Thursday, February 14, 2019

Shot twice, man drops off daughter at exam centre, then visits hosp

Rajiv Kumar TNN

Begusarai:14.02.2019

Ram Kripal Singh, 45, a former mukhiya of Birpur East panchayat in Begusarai district, was taking his 18-year-old daughter to her intermediate examination centre on Wednesday morning on his motorbike, when he was accosted by bike-borne criminals and shot twice in the chest. Such is a father’s love, that despite his condition, he rode for at least 7km and first dropped her off to the examination centre before getting himself admitted to a private hospital.

“My father was taking me to the examination centre near Begusarai railway station, when six assailants on two motorbikes intercepted us. They first tried to tie his hands. When I protested, the attackers pumped two bullets into his chest from a very close range and fled,” Singh’s daughter Damini said. “I asked him to stop and wait for some help, but my father continued riding with the gunshot injuries for another 7km to drop me off at the examination centre before getting himself hospitalized,” she added. Begusarai SP Awakash Kumar said, “The victim is under treatment and not in a condition to talk. Once he regains consciousness, we will record his statement.” He added, “As per preliminary investigation, the attack may have been the fallout of some previous enmity. We have identified a few suspects and are carrying out raids to arrest them.”
Dental surgeon from Trichy among Delhi fire victims

TIMES NEWS NETWORK

Trichy:14.02.2019

Dr S Sankaranarayanan, a dental surgeon of Trichy, is one of the 17 people who died in a fire that devastated New Delhi’s Hotel Arpit Palace on Tuesday, his family members have confirmed. The 55-year-old, who suffocated in the smoke from the fire, is survived by his wife, a son and daughter.

The dental surgeon checked into the hotel on Monday night for a meeting scheduled with the drug controller general of India (DCGI) in New Delhi on Tuesday regarding his ‘freeze dried plasma’ project under Mothercell Regenerative Centre in Trichy.

“He had an appointment with the drug controller general in New Delhi for a meeting to discuss our ongoing project. But, tragedy struck him,” said his colleague and orthopaedic surgeon Dr V R Ravi in Trichy.

The news of the death reached his family after one of his colleagues tried to contact him over phone on Tuesday morning. Since his mobile phone number was unreachable, the colleague managed to contact the hotel and got to know that he was one of the deceased people.

Police soon contacted Sankaranarayanan’s family members and sent them the photo of the body to confirm his identity. On Wednesday, his family members visited the hospital in New Delhi where the body was kept. The funeral is scheduled to be held in Chennai’s Velachery area.

According to scientific co-ordinator D Avinash Gandi of the centre, two employees of Maharashtra-based private pharmaceutical companies who stayed with Sankaranarayanan also died in the accident.
Med univ appeal: HC stays order on re-evaluation

TIMES NEWS NETWORK

Chennai:14.02.2019

A single judge order permitting re-evaluation of the theory papers of a first year MBBS student who had failed twice in two subjects, was stayed by a division bench of the Madras high court on Tuesday.

Hearing an appeal filed by Tamil Nadu Dr MGR Medical University, the bench of Justice T S Sivagnanam and Justice V Bhavani Subbaroyan granted an interim stay to the order of the single judge till February 19.

The case related to a petition filed by Priyanka Venkatesh, who joined MBBS at Government Medical College in Villupuram. She had failed to obtain pass marks in Anatomy theory papers I and II and Biochemistry theory papers I and II in August 2018 and the supplementary exams conducted in September 2018. After a single judge directed the college to form a panel to re-evaluate the papers, the university filed the present appeal.
Univ hands over luxury SUV to min, pays fuel bills

Pushpa.Narayan@timesgroup.com

Chennai  14.02.2019

: As Tamil Nadu Dr MGR Medical University vice-chancellor, Dr S Geethalakshmi gave away her official vehicle, an 11-month-old Toyota Altis, and bought a ₹29.26 lakh luxury SUV six months into office. While a vigilance inquiry is pending on how she overshot the budget by nearly ₹14 lakh, the university has quietly handed over the vehicle to health minister C Vijayabaskar, who is also pro-chancellor of the university.

