Monday, January 7, 2019

மாநில செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை




வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது.

பதிவு: ஜனவரி 07, 2019 05:30 AM
சென்னை,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறைகளில் பணியாற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பெரும்பாலான தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ஆகியவை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதேபோல், போக்கு வரத்து, மின்வாரிய சங்கங்களும் பங்கேற்க இருப்பதாக உறுதியளித்து உள்ளன.

போராட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், பா.ஜ.க. தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.

இதேபோல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் பங்கேற்பதால், பஸ் போக்கு வரத்து பாதிக்கப்படும். ஆட்டோக்களும் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்.

வேலை நிறுத்த போராட்டத்தால், அரசு மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசின் அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், தலைமைச் செயலக செயலாளர்கள், அனைத்து துறை தலைமை நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 8-ந் தேதி(நாளை), 9-ந் தேதி(நாளை மறுநாள்) ஆகிய இருதினங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.

எனவே, அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும்.

8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அலுவலகத்துக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. மருத்துவ விடுப்பை தவிர்த்து சாதாரண விடுப்பு போன்ற எந்த விடுப்பும் இந்த இருதினங்களிலும் அனுமதிக்கக்கூடாது.

உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் இருதினங்களும் பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ் வளர்ச்சிக்கு வேல்ஸ் பல்கலை பங்களிப்பு தொடரும்

Added : ஜன 06, 2019 23:56


சென்னை, : ''தமிழ் வளர்ச்சிக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு தொடரும்,'' என, அப்பல்கலையின் வேந்தர், ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார்.தென்னிந்திய நாணயவியல் கழக கருத்தரங்கில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட, 29ம் ஆண்டு கருத்தரங்கு மலரை பெற்ற, ஐசரி கே.கணேஷ் பேசியதாவது:தமிழக கவர்னர், மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறார். டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்பு, கி.மு., 3ம் நுாற்றாண்டின் தமிழக வரலாற்றுக்கு, முக்கிய சான்றாக உள்ளது. தென்னிந்திய நாணயவியல் கழக ஆண்டு இதழை, கவர்னர் வெளியிட்டது, மிக பொருத்தமாக உள்ளது.தமிழுக்கும், தமிழர் வரலாற்றுக்கும் வலு சேர்க்கும் வகையில், இந்த கருத்தரங்கம் நடந்துள்ளது. இதில், வேல்ஸ் பல்கலை பங்கேற்றதில், பெருமை கொள்கிறேன். தமிழ் வளர்ச்சிக்கு, எங்கள் பல்கலையின் பங்களிப்பு தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.தென்னிந்திய நாணயவியல் கழக செயலர், ஏ.வி.நரசிம்மமூர்த்தி பேசியதாவது:நாணயம் என்பது, வெறும் பொருள் வாங்கும் உலோக துண்டு மட்டுமல்ல; வெளியிடப்பட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம், வரலாறு உள்ளிட்டவற்றை காட்டும், கண்ணாடியாகவும் உள்ளது.இந்த கருத்தரங்கில், போலந்து நாட்டைச் சேர்ந்த, எமிலியா என்ற, ரோமானிய நாணய ஆய்வாளர் பங்கேற்றுள்ளார்; மேலும், உலக நாணய ஆய்வாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கழகத்திற்கு, துவக்க காலத்தில் இருந்து, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அளித்து வரும் பங்களிப்பை மறக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.தென்னிந்திய நாணயவியல் கழக, 29ம் ஆண்டு கருத்தரங்க மலரின் ஆசிரியர், டி.சத்தியமூர்த்தி பேசியதாவது:இந்த ஆண்டு, 600க்கும் மேற்பட்ட புதிய நாணயங்கள் தொடர்பான தகவல்களை, தென்னிந்திய நாணயவியல் கழக உறுப்பினர்கள் சேகரித்துள்ளனர். அவற்றில், 133 கட்டுரைகள் வாசிக்கப்பட்டதில், 113 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.அவற்றில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின், அதியமான் நாணயம்; ஏ.வி.நரசிம்மமூர்த்தியின், ராஸ்டிரகூடர் முத்திரை; கர்நாடக அகழாய்வில் கிடைத்த, கருட சின்னம் உள்ளிட்டவற்றை பற்றிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்க தலைவர், பி.வி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:ஒரு சிறிய வடிவமும், குறைந்த எடையும் உள்ள, தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள், நம் முன்னோர்களின் செறிந்த வரலாற்றை விவரிக்கின்றன. தென்னிந்திய நாணயவியல் கழகம், முற்காலத்தைச் சேர்ந்த, மிகவும் அரிய நாணயங்களை பற்றி ஆய்வு செய்து, கட்டுரைகள் வாயிலாக, வெளியுலகுக்கு தெரிவித்து வருகிறது. இந்த மாநாட்டிலும், அப்பணி சிறப்பாக நடந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், வேல்ஸ் பல்கலை மொழித்துறை டீன், பி.மகாலிங்கம்; தமிழ்த்துறை தலைவர் பன்னிருகை வடிவேலன், தென்னிந்திய நாணயவியல் சங்க செயற்குழு உறுப்பினர் ரவிசங்கர் மற்றும் நாணயவியல், தொல்லியல் துறை அறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்

