Friday, January 4, 2019

பொங்கல் பரிசு தொகுப்பு ஆதார் கார்டில் வாங்கலாம்

Added : ஜன 04, 2019 01:36

ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த மொபைல் போனை பயன்படுத்தி, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்கலாம்.

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலை உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டை, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்து, ஊழியர்கள் பொருட்களை வழங்குவர்.தமிழக அரசு, பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய, பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. இவை, ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, ஆதார் கார்டின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதார் கார்டு அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டை தொலைத்தவர்களுக்கு, மாற்று கார்டு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில், புதிதாக வழங்கப்படும் 

ரேஷன் கார்டுகளும், கடைகளில், 'ஸ்கேன்' ஆகவில்லை என, புகார்கள் வருகின்றன.இதனால், கார்டை தொலைத்தவர்கள், ஸ்கேன் ஆகாத கார்டு வைத்திருப்போர், ரேஷன் கார்டில் ஒரு உறுப்பினரின், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த மொபைல் போன் எண்ணுடன், ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.அங்கு, ஊழியர்கள், ஆதார் எண்ணை ஸ்கேன் செய்து, பொங்கல் பரிசு வழங்குவர். இல்லையேல், கருவியில், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, அதற்கு வரும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' அடிப்படையில், பரிசு தொகுப்பு வழங்கப்படும். விரைவில், மாற்று ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஊழியர்கள் எதிர்ப்பு

ஒரு ரேஷன் கடையில், 1,000 கார்டுகள் இருந்தால், 500 - 600 கார்டுகளுக்கு தான், முழு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்த அளவில் தான், பொங்கல் பரிசும் வழங்கப்படுகிறது. இதனால், பொருட்கள் வாங்காதோரின் கார்டை பயன்படுத்தி, வழங்கியது போல முறைகேடு நடக்கிறது; இதற்கு, அதிகாரிகளும் உடந்தை.தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசு, 1,000 ரூபாய்,ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. ஊழியர்கள் பற்றாகுறை,கூடுதல் பணிச்சுமை, பாதுகாப்பு இல்லாதது, வீண் குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால், 1,000 ரூபாய் ரொக்கத்தை, ரேஷனில் வழங்க, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு

Added : ஜன 04, 2019 01:25

ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால், ஓட்டல்களில், பார்சல் சாப்பாட்டின் விலை, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, விற்பனை மற்றும் உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜன., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வந்த, பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதனால், மாற்று வகை டப்பாக்களை பயன்படுத்தி, பார்சல் செய்யப்படுவதால், ஓட்டல்களில் சாப்பாட்டின் விலை, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர், வெங்கடசுப்பு கூறியதாவது:பிளாஸ்டிக் தடையால், தடையில்லாத, மறுமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்களின் விலை, 2 ரூபாய்க்கு மேல் உள்ளது. 

சாப்பாடு பார்சலின் போது, கூட்டு, பொரியல், குழம்பு என, எட்டுக்கும் மேற்பட்ட பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.துணி பையும் தர வேண்டியுள்ளது. எனவே, ஒரு சாப்பாடு பார்சல் செய்ய, 30 ரூபாய் வரை செலவாகிறது. இதில், 10 ரூபாயை குறைத்து, 20 ரூபாயை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறோம்.இதுபோல, டிபன் வகைகளுக்கும், டப்பாக்களை பொறுத்து, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் பார்சல் சாப்பாடு, டிபன் விற்பனை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளை அறியும் வசதி

Added : ஜன 04, 2019 02:37

புதுடில்லி:ரயில்களில், 'ஆன்லைனில்' டிக்கெட் பதிவு செய்யும்போது, காலியாக உள்ள, படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாக, ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, பயணியருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பயணத்தின் போது, பயணியரின் தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, காலியாக உள்ள, படுக்கை அல்லது இருக்கைகள் குறித்த விபரங்களை பயணியர் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாமே தவிர, கீழ் படுக்கை, மேல் படுக்கை போன்ற, எந்தெந்த படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை அறிய முடியாது. இதனால், மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, ரயில்களில் காலியாக உள்ள படுக்கை அல்லது இருக்கை வசதிகளை, ஆன்லைன் மற்றும் 'மொபைல் ஆப்'பில் பார்க்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, சினிமா தியேட்டர், தொலை துார பஸ் மற்றும் விமானங்களில், காலி இருக்கைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.அதுபோன்ற நடைமுறையை ரயில்வேயிலும் ஏற்படுத்த, திட்ட மிடப்பட்டுள்ளது.
கதறி அழுதார் துரைமுருகன்

கண்ணீர் சிந்தினர் எம்.எல்.ஏ.,க்கள்!  dinamalar 04.01.2019


சென்னை : ''தன் வாழ்நாளில் பெரும் பகுதியை, சட்டசபை பணிக்கு தந்தவர், கருணாநிதி,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.



சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: கருணாநிதி, தனி மனிதரல்ல. அவர் பன்முக தோற்றம் உடையவர்; சமூக போராளி; அரசியல் வித்தகர்; சாதனை செம்மல்; சரித்திர நாயகன். ஒரு முகத்தோடு அவரை அடக்கி விட முடியாது. சட்டசபையை பொறுத்தவரை, அவர் எல்லாமும் ஆகி இருந்தார். அவர் வாழ்ந்தது, 34 ஆயிரத்து, 258 நாட்கள். அதாவது, 94 ஆண்டுகள். அதில், சட்டசபையில் பணியாற்றியது, 20 ஆயிரத்து, 411 நாட்கள். அதாவது, 56 ஆண்டுகள்.

தன் வாழ்நாளில், பெரும் பகுதி நாட்கள், சட்டசபையில் பணியாற்றியுள்ளார். 13 தேர்தலில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி உறுப்பினராக, கொறடாவாக, தலைவராக, அமைச்சராக, முதல்வராக பணியாற்றி உள்ளார். முதல்வராக, 6,863 நாட்கள், அதாவது, ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தி.மு.க., தலைவராக,17 ஆயிரத்து, 908 நாட்கள், அதாவது, 49 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது, முக்கியம் அல்ல. வாழ்ந்த காலத்தில், என்ன சாதித்தார் என்பது தான் முக்கியம்.


பிள்ளைகளை வைத்து, பெற்றோரை எடை போட முடியாது. அவர்கள் விட்டு சென்ற பணிகளை வைத்து தான், எடை போட முடியும். அந்த வகையில், கருணாநிதி, வரலாற்று சிறப்பு மிக்க அரிய காரியங்களை செய்துள்ளார். இன்னும், 100 ஆண்டுகளானாலும், நினைத்து பார்க்க முடியாத, திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

மாநில கட்சி தலைவராக இருந்தாலும், அகில இந்திய அரசியல் வித்தகராக திகழ்ந்தார். பிரதமரை, ஜனாதிபதியை தேர்வு செய்பவராக இருந்ததால், தேசிய தலைவராக கருதப்பட்டார். எனக்கு ஒரு வருத்தம். சாதாரண குடிமகனாக, சென்னை வந்தேன். பச்சையப்பன் கல்லுாரியில் சேர, வழி தெரியாமல், தகர பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு, வழி கேட்டு சென்றேன். அப்படி இருந்த என்னை, தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.எல்.ஏ.,வாக உட்கார வைத்து, அமைச்சராக்கினார். துரை, துரை என்று, அழைத்தவர். எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை, 2007ல், நிறைவேறியிருக்க வேண்டும்.

ஒருவருக்கு, அப்பா, அம்மா, ஒரு முறை தான் உயிர் கொடுப்பர். ஆனால், கருணாநிதி, எனக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அறையில் படுத்திருந்தேன். இரவு, கருணாநிதி, 'போன்' செய்தார். 'துரை துாங்கிட்டீயா' என கேட்க, 'இல்லை' என்றேன். 'பயப்படுகிறாயா' என்றார். 'இல்லை' என்றேன். 'எனக்கு தெரியுமடா... நீ கோழை... நீ அப்படியே இரு; நான் வந்து, ஒரு நாள் உன் அறையில் தங்கிவிட்டு, காலையில், ஆப்பரேஷன் அறைக்கு அனுப்பிவிட்டு வருகிறேன்' என, கூறினார். அதன்படி வந்து, அனுப்பி வைத்தார்.

அப்போது இறந்திருந்தால், என் பிணம் மீது, அவர் ஒரு சொட்டு, கண்ணீர் விட்டிருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டம், என் தலைவர் உடல் மீது, நான் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

கண்கலங்கிய பெண் எம்.எல்.ஏ.,க்கள்!