Evidence to this is a handwritten note signed by a driver, D Kumar, kept in the university file on the vehicle. The note says, “After the second service of the vehicle bearing registration no TN-09-CD 9595 ster on “oral orders”. “It is not illegal for the minister to hold the vehicle because he is the pro-chancellor. But it was not officially handed over to him. No one from this University signed any paper. Kumar is not our driver. What you see in the file is a receipt from the minister’s office,” said a senior officer. But the university continues to sanction 50 litres of fuel, he said.

(Toyata Fortuner) done by Ms Lanson Motors Private Ltd Chennai, the said vehicle was again handed over to the driver of the honourable health minister of Tamil Nadu. The kilometre of the vehicle is 9,122.”

University registrar Parameshwari Srijayanth did not respond to calls, but sources in the university said the vehicle was given to the mini-The minister and his office did not respond to messages or calls. In 2017, the university in an RTI response said the purchase was approved by the governing council on June 30, 2016, nearly four weeks after it was done. There were no questions raised on why the Altis, which was less than a year old, had to be replaced.

The home department fixes price ceilings for purchase of vehicles by government departments. In 2017, the university had gone ahead with the purchase despite objections raised by the finance committee. The vehicle cost overshot the ceiling by nearly ₹14 lakh, making it costlier than those allotted to ministers, judges, chief secretary and officers of equivalent rank. The file was moved to directorate of vigilance and anti-corruption for investigation.

However, university officials claimed these government rules don’t apply to a statutory body like the university. Former university registrar Dr T Balasubramanian said the university got only ₹20 lakh approval from the finance committee for a Toyota Innova Crysta, but before they could make the purchase the cost of the vehicle went up. They then bought a Toyota Fortuner, which was later ratified by the governing council.

“It was bought for the former VC, but she never actually used it. It was parked on our campus. Later, we handed it over to the minister’s office,” said a senior administrator.

While a vigilance inquiry is pending on how Tamil Nadu Dr MGR Medical University vice-chancellor Dr S Geethalakshmi overshot the budget by nearly ₹14 lakh and bought a ₹29.26 lakh luxury SUV, the university has quietly handed over the vehicle to health minister C Vijayabaskar, who is also pro-chancellor of the university

Wednesday, February 13, 2019


சிறையில் 2 ஆண்டுகளைக் கழித்துவிட்டார் சசிகலா: ஆனால் இன்னும் ஒன்று மட்டும் நடக்கவில்லை?!

Published on : 12th February 2019 11:25 AM | 




சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற வி.கே. சசிகலா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், அவர் எந்த விதிமீறலிலும் ஈடுபடாமல், அவர் மீது வேறு எந்தக் குற்றங்களும் இல்லை எனும் பட்சத்தில், கர்நாடக பரோல் விதிகளின் அடிப்படையில், சசிகலா அடுத்த ஆண்டு இதே தேதியில் சிறையில் இருந்தே விடுதலையாக வாய்ப்பு உள்ளது.


அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், சிறை விதிகளின் படி, நீண்ட கால மற்றும் குறுகிய கால சிறைத் தண்டனை பெற்ற கைதிகளை, நன்னடத்தையைக் காரணம் காட்டி தண்டனையில் 4ல் 3 பங்கு காலத்தை பூர்த்தி செய்துவிட்டாலே, அவரை விடுவிக்கலாம்.

எனவே, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 2021ம் ஆண்டுக்கு பதிலாக 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விடுதலையாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

சரி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார், முன்கூட்டியே விடுதலையாவார் என்பது தெரிந்துவிட்டது. அப்படி இருந்தும், நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவு மட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதுதான் அபராதம்.

