Saturday, January 5, 2019

Final inspection of last stretch of metro on Jan 10, 11

TIMES NEWS NETWORK

Chennai: 05.01.2019

In less than three weeks, commuters can travel from Washermenpet to Airport in less than 50 minutes. The commissioner of metro rail safety (CMRS) will inspect the last leg of the 45km phase-1 between Washermenpet and AG-DMS on January 10 and 11 to give approval for opening the line.

Ahead of the inspection, Chennai Metro Rail Limited (CMRL) officials conducted a trial with an inspection carriage across the ballast-less tracks on Friday. CMRS inspection is the last round of inspections before the line becomes operational.

“Our officials have submitted all the documents related to the line to CMRS. We are expecting to open the line before the end of this month,” an official said. CMRL had earlier opened other lines in phase-1 within ten days of CMRS inspections.

The line from Washermenpet to AG-DMS covers 9.6km and is linked by eight underground stations. It includes the lower deck of Central Metro, the underground transit hub, at a depth of 28m. The stretch also covers four stations between Government Estate and AG-DMS, which is a portion of Anna Salai where work was stalled for more than a year after a Russian contractor abandoned work citing financial crisis.

CMRL began trial runs with metro trains along the stretch in early December 2018, while workers were giving final touches to the stations. At present, commute from Central Metro to Airport takes one hour as the train takes a circuitous route via Poonamallee High Road, Shenoy Nagar,Anna Nagar and100Feet Road before reaching GST Road at Alandur.

CMRS and his team will inspect all the facilities required for passenger safety including cross-passage in tunnels, fire safety, ventilation and airconditioning systems. It will also inspect passenger amenities such as ticket vending machines, customer care, entry and exit points, elevators and escalators.

Besides checking the structural aspects of the tunnels and the stations, the commissioner will survey several critical systems. CMRS will submit a report with its recommendations to CMRL before opening the line.


AWAITING ALL OKAY

Friday, January 4, 2019

9 Gian Sagar students move tribunal over pending dues

TNN | Jan 2, 2019, 11.01 AM IST



CHANDIGARH: Nine students, who were pursuing postgraduate (PG) medical course at Gian Sagar Institute, have moved the education tribunal praying that directions should be issued to the institute authorities to clear outstanding dues of the petitioners i.e. stipends for the session 2016-2017. The institute had stopped stipends of Rs. 45,990 per month to them, which is against Medical Council of India (MCI) rules. The matter would come up for hearing on January 3 The petition was filed under the Punjab Affiliated Colleges (Security of Service of Employees) Act, 1974, for issuance of directions to the respondents concerned to clear of the petitioners’ all outstanding dues i.e. stipends for the session 2016-17.



Counsel of the petitioners advocate Pardhuman Garg stated that the petitioners were primarily aggrieved by the action of the institute whereby the stipend of Rs 45,990 per month, which was being paid to them as they were undergoing PG medical course, was stopped by the institute without having any justified reason. The claim of the petitioners is that since they were doing PG course at the institute, they were entitled to receive stipends as per the MCI regulations.

According to the Postgraduate Medical Education Regulations, 2000, issued by the MCI with regards to stipends payable to PG students stated that the students undergoing PG course shall be paid stipend on par with the PG students of the state government medical institutions.

For session 2016-17, the institute had agreed to pay Rs 45,990 per month as stipend to the petitioners. It was stated that the petitioners, who were undergoing PG medical courses, had already paid their fees for the said session.

Further it was stated that the institute was shut down due to some financial crises and some of the students had approached the Punjab and Haryana high court.

