Tuesday, January 8, 2019

20 years of operation a must for deemed university status, UGC set to roll out new norms 

According to the new norms, applicant institution must be in operation for at least 20 years, have 100 teachers and 2,000 students, a minimum teacher-student ratio of 1:20 to get deemed university status. education Updated: Jan 07, 2019 09:15 IST



Amandeep Shukla
Hindustan Times, New Delhi


Under the new guidelines, a deemed university will be required to have a built-up area of not less than 30 square metres per student(Hindustan Times)

The University Grants Commission (UGC) is set to specify new eligibility norms for ‘deemed to be university’ status as part of an attempt to improve learning and employability of students, officials familiar with the matter said.

An educational institution is called a deemed university when the Centre grants it the status of a varsity on the recommendations of the UGC, which regulates the country’s higher education sector. A deemed university enjoys autonomy in deciding its fee and admission structure. There are 130 deemed universities in the country.According to the new guidelines, an applicant institution must be in operation for at least 20 years. It should have at least 100 teachers and 2,000 students. One-third of the students should be pursuing research or post-graduate courses. The institutes will be required to have a minimum teacher-student ratio of 1:20 to be given deemed university status, the officials said on condition of anonymity. “The new regulations, the consultation for which is at an advanced stage, are aimed at improving learning outcomes, students’ skills and improving graduates’ employment opportunities through industry-linkages. These are also the key thrust areas of HRD [human resource development] minister Prakash Javadekar,” a UGC member said requesting anonymity.

Under the new guidelines, a deemed university will be required to have a built-up area of not less than 30 square metres per student, the official quoted above said. According to the earlier norms framed in 2016, an institute needed to have an administrative area of 1,000 square metres, academic area of 15,000 square metres, central library in 2,000 square metres and 40% open space to get deemed university tag. In a departure from the earlier norms, deemed universities will now have to put information related to approved seats in each course, admission policy, students admitted, fee structure, faculty and their qualifications, infrastructure, on their websites in the form of an affidavit, a second UGC functionary said.

The official added that this would also help in empowering students.
பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்

Published : 07 Jan 2019 11:36 IST

 

ஆடை, அணிகலன்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் பெண்கள். பெண்களுக்குத்தான் விதவிதமான டிசைன்களில் உடைகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக புலி, பாம்பு போன்றவைகளின் உருவங்களும் அவற்றின் வரி, வடிவங்களும் பெண்களின் ஆடைகளில் உருவாக்கப்படுகின்றன.

  அப்படித்தான் இஸ்லாமாபாத்தில் ஒரு பெண், பாம்பைப் போன்ற உருவ, வடிவம் கொண்ட கால்சட்டையை (stockings) அணிந்திருந்தார். அதுவே அவருக்கு வினையானது.

கணவன் வரத் தாமதமானதால், படுக்கை அறையில் இரவு விளக்கை மட்டும் எரியவிட்டுவிட்டுத் தூங்கினார் மனைவி. இரவு தாமதமாக வந்த கணவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறைவான வெளிச்சத்தில் படுக்கையின் மீது இரண்டு பாம்புகள் இருந்ததுபோலத் தெரிந்துள்ளது. உடனே அருகிலிருந்த பேஸ்பால் மட்டையால் அவற்றைச் சரமாரியாகத் தாக்கினார்.

உடனே மனைவி வலியால் அலறித் துடித்தார். இதனையடுத்து உண்மையை அறிந்த கணவன், உடனடியாக மனைவியை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.



இந்நிலையில் பெண்கள் உடையைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், மனைவி உறங்குவதைக் கூட அடையாளம் காண முடியாதா என்று மற்றொரு சாராடும் வாதிட்டு வருகின்றனர்.

555 புதிய பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்

Added : ஜன 07, 2019 22:10 |




சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 140 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 555 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழக அரசின், எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 21 ஆயிரத்து, 678 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வழியே, 1.74 கோடி பேர் பயன்பெறுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநில மக்களும், பஸ் சேவை வழியே, பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 56; விழுப்புரம் - 82; சேலம் - 112; கோவை - 140; கும்பகோணம் - 102; மதுரை - 63 என, ஆறு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 555 பஸ்கள், 140 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.இப்பஸ்களை துவக்கி வைப்பதற்கு அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏழு பஸ்களை, முதல்வர் பழனிசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.சென்னைக்கு சிவப்புசென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட, 56 பஸ்களும் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின், ரப்பர் புஷ், பீடிங் உள்ளிட்ட பாகங்கள், கறுப்பு வண்ணத்தில் உள்ளன. கறுப்பு, சிவப்பு நிறங்கள், தி.மு.க.,வுக்கு பொருந்தும் என்பதால், எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு, அ.தி.மு.க.,வை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.சிறப்பு வசதிகள்புதிய பஸ்களில், முதியோர், கர்ப்பிணிகள் எளிதாக ஏறும் வகையில், அகலமான, தாழ்தள படிக்கட்டுகள் மற்றும் தானியங்கி கதவுகள் உள்ளன.நிற்பவர்களுக்கு அகலமான தளம், பயணியர் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி கருவி; வழித்தடத்தை அறியும் வகையில், எல்.இ.டி.,யில் ஒளிரும் திரை, பஸ்சுக்குள் அதிகம் வெளிச்சம் தரும் குழல் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

விருப்ப ஓய்வு பெற ஆர்வம் காட்டும் போலீசார் : பின்னணி என்ன?