அதாவது, ரூ.66.65 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது, ஆனால், குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை அபராதத் தொகையை வசூலிக்கவோ, சட்டவிரோதமாக சேமித்த சொத்துக்களை முடக்கவோ எந்த தீவிர நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நடத்திய கர்நாடக அரசு தான், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குற்றவாளிகளிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்கும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது. அதே சமயம், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டு சொத்துக்களை முடக்க வேண்டும்.

அதே போல, சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறைக்கும் உரிமை உள்ளது. நடவடிக்கை எடுக்க இத்தனை துறைகளுக்கு அதிகாரம் இருந்தும் இதுவரை யாருமே அந்தப் பணிக்கான துரும்பைக் கூட கிள்ளி வைக்கவில்லை.

இதில்லாமல், 2007ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் ரூ.16 கோடி வரிக்காக, சொத்துக்களை முடக்கி அதன் மூலம் பணத்தை வசூலிக்க வருமான வரித் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வருமான வரித்துறை மௌனமாகவே உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2015ம் ஆண்டு மே 11ம் தேதி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சிறைத் தண்டனையே பாதி கழிந்துவிட்ட நிலையில், அபராதத் தொகையை வசூலிப்பதிலும், சொத்துக்களை முடக்குவதிலும் யாருக்கு அப்படி என்னதான் தயக்கம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், இனியாவது தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை எந்தவொரு துறையாவது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

நம்பிக்கை அதானே எல்லாம்..

மெட்ரோ ரயில்: புதனும் தொடரும் இலவசப் பயணம்


By DIN | Published on : 12th February 2019 08:48 PM 




சென்னை: மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஏஜி.டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் திங்கள்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் அந்தப் பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் மெட்ரோ ரயிலில் ஆர்வத்துடன் பயணிக்க வந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து நான்கரை மணிநேரத்துக்குப் பிறகு உயர்நிலை மின்கம்பியில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (பிப்.12) பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ந்த மக்கள் அதிக அளவில் மெட்ரோவில் பயணம் செய்தனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் (பிப்.13) இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? நிஜம் எது? கட்டுக்கதை எது? 


By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 12th February 2019 06:00 PM 




பரோட்டா, சோளாபூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளார்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?


மைதா, கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.




ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை.

மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்...



பென்ஸாயில் ஃபெராக்ஸைட்:

மைதாவுக்கு அதன் தூய வெள்ளைநிறம் பெறப்படுவதற்காக அதில் பென்ஸாயில் பெராக்ஸைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பொதுவாக ஹேர்டை, ஃபீனால், ப்ளீச்சிங் பெளடர் முகப்பரு க்ரீம் போன்றவற்றுக்கான தயாரிப்பில் கலக்கப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. இதை உட்கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் என்கிறார்கள். இந்த ரசாயனம் அவற்றில் மூலப்பொருளாகச் சேர்க்கப்படக் காரணம் க்ரீம்கள், லிக்விட்கள் மற்றும் பெளடர்களை பிளீச் செய்து அவற்றை வெண்மையாக்கவே.

அதே பயன்பாட்டுக்காகத் தான் மைதாவிலும் அது கலக்கப்படுகிறது. கோதுமையில் இருந்து மைதா பிரித்தெடுக்கப்படுகையில் கோதுமையின் வெளிர் மஞ்சள் நிறம் எஞ்சும். அந்த நிறத்தைப் போக்கி சுத்தமான வெண்மை நிறம் பெறவே இந்த பென்சாயில் ஃபெராக்ஸைடு மைதாவில் கலக்கப்படுகிறது. உடல்நலனைப் பொருத்தவரை இது மிக மோசமான பலன்களையே அளிக்கும். தோல் அலர்ஜி, உலர்ந்து போதல், தோல் உறிதல் போன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தான். யோசித்துப் பாருங்கள், இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் மைதா வாயிலாக நம் குடலுக்குள் செல்லும் போது என்ன ஆகுமென்று? துணிகளை வெளுக்கச் செய்வது போல அது குடலை வெளுக்கச் செய்து விடும். அப்புறம் பரோட்டா, பரோட்டாவாகச் சால்னாக்களில் குளிப்பாட்டி விழுங்கி விட்டு குடலில் கொப்புளம் வரச்செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டியது தான்.