After appreciating the factual condition, the high court had passed a notice of motion order on April 12, 2017, and even the state government had withdrawn the essentiality certificate of the institute. later, the government had vide its order dated May 19, 2017, directed shifting the students to different government/private colleges of Punjab. The petitioners were shifted to a medical college in Faridkot.
அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்யக்கோரி வழக்கு அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜன 04, 2019 03:27

மதுரை:அரசு மருத்துவமனைகளில் அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனைகளை தமிழ்நாடு மருத்துவ விதிகள்படி மேற்கொள்வதில்லை. பரிசோதனை மையங்களில் தகுந்த உபகரணங்களை பயன்படுத்துவதில்லை. டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்வதில்லை. உதவியாளர்கள் மூலம் மேற்கொள்கின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த அன்றே அதற்குரிய சான்றை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் (மாஜிஸ்திரேட்) சமர்ப்பிப்பதில்லை.
குற்றவழக்கில் பிரேத பரிசோதனைச் சான்று முக்கியம். எத்தகைய சம்பவத்தால் ஒருவர் இறந்திருக்கலாம் என யூகித்து தீர்மானிப்பது மற்றும் பிரேத பரிசோதனையின்போது டாக்டர்கள் கூறுவதை பதிவு செய்வது கிரிமினாலஜி பட்டப்படிப்பு முடித்த விஞ்ஞான அலுவலர்களின் பணி. ஆனால் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் விஞ்ஞான அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால் சர்ச்சைகள், மறு பிரேத பரிசோதனை தவிர்க்கப்படும்.
அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். அன்றே அதற்குரிய 'சிடி' பதிவு மற்றும் சான்றை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண்சுவாமிநாதன் மனு செய்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, மாநில சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,22 க்கு ஒத்திவைத்தது.
'நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி

Added : ஜன 04, 2019 02:19


புதுடில்லி:நேர்மையற்ற வணிக நடைமுறை, பொய்யான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த, 2015ல், 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் தயாரித்த, 'மேகி' நுாடுல்சில், அதிகளவில் காரீயம் மற்றும் உப்பு கலந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.இதையடுத்து, மேகி நுாடுல்சின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில், பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில், உப்பு மற்றும் காரீயம் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானது.இந்த நுாடுல்சை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு முழுவதும், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் பின், நாடு முழுவதும், 'மேகி' நுாடுல்ஸ் பாக்கெட் களை, நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், நேர்மையற்ற வணிக நடைமுறை, தவறான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக, 640 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக, என்.சி.டி.ஆர்.சி., எனப்படும், தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பாணையத்தில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வழக்கு தொடர்ந்தது.இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மின் வாரியத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை புத்தாண்டு பரிசாக தந்த தங்க நாணயங்கள் சிக்கின

Added : ஜன 04, 2019 04:03


சென்னை:மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையால், லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

துணை மின் நிலையம், மின் நிலையம், பிரிவு அலுவலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்து, தங்களுக்கு வேண்டிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து, 'டெண்டர்' உட்பட, நிர்வாகத்தின் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றனர்.

ஊழியர்களுக்கு, இடமாறுதல் வாங்கி தருவதற்காக, இடைத்தரகர்களும் வருவர். நிறுவன பிரதிநிதிகள், தங்களுக்கு வர வேண்டிய பணத்திற்கான ரசீதையும், அதிகாரிகள் அறையில் அமர்ந்து, தாங்களே தயாரித்து, கையெழுத்தை மட்டும், அதிகாரிகளிடம் வாங்கி கொள்கின்றனர்.இதற்காக, அவர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம்; தீபாவளி, ஆங்கில புத்தாண்டிற்கு, தங்க நாணயங்கள், பரிசு பொருட்களை தருகின்றனர். 

இந்நிலையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, சென்னை தெற்கு மண்டல தலைமை பொறியாளர் அறையில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு துறையினர் நுழைந்து, திடீர் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத, பணம், தங்க நாணயங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், லஞ்சம் வாங்கும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மின் வாரிய வட்டாரம் கூறியதாவது:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தனியார் நிறுவனங்கள், மின் வாரிய அதிகாரிகளுக்கு, விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால், அவர்கள், 2ம் தேதி காலை முதலே, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வந்து, அதிகாரிகளை நோட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி, சென்னை தெற்கு தலைமை பொறியாளராக இருக்கும் முத்துவை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க, பிரிவு அலுவலக பொறியாளர்கள் மற்றும், ஊழியர்கள் வந்திருந்தனர். முத்து வீடு, செங்கல்பட்டில் உள்ளது. இதனால், செங்கல்பட்டில் இருந்த வந்த ஊழியர்களுடன், காரில் வீட்டிற்கு செல்ல, முத்து முடிவு செய்தார்.

