will decrease. Northern parts of Tamil Nadu and Chennai can expect heavy rainfall,” he said.

Weather blogger Pradeep John recalled the time in 2010 when the intense spell in Chennai lasted only a day as Cyclone Laila made landfall near Machilipatnam. “Though rain may pound Chennai if the cyclone makes landfall near Nellore or Kavali in South Andhra Pradesh, as predicted earlier, the present one is also expected to come close to Chennai and then move up. So, there will be one day of intense rain in the city,” he said.

As of now, the sky over the city is likely to be generally cloudy for the next 24 hours with the maximum and minimum temperatures around 31 deg C and 23 deg C.



IN THE MAKING
Booking Air India tickets through agents may become difficult this holiday season

Ayyappan.V@timesgroup.com

Chennai:14.12.2018

Passengers who want to book tickets on Air India through travel agents may find it difficult as the airline has discontinued its contract with a global distribution system company (GDS), Amadeus, which majority of agents use. This will affect the agents and the airlines as tickets for Christmas and New Year season, and for Pongal holidays are still being booked by travellers.

In a communication to travel agents, the airline said, “Air India flight content — domestic, international and codeshare flights — will no longer be available to Amadeus GDS subscribers in all markets including in India.” It said several rounds of negotiations were held to renew the contract which ended on December 3, but “no consensus was reached”.

The impasse will hit passengers said Basheer Ahmed of Metro Travels. “Passengers will face trouble booking tickets through agents as we will not be able to access Air India’s system to block seats, tickets and make reservations at best rates. We will now be forced to move the bookings to other airlines.”

Air India’s database is accessible through three other GDS but around 75% of the agents use Amadeus, he said. “There are a few agents who use only single GDS. They are now forced to subscribe to another GDS in a short period. The move by the airline looks like a cost-cutting measure and has come at a wrong time,” he said.

Though several tickets have been booked for the festival holidays, agents continue to get requests for Christmas and New Year holidays. Business and corporate travellers continue to book through agents for group and individual travel.

In their memorandum, Travel Agents Association of India and Travel Agents Federation of India said the airline did not consult them before taking such a decision. “Our meetings are regularly held when Air India comes up with some new initiatives. However, on this occasion, when a major initiative is taken in... we are kept out of any discussion or consultation,” they said.

The associations said Air India would suffer loss of revenue on reduced seat sale.

Travel agents said they would not be able to block Air India seats and tickets and make reservations at the best rates

Thursday, December 13, 2018


முடிவுகள் ஏற்படுத்தும் தெளிவு!

By ஆசிரியர் | Published on : 13th December 2018 01:27 AM |


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப்பெரிய அரசியல் திருப்பம் என்பதில் ஐயப்பாடில்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கின்றன. 

பஞ்சாப், மிஸோரம் இரண்டு மாநிலங்களில் தனியாகவும் கர்நாடகத்தில் கூட்டணியாகவும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மிஸோரத்தில் ஆட்சியை இழந்தாலும்கூட, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று பெரிய மாநிலங்களில் பெற்றிருக்கும் வெற்றி, அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இந்த வெற்றி 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸுக்கு உற்சாகத்தை மட்டுமல்ல, தேவையான பண பலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலும் அதற்குப் பின்னால் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களும் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பை கேள்விக்குறியாக்கி இருந்தன. இப்போது, இந்தியாவின் முக்கியமான மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் வெற்றி, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 2019 மக்களவைத் தேர்தலைத் துணிவுடன் எதிர்கொள்ள அடித்தளமிட்டுக் கொடுத்திருக்கிறது. 

பஞ்சாப், உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் பாஜகவுடன் நேரடியாக மோதுகிறது. கடந்த தேர்தலைப்போல, காங்கிரஸ் உடனான நேரடி மோதலை எதிர்கொள்வது பாஜகவுக்கு சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, காங்கிரஸ் தலைமைக்கே வியப்பாக இருந்திருக்கக் கூடும். ராஜஸ்தானில் படுதோல்வி அடையும் என்று கருதப்பட்ட பாஜக, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பல இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் இழுபறியுடன்தான் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மாற்றியது. அதுவரை மதச்சார்பின்மை பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துத்வா என்கிற புதிய அணுகுமுறையைக் கையாள முற்பட்டது. 

மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் பசுவைப் பாதுகாப்பதற்காக கோசாலை அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது.
பாஜகவை ஆதரிக்கும் பிராமணர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ராகுல் காந்தி பூணூல் அணிந்து கொண்டு, நேரு குடும்பத்தினர் காஷ்மீர பிராமணர்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த முற்பட்டார். தன்னை ஒரு சிவ பக்தனாக அடையாளம் காட்டிக் கொண்டும், கைலாஸ் மானசரோவர் யாத்திரையை மேற்கொண்டும் ராகுல் காந்தி மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்திருப்பதால் இந்த அணுகுமுறையை 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக கடைப்பிடிக்க முற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அணுகுமுறை மக்களவைத் தேர்தலிலும் கைகொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது. 

பாஜகவின் இந்துத்வா கோஷமும், அயோத்தி ராமர் கோயில் பிரச்னையும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சிக்குக் கைகொடுக்கவில்லை. வாக்குப் பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் பிரச்னை உயிர்ப்பிக்கப்பட்டதும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதோ என்று கூடக் கருதத் தோன்றுகிறது. 

கிராமப்புறங்களில் நரேந்திர மோடி அரசின் அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவும், நகர்ப்புறங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பும் பாஜகவுக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பது தெளிவாகவே தெரிகிறது. வளர்ச்சி என்கிற கோஷத்துக்கு அயோத்தி மாற்றாக அமையாது என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கி இருக்கின்றன.

மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி, தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த வரலாறு நிறையவே உண்டு. 1998-99 இல் ஒன்றுபட்ட மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தோல்வி அடைந்த பாஜக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. 2003-இல் இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக 2004 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பல மாநிலங்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அதனால் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு 2019-இல் வெற்றியை அளிக்கும் என்பதோ, இப்போதைய தேர்தல் தோல்வியின் தொடர்ச்சியாக அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என்றோ அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.

முதியோர் எனும் சொத்து
By கோதை ஜோதிலட்சுமி | Published on : 13th December 2018 01:26 AM |


அன்புதான் மனிதனை வாழ்வதற்குத் தூண்டுகிறது. அன்புதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. உறவு என்பது சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்து சமூக வாழ்வை உயர்த்துகிறது. மனிதன் சமூக விலங்காக கருதப்பட்ட காலம் முதல் உறவுப் பிணைப்பு அவனை வாழ்வதற்கும் மேம்பட்ட வாழ்க்கைச்சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும் உந்து சக்தியாக இருந்து வழிநடத்துகிறது.இத்தகைய அன்பும், உறவும் காலப்போக்கில் எத்தகைய பரிமாணங்களை அடைந்துள்ளன? வியாபாரமயமாகி விட்ட இந்த நூற்றாண்டில் உறவின் நிலை என்ன?

காலந்தோறும் கூடி வாழ்ந்த குடும்பம் என்ற அமைப்பு மனிதனை உயர்த்தி இருக்கிறது. ஒருங்கிணைந்த உழைப்பால் பெரும் பலன் தந்திருக்கிறது. விவசாயப் பெருங்குடி மக்களாய் வாழ்ந்த காலத்தில் கூடிவாழ்ந்த குடும்பத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் உழைப்பை நிலத்தில் சிந்தி வேளாண்மை பெருகி, சீரும்சிறப்புமாய் வாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. இப்படி வாழ்ந்த சமூகத்தில் பெரியோர் மதிக்கப்பட்டனர். அவர்களின் அனுபவமும் அறிவும் இளையோருக்கு வழிகாட்டக் கிடைத்த பெரும் வரமாக கருதப்பட்டது. 

உழைப்பைத் தந்த குடும்பத்தில் முதியவர்கள் உடல் தளர்ந்து, தங்களால் உழைப்பை நிலத்தில் செலுத்த இயலாத காலத்தில் குடும்பத்திற்குப் பாதுகாவலாக இருந்து குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்களை நல்வழிப்படுத்தும் ஒழுங்காற்றுப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் அடுத்த தலைமுறையும் சீரிய ஒழுக்கத்தோடும் நெறிமுறைகளோடும் வாழத் தலைப்பட்டது. ஆனால், தற்போது அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நிலை என்னவாக இருக்கிறது?
நமக்கு அன்றாடம் ராமாயணத்தையும் பாரதத்தையும் கதையாகச் சொல்லி நம்முடைய பண்பாட்டு விழுமியங்களை இயல்பாக நமக்குள் பதிவுசெய்தவர்களாக நம்முடைய முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லித் தந்த கதைகள் வெறும் பொழுது போக்கு அம்சங்களாக இருக்கவில்லை. பின்னாளில் வாழ்வை எதிர்கொள்வதற்கான மனஉறுதியைக் கொண்டிருந்தன. இத்தகைய தாத்தா-பாட்டிகளை நாம் தொலைத்துவிட்டு மன அழுத்தத்திற்கு மனநல மருத்துவர்களை நாடிச் செல்வதும், ஆலோசகர்களை அணுகி ஆலோசனை கேட்பதும் பேதைமை நிறைந்தது.