Added : ஜன 06, 2019 23:11



மேல்மலையனுார் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், கொட்டும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம, தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 11:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு, 12:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.கடும் பனியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். ஊஞ்சல் உற்சவத்தின் போது ஊஞ்சல் மண்டத்திற்கு மொபைல் போன் எடுத்து வருவோர், கீழே உள்ள பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, நேற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு மொபைல் போன் கொண்டு செல்ல, இந்து சமய அறநிலையத் துறையினரும், போலீசாரும் தடை விதித்தனர். இதனால் ஊஞ்சல் மண்டபத்தில் ஓரளவு நெரிசல் குறைந்தது.
ரயிலில் ஊருக்கு செல்பவரா நீங்கள்? : 20 நிமிடத்துக்கு முன் வர வேண்டும்

Added : ஜன 06, 2019 21:42


புதுடில்லி : விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை போல், ரயில்வே ஸ்டேஷன்களிலும், 15 - 20 நிமிடங்களுக்கு முன், பயணியர் வந்து, பாதுகாப்பு சோதனை நடைமுறைகளை முடிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் வருவோர், ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டர்கள்.விமான பயணம் செல்வோர், தங்கள் விமானம் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரம் முன் வந்து, பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட வேண்டும். தாமதமாக வருவோர், விமான பயணத்தை இழக்க வேண்டி இருக்கும். இதை போன்ற நடைமுறையை, ரயில் பயணத்துக்கும் ஏற்ஸபடுத்த, ரயில்வே பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர், அருண் குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நீண்ட துார ரயில் பயணம் செய்வோர், தங்கள் ரயில் புறப்படும் நேரத்துக்கு, 15 - 20 நிமிடங்கள் முன், ஸ்டேஷனுக்கு வந்து விட வேண்டும். தேவையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின், ரயில்களில் அமர அனுமதிக்கப்படுவர். அதற்கு பின், வருவோர், அந்த ரயில்களில் ஏற முடியாத வகையில், சம்பந்தப்பட்ட, 'பிளாட்பார்ம்'களுக்கான, வழி மூடப்படும்.இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யில், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளாவுக்கு, ஏராளமானோர், ரயில்களில் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரயாக்ராஜ் ரயில்வே ஸ்டேஷனில், புதிய பாதுகாப்பு நடைமுறை அமலில் உள்ளது. கர்நாடகாவில், ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷனிலும், இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், 202 ரயில்வே ஸ்டேஷன்களிலும், புதிய பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.ரயில் புறப்படும் நேரத்துக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், அதற்கான பிளாட்பாரத்துக்கு செல்லும் பாதைகளை மூடுவதற்கு, தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'இந்த திட்டம், புறநகர் ரயில் சேவைக்கு பொருந்தாது' என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
10 Sabarimala pilgrims from Telangana killed in road mishap

DECCAN CHRONICLE. | R. VALAYAPATHY

PublishedJan 7, 2019, 1:40 am IST

The truck had allegedly occupied the right side of the narrow road leading to the collision.


