Wednesday, February 13, 2019

ரூ.2000,இனாம்,நிச்சயம்,அரசு,முடிவு
சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு இனாமாக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்தத் தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நேற்று உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

தி.மு.க. - பொன்முடி: 'தேர்தல் கண்ணோட்டம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று பாராட்டி ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் படித்து காட்டினார். நடுநிலை நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில் 'பாழ்' என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

'ஓட்டு வங்கியை உயர்த்துவதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையை அறிவித்துள்ளனர்' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'இது நிழல் பட்ஜெட்' என்றார். அப்போது அதற்கு அர்த்தம் புரியவில்லை. தற்போது தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை முதல்வர் அறிவித்த பின் தான் நிழல் பட்ஜெட்டிற்கு அர்த்தம் புரிகிறது.




துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நாங்கள் 2011 முதல் நிஜ பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்து வருகிறோம். மக்கள் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளோம். அதனால் தான் நாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறோம். நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கிறீர்கள்.

முதல்வர்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அறிவித்தது சரியா, இல்லையா என்று மட்டுமே பொன்முடி கூற வேண்டும். ஏழை தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும். பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இதையெல்லாம் ஆராய்ந்து தான் 2000 ரூபாய் உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.


தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். இதில் அந்த கட்சி இந்த கட்சி என்று பார்க்கவில்லை.

பொன்முடி: இரண்டு நாட்களுக்கு முன் நிஜ பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே; உங்களுக்குள் இருக்கும் பிரச்னை பற்றி எனக்கு தெரியாது.

துணை முதல்வர்: சட்டசபையில் 110 விதியின் கீழ் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.

பொன்முடி: நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு சாதாரண ரகம் 50 ரூபாய் சன்ன ரகம் 70 ரூபாய் மட்டுமே

ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குவிண்டாலுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரும்புக்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யவில்லை.

மின்துறை அமைச்சர் தங்கமணி: கடுமையான வறட்சியால் தான் ஏழை தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.

பொன்முடி: ஏழை தொழிலாளர்களுக்கு கொடுப்பதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஏன் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவில்லை என்று தான் கேட்கிறோம்.

தி.மு.க. - ஆஸ்டின்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள 2000 ரூபாயை இந்த நிதியாண்டில் வழங்கி இருக்கலாம். அதை விடுத்து 2018 - 19ம் ஆண்டு துணை நிதி நிலை அறிக்கையில் சேர்த்தது ஏன்; அந்தத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

முதல்வர்: இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும்.

ஆஸ்டின்: நீங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் மட்டுமல்ல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் உங்கள் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில் மக்கள் கொதி நிலையில் உள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலி : உயர் கல்வி செயலருக்கு நிர்வாக அதிகாரம்

dinamalar 13.02.2019

நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலியாகும் நிலையில், அதன் நிர்வாக அதிகாரம், உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட உள்ளது.

தமிழக உயர் கல்வியில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் நிர்வாகங்களில், பல்வேறு குழப்பங்களும், முறைகேடு புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.கல்லுாரி முதல்வர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல், துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.உயர் கல்வி துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், உயர் கல்வி அதிகாரிகள் முதல், பல்கலைகளின் நிர்வாகிகள் வரை, விசாரணை வளையத்தில் உள்ளனர்.இந்நிலையில், நான்கு பல்கலைகளில், துணைவேந்தர் பதவிகள்காலியாகின்றன. அவற்றின் நிர்வாக அதிகாரத்தை, உயர்கல்வி துறை செயலருக்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர், தங்கசாமி, திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் ஆகியோரின் பதவிக்காலம், பிப்., 7ல் நிறைவடைந்தது.கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர், வள்ளியின் பதவிக்காலம், வரும், 15லும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரனின் பதவிக்காலம், மார்ச், 2லும் முடிகிறது.இந்த நான்கு பல்கலைகளுக்கும், தற்காலிக நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. 

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, உயர்கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு, அவரது நேரடி பார்வையில், நான்கு பல்கலைகளின் நிர்வாகமும்மாற்றப்பட உள்ளது.ஏற்கனவே, கோவை பாரதியார் பல்கலையின் துணைவேந்தர், கணபதி, லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பின், அந்த பதவியும், பல மாதங்களாக காலியாக உள்ளது.இது குறித்து, உயர் கல்வி துறை பேராசிரியர்கள் கூறியதாவது:பல்கலைகளின் நிர்வாகங்களை, உயர் கல்வி சார்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்டால் மட்டுமே, வெளிப்படை தன்மையுடன் அமையும். ஏற்கனவே, பல துணைவேந்தர்கள் அரசியல் செல்வாக்கால் நியமிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் பரிந்துரைப்படி முடிவு எடுத்தனர்.தற்போது, ஐந்து பல்கலைகளின் நிர்வாகமும், உயர் கல்வி துறையின் நேரடி பார்வையில் வருவதால், குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