நம் முன்னோர்கள் விவசாயம் அறிந்திருந்தார்கள். பருவநிலையைப் புரிந்திருந்தார்கள். மனித மனங்களைப் பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தது. வாழ்வின் தேவை என்ன? நிம்மதியாய் வாழ்வதற்கானவழிவகை என்ன என்பதையும்அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.இவற்றையெல்லாம் நமக்குத் தேவையான பொழுது கற்றுத் தருவதற்கும் காத்திருந்தார்கள். இன்றைக்கு அந்தத் தாத்தாக்கள் தொலைந்து போனார்கள்.
ஒவ்வொரு முதியவரும், தமக்குள் கொண்டிருக்கும் ஆற்றல், அனுபவம், அன்பு இவற்றின் தொகுப்பாக விளங்குகிறார்கள். இந்த மதிப்புமிக்க பெரியோர்கள் நம் தேசத்தின் சொத்து. இதனை உதாசீனப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும் செயல். இதனை நாம் உணரத் தலைப்படும்பொழுது இன்னும் மிகுந்த வளர்ச்சியோடு வேகத்தோடு நவீன யுகத்தில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, முதியோர்களின் அறிவாற்றலும் திறமையும் உழைப்பும் கொண்டுதான் நாம் வாழும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே. இன்று நாம் அனுபவிப்பவை அனைத்தும் நேற்றைய தலைமுறையினரின் உழைப்பின் பலன்தான். நம்மைக் காட்டிலும் முதியவர்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்லர். சொல்லப் போனால், வாய்ப்புகள் இத்தனை உலகளாவிய அளவில் வாய்க்கப் பெறாத காலத்திலும் அவர்கள் சமூகத்தை மேம்பட்ட நிலையில் வைத்திருந்தார்கள்.
கலை இலக்கியம் அறிவியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் முதியவர்கள் நமது முன்னோடிகள். அப்துல் கலாம் போன்ற அறிவியல் அறிஞர்கள், நம்மாழ்வார் போன்ற வேளாண் வல்லுநர்கள், ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள், 96 வயதிலும் யோகக் கலையில் சிறந்து விளங்கும் நானம்மாள் பாட்டி, அதே வயதில் கல்வி கற்கும் ஆர்வத்தோடு படித்துத் தேர்வுகளில் முன் நிற்கும் கார்த்தியாயினி அம்மாள், 82 வயதில் சற்றும் சளைக்காமல் வெறும் கால்களுடன் ஓடி ஆசிய போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று இன்னமும் முனைப்போடு சர்வதேச போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் ராஜேந்திரன், 96 வயதிலும் இன்னமும் புதினங்களை சளைக்காமல் புதிது புதிதாக எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- இப்படி எத்தனை எத்தனையோ சாதனைப் பெரியவர்கள் நம் தேசத்தில் உண்டு.