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். ஆரம்பத்திலேயே, 'கண்ணீரை அடக்கியபடி, பேச முயற்சிக்கிறேன்' எனக் கூறி பேச்சை துவக்கினார். கருணாநிதியின் சிறப்புகளை, சாதனைகளை பட்டியலிட்டார். இறுதியாக தனக்கும், அவருக்கும் இடையிலான உறவு குறித்து பேசத் துவங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் முட்டியது; நா தழுதழுத்தது. ''கருணாநிதி உடல் மீது நான் கண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே,'' எனக் கூறியபோது கதறி அழத் துவங்கினார். அருகிலிருந்த ஸ்டாலின் அவரை ஆறுதல்படுத்தி கீழே அமர வைத்தார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலரின் கண்களிலும் கண்ணீர். அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,க்களும் கண்கலங்கினர். சபையில், நிசப்தம் நிலவியது. தொடர்ந்து பேச முடியாமல் துரைமுருகன் தன் பேச்சை முடித்தார்.
5 ரூபாய் டாக்டருக்கு சட்டசபையில் அஞ்சலி

Added : ஜன 04, 2019 02:07

சென்னை:தமிழக சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு, நேற்று இரங்கல் தெரிவித்து, மூன்று முறை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை நேற்று துவங்கியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எஸ்.டி.உக்கம்சந்த், கனகதாரா, சண்முகநாதன், நாகூர் மீரான், வெங்கடேசன், மலைச்சாமி, பரிதிஇளம்வழுதி, சந்திரசேகரன், வீரய்யன், சந்தானம், தனபால், உலகரட்சகன் ஆகிய, 12 பேர் மறைவுக்கு, சபாநாயகர் இரங்கல் குறிப்பு வாசித்தார். பின், அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடங்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண்சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், 5 ரூபாய் டாக்டரான, மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன், 'கஜா' புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல் தெரிவித்து, அனைவரும் இரண்டு நிமிடங்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.

அடுத்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ், தி.மு.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
Chennai: Buses off road after students assault staff

DECCAN CHRONICLE.

Published  Jan 3, 2019, 1:11 am IST

According to sources, a student of the law college in Pudupakkam boarded bus no. 102 at Tidal park bus stop on Wednesday morning.


Kelambakkam police registered a case and began efforts to identify the students with the help of CCTV footages. The buses began running again at around 3.30 p.m.

Chennai: MTC bus drivers and conductors reportedly went on a strike for over three hours on Old Mahabalipuram Road (OMR) after four MTC employees were allegedly attacked by a group of law college students near Sipcot on Wednesday.

Depot time keeper Ezhumalai (70), a retired government staffer, conductor Moorthy (53), Selvam and driver Ramesh were reportedly injured and admitted to a private hospital following the assault by students.

According to sources, a student of the law college in Pudupakkam boarded bus no. 102 at Tidal park bus stop on Wednesday morning. Conductor Moorthy asked him to buy a ticket and he replied that he had a bus pass. When Moorthy asked to see the pass, the boy reportedly took out his smartphone and showed him a picture of the pass. Moorthy said that he could not accept this and thus began an argument.

At one point, the conductor asked him to buy a ticket or discontinue his journey, and the boy bought the ticket.

Later at around 11.30 pm, a group of law college students went to the Sipcot bus stop and began a quarrel with time keeper Ezhumalai. Moorthy, Selvam, and Ramesh, who were at the depot at the time tried to pacify them. The students refused to listen to them, assaulted all four and left the depot.

As the news spread among drivers on OMR route, all buses on OMR, in Kovalam, Kelambakkam and Siruseri were stopped and the staff began a strike near the Sipcot depot. Kelakbakkam police arrived at the spot and talked to the protesters, but the MTC staff demanded action, saying that law college students were creating problems often.

Kelambakkam police registered a case and began efforts to identify the students with the help of CCTV footages. The buses began running again at around 3.30 p.m.

People on the OMR suffered for three hours with public transport failing. R. Meenaa, an IT professional working at Sipcot,, said, “After our shift, we weren't able to reach home as there were no buses. Other modes of transport were also affected due to traffic.”
Osmania University ex-students told to vacate hostels

DECCAN CHRONICLE.

PublishedJan 4, 2019, 5:34 am IST

“Such measures have been warranted as there have been a series of representations from students and scholars who have been admitted recently.”

Osmania University

Hyderabad: Osmania University Vice-Chancellor Prof. S. Ramachandram has warned former students who have completed their courses against overstaying in hostels and ordered to vacate immediately to avoid police action.

The university plans to seek the help of the police to evacuate “non-boarders”, and cautioned them that the authorities would not intervene in case of police raids. The university said, “Such measures have been warranted as there have been a series of representations from students and scholars who have been admitted recently.”

Some former students overstay as they prepare for competitive examinations, occupying accommodation meant for fresh students hailing from districts. Stating that the university infrastructure had come under severe strain, Prof. Ramachandram said the administration would relentlessly pursue this issue and warned overstayers of action.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...