அலாக்ஸன்:

பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தவிர அலாக்ஸன் என்றொரு ரசாயனமும் மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மைதாவை வெண்மை நிறமாக்க அதை ப்ளீச் செய்யும் போது அதிலிருந்து குளோரின் டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது. இந்த குளோரின் டை ஆக்ஸைடு மைதாவில் இருக்கும் ஸ்டார்ச்சுடன் வினை புரிந்து அலாக்ஸனாக மாறுகிறது. இந்த அலாக்ஸனும் மைதாவை வெள்ளை நிறமாக்க உதவக்கூடிய ஒருவகை ரசாயனமே. இது பென்ஸாயில் ஃபெராக்ஸைடை விட மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இது கற்பிதமான பயமாகக் கூட இருக்கலாம். மைதாவில் அலாக்ஸான் கலக்கப்படுவது 100% நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் வளர்ந்த நாடுகளில் அது தடை செய்யப்பட்ட ரசாயனங்களில் ஒன்று. கணையச் செல்களில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது இந்த அலாக்ஸன்.

மோனோ சோடியம் குளூட்டமேட்:

மைதா என்பது கோதுமையிலிருந்து பெறப்படும் சக்கை என்றும் முன்பே கண்டோம். அந்தச் சக்கையில் என்ன சுவை இருந்து விடப்போகிறது. எனவே மைதாவில் சுவை கூட்ட அதனுடன் கலக்கப்படும் ரசாயனமே மோனோ சோடியம் குளூட்டமேட். உணவியல் வல்லுனர்களால் சுருக்கமாக MSG என்று குறிப்பிடப்படக் கூடிய இந்த ரசாயனத்திற்கு மனித மூளைத்திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.

இவை தவிர குளோரின் டை ஆக்ஸைட், பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்போனேட், சுண்ணாம்பு போன்ற மேலும் பல ரசாயனங்கள் மைதாவின் நிறம், சுவை, மற்றும் கெட்டுப்போகாத தன்மை பெறுவதற்காக அதனுடன் கலக்கப்படுகிறது. இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களிலும் கூட இந்த ரசாயனங்கள் இல்லாமலில்லை. ஆனால், மிகக்குறைந்த அளவே இருக்கும். அதே மைதாவை எடுத்துக் கொண்டால் அதன் சதவிகிதம் அதிகம். எனவே மிக மோசமான ஆரோக்யக்கேடுக்கு 100% உத்தரவாதமுண்டு.

மைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்லோர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான்.

மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்?

மைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி, ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக்கொந்தளிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.

மைதா உயிருக்கு எமனா?! நிஜம் எது? கட்டுக்கதை எது?

இல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கருதாது உழைத்தே தீர வேண்டிய நிர்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமைகளுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்ஸா உருவான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்லாரின் அருமை புரிய வரும்.

இதைத்தான் நம்மூர் உழைப்பாளி வர்க்கத்தினர் மிக எளிதாக..

‘ரெண்டு பரோட்டவப் பிச்சுப் போட்டு சால்னால பாத்தி கட்டி சாப்பிட்டுட்டு படுத்தா போதும் நடுவுல பசியில வயிறு காந்தாம காலைல வரைக்கும் நிம்மதியா தூங்கலாம்’ என்று ரசித்துச் சொல்வார்கள்.

அர்த்தம் வெகு சிம்பிளானது. பரோட்டா பசி தாங்கும்.

ஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள் ருசிக்காக தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அதனால் ஜாக்கிரதை!

அறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...

எந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதாவில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும் காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிகமாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்கரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று;

ஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.

NEWS TODAY 11.06.2026