முதியவர்கள் நமக்கு வழிகாட்டிகள் எனும் எண்ணம் உருவாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இன்றைய உளவியல் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வாக முதியவர்கள் இருக்க முடியும். உடல் ஆரோக்கியம் காப்பதற்கு நம் பாட்டிமார்களை நாம் மீட்டெடுத்துத் தீர வேண்டும். எத்தகைய இக்கட்டான நிலையிலும் இவர்கள் நம்முடைய நலனைப் பேணுபவர்களாக இருந்தார்கள். நமக்குப் பொருள் ஈட்டித் தந்திருக்கிறார்கள். அவர்கள் ஈட்டித் தந்த பொருளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் சம்பாதித்த அனுபவங்களை ஏற்க மறுப்பது, நம் மூதாதையரின் சொத்துகளை நாம் வேண்டாம் என்று மறுப்பதற்கு ஒப்பானது.
ஒவ்வொரு குடும்பத்திலும் தத்தமது பெற்றோர்களைஅல்லது தாத்தா பாட்டிகளை பாதுகாக்க வேண்டிய அடிப்படை பொறுப்பு உள்ளவர்கள் இளைஞர்கள். இளம் சமூகம் தன் துடிப்போடும் வேகத்தோடும் முதியோரின் அனுபவத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்பொழுது அனுபவம்-ஆற்றல் இந்தக் கூட்டுச் சேர்க்கை வெற்றி பெறுவதற்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த தலைமுறைக்காக உழைத்து நம்மை வாழவைத்த முதியவர்கள் தங்கள் முதுமையின் காரணமாக சற்றே தளர்ந்து போகும்பொழுது அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியது தம்முடைய கடமை என்பதை இன்றைய தலைமுறை மறந்து கொண்டிருக்கிறது. அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதும் நமது பொறுப்பே. உடல்நல தடைகள் காரணமாக இவர்கள் தவிப்புக்கு ஆளாகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆரோக்கியமான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டிய கடமை இன்றைய இளம் தலைமுறைக்கு உண்டு.
முதுமையில் உடல் தளர்வு காரணமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களை சார்ந்து வாழும் நிலை தோன்றும் பொழுது நாம் அதனை சுமையாகக் கருதும் மனப்பான்மையை தற்போது பெற்றிருக்கிறோம். இந்த மனப்பான்மை முதியோர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல, வளரும் தலைமுறைக்கும் நஷ்டமேயாகும்.

அரசு இவர்களின் தேவைகளை, பிரச்னைகளை உணர்ந்து சட்டங்களை இயற்றி இருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக கைவிடப்பட்ட, உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோருக்கு அவர்களது சொத்துகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தல், கைவிடப்பட்ட முதியோருக்கு சட்டப்படியானபாதுகாப்பினை வழங்குதல், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் அமைத்தல் என்று பல சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. 

உதவித்தொகை வழங்குவதில் அரசு பல சட்டங்களை இயற்றி இருக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற முதியோர், கைம்பெண்களுக்கான உதவித்தொகை, திருமணம் செய்து கொள்ளாது தனித்து வாழும் பெண்களுக்கான உதவித் தொகை என்று பல விதங்களில் அரசு இவர்களை கவனத்தில் கொண்டு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனஅறிவித்தது. வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் மற்றும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2002- ஆம்ஆண்டிலிருந்து முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ரயில்வே முன்பதிவு தொடங்கி, வருமான வரிச்சலுகைவரை, முதியவர்களுக்கு என்று பல சலுகைகளும் மதிப்பும் அரசால் வழங்கப்படுகிறது. முதியோருக்கான சுதந்திரம், உலகில், அவர்களுடைய பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் உலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களும் இந்த உலகின் பங்குதாரர்களே.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது சமூகம் ஆரோக்கியமின்மை நோக்கி நகர்வதற்கான அறிகுறி. சமூக மாற்றத்திற்கு, இயந்திரத்தனமான வாழ்க்கை, மேலை நாட்டுக் கலாசாரத்தை பின்பற்றுதல், ஒருவருக்காக மற்றவர் நேரம் செலவிட முடியாமல் ஓடுவது என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

தேசத்தின் புராண வரலாறு, கலாசாரப் பெருமை இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, இத்தகைய மாறுதல் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. 

குடும்பம்-உறவு எனும் இரு பெரும் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கிய தேசத்தில், முதியோர் உரிய மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். இளையோர் அதனை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
அண்ணாமலை பல்கலை பதிவாளர் விடுவிப்பு

Added : டிச 12, 2018 23:11




சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் விடுவிக்கப்பட்டு, புதிய பதிவாளர் நேற்று மாலை பொறுப்பேற்றார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு பதிவாளராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். உயர்கல்வித் துறை உத்தரவின் படி, பதிவாளர் ஆறுமுகம் நேற்று அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.புதிய பொறுப்பு பதிவாளராக முன்னாள் வேளாண் புல முதல்வர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று மாலை, 6:30 மணிக்கு பொறுப்பேற்றார். இவர் ஒரு ஆண்டிற்கு, பொறுப்பு பதிவாளராக பதவி வகிப்பார்.பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, 5,000க்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யபட வேண்டும். இதில், 3,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இடமாறுதல் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், உயர்கல்வித் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்தனர்.இதனால், துணைவேந்தர் முருகேசனுக்கும், பதிவாளர் ஆறுமுகத்திற்கும் சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் பதவியில் இருந்த பதிவாளர் ஆறுமுகம் திடீரென அதிரடியாக மாற்றப்பட்டார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...