நெருங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு : விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்

Added : பிப் 12, 2019 21:45


சென்னை: பொதுத்தேர்வு துவங்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு, வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 1; பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல், துவங்க உள்ளது. அனைத்து தேர்வுகளும், மார்ச், 19ல் முடிவடைகின்றன.தேர்வுக்கான ஆயத்த பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ள, 3,000 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் இதர ஊழியர்களை நியமிக்கும் பணியும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.இந்நிலையில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, முதன்மை வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட தலைநகருக்கு, ஏற்கனவே விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து, நேற்று முதல், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.இந்த விடைத்தாள்களை, தேர்வு மையங்களில் உள்ள கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்குமாறும், வேறு யாருக்கும் விடை தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்கும்படியும், பள்ளி தலைமை ஆசிரியர்களை, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாரத ரத்னா, பத்ம விருது: பெயருடன் சேர்க்க தடை

Added : பிப் 12, 2019 21:40

புதுடில்லி: 'பாரத ரத்னா, பத்ம விருதுகளை, தங்கள் பெயருடன் அடைமொழியாக சேர்க்கக் கூடாது; முறைகேடாக பயன்படுத்துவோரிடம் இருந்து, விருதுகள் வாபஸ் பெறப்படலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, எழுத்து மூலம் அளிக்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்த பதில்:தேசிய அளவில் அளிக்கப்படும், பாரத ரத்னா, பத்ம விருதுகள், அரசியல் சாசனப்படி, தங்கள் பெயருடன், அடைமொழியாக சேர்க்கக் கூடியதல்ல. பாரத ரத்னா, பத்ம விருதுகளை முறைகேடாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டோரிடம் இருந்து, விருதை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படலாம். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியும்.அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், விருது தொடர்பான அரசு பதிவேட்டில், சம்பந்தப்பட்டோர் பெயர் நீக்கப்படும்; நடவடிக்கைக்கு ஆளான நபர், அரசிடம் விருதை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மருத்துவ துறையில் நர்ஸ் பணிக்கு 2865 இடங்கள்


தமிழக மருத்துவ துறையில் நர்ஸ் பணிக்கு 2865 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

பதிவு: பிப்ரவரி 12, 2019 17:53 PM

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு ஆணையம் சுருக்கமாக டி.என்.எம்.ஆர்.பி. (TNMRB) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு தமிழக மருத்துவ துறையில், குழந்தைகள் பிறப்பு பிரிவில் நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 520 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும்.


இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., டி.என்.சி., பி.சி.எம்., மற்றும் பி.சி., பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் நர்சிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் நர்சிங் கவுன்சிலில் 6-2-2019-க்கு முன்பாக பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.சி்.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன், ஆப்லைன் (வங்கி மூலமாக) இரு வழிகளிலும் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியே விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் வருகிற 26-ந் தேதி கடைசிநாளாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்துபவர்கள் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு 9-6-2019 அன்று நடைபெற உள்ளது.

மேலும் 2345 பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி ஒப்பந்த அடிப் படையில் 2345 நர்ஸ் பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்களுக்கு 1549 இடங்களும், பெண் களுக்கு 796 இடங்களும் இருப்பது குறிப் பிடத்தக்கது. இவற்றில் 213 பின்னடைவுப் பணியிடங்களும் அடக்கம். இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு 57 வயது வரை வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பிப்ரவரி 27-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு 23-6-2019-ந் தேதி நடக்கிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnmrb.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


தலையங்கம்

மத்திய அரசிடமிருந்து பாக்கிகளை பெறவேண்டும்



எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டம் இன்றோடு முடிவடைகிறது.

பிப்ரவரி 13 2019, 03:00

‘‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகிக்கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலுக்கேற்ப, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து விடைபெற்று செல்கிறார்கள். மாநிலங்களவையிலும் அடுத்த சிலமாதங்களில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கைளை வாதாடி, போராடி பெற மக்களவை உறுப்பினர்களின் வாய்ப்புகள் முடிவடைந்துவிட்டன. இனி தமிழக அரசும், அரசியல்ரீதியாக அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சிகளும்தான் தேர்தல்தேதி அறிவிப்பதற்கு முன் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பெறவேண்டும். மத்தியஅரசாங்கம் தமிழகத்தின் சிலபல கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலை இருக்கிறது. இந்தஆண்டு தமிழகஅரசு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதிபற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கிறது. இவ்வளவு பற்றாக்குறையையும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டிய நிதிஉதவிகளை மட்டும் வலியுறுத்தி, வாதாடி பெற்றாலேயே சரிசெய்துவிட முடியும்.