இதனால், அவர்களுடன் பேசியபடி, மாலை, 6:30 மணிக்கு, அறையில் இருந்து, முத்து வெளியே வந்தார். படிக்கட்டில் இறங்கியபோது, சிலர், 'சி.இ., தெற்கு யாரு' என்று கேட்டனர். அதற்கு, 'நான் தான்' என்ற முத்துவிடம், 'எங்களுடன் உங்கள் அறைக்கு வரவும்' என்று அவரையும், உடன் இருந்த நபர்களையும் அழைத்து சென்றனர்.

அப்போது தான், அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறையினர் என, தெரிந்தது. பின், முத்து அறையை திறந்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். அவர்கள், முத்து மற்றும் உடன் இருந்த பொறியாளர்கள் வைத்திருந்த, 1.15 லட்சம் ரூபாய்; 18 கிராம் எடையுள்ள, மூன்று தங்க நாணயங்கள்; சால்வைக்கு பதில் ஊழியர்கள் வழங்கிய, 12 சட்டை துணிகள், ஏழு பேன்ட் துணிகள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இந்த சோதனை, நேற்று அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.
இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.

மீண்டும் தடை வருமா

மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், அவசியம் இன்றி, ஒப்பந்த நிறுவன பிரநிதிகளை சந்திப்பதை தவிர்த்தார். தீபாவளி, புத்தாண்டிற்கு, வாழ்த்து கூற தடை விதித்தார். இதனால், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள், அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனும், லஞ்சம் வாங்குவதை தடுக்க, தீவிர ஆய்வுகளை முடுக்கி விட்டார்.
இதனால், மின் வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இது, பிரிவு அலுவலகங்களிலும் எதிரொலித்தது. தற்போது, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு, தீவிரமாக செயல்படவில்லை.எனவே, மீண்டும் இடைத்தரகர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் நடமாட்டம், மின் வாரியத்தில் அதிகரித்துள்ளது. தற்போது, அதை தடுக்க வேண்டிய கட்டாயம், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

கொடிகட்டி பறக்கும் இரிடியம் மோசடி கோடிக் கணக்கில் புரளும் பணம்

Added : ஜன 04, 2019 04:19

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொடி கட்டி பறக்கும் இரிடியம் மோசடியால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதில் கோடிக் கணக்கில் பணம் புழக்கத்தில் உள்ளது.

கனிமத்தில் அதிக அடர்த்தி கொண்டது பிளாட்டினம். இதற்கு முந்தைய நிலையில் இருப்பது இரிடியம். 2,000 டிகிரி செல்சியசில் கூட உருகாத இக்கனிமம் கிடைப்பது அரிது. செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

அருப்புக்கோட்டையில் இரிடியம் என்ற பெயரில் கும்பல் ஒன்று கோடிக் கணக்கில் மோசடி செய்து வருகிறது. கோயில் கோபுர கலசத்தில் இடி விழுவதால் இரிடியமாக மாறி நல்ல விலை கிடைப்பதாக ஏமாற்றி வருகின்றனர்.மேலும், 'ராணுவம் மற்றும் ராக்கெட் பாகங்களுக்கு இரிடியம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விலை கொடுத்து மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இதற்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட எங்களை முகவராக நியமித்துள்ளனர். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு மூன்று மடங்கு திருப்பி கொடுக்கும்' என மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.
இங்குள்ள திருச்சுழி ரோட்டில் செயல்பட்ட மோசடி நிறுவனம் தற்போது மதுரை ரோட்டில் உள்ளது. வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி இரிடியம் குறித்து விளக்கும் இக்கும்பல், மூன்று ஆண்டாக ஏமாற்றி வருகிறது. கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டுமே என்ற அச்சத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்க தயங்குகின்றனர்.
புது இன்ஜி., கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை

Added : ஜன 04, 2019 02:08 



சென்னை : 'புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.


Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...