Sunday, February 17, 2019

ஒரே நாளில் 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார மையம் சாதனை

Added : பிப் 17, 2019 01:17



சென்னை:'தினமலர்' நாளிதழ் உதவியுடன், ஒரே நாளில், 91 ஆண்களுக்கு நவீன கருத்தடை சிகிச்சை செய்து, தேசிய அளவிலான சாதனையை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் நிகழ்த்தியுள்ளது.

ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சையை, மத்திய - மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அதன்படி, மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், பல ஆண்டுகளாக, ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சை முகாம், நேற்று நடத்தப்பட்டது.

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, ரவிச்சந்திரன் தலைமையில், மருத்துவர்கள் செந்தில்குமார், சரண், பாலசுப்பிரமணியன், மதன், ரகுபதி ஆகியோர்,கருத்தடை சிகிச்சைஅளித்தனர்.இந்திய அளவில், ஒரே நாள் முகாமில், 40 பேருக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ஒரே நாளில், 91 பேருக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது, தேசிய சாதனையாக கருதப்படுகிறது.இந்த முகாமில், நவீன கருத்தடை செய்து கொண்ட நபர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையாக, 1,100 ரூபாயும், 'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம் சார்பில், அரை கிராம் தங்கம் மற்றும் 25 கிராம் வெள்ளி நாணயமும் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலை துணைவேந்தர், ஐசரி கணேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் இலவச நாணயங்களை வழங்கினர்.சிகிச்சை மேற்கொண்ட
வர்களுக்கு, காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது.
மூன்று வங்கிகளுக்கு ரூ. 3.5 கோடி அபராதம்

Added : பிப் 16, 2019 20:17

இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு, 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆர்.பி.ஐ., வெளியிட்ட தகவல்:வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல் போன்றவற்றில், ஆர்.பி.ஐ., சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவுகளை, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பின்பற்றவில்லை. இதற்காக, பாங்க் ஆப் இந்தியாவுக்கு, 1 கோடி; ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு, 1.5 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-நமது நிருபர்-
தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம்

Updated : பிப் 17, 2019 05:09 | Added : பிப் 17, 2019 05:08

வாஷிங்டன்: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, 'காக்னிசென்ட்' நிறு வனம் முன்வந்துள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்காக, சென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, 2014ல் பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூறியுள்ளனர். அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர்.



இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் செயல்படும்போது, லஞ்சம் கொடுப்பது தவறு. மேலும், லஞ்சம் கொடுத்ததை மறைத்து, கூடுதல் பணியை மேற் கொண்டதாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கோபர்ன் மற்றும் ஸ்குவார்ட்ஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்துவதற்கு, காக்னிசென்ட் முன்வந்துள்ளது.
ஜப்பானில் களைகட்டிய பனித் திருவிழா



ஜப்பானில் ‘சப்போரோ பனித் திருவிழா’ பல லட்சம் மக்களைக் கவர்ந்தது.
பதிவு: பிப்ரவரி 16, 2019 16:10 PM

ஜப்பானின் வடக்குப் பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர் காலத் திருவிழா ஆகும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 20 லட்சம் மக்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த ஆண்டு சப்போரோ திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாண்டு பனித் திருவிழா கடந்த திங்கட்கிழமை நிறைவுபெற்றது.

இத்திருவிழாவை ஒட்டி, சப்போரோ நகரத்தின் மூன்று பகுதிகளிலும் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டன. புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக் குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரைப் பந்தயம் போன்ற அமைப்புகளில் அந்த பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்தச் சிற்பங்களில் 5 சிற்பங்கள், 33 அடிக்கு மேல் உள்ளவை. அனைத்து பனிச் சிற்பங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரையும் வெகுவாகக் கவர்ந்தன.

ஒவ்வோர் ஆண்டும் இத்திருவிழாவுக்கு வருவோரின் எண்ணிக்கையும், இங்கு அமைக்கப்படும் சிற்பங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கின்றன.
மாநில செய்திகள்

தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி



காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பலியானார்கள்.


பதிவு: பிப்ரவரி 17, 2019 05:45 AM
திருச்சி,


சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்தவர். சுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலப்பேரியை சேர்ந்தவர் ஆவார்.