Added : ஜன 07, 2019 22:03 |

மதுரை: உடல்நிலையை காரணம்காட்டி, விருப்ப ஓய்வு பெற போலீசார் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு மட்டும், 49 பேர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் : தமிழக போலீஸ் பணியில் சேர்ந்து படிப்படியாக ஏட்டு, சிறப்பு, எஸ்.ஐ., என, போலீசார் பதவி உயர்வு பெறுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலானோர் பணிச்சுமை, மனஅழுத்தம், நேரத்திற்கு சாப்பிடாமை போன்ற பல்வேறு காரணங்களால், உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் போகின்றனர்.கையில் இருக்கும் அனைத்து விடுமுறை சலுகைகளையும் எடுத்த பிறகும், உடல்நலத்தை காக்க முடியாததால், வேறுவழியின்றி விருப்ப ஓய்வை தேர்ந்தெடுக்கின்றனர்.
விருப்ப ஓய்வு பெற்ற, எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்தேன். பணிச்சுமையால் ஏற்பட்ட டென்ஷன்தான் காரணம். தினமும் மன அழுத்தத்தால், 'பிபி' எகிறி பல பிரச்னைக்கு காரணமானது.இனியும், இந்த வேலையில் இருந்தால், பணியின்போதே இறந்துடுவேன் என குடும்பத்தினர் அஞ்சினர். அதனால், விருப்ப ஓய்வு பெற்று, அதில் கிடைத்த தொகையில் கடை ஒன்றை ஆரம்பித்து, இப்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சர்க்கரை நோய் : விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது: எனக்கு இன்னும் நாலரை ஆண்டு, 'சர்வீஸ்' உள்ளது. ஆனால், உடல்நிலை ஒத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என, ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது.இன்னும் இந்த வேலையில் தொடர்ந்தால், மனஅழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்துவிடும் என, பயமாக உள்ளது. குடும்பத்தை பார்க்க வேண்டியிருப்பதால், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்தாண்டு உடல்நலத்தை காரணம் காட்டி தமிழக அளவில், 49 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். இந்தாண்டு லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணி இருப்பதால், அதற்குள் விருப்ப ஓய்வு பெற்றுவிட வேண்டும், என சில போலீசார் ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர்.இதனால், கடந்தாண்டைவிட இந்தாண்டு, எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாநில செய்திகள்
 
இன்று முதல் 2 நாட்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?



இன்று முதல் 2 நாட்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

பதிவு: ஜனவரி 08, 2019 05:30 AM

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதாவது, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய-மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும்” என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க போவதாக தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. மேலும், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிகிறது.

பஸ்கள் ஓடுமா?

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் பங்கேற்க இருப்பதாக உறுதியளித்துள்ளன.

2 நாள் போராட்டத்தால் வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதனால் அரசு பஸ் போக்குவரத்திலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ‘பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது’ என்று தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், 2 நாள் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் (வினியோகம்) அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊழியர்களுக்கு லீவு கிடையாது

அனைத்து கிளை மின் நிலையங்கள், வினியோக அலுவலகங்கள், ஸ்டோர்கள், வாகனங்கள், பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வேலைநிறுத்த காலம் முழுவதிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க அனைத்து தலைமை என்ஜினீயர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்த காலம் முழுவதிலும், அதாவது இன்று காலை 6 மணி முதல் 10-ந் தேதி காலை 6 மணி வரை தங்கள் மின் நிலையங்கள், அலுவலகங்களில் தயாராக இருக்க வேண்டும்.