The mangled remains of the van near Pudukkottai on Sunday. (Photo: DC)


Pudukkottai: In a terrible road tragedy, at least ten lord Ayyappa devotees from Telangana were killed and five others were injured when a van in which they were traveling collided head-on with a truck near Thirumayam near Pudukkottai on Sunday.

Police said the occupants of the van hailing from Medak district in Telangana were proceeding towards Pudukkottai from Karaikudi en route to Sabarimala in neighbouring Kerala when the mishap occurred. The truck had allegedly occupied the right side of the narrow road leading to the collision.


The deceased were identified as Nagaraj, Mahesh, Kumar, Shyam, Praveen, Krishna , Shayee, Anjaneyalu ,Suresh and the van driver (name could not be immediately ascertained), police sources told DC over phone. All the injured were admitted to Government medical college hospital here
Ariyalur: Veggie vendor’s daughter braces for Tokyo Olympics

DECCAN CHRONICLE. | R VALAYAPATHY

PublishedJan 6, 2019, 2:06 am IST

She hoped that she will win the gold there also, to add glory to her college and the country.



Palaniswamy, principal of Government arts college Ariyalur, greets Suganthi for her achievement in the All India Martial Arts championship-2018 kickboxing event held at Puducherry. —DC

Ariyalur: A girl student of the Government Arts college Ariyalur will represent the country, along with three others in the international (Olympic) kick boxing (karate) women event to be held at Tokyo in Japan from July 24 to August 9 this year, according to Karatre Master L. Saravanan who is giving to training to her.

He told DC that the girl, Suganthi, daughter of a vegetable vendor, Mrs. Selvi of Ariyalur, pursuing her first year undergraduate course in environmental science, has annexed a championship and won the gold in 45-50 kg category of women section of the ‘All India Martial Arts Championship-2018’ kick boxing event held at Puducherry recently, in which 1,800 boys and girls from different states took part.

Mr. Saravanan said Pudhucherry Governor Dr Kiren Bedi and Chief Minister V. Narayanaswamy who gave the prizes to the winners of the national event, openly announced that the Pudhucherry government will bear the entire expenses of Suganthi to enable her to participate in the proposed Olympic event at Tokyo, Japan.Ms. Suganthi said she is now undergoing training and preparing for facing the Olympic event in an effective manner. She hoped that she will win the gold there also, to add glory to her college and the country. Suganthi said she was greeted by the college principal Palanisamy and others for her achievement at the Puducherry event recently.
Do not add strangers on social media: Additional Superintendent of Police

DECCAN CHRONICLE. | KATHELENE ANTONY

Published   Jan 6, 2019, 2:24 am IST

“Suo moto cognizance will be taken and immediate action will be ensured,”Ms Lavanya said. 


S.P. Lavanya speaking at the seminar.

Chennai: Additional Superintendent of Police(Cyber Crime) S.P. Lavanya urged women against adding unidentified persons to their social media accounts as she spoke about issues that women face in cyber space and how they can seek legal help.

Speaking at a seminar, ‘Digital Security: Emerging Trends’, conducted by the Digital Security Association of India, Ms Lavanya gave tops on the various ways to protect privacy online. “When faced with online sexual harassment, most websites have a reporting mechanism. If a harasser is reported, the website has its own policy of how to treat them,”she said.

If the harassment is of an extreme nature, the police should be informed, she said. “Suo moto cognizance will be taken and immediate action will be ensured,”Ms Lavanya said.

Speaking of apps which ask for permission to access the photo gallery and contacts of mobile phone uses, Ms Lavanya said that the extent of the privacy invasion is unknown. “The app can access all information which could include private images. The contacts list can also be accessed, which could go terribly wrong.”

Ms Lavanya stated that some laws could be beneficial if used correctly but their abuse, like in the case of Section 66A of the IT Act was wrong. Women, especially in rural areas, do not understand the extent of violation of privacy. “We need to work towards empowering them,”she said.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...