தமிழக அரசை பொறுத்தமட்டில், மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறையத்திட்டங்களுக்கான நிலுவைத்தொகை வராமல் இருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்பாட்டு நிதியாக ரூ.565 கோடியே 15 லட்சம், அடிப்படை நிதியாக ரூ.3,216 கோடியே 5 லட்சம் இன்னும் வராமல் இருக்கிறது. இதுபோல, பல்வேறு திட்டங்களுக்காக வரவேண்டிய மானியமும் ரூ.10,883 கோடியே 84 லட்சம் அளவில் வராமல் நிலுவையில் இருக்கிறது. மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திரமோடி வந்தபோது கடந்த மாதம் 27–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து, 17 தலைப்புகளில் பல்வேறு கோரிக்கைகளை தமிழகஅரசின் சார்பில் கொடுத்தார். அதில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகளையும் உடனடியாக வழங்குமாறு கேட்டிருந்தார். இந்தநிலையில், தமிழகத்திற்கு நியாயமாக ஒதுக்கப்படவேண்டிய வறட்சி நிவாரணநிதி, கஜாபுயல் நிவாரணநிதி போன்ற நிதிகளையும் மத்திய அரசாங்கம் முழுமையாக ஒதுக்கவில்லை.

கடந்த 2015–2016–ம் நிதியாண்டிலிருந்து 2017–2018–ம் நிதியாண்டுவரை, 3 ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஏற்பட்ட வறட்சி நிலைக்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் நிவாரணநிதியை கோரியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்கள் ரூ.1,23,605 கோடியே 64 ஆயிரம் நிதிஉதவியை கோரியிருந்தது. ஆனால், இதில் 19 சதவீதநிதியாக ரூ.23,190 கோடியே 69 லட்சத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. எல்லா மாநிலங்களையும்விட, தமிழகத்திற்குதான் மிகக்குறைவான தொகையை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் கேட்டதொகை ரூ.39,565 கோடியாகும். ஆனால், கொடுத்தது ரூ.1,748 கோடியே 28 லட்சமாகும். தமிழகஅரசு கேட்டதொகையில் 4 சதவீத தொகைதான் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தமாநிலத்திற்கும் இந்தளவு தொகையை குறைத்துக்கொடுக்கவில்லை. எனவே, தமிழகஅரசு அடுத்த சிலநாட்களுக்குள் மத்திய அரசாங்கத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்து, வரவேண்டிய தொகையெல்லாம் பெறுவதற்குள்ள கடைசிவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க பா.ஜ.க. துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், துருப்புச்சீட்டு உங்களிடம் இருக்கிறது. அதைவைத்து தமிழ்நாட்டுக்கு பெறவேண்டிய நிதிகளையெல்லாம் அ.தி.மு.க. எளிதில் பெற்றுத்தந்துவிடலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.








Issue GO on rules for registering case against doctors, says Madras high court

DECCAN CHRONICLE.

Published
Feb 12, 2019, 6:54 am IST

The judge said when the matter was taken up on earlier occasion it was informed that already guidelines were farmed by the state government.



Madras high court


Chennai: The Madras high court has directed the Tamil Nadu government to inform the guidelines framed through a government order, which should be strictly followed while registering case against the medical officer for negligent act or omission, to all authorities concerned immediately.

Justice K. Ravichandrabaabu gave the directive while disposing of a petition from Dr K. Thangamuthu, which sought a direction to the state government to frame statutory rules or executive instructions incorporating guidelines as per the orders of the Supreme Court, in consultation with the Medical Council of India, pursuant to the recommendations of Ethics Committee.


Petitioner’s counsel Anand David submitted that in the year 2005, the Supreme Court had observed that it was necessary to frame certain guidelines by the Central and state governments for prosecuting the doctors and till such time, the guidelines framed by it has to be followed. However, the guidelines issued by the apex court have not been complied with till date. In spite of such guidelines, the threat of private complaint/registration of FIR and arrest was looming large and doctors were facing harassment. Doctors were working under extreme pressure and if they were subjected to face frivolous prosecution their hands would be tied and will not be able to take bold decisions while treating patients, Anand David added.

The judge said when the matter was taken up on earlier occasion it was informed that already guidelines were farmed by the state government. Additional government pleader I. Sathish was directed to verify as to whether any further guidelines were issued or the guidelines issued in a GO dated July 4, 2008, hold the field as on today. Accordingly, the AGP Sathish produced a letter dated January 22, 2019, addressed by the principal secretary to government to him, the judge added.

Extracting certain paragraphs of the letter, which among other things stated that the orders issued in GO dated July 4, 2008, shall be strictly followed while registering case against the medical officer for negligent act or omission, the judge said the counsel for the petitioner submitted that the submission made by the principal secretary to government may be recorded. "Considering the fact that the guidelines were already issued through a GO dated July 4, 2008, and in view of the fact that those guidelines are stated to be still in force, this petition is disposed of, by recording the facts and circumstances", the judge added and gave the above directive.

NEWS TODAY 10.06.2026