வேலைநிறுத்த காலம் முழுவதிலும் தடையில்லாமல் மின் சப்ளை வழங்குவதை உறுதி செய்ய, ஏதாவது மின் தடங்களோ, ‘பியூஸ்’ ஏற்பட்டாலோ, உடனடியாக அதை சரிசெய்ய தேவையான ஊழியர்களும், பொருட்களும் தயாராக இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால், இதுபோன்ற மின் தடைகளை சரிசெய்ய வழக்கமான ஊழியர்களுடன் வெளியில் இருந்தும் ஆட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான உணவு மற்றும் டீ, காபி போன்றவற்றை வழங்க வேண்டும். தேவையான சாதனங்களும், வாகனங்களும் எந்தவித அவசர நிலையையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இந்த 2 நாட்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக விரும்பத்தகாத செயல் நடந்தால் தலைமை என்ஜினீயருக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோல் கட்டண வசூலும், வங்கியில் போய் அதை செலுத்துவதும் தடையில்லாமல் நடைபெற வேண்டும். இந்த 2 நாள் வேலை நிறுத்த காலங்களில் எந்த அதிகாரிக்கும், ஊழியருக்கும் லீவு எடுத்துக்கொள்ளவோ, வேலைக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியோ வழங்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, January 7, 2019

வீட்டுக் கடனையும் திட்டமிடுங்கள்!

By எஸ்.ரவி | Published on : 07th January 2019 03:00 AM |

முந்தைய காலங்களைப் போல் இல்லாமல், இன்றைய காலகட்டத்தில் வீட்டுக் கடன் அளிக்க வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்கின்றன. எனினும், சொந்த குடியிருப்பு அல்லது வீடு வாங்க முடிவு செய்தவுடன் சில விஷயங்களில் பொதுமக்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

பொதுமக்களின் நலன் கருதி RERA 2016 (Real Estate Regulation Act) சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் குடியிருப்புகளை அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையாளர்கள் விற்கின்றனரா என வாங்குவோர் பார்ப்பது மிக முக்கியம். கட்டடம் கட்டித் தருபவர்கள் குறித்த நேரத்தில் தங்கள் பணியை முடிக்காமல் ஏமாற்றினாலோ அல்லது அதிக பணம் வசூலித்தாலோ பயனாளிகள் புகார் தரலாம். எனவே, "ரெரா'வின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் பயனாளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டு குடியிருப்பை வாங்குவது நல்லது.

வங்கியில் கடன் பெறத் திட்டமிடும்போது கட்டணங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து எந்த வங்கியில் கட்டணங்கள் குறைவாக இருக்கிறதோ அதைத் தேர்வுசெய்யலாம். கடன் பெறும்போது செயல்முறை தொகை அல்லது பரிசீலனைத் தொகை (Processing Fees), ஆவணத் தொகை (Document fees), சொத்து சரிபார்க்கும் தொகை (Legal Fees), சொத்து மதிப்பீடும் தொகை (Property Valuation   Fees) எனப் பலவித கட்டணங்களைக் கடனாளி செலுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஆனால் , மாதாந்திர வட்டி தொகைக்கு எந்த வங்கியும் ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது. இந்தத் தொகையும் வங்கிக்கு வங்கி மாறுபடுவதால், கடனாளி அந்தந்த வங்கியின் இணையதளத்தில் கூர்ந்து ஆராய்ந்து, எதில் மிகக் குறைவோ அந்த வங்கியின் சேவையைப் பெறலாம்.
வங்கிக் கடனைப் பொருத்தவரையில், உங்கள் மாதச் சம்பளமும் , வீட்டு மனையின் ஆவணங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். அதாவது, மாதச் சம்பளத்தில் (தொழில் செய்பவராயின் வருமான வரி முறைப்படி, மாத வருமானத்தில் ) சுமார் 30 சதவீதம் வரை இஎம்ஐ (மாதத் தவணை ) செலுத்தினால் சிறந்தது. இந்த அடிப்படை நிபந்தனைகளைச் சரியாக கவனிக்காமல் , சில வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் ஒப்புதல் (Loan Sanction) செய்துவிட்டு , செயல்முறைத் தொகை (Processing Fees) வசூல் செய்து, பிறகு கடனை வழங்காமல், பணம் பட்டுவாடா செய்யாமல் தாமதிப்பதுண்டு. 

வினாக்களைப் பயனாளிகள் எழுப்பும்போது, அந்த நிறுவனங்கள், "இந்த ஆவணம் சரியல்ல, வேறு சொத்து வாங்கும்போது இந்த செயல்முறை தொகையைப் பயன்படுத்துவோம்' என்று சமாளிப்பார்கள். அப்போது பயனாளிகள் குறை தீர்க்கும் தீர்ப்பாணையம் (Ombudsman) சென்று தங்களது குறைகளைப் பதிவிட்டு வெற்றி பெறலாம். அப்படி தீர்ப்பாணையத்தை அணுக, வழக்குரைஞர் மூலமாகத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

அடுத்து, வீட்டுக் கடனுக்கான வட்டி கணக்கிடும் முறை குறித்து புரிதல் வேண்டும். உதாரணமாக , ஒருவர் 01.11.18 அன்று ரூ .10 லட்சம் வீட்டுக் கடன் பெறுகிறார். தவணையாக கடனைத் திருப்பிச் செலுத்த ரூ .10,000 தொகையை 15.11.18 அன்று கட்டி விடுகிறார். மாத முடிவில் அந்த மாதத்துக்கான வட்டித் தொகையை அவரது கணக்கில் வங்கி கூட்டும். அதாவது, 30.11.18 அன்று வட்டித் தொகையை கணக்கிடும்போது, 1.11.18 முதல் 14.11.18 வரை (அதாவது 14 நாள்களுக்கு ) ரூ .10 லட்சம் முதலுக்கு வட்டியும் , 15-11-18 முதல் 30.11.18 வரை (அதாவது 16 நாள்களுக்கு ) ரூ. 9,90,000 முதலுக்கு வட்டியும் கணக்கிட வேண்டும். இப்படி வட்டி கணக்கிடும் முறைதான் நியாயமானது.

இந்த முறைதான் கடன் பெற்றவருக்கு லாபமானது. இந்த முறையைத்தான் பொதுத்துறை வங்கிகள் கடைப்பிடிக்கின்றன. இதற்கு மாறாக , முழு மாதத்துக்கும் (அதாவது ,மொத்த 30 நாள்களுக்கும் ) ரூ.10 லட்சம் முதலுக்கு வட்டி கணக்கிடுதல் பாதகமாக அமையும் . சில தனியார் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் (என்பிஎஃப்சி) லாப நோக்கோடு செயல்படுவதால் இரண்டாவது முறை வட்டி கணக்கிடும் முறையைக் கடைப்பிடிக்கின்றன.

வீட்டுக் கடன் பெற்று தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80-சி-இன்படி மாதத் தவணை (இஎம்ஐ) தொகைக்கு மொத்தம் ரூ.1,50,000 வரையிலும் சட்டப் பிரிவு 24-இன்படி மாதத் தவணை தொகையுடன் இணைந்த வட்டித் தொகைக்கு ரூ.2,00,000 வரையிலும் வருமான வரிச் சலுகை பெறலாம்.

வீட்டுக் கடன் பெறுபவர், தனது வயதைக் கருத்தில் கொண்டு திரும்பச் செலுத்தும் கால அளவை அதிகபட்சம் 30 ஆண்டுகள் என நிர்ணயித்துக் கொண்டு செலுத்தலாம். இளம் வயதில் (30 வயது) கடன் பெற்றால், 60 வயது வரை கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு வங்கி விதிகளில் அனுமதி உண்டு. சற்று வயதாகி , அதாவது 45 வயதில் ஒருவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றால், 10 சதவீத வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளில் மொத்தமாக திருப்பி அடைக்க, மாதத் தவணை ரூ.9,650 என்ற கணக்கில் அமையும் . அதாவது , அவரது 65-ஆவது வயதில் மொத்தக் கடனையும் அடைத்து விடலாம் .
அதிக ஆண்டுகள் (அதாவது 30 ஆண்டுகள்) கடனை பயனாளி திரும்பச் செலுத்தும் நிலையில், அவர் கட்டும் மாதத் தவணை குறைவாக இருக்கும்; மொத்தமாக கட்டிய வட்டித் தொகை அதிகமாக இருக்கும்; வருமான வரிச் சலுகையின் பலனும் அதிகமாக இருக்கும். குறைவான காலத்தில் (அதாவது, 15 ஆண்டுகளில்) மொத்தமாகக் கடனை அடைக்கும் நிலையில், மேலே கூறிய பயன்கள் எதிர்மாறாக அமையும். எனவே, பயனாளி தனது பொருளாதார நிலைப்பாட்டை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து தனது வசதிக்கு ஏற்றவாறு சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.
2022-இல் இந்தியா 75-ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும்போது ஒவ்வொருவரும் குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதி கொண்ட வீட்டை பெற வேண்டும் என்ற திட்டத்தில் பங்கு பெற்று, வருமானவரிச் சலுகைகளும் பெற்று நலமாக வாழவேண்டும்!
மாவட்ட செய்திகள்

பதனீர் எடுக்க ஏறியபோது மாரடைப்பு பனை மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி சாமல்பட்டி அருகே பரிதாபம்



சாமல்பட்டி அருகே பனை மரத்தில் பதனீர் எடுப்பதற்காக தொழிலாளி ஏறிய போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் அவர் மரத்தில் பிணமாக தொங்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது.

பதிவு: ஜனவரி 07, 2019 04:28 AM
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே உள்ளது கஞ்சனூர். இங்குள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). பனை மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பனைமரத்தில் பதனீர் எடுப்பதற்காக ஏறினார்.

பனை மரத்தின் உச்சியில் இருந்த போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் உயிர் இழந்தார். இதனால் மரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கினார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு கீழே கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, உடலை மீட்டனர். இதையடுத்து சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன கணேசனுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொழிலாளி தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...