பலியான துணை ராணுவ வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்ரமணியன் ஆகியோரது உடல்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் ஆக மொத்தம் 4 துணை ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

உடல்களுடன் வந்த விமானம் திருச்சிக்கு நேற்று பகல் 11.10 மணி அளவில் வந்தடைந்தது. இதில் அரியலூர் சிவசந்திரன் உடல் மட்டும் தனியாக இறக்கப்பட்டது. தூத்துக்குடி சுப்ரமணியனின் உடல், கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரரின் உடல் மற்றொரு தனி விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மந்திரி சீதாராமன் பாதுகாப்பு துறை விமானத்தில் நேற்று காலை 10.35 மணி அளவில் திருச்சி வந்தார். பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக விமானநிலைய முனையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தனி விமானத்தில் வந்த வீரர் சிவசந்திரன் உடலை பகல் 11.45 மணி அளவில் விமானநிலையத்தின் உள்ளே இருந்து துணை ராணுவ வீரர்கள் சுமந்து வெளியே வந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது வெள்ளை துணியும், தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தன. அவரது உடலை அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த இடத்தில் வைத்தனர்.

சிவசந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது மைத்துனர் அருண், சித்தப்பா கண்ணன், மற்றும் உறவினர்கள் ஜெயபால், குணவேல் ஆகியோர் வந்திருந்தனர். சிவசந்திரன் உடல் வந்து இறக்கப்பட்டதும், அவர்கள் 4 பேரும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க ஓடி வந்து சவப்பெட்டியின் மீது விழுந்து அழுதனர்.

அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிறிது நேரம் அவர்கள் அஞ்சலி செலுத்தியபின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியான சிவசந்திரனின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சிவசந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைதொடர்ந்து கர் நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரரின் உடல் வந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என இளைஞர்கள் கோஷமிட்டனர்.

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் பலர் நேற்று காலை 9 மணிக்கு விமான நிலையம் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. பலர் கையில் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.



தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு இறுதி யாத்திரையாக புறப்பட்டது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக வந்த சுப்பிரமணியனின் உடலுக்கு ஆங்காங்கே அரசு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடி ஏந்தியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழக்கமிட்டபடி சுப்ரமணியனின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மாலை 4.20 மணிக்கு சுப்ரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரியை வந்தடைந்தது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இருந்து சுப்ரமணியனின் உடலை ராணுவ வீரர்கள் இறக்கி, அவரது வீட்டின் முன்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். அப்போது சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாயார் மருதம் அம்மாள், தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சுப்ரமணியனின் உடல் இருந்த பெட்டியின் மீது ராணுவ வீரர்கள் தேசிய கொடி போர்த்தினர். தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணியனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வீரமரணம் அடைந்த சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி ரம்பா (தூத்துக்குடி), அருண் சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணா சிங், பெரோஸ் கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், வசந்தகுமார் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து தமிழக அரசு நிவாரணமாக அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். மாலை 5 மணி அளவில் சுப்ரமணியனின் உடலை வீரர்கள் ராணுவ வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடலை சுமந்தவாறு ராணுவ வாகனம் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது.

சவலாப்பேரியில் உள்ள சுப்ரமணியனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்தவாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

மக்கள் வெள்ளத்தின் இடையே ராணுவ வாகனம் ஊர்ந்து வந்தது. சுப்ரமணியனின் தோட்டத்துக்கு ராணுவ வாகனம் வந்ததும், அவரது உடலை ராணுவ வீரர்கள் இறக்கி வந்தனர். தொடர்ந்து சுப்ரமணியனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவருடைய மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் சுப்ரமணியனின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள், முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் சுப்ரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுப்ரமணியனின் உடல் அடக்கத்தையொட்டி அந்த கிராமமே சோகக்கடலில் மூழ்கி இருந்தது.
Class 10 student in Ghaziabad jumps from moving auto as driver tries to molest her

According to sources, the girl suffered injuries to her face and had to take 18 stitches on her neck. She is third of five siblings and lives with her parents in a locality under Vijay Nagar police station.

GURGAON Updated: Feb 15, 2019 08:57 IST

HT Correspondent
Hindustan Times, Ghaziabad


Police said the auto driver drove in the wrong direction and molested the girl after which she jumped out of the auto and saved herself.(AFP)

A Class 10 student in Ghaziabad suffered severe injuries after she jumped off a moving auto rickshaw in a bid to save herself from allegedly being molested by the driver. The police have registered an FIR and arrested the 30-year-old auto driver.

Police said the 16-year-old girl had boarded the auto to go to her examination centre in Navyug Market on Wednesday morning. The route and distance to her examination centre were such that the girl had to change three auto rickshaws to reach there, they added.

According to the police, when the girl boarded the third auto, she was left with no money to pay the fare and requested the third auto driver, Umesh Kumar, to drop her at the examination centre and he agreed.

“The auto driver instead of taking her to her examination centre drove the auto towards the Kanshiram Housing scheme in Vijay Nagar and on the way, he tried to molest her. Sensing more trouble, the girl jumped out the auto and suffered injuries as a result. Some locals later rushed her for medical treatment,” a police officer from Vijay Nagar police station said.

According to sources, the girl suffered injuries to her face and had to take 18 stitches on her neck. She is third of five siblings and lives with her parents in a locality under Vijay Nagar police station.

“The auto driver drove her in the wrong direction and molested the girl after which she jumped out of the auto and saved herself. We have registered an FIR under sections of molestation and arrested the driver,” Shlok Kumar, superintendent of police (city), said.

“Initially, the girl’s family was not willing to lodge a complaint, but they arrived at the Vijay Nagar police station on Thursday and gave us a written complaint. On the basis of the complaint, we immediately registered an FIR and arrested driver Umesh Kumar,” Kumar said.

First Published: Feb 15, 2019 08:57 IST
UGC plans scheme on trans-disciplinary research

Trans-disciplinary research is a team effort by investigators from different disciplines to create new conceptual and theoretical innovations that go beyond the confines of a subject-specific approach, a UGC official said, not wishing to be named.

EDUCATION Updated: Feb 11, 2019 16:18 IST

Amandeep Shukla 

New Delhi


The University Grants Commission (UGC) is planning to launch an ambitious scheme to promote trans-disciplinary research (Photo-Diwakar Prasad – Hindustan Times)STORY BY SAURAV ROY(HT Photo)

The University Grants Commission (UGC) is planning to launch an ambitious scheme to promote trans-disciplinary research, an official aware of the matter said.

Called Stride — Scheme for Trans-disciplinary Research through Higher Education Institutes for National Development and Entrepreneurship — the nearly Rs 500 crore programme will support the efforts of students and faculty in universities and colleges to discover new areas of knowledge.

Trans-disciplinary research is a team effort by investigators from different disciplines to create new conceptual and theoretical innovations that go beyond the confines of a subject-specific approach, a UGC official said, not wishing to be named. “Stride will support trans-disciplinary research and socially inclusive innovations for national development and entrepreneurship. New ideas, concepts and practices for public good and strengthening civil society will be encouraged,” the official said.

The scheme envisages exchange between faculty from universities and top colleges and scientists from national bodies such as Council of Scientific and Industrial Research, Indian Council of Medical Research, Indian Council of Agricultural Research, DRDO, ISRO, Department of Science and Technology, Department of Biotechnology etc for specific periods. A unique aspect of Stride is its open nature, the official added. While it would promote research in a range of areas from philosophy, history, archaeology, anthropology, psychology, Indology, liberal arts, languages, culture, law, education, journalism and mass communication, environment and sustainable development, it would not be confined to these. “Since the idea is to promote trans-disciplinary research, artificial subject boundaries would not be the confine. There is no straitjacket.”

One of Stride’s aims is to ensure that the research done is of practical utility. The programme will support basic, applied and transformational action research to support government policies. “The highlight of this scheme is its flexibility. Research that is socially relevant to initiatives which address local, national or global needs will be encouraged,” UGC official said.

R Subrahmanyam, secretary (higher education) in the Union human resource development ministry, said the UGC approved the scheme on January 29. Inder Mohan Kapahy, a former UGC member, said, “This is welcome for encouraging cooperative efforts of national-level reputable specialised institutions with universities and colleges. In the recent past, the bulk of efforts had been to encourage only top institutions like IITs ,IIMs and other such elite institutions. Indian IHEs can excel in fields like history, archaeology, philosophy, linguistics, etc. So far, the focus had been only on science, technology, management. Expanding the area of focus is good.”

First Published: Feb 11, 2019 16:18